மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.ஶ்ரீநி வீட்டுக்காக தான் ராகாவ கல்யாணம் செஞ்சானா???.உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தவரை பார்க்கனும்னு தோனலை,கீழே விழுந்த கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்க தோனலை,அவங்கலே அக்னி பார்த்துக்குவான்னு மனசாட்சி இல்லாம சொல்றான்????.
ராகாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா எல்லாரும் ராகா பின்னாலே வந்துருவாங்கன்னு தான் நினைக்கிறான்,ராகாவ குறை சொன்னா ஆம்பிளையான்னு பார்ப்பாங்க,மரியாதை ,கௌரவம் போயிடும்னு நினைக்கிறானே தவிர,ராகா மனசு கஷ்டப்படும்னு நினைக்கலை????.
ராகாவை விவாகரத்து செய்ய என்ன காரணம் எல்லாம் சொல்லுது, சாரதாவுக்கு ஒரு அறையோட விட்டுட்டீயே ராகா,சுயநலம் பிடிச்சதுங்க,மனுச உருவில் மிருகங்கள்????.
சாது மிரண்டால்னு ராகா பொங்கிட்டா,விவாகரத்து கேட்டா கொலை செய்ய வந்ததா புகார் செய்வதாகவும்,என் மகனை உன் மகன் போல வளர்க்க மாட்டேன் என்றதும்,ஶ்ரீநியை பார்த்து கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடியாய் இருந்தது,ராகா என்னும் புயல் அனைவரையும் புரட்டி போட்டு விட்டது???????.
இவ்வளவு நடந்தும் ராகாவை, ஶ்ரீநியோடு அனுப்ப சொல்றீங்களே கனகாம்மா,உங்கள போல உள்ளவங்க புருசன் என்ன பண்ணாலும் அவன்கூட இருக்கனும்னு நினைக்கிறதாலே தான் சாரதா,ஶ்ரீநி எல்லாம் இப்படி ஆட்டம் போடுறாங்க???