#TNWcontestWriters
#88_காதல்_மழலை_அவள்_மணவாளன்
#விமர்சனம்
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனத்திற்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன் ஆத்தரே.
அழுத்தமான கதைகளைப் படிக்க விரும்பாத நான், ஒருவிதமான தயக்கத்துடன் தான் உங்கள் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். பெரும் வயது வித்தியாசத்தில் நடக்கும் திருமணம் (இதுவே எனக்கு அழுத்தமான கதை தான்)
ஆனால் ஏனோ தெரியவில்லை; முதல் அத்தியாயத்திலேயே உங்கள் தொரை மனத்தைக் கவர்ந்துவிட்டார். காரணம், தமயா தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கும்போது அவன் அமைதியாக அதை ஏற்றுக்கொண்ட விதம், என்னை மேலும் படிக்கச் சொல்லி ஈர்த்தது.
இரண்டு கரங்கள் தட்டினால் தான் ஓசை வரும் என்று இருவருக்கு இடையே வளரும் வாக்குவாதங்களைக் குறித்து எங்கள் வீட்டில் பேசி கேட்டிருக்கிறேன். அதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக, கதையின் ஆதி முதல் அந்தம் வரை தொரை குடும்ப உறவுகளை மதித்து, சகித்து, கடந்து, பிரச்சனைகளைக் கையாண்டு வந்த குணாதிசயம் மிகவும் அருமை.
முக்கியமாகத் தமயாவின் உணர்களை மதித்து நடந்த விதம் அழகு. அவள் பணிக்குச் செல்ல வழிவகுத்தது முதல், அவள் கனவுகளை மெய்யாக்கிய வரை அனைத்தும் பிரமாதம். அவள் தன்னை மனதார ஏற்றுக்கொண்ட பின்னும், அவள் வாழ்க்கை திசைமாறியது தன்னால் தான் என்ற குற்றவுணர்வுடன் தினம் தினம் தவித்ததும், அவனை அந்த மனவுளைச்சலில் இருந்து தமயா மீட்டெடுத்த இடங்களும் மெய்சிலிர்க்க வைத்தது ஆத்தரே.
வறுமை நிலைமையிலும் மனம் தளராத நிமிர்வான பெண்ணாக தமயாவின் கதாபாத்திரம் சித்தரித்த உங்களுக்குச் சிறப்பு பாராட்டுகள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாமல் செயல்பட வேண்டும் என்று அவள் மூலம் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
சாதாரணமான இட்லி மாவு அரைக்கும் காட்சியில் குடும்பத்தின் நிதிநிலைமையை வர்ணித்தது அசத்தல். யார் யார் எந்தெந்த நேரம் உணவு சமைக்க வேண்டுமென்ற பெண்களின் சமையலறை பேச்சு வார்த்தையிலும் இயல்பான பனிப்போரிலும், கூட்டுக்குடும்பத்தின் எதார்த்தத்தை நேர்த்தியாகச் சொல்லிவிட்டீர்.
காதலுக்கும் ஊடலுக்கும் பிரம்மாண்டமான அலங்காரங்களும், விலை உயர்ந்த பொருட்களும் தேவையிருக்கவில்லை என்று தமயாவின் “தொரை” என்ற முணுமுணுப்பிலும், நளனின் “இங்கரே” என்ற அழைப்பிலும், புல்லட் பயணங்களிலும், தோசை ஊற்றும் அழகிலும், முக்கியமாக நோட்டுப்புத்தக தூதுகளிலும் எடுத்துரைத்த விதம் சூப்பரோ சூப்பர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக என்னை மிகவும் கவர்ந்த கேரக்டர் சரசு. பொறுப்பில்லாத கணவர், மகன், மகள், மருமகள்கள் பேரப்பிள்ளைகள் என ஒரே வீட்டில் உறவுகளுடன் வாழும்போது வரும் இயல்பான பாசம், கோபம், ஆதங்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், அனைத்தும் தத்ரூபமாக இருந்தது. அதிலும் மூத்த மகனின் நற்குணத்தை மனத்தில் வைத்து, அவனுக்காகப் பேசும் இடங்களும், குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணமறிந்து சண்டையிடுவதும், சமரசம் செய்வதும் அனைத்தும் சூப்பர்.
லலிதாவின் கதாபாத்திரமும் அப்படித்தான். புதிதாக வந்த ஓரகத்தியிடம் ஒட்டிப்பழகாமல் விலகியிருப்பது, பிறகு புரிந்து கொள்வதும் நேர்த்தியாக இருந்தது ஆத்தரே.
இதில் சாமியின் பிரச்சனை மட்டும்தான் சற்று நீளமாக எழுதிவிட்டீர்கள் என்று எனக்குத் தோன்றியது. இங்கரே-தொரையின் மனஸ்தாபங்கள் படிப்படியாக குறைந்து அழகிய புரிதல் வளரும் வேளையிலே, சாமி மாட்டிக்கொண்ட பிரச்சனை, அதிலிருந்து அவனை மீட்டெடுக்க தமயா-நளன் பாடுப்படுவது, கதையின் சுவாரசியத்தைக் குறைக்கும் விதமாக இருந்தது என்று எனக்குத் தோன்றியது ஆத்தரே.
அதே மாதிரி நளனின் வயது தான் இக்கதையின் முக்கிய அம்சம். அதை தமயா எப்படி ஏற்பாள் என்ற அதீத Curiosityயுடன் தான் படித்தேன். அவன் குணம் உணர்ந்து, தமயாவின் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அசத்தல். குறிப்பாக அவனைத் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி சீண்டிய இடங்களும், டீச்சராக மாறி மிரட்டிய இடங்களும் மனத்தைக் கொள்ளைக் கொண்டது.
