Well said Vaishu!
நிஜமாவே இந்த harassment-டோட தாக்கம் இந்த பிறவியில் சரண்யாவிடம் இருந்து போகாது.
கணவனோட வீட்டில் பொதுவா சொல்லப்படும் domestic violence, கணவனால் நிகழ்த்த படும் marital rape இதையெல்லாம் விட பல மடங்கு வேதனையை தரக்கூடியது சரண்யாவிற்கு நடந்த அவமானங்கள்.
இவங்க எல்லாருக்கும் இவளறிய தண்டனை கிடைக்குதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக இவங்களோட பாவமூட்டை ஒருநாள் இவங்கள மூச்சத் திணற வைக்கும். குறிப்பாக வெற்றிக்கு.
இவன் ஆணழகனாகவே இருக்கட்டும் அவ இவன் பார்வையில் அழகற்றவளாகவே இருக்கட்டும். அதனால் இவன் செஞ்சதும் பேசறதும் எப்படி சரியாகும்? மனித வாழ்வில் ஏற்படக்கூடிய ஒரு விபத்துக்கோ நோய்க்கோ மிஞ்சுமா புற அழகு.
கட்டாயக் கல்யாணமாகவே இருந்தாலும், உண்மையை சொல்லி இவன் divorce தான் செஞ்சுருக்கலாமே தவிர இப்படி வார்த்தையால் வதைச்சுருக்க கூடாது.
அதுலயும் ஒரே மாசத்துல அவளை கர்பவதி ஆக்கி இருக்கானே - இவனை என்ன சொல்லறது?
"ஊம் சொல்றியா ஊஹூம் சொல்றியா "- பாடலின் இறுதி வரி தான் என் நினைவில் வருது.