அருமையான கதை வதனி???.புகழ்,மங்கை இருவருக்கும் திருமணம் நடைபெறும் அன்று புகழ் வீட்டை விட்டு சென்றுவிட வெற்றியுடன்,மங்கையின் திருமணம் நடைபெறுகிறது☺☺.
மங்கை,வெற்றியை விரும்புவதை தெரிந்த புகழ் வீட்டை விட்டு செல்வதும்,திருமணத்திற்க்கு பிறகு வெற்றி,மங்கையை விரும்பியது தெரிகிறது.சொல்லாமலே காதலித்த இருவரின் காதலும் திருமணத்தில் முடிந்து,ஒருவரை ஒருவர் விரும்பியதை தெரிந்து கொள்வதும் அருமை????.
வீட்டைவிட்டு வெளியேறிய புகழின் காரை யானை தாக்கியதால் ஏற்பட்ட விபத்தில்,
மலைகிராம மக்களால் காப்பாற்றப்பட்டு ,அவனுக்கு உதவியாக இருந்த அரூபியை காதலிப்பதும், காட்டு ராணியை திருமணம் செய்வதற்க்கு புகழ் எடுக்கும் முடிவுகள் அருமை????.
வெற்றி,மங்கை குடும்பத்தாரின் துணையுடன் புகழ் கிராமத்தில் வீடு,பள்ளி,மருத்துவமனை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து ஊருக்கே முன் உதாரணமாக இருந்தது?????. அவன் விரும்பிய காட்டு ராணியை திருமணம் செய்வதும் அருமை????.
வெற்றி தன்னை போல் அழகாக இல்லை,நிறமாக இல்லை என குழந்தையை வெறுக்கும் வனிதாவை மன்னிக்கவே முடியாது????.வனிதாவின் தவறை சுட்டிக்காட்டாத அவள் தந்தை,கணவரையும் மன்னிக்க முடியாது???.
தவறை உணர்ந்து திருந்திவிட்டாலும் சிறுவயது வெற்றியை நினைக்கும் போது மனம் வருந்துகிறது????.பாட்டியும்,மொழியும் வெற்றியை குறைதெரியாமல் பார்த்து கொண்டனர்????.
அருமையான கதை.எளிமையான நடை. இனிய,நிறைவான முடிவு????.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் வதனி??????.