Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 12

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

இந்த பதிவு கொஞ்சம் அழுத்தமாகத்தான் இருக்கும். அதான் பிளாஷ்பேக்கை நாளைக்கு வரைக்கும் இழுக்காம பெரிய பதிவாவே இந்த அப்டேட்டை மூணு பார்ட்டா குடுக்கறேன். :)

இன்னைக்கே முடிஞ்சிரும் பாருங்க. டென்ஷன் இருக்காதுல. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 12 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 12 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 12 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
ரொம்பவும் வருத்தமான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

என்னாங்கடா இது அராஜகம்?
ஒரு கூமுட்டை கேனையன் பேச்சைக் கேட்டு எல்லோரும் சும்மா இருந்திருக்காங்க?

ஆம்பளைங்க இத்தனை பேர் வேடிக்கை பார்த்துட்டு அந்த பொறம்போக்குக்கிட்டே நியாயம் பேசிட்டு?

அந்த செங்கல்லாலேயே வெறிபிடித்த மிருகம் அந்த எருமை மண்டையிலேயே நாலு போட்டிருக்க வேண்டாமா?

எனக்கு நல்லா வண்ணம் வண்ணமா வாயிலே வருது
அப்படி என்னாங்கடா அந்த அருமைநாயகம் பரதேசியின் உறவு வேண்டிக் கிடக்கு?
ஏண்டா சொக்கார பரதேசிங்களா?
சோறுதான் தின்னுறீங்களா?
இல்லை..........?

படிக்கும் எனக்கே இவ்வளவு கொந்தளிக்குதே
விஜய் பாவம் என்ன பாடுப்பட்டிருப்பான்?

சபாஷ்டா விஜய்
சொத்துக்காகன்னு சொன்னதுக்கு எல்லாவற்றையும் முடக்கினது சூப்பர்
அந்த எடுபட்ட பொறுக்கி முன்னாடியே பவித்ராவுக்கு முத்தம் கொடுத்தது அதை விட சூப்பர்

அப்படியே அந்த வசந்தி மூதேவிக்கும் சப்புன்னு இரண்டு கொடுத்திருக்கணும்
ஒருவேளை மாமியார்ன்னு பாவம் பார்த்து விட்டுட்டியா, விஜய்?

அந்த நெடுமாறன் தாத்தா என்னவானார்?
உயிருடன் இல்லைன்னு தோணுது
இந்த மாதிரி ஒரு அரக்கனை மூத்த பீத்த பிள்ளையாக பெற்றதை நினைத்து நொந்து நொந்தே போயிட்டாரோ?

நீயெல்லாம் ஒரு ஆண்பிள்ளைன்னு ஒரு ஜென்மம்ன்னு வெளியிலே சொல்லிடாதே, பழனியப்பா

மாதவன் பிழைத்து விட்டார்
ஓகே
அவர் குணமடைந்து நன்றாகி விட்டாரா?

பெற்ற கிழவியைப் பார்க்கப் போய் உயிரை இழந்து கணவனுக்கு அடிபட்டு பிள்ளையை அனாதையாக்கி விட்ட மதுவந்திக்கு காலம் கடந்து ஞானோதயம் வந்து நோ யூஸ்

அந்த சரோஜா சாமான்நிக்காலோ சரோஜாவை மது பார்த்தே இருக்க வேண்டாம்

இதோடு விடாமல் அந்த அருமை எருமையை உயிருடன் நீயி சித்திரவதை செய்யணும், விஜய்
 
Last edited:
கனமான பதிவு சரண்யா???.கடைசியா அம்மா முகத்தை பார்க்க வந்த மதுவ பார்க்க விடாமல் செய்ததோடு செங்கல்லால் அடிச்சு பேயாட்டாம் ஆடியிருக்கானே மனுசனா இவன்???.மனுச தன்மை இல்லாத இந்த ஆள் இருக்கற இடத்தில் இருக்க மாட்டேன்னு சரியா சொன்னார்???.

துக்கம் விசாரிக்க யார் வேணா வரலாம்னு சொன்னதை கேட்காம,ரத்த காயத்தோட இருந்தவங்கள ஹாஸ்பிடலுக்கும் கொண்டு போக விடாம தடுக்கறான்????.வெறிபிடிச்ச மிருகமா நடந்துக்கறான்???.அதை தடுக்காம ஊரே வேடிக்கை பார்க்குதே என்ன ஜென்மங்களோ???

அம்மாவின் ஆசை நிறைவேற்ற காலில் விழுந்தவனை எட்டி உதைக்கிறானே??,எருமை ஆடற
ஆட்டத்துக்கு,வசந்தியின் பேச்சு சலங்கைய கட்டி விடறது போல இருக்கு இரக்கமே இல்லாத ஜென்மங்கள்??.கடைசி நேரம் விஜய்யின் முகத்தை பார்க்காமலே இறந்துட்டா மது????.

விபத்து நடந்ததால் அடிபட்டதாக நினைத்திருந்த விஜய்க்கு,ஆகாஷ் தாய் மூலம் நடந்ததை கேட்டு வெறிபிடித்த வேங்கையாக வந்து விட்டான்???,அம்மாவின் கண்ணில் கண்ணீர் வந்தால் சும்மா விட மாட்டேன் என சொல்பவன் தாயின் இறப்புக்கு,தந்தையின் நிலைக்கு,நண்பனுக்கு ஏற்பட்ட காயம் என அனைத்துக்கும் காரணமான எருமையை பழிவாங்க நினைப்பது தவறில்லை???.

விஜய்,அருமை இவர்களுக்கு இடையே மாட்டியதும், பாதிக்கப்பட்டதும் பவித்ரா தான்????. விஜயின் குடும்பத்துக்கு நடந்ததை ஜெகன் மூலம் தெரிந்துகொண்ட பவித்ரா என்ன செய்யப்போறா.
 
Last edited:
Top