அச்சோ பேபி எதுக்கு சாரி எல்லாம் நோ நீட்.., ஆனா நீங்க சரியா தான் கேட்டீங்க இப்படியே எல்லாரும் கருத்தை ஹைலைட் பண்ணினா என்ன ஜானர்ல கதை எழுதினேன்னு புரியாம நான் நிச்சயம் லூசாகிடுவேன் போல... என்னை கேட்டா இந்த கதைக்கு
"செல்பி பரிதாபங்கள் ... பூஜை பரிதபங்கள்" ன்னு டைட்டில் கொடுப்பேன்????? ஏன்னா ஒரு செல்பி எடுக்க யாழியும் ஒரு பூஜை பண்ண அதியும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை?? எவ்ளோ கஷ்டபட்டாங்கன்னு நமக்கு தானே தெரியும்
ஆனா பாருங்க பைனல் எபில ஆருவும் யாழியும் பேசினதை மட்டும் வச்சிட்டு எல்லாரும் சொன்ன கருத்து நல்லா இருக்கு மெசேஜ் சொல்லி இருக்கீங்கன்னு மட்டும் சொல்றாங்க... இதெல்லாம் பார்க்கும் போது செல்பி, போட்டோஷூட், ஹனிமூன், பூஜைன்னு மொத்தமா நான் சொன்ன காதல் எங்கடா போச்சுன்னு புரியாம பார்க்கிறேன்...அதி யாழிக்கு ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு இருக்க காதல் பத்தி யாருமே சொல்லலை பேபி நிச்சயமா காதல் இல்லைன்னா யாழி இந்த அளவுக்கு மாறி இருக்க முடியாது அதியும் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியாது....
@SINDHU NARAYANAN பேபி காதல் கதைக்குள்ள கருத்து வச்சிருக்கேன் தான் சொன்னாங்க
@Narmadha mf பேபிக்கும் இதுல அதி காதல் தான் உயர்வா தெரிஞ்சது அது தான் யாழியை கலெக்டர் ஆக்கினது சொன்னங்க
@vaishanika .?? ஹீரோயின் ஆர்மி தலைவியே என் ஹீரோவோட காதலை கிரேட் சொன்னங்க
@Ram priya சிஸ் கூட இங்க ஜெயித்தது அதியோ யாழியோ இல்ல அவங்களோட காதல்ன்னு சொன்னங்க .... very true வோர்ட்ஸ் ஆனா பலருக்கு அப்படி பீல் ஆகலை போல இதை பார்க்கிற சிலர் என் கதை சமுத்திரகனி படம் போலன்னு நெனச்சிட்டு படிக்காமையே போயிடுறாங்க.. ஆனா சிலர் அவங்க பிரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணி படிக்க சொன்னேன் சொன்னங்க...
ரொம்ப சரியா சொன்னீங்க பேபி நான் இந்த கதை எழுதின நோக்கமே வருங்கால தலைமுறை கிட்ட ஏதாவது மாற்றம் வந்துடாதன்னு தான் ஆனா இப்படி இந்த கதைல கருத்தை ஹைலைட் பண்ணி சொல்றப்போ அது சரியானவங்களை சென்று சேராம போயிடுமோன்னு இருக்கு
இதுல இன்னொரு பியூட்டி என்ன தெரியுமா பேபி ஆண்கோயிங்ல படிச்ச யாருக்குமே இது கருத்து மட்டுமே சொல்ற கதையா தெரியல.... உங்களுக்கு எல்லாம் இது அழகான சமூக பிரச்சனையை சொல்லும் காதல் கதையா தான் தெரிஞ்சது.... ஆனா இப்போ கதை முடிஞ்ச பிறகு மொத்தமா கதையை படிச்சிட்டு கருத்து சொல்ற பலரோட கருத்தே நான் கதையில சொன்ன கருத்தை மட்டும் தான் கதைன்னு சொல்லுது.... அதை பார்க்கிறப்போ நான் அதி யாழியோட காதலை தானே சொல்லி இருக்கேன் அப்புறம் எப்படி அது இப்படி திசை திரும்புச்சின்னு யோசிக்கேன் ? இல்ல final part 1ல சொன்னது மட்டும் தான் நான் சொல்ல நெனச்ச மொத்த கதையான்னு சத்தியமா எனக்கு புரியல...
View attachment 4894