இளந்தளிர் இளந்தென்றல் பெண்களுக்கு ரொம்ப ரசனையா தான் பேரு வச்சிருக்காரு அப்பா தனி ஒரு மனுஷியா ஒரு பொண்ணு தன் குடும்பத்தை பார்த்து கிட்டு வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்து ஒரு நல்லது செய்யுற வரை சும்மா இருந்து வேடிக்கை பார்க்குற சமூகம் அந்த நல்லதுல மட்டும் முன்னாடி நிற்க விடாமல் நாங்கள் பார்த்துக்கிறோம் என்று வந்து நிக்குது
தென்றல் தைரியமா நியாயமா பேசுறா பெரியப்பாவ கேள்வி கேட்க சரியான ஆள் ஆனால் அம்மா தடுக்குறாங்களே பரவாயில்லை எங்க ஹீரோ மாப்பிள்ளையா வந்த பிறகு தென்றலுக்கு அந்த வாய்ப்பை கொடுப்பாரு
இளந்தளிர் அம்மா பேச்சுக்கு மறு பேச்சு பேசாத பொண்ணு
மாப்பிள்ளை வீட்டை பத்தி சொல்றதை பார்த்தா இந்த கல்யாணம் ஹீரோ கூட இல்லையோ அப்போ கல்யாணம் நின்னுடுமோ
இருபத்தி நாலு மணி நேரமும் மாப்பிள்ளை ஏசியில் தான் இருப்பாரா அப்போ மார்ச்சுவரில போய் படுத்துக்க வேண்டிய தான
கதையின் தொடக்கமே மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது...
அன்பு தாய் சீதாலட்சுமி தன் பிள்ளைகளை போற்றி வளர்த்தாலும் அவரது பிள்ளைகளுக்கு வளமான வாழ்கை அமையும் போது அதில் முன்னின்று செய்ய தயங்கும் நிலையை கொடுத்த விதி கொடுரமானது...
எவ்வளவு வலிகள் இவருக்கு கணவரை இழந்து பிள்ளைகளை கரை சேர்க்க சுயநலம் கொண்ட ஜென்மங்களை தேடி செல்ல வேண்டியதாய் இருக்கு...
இளந்தளிர் மென்மையான குணம் அழகானது .
இளந்தென்றல் துடிப்பும், செயலும் அருமை....நிச்சயம் தென்றல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனம்...