அதிர்துடியன் - யாழி லாஸ்ட் டீசர் :
'நமக்கென்ன இப்போ குழந்தைக்கு அவசரம் நீ கலெக்டர் ஆன பிறகு பார்த்துக்கலாம்' என்று அதிர்துடியன் கூற,
'என்னங்க விளையாடாதீங்க..???'
'நான் சும்மா தானேடி உட்காந்திருக்கேன்.., இன்னும் ஆரம்பிக்கலையே' என்றவனின் குரலில் குறும்பு கூத்தாடியது.
'அச்சோ அதில்லை' என்று முகம் சிவந்தவளை இழுத்து மடியில் அமர்த்தி இருந்தான் கணவன்.
யாழியோ இடையில் ஒருவித லயத்தோடு நர்த்தனமாடிய அவன் கரத்தின் ஆதிக்கத்தில் பேச்சு மறந்திருக்க அதிர்துடியனோ தன் முகத்தை மறைத்த கூந்தலை ஒதுக்கி அவள் தோள் வளைவில் நாடி பதித்து 'இப்போ சொல்லு' என்றான்.
"என்னங்க அப்பா அம்மால இருந்து அத்தை மாமா வரை எல்லாரும் எதிர்பார்ப்பாங்க இல்ல"
'மத்தவங்க எதிர்பார்ப்புக்கு குழந்தையா..??'
'ஏன் இருக்க கூடாதா..?? அவங்களும் தானே நம்ம குழந்தையை வளர்க்க போறாங்க இப்போ ஆரோக்கியமா குழந்தையை பார்த்துக்க தயாரா இருக்கப்போ நமக்கும் எந்த கமிட்மென்ட்டும் இல்லாதப்போ அனாவசியமா ஏன் நாம தள்ளி போடணும்..' என்று கேட்டவளுக்கு இப்போது எந்த பியர் ப்ரெஷரும் கிடையாது ட்ரென்ட்ங்கின் கட்டாயமும் கிடையாது முழுக்க முழுக்க அவள் சூழலை கொண்டு அவளே தீர்மானித்த ஒன்று..!!
அதை புரிந்தவன் முகத்தில் மென்னகை படர்ந்திருந்து.
"சரி மத்தவங்களை விடுங்க அதுல என்னோட எதிர்பார்ப்பும் அடங்கி இருக்குன்னு சொன்னா மாட்டேன்னு சொல்லுவீங்களா..??'
'கண்டிப்பாஆஅ... மாட்டேன் தான் சொல்லுவேன்' என்று அவன் உறுதியாக கூற,
'என்னங்க ஏன் இப்படி..??' என்று அவள் சிணுங்கவும்,
'புரிஞ்சிக்கடி'
'என்ன புரிஞ்சிக்கணும் எல்லாம் புரிஞ்சி தான் பேசுறேன் எனக்காக நீங்க காத்திருந்தது எல்லாம் போதும் இனியும் உங்களை எந்த விதத்திலும் எங்கேயும் விட்டு கொடுக்க மாட்டேன் உங்களை விட எனக்கு ...' என்று அவள் பேசிக்கொண்டே செல்ல,
'அப்போ நான் தான் காரணம்..!!' என்று கண்கள் இடுங்க தலை சாய்த்து அவளை பார்த்தவன்,
'எனக்காக யோசிச்சு தான் மேடம் திடீர்ன்னு குழந்தை வேணும் சொல்லி தேவை இல்லாம எல்லாரையும் இழுத்து விட்டிருக்கீங்க அப்படி தானே..!!' என்று கேட்க,
'தன்னை கண்டுகொண்டானே..' என்று ஒரு நொடி மருண்டவள்,
"ஏன் நீங்க எனக்காக யோசிக்கும் போது நான் உங்களுக்காக யோசிக்க கூடாதா..??" என்று அவள் உரிமை கொடி ஏந்த..,
'எவ்ளோ பேசுறடி நீ..??' என்று அவள் இதழ்களை சுண்டி இழுத்து முத்தம் வைத்தவன்,
"நீ எவ்ளோ பேசினாலும் என்ன சொன்னாலும் இப்போ குழந்தை வேண்டாம்ன்னா வேண்டாம்..!!" என்று தன் முடிவை தீர்க்கமாக கூறி இருந்தான்.