அந்த இடத்தில், நளனின் தோற்றம் பற்றிய வர்ணனை (45 என்று சொல்லமுடியாத இளமையான தோற்றம்) என்பதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம். அவனின் “நற்குணண்களை” மட்டுமே கருத்தில் கொண்டு படிக்கும் வாசகர்களாகிய எங்கள் கற்பனைக்கே அவன் உருவ அமைப்பைப் பற்றியும் விட்டுவிட்டிருந்தால் அவர்களின் காதலின் ஆழம் இன்னும் அழகாகப் பிரதிபலித்திருக்கும். (Heroes need not necessarily be handsome. It is just my personal thought.)
மறப்போம் மன்னிப்போம் என்ற கூட்டுக்குடும்பத்தின் தார்மீக மந்திரத்தையும், கணவன் மனைவிக்கு இடையே, ஒருவர் கோபம் கொள்ளும்போது, மற்றவரும் அதற்கு இணையாக எகிறி சண்டை போடாமல், அந்த இடத்தில் தன் சரிபாதியின் மனநிலை உணர்ந்து நிதானமாகச் செயல்பட்டால் பிரச்சனைகள் தீரும் என்று சொல்லும் விதமாக இங்கரே-தொரை, அவர்கள் குடும்பத்தினர் மூலம் அழகிய கதை தந்த ஆத்தருக்கு என் மனம்நிறைந்த நன்றிகள் பல பல.
நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள் நட்பே.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
#88_காதல்_மழலை_அவள்_மணவாளன்
#விமர்சனம்
இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனத்திற்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன் ஆத்தரே.
அழுத்தமான கதைகளைப் படிக்க விரும்பாத நான், ஒருவிதமான தயக்கத்துடன் தான் உங்கள் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். பெரும் வயது வித்தியாசத்தில் நடக்கும் திருமணம் (இதுவே எனக்கு அழுத்தமான கதை தான்)
ஆனால் ஏனோ தெரியவில்லை; முதல் அத்தியாயத்திலேயே உங்கள் தொரை மனத்தைக் கவர்ந்துவிட்டார். காரணம், தமயா தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கும்போது அவன் அமைதியாக அதை ஏற்றுக்கொண்ட விதம், என்னை மேலும் படிக்கச் சொல்லி ஈர்த்தது.
இரண்டு கரங்கள் தட்டினால் தான் ஓசை வரும் என்று இருவருக்கு இடையே வளரும் வாக்குவாதங்களைக் குறித்து எங்கள் வீட்டில் பேசி கேட்டிருக்கிறேன். அதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக, கதையின் ஆதி முதல் அந்தம் வரை தொரை குடும்ப உறவுகளை மதித்து, சகித்து, கடந்து, பிரச்சனைகளைக் கையாண்டு வந்த குணாதிசயம் மிகவும் அருமை.
முக்கியமாகத் தமயாவின் உணர்களை மதித்து நடந்த விதம் அழகு. அவள் பணிக்குச் செல்ல வழிவகுத்தது முதல், அவள் கனவுகளை மெய்யாக்கிய வரை அனைத்தும் பிரமாதம். அவள் தன்னை மனதார ஏற்றுக்கொண்ட பின்னும், அவள் வாழ்க்கை திசைமாறியது தன்னால் தான் என்ற குற்றவுணர்வுடன் தினம் தினம் தவித்ததும், அவனை அந்த மனவுளைச்சலில் இருந்து தமயா மீட்டெடுத்த இடங்களும் மெய்சிலிர்க்க வைத்தது ஆத்தரே.
வறுமை நிலைமையிலும் மனம் தளராத நிமிர்வான பெண்ணாக தமயாவின் கதாபாத்திரம் சித்தரித்த உங்களுக்குச் சிறப்பு பாராட்டுகள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாமல் செயல்பட வேண்டும் என்று அவள் மூலம் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
சாதாரணமான இட்லி மாவு அரைக்கும் காட்சியில் குடும்பத்தின் நிதிநிலைமையை வர்ணித்தது அசத்தல். யார் யார் எந்தெந்த நேரம் உணவு சமைக்க வேண்டுமென்ற பெண்களின் சமையலறை பேச்சு வார்த்தையிலும் இயல்பான பனிப்போரிலும், கூட்டுக்குடும்பத்தின் எதார்த்தத்தை நேர்த்தியாகச் சொல்லிவிட்டீர்.
காதலுக்கும் ஊடலுக்கும் பிரம்மாண்டமான அலங்காரங்களும், விலை உயர்ந்த பொருட்களும் தேவையிருக்கவில்லை என்று தமயாவின் “தொரை” என்ற முணுமுணுப்பிலும், நளனின் “இங்கரே” என்ற அழைப்பிலும், புல்லட் பயணங்களிலும், தோசை ஊற்றும் அழகிலும், முக்கியமாக நோட்டுப்புத்தக தூதுகளிலும் எடுத்துரைத்த விதம் சூப்பரோ சூப்பர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக என்னை மிகவும் கவர்ந்த கேரக்டர் சரசு. பொறுப்பில்லாத கணவர், மகன், மகள், மருமகள்கள் பேரப்பிள்ளைகள் என ஒரே வீட்டில் உறவுகளுடன் வாழும்போது வரும் இயல்பான பாசம், கோபம், ஆதங்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், அனைத்தும் தத்ரூபமாக இருந்தது. அதிலும் மூத்த மகனின் நற்குணத்தை மனத்தில் வைத்து, அவனுக்காகப் பேசும் இடங்களும், குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணமறிந்து சண்டையிடுவதும், சமரசம் செய்வதும் அனைத்தும் சூப்பர்.
லலிதாