வெற்றி பார்க்க அஜித் மாதிரி இருக்கானா வீட்டு ஓனரம்மா நல்லா ஐஸ் வைக்கிறாங்க
சரண்யா உன் பிறந்த வீட்டு கிட்ட இருந்து உனக்கு எந்த ஆதரவும் கிடைக்காது இப்படியே சம்பளம் இல்லாத வேலைக்காரியா வச்சுக்குவாங்க
இந்த வாரம் வேலை செஞ்சு காட்டிட்டா இனி அடுத்த வாரம் போனால் ஒரு வாரத்து அழுக்கு துணியும் சேர்த்து வச்சிட்டு துவைக்காததுக்கு ஏதாவது ஒரு சாக்கு சொல்லுவாங்க
முன்னாடி என்ன நடந்திருந்தாலும் இப்போ அவனே திருந்தி வந்திருக்கான் குழந்தைகளுக்காக இல்லைனாலும் வெற்றி குடும்பத்துக்கு நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கு அதுக்காகவாச்சும் கூட போ
அவன் கூட போய் இருந்து கிட்டு அவனை ஒதுக்கி வேணாலும் வச்சிடு
குழந்தைகளுக்கு எதிரா நடக்கிற வன்கொடுமைகளை பார்க்கும் போது சரண்யா இன்னும் எத்தனை நாள் குழந்தைகளை தனியா விட்டுட்டு வேலைக்கு போக முடியும் என்று தான் தோணுது அதுவும் வீட்டு பக்கத்துலயே ஒரு மிருகம் இருக்கும் போது தனியா இருக்க பெண் குழந்தைகள் எத்தனை நாள் பாதுகாப்பாக இருக்கும்
அமுதா உன் புருஷன் அயோக்கியத்தனத்தை மறைக்க சரண்யா கேரக்டரை அசிங்க படுத்துற உன்னை மாதிரி பொம்பளைங்களால் தான் இன்னும் இந்த நாய்கள் எல்லாம் குழந்தைகளை கூட விட்டு வைக்க மாட்டேங்குது
ஆக சரண்யாவுக்கு வேற ஆப்ஷனே இல்ல பிடிக்கல என்றாலும் புருஷனோடு தான் செல்ல வேண்டும் அந்த கட்டாயத்திற்கு அவளை தள்ளி விட்டது.....சமூகமும் அவளின் பிறந்த வீடும்
தனுஷ் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.... சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருந்து விடலாம் பிறந்த வீட்டில் மதிப்பிழந்து வேலைக்காரியாக இருப்பதை விட புருஷன் அழைத்தால் வீம்பு செய்யாமல் கூட சென்று விடலாம்
நிஜமாவே இவங்க தான் சரணை பெத்தாங்களா.... பொண்ணு ரெண்டு குழந்தைங்களோட தனியா போனாளே எப்படி இருக்கா என்ன பன்றான்னு கொஞ்சம் கூட கவலையில்லை... வீட்டுக்கு வந்தவகிட்ட அன்பா ஆதரவா ரெண்டு வார்த்தை பேசலை.... அவகிட்ட முடிஞ்ச அளவு என்ன வேலை வாங்கலாம்ன்னு யோசிக்குதுங்க...
சுகந்தி எல்லாம் அம்மாவே இல்லை அண்ணன்காரன் சமையலுக்கு ஆள் வச்ச மாதிரி லிஸ்ட் குடுக்குறான் பச்சை பிள்ளைகளுக்கு ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கூட வாங்கி குடுக்க தோணல இவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு குடுக்கணுமாம்... அரளி விதையை அரைச்சு குழம்புல ஊத்தி குடுத்துருக்கணும்...இவங்களே இப்படி இருக்கும் போது திவ்யாவை சொல்லி வேஸ்ட்.. இதுல வாரவாரம் இவங்க வீட்டுக்கு வேலைக்கு வரணுமாம்...
அப்பாவுக்கு இப்போ தான் புத்தியில உரைக்குது டூ லேட்... காசு இருந்து புருஷன் வீட்டுல நல்லா பொழச்சா தான் பெத்தவங்க கிட்ட கூட மதிப்பு போல...
அமுதா
நல்லா வந்து சேர்ந்தாடா வெட்டி... நல்லா கதை சொல்லி பாட்டி வாயை அடைச்ச...
பேசாம சரண் இவன் கூடவே போயிடு அப்புறம் விதவிதமா பனிஷ்மென்ட் குடுக்கலாம்....
சரண்யா நீ உன் அம்மா வீட்டுக்கு போனதுக்கு பேசாம வீட்டிலேயே இருந்திருக்கலாம் மனுஷங்களா அவங்க எல்லாம் வெறும் வேலைக்கு மட்டும் தான் நீயா???? பெத்த அம்மாக்கு கூட தோணலையா????? சரண்யா பாவம்னு