'நமக்கென்ன இப்போ குழந்தைக்கு அவசரம் நீ கலெக்டர் ஆன பிறகு பார்த்துக்கலாம்' என்று அதிர்துடியன் கூற,
'என்னங்க விளையாடாதீங்க..???'
'நான் சும்மா தானேடி உட்காந்திருக்கேன்.., இன்னும் ஆரம்பிக்கலையே' என்றவனின் குரலில் குறும்பு கூத்தாடியது.
'அச்சோ அதில்லை' என்று முகம் சிவந்தவளை இழுத்து மடியில் அமர்த்தி இருந்தான் கணவன்.
யாழியோ இடையில் ஒருவித லயத்தோடு நர்த்தனமாடிய அவன் கரத்தின் ஆதிக்கத்தில் பேச்சு மறந்திருக்க அதிர்துடியனோ தன் முகத்தை மறைத்த கூந்தலை ஒதுக்கி அவள் தோள் வளைவில் நாடி பதித்து 'இப்போ சொல்லு' என்றான்.
"என்னங்க அப்பா அம்மால இருந்து அத்தை மாமா வரை எல்லாரும் எதிர்பார்ப்பாங்க இல்ல"
'மத்தவங்க எதிர்பார்ப்புக்கு குழந்தையா..??'
'ஏன் இருக்க கூடாதா..?? அவங்களும் தானே நம்ம குழந்தையை வளர்க்க போறாங்க இப்போ ஆரோக்கியமா குழந்தையை பார்த்துக்க தயாரா இருக்கப்போ நமக்கும் எந்த கமிட்மென்ட்டும் இல்லாதப்போ அனாவசியமா ஏன் நாம தள்ளி போடணும்..' என்று கேட்டவளுக்கு இப்போது எந்த பியர் ப்ரெஷரும் கிடையாது ட்ரென்ட்ங்கின் கட்டாயமும் கிடையாது முழுக்க முழுக்க அவள் சூழலை கொண்டு அவளே தீர்மானித்த ஒன்று..!!
அதை புரிந்தவன் முகத்தில் மென்னகை படர்ந்திருந்து.
"சரி மத்தவங்களை விடுங்க அதுல என்னோட எதிர்பார்ப்பும் அடங்கி இருக்குன்னு சொன்னா மாட்டேன்னு சொல்லுவீங்களா..??'
'கண்டிப்பாஆஅ... மாட்டேன் தான் சொல்லுவேன்' என்று அவன் உறுதியாக கூற,
'என்னங்க ஏன் இப்படி..??' என்று அவள் சிணுங்கவும்,
'புரிஞ்சிக்கடி'
'என்ன புரிஞ்சிக்கணும் எல்லாம் புரிஞ்சி தான் பேசுறேன் எனக்காக நீங்க காத்திருந்தது எல்லாம் போதும் இனியும் உங்களை எந்த விதத்திலும் எங்கேயும் விட்டு கொடுக்க மாட்டேன் உங்களை விட எனக்கு ...' என்று அவள் பேசிக்கொண்டே செல்ல,
'அப்போ நான் தான் காரணம்..!!' என்று கண்கள் இடுங்க தலை சாய்த்து அவளை பார்த்தவன்,
'எனக்காக யோசிச்சு தான் மேடம் திடீர்ன்னு குழந்தை வேணும் சொல்லி தேவை இல்லாம எல்லாரையும் இழுத்து விட்டிருக்கீங்க அப்படி தானே..!!' என்று கேட்க,
'தன்னை கண்டுகொண்டானே..' என்று ஒரு நொடி மருண்டவள்,
"ஏன் நீங்க எனக்காக யோசிக்கும் போது நான் உங்களுக்காக யோசிக்க கூடாதா..??" என்று அவள் உரிமை கொடி ஏந்த..,
'எவ்ளோ பேசுறடி நீ..??' என்று அவள் இதழ்களை சுண்டி இழுத்து முத்தம் வைத்தவன்,
"நீ எவ்ளோ பேசினாலும் என்ன சொன்னாலும் இப்போ குழந்தை வேண்டாம்ன்னா வேண்டாம்..!!" என்று தன் முடிவை தீர்க்கமாக கூறி இருந்தான்.
Last edited: