அருமையான பதிவு சரண்யா☺☺☺.ஏதோ நிழலை பார்த்து பயந்து,டெவில் டெவில்னு சொல்றாளா????.பூவி பொண்ணா இருந்த இதயா,கலெக்டர் மனைவி என தெரிஞ்சதும் மேடமா ஆகிட்டாங்க???.எந்தளவுக்கு முக்கியமா நெனச்சிருந்தா இந்த நேரத்தில் என்ன கூப்பிட்டு இருப்பாங்க என அகிலனுக்கு உச்சி குளிர்ந்து போயிடுச்சு???.
கண்ணனின்,நேசமும்,அன்பும் பொய்யில்லை, திருமணத்தை நிறுத்துவதை பற்றி இதயாவிடம் பேசாதது,இதயா பேசும் போதும் நான் இருக்கிறேன் என சொல்லாமல் அமைதியாக இருந்தது தான் பிடிவாதமாக திருமணம் செய்ய வைத்தது???.
நடந்த பிரச்சனைகளை சரி செய்யாமல் அவளை வேலையை விட்டு வர சொன்னது,அத்தனை இலகுவாக போய்டேனா என அவனை விட்டு விலக வைத்தது???.இரு குடும்பமும் சேர்ந்து இவர்களை ஒன்றாக சேர்த்து வைத்து விட்டனர்.இனி இவர்கள் பாடு...
மற்றவர்கள் நம் வாழ்க்கையை கையில் எடுத்த வரைக்கும் போதும்,என்னோடு இருந்து என்னை என்ன வேணும்னாலும் பேசிக்கோ,எனக்கு ஒரு வாய்ப்பு கொடு என கண்ணன் அவள் காலில் விழாத குறையா கேட்டுட்டான்????.இதயாவுக்கு ஏற்பட்ட காயம் ஆறாமல் உள்ளது, இருவரும் இனியாவது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யட்டும்????.
ப்ளைட் ஏறி இப்பக்கூட வருவானா????.இவ்வளவு பிரச்சனை நடந்தும் பேச வேண்டிய நேரத்துல பேசாதவன்,இப்போ வாய வச்சுட்டு சும்மா இருக்காம"சொன்னா உடனே வந்துடுவீங்களா"
என கேட்டு,நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்???.உனக்கு இந்த கெத்து தேவையாடா???.