Stalking, harassment அதனால பெண்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறாங்கன்னு அபி கதாபாத்திரம் மூலம் அருமையா எழுதி இருக்கீங்க.
புகழேந்தி ஒரு முன் உதாரணமாக மனிதன், ஆசிரியர்.
சித்தார்த் மாதிரி உடன்பிறந்த பெண்கள் இருந்தாலும் , அவர்களுக்கு நடக்கும் harassmentஆல் ஏற்படும் முழு பாதிப்பை பற்றி தெரியாம , இவங்களும் அதே தப்பைத்தான் செய்றாங்க.
காளியம்மாள் பாட்டி அருமை.
நிழல் உலகத்தில் மூழ்கிப்போய் , நிஜத்திலும் அதையே செய்ய நினைக்கும் , அடிப்படை பண்பு, இரக்கம் எதுவும் இல்லாம மனித மிருகமா சிலர் இருக்காங்க. அந்த மிருகங்களிடம் இருந்து தன்னை பெண்கள்தான் தைரியமா கத்துக்கணும், அதுக்கு குடும்பத்தோட உதவியும் தேவைப்படுது-அபிக்கு கிடைச்ச மாதிரி.
ரொம்ப அருமையான கதை
பெண்களுக்கு குடும்பம் எந்த சூழ்நிலையிலும் உடன் இருந்தால் போதும் எந்த அசாதாரண சூழ்நிலையையும் அவர்கள் சுலபமாக கடக்க முடியும்.
பெண் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் கட்டுபாடுகள் நிறைய ஆண் குழந்தைகளுக்கு கொடுக்க படுவதில்லை அது மிக தவறான செயல் என்பதை ரொம்ப அழகாக கொடுத்து உள்ளீர்கள்.