அன்று கை நழுவிய தருணம்,
நெஞ்சின் ஓரமாய்;
நீங்காத பாரமாய்;
தனித்து நின்றதால்
ஒரு புறம்!
துணையை இழந்ததால்
மறுபுறம்!
அன்றைய தாம்பூல பரிமாற்றம்;
மாறாத மனதின் இனிய நினைவு!
தவிக்கும் மனதில் பெரும்(இனிய) அதிர்வு!
இரு உள்ளங்களின் பரிமாற்றம்;
உள்ளங்கையின் வெற்றிலையாய்,
கை நழுவிய நாட்களை,
கடந்து வரும் ஓடமாய்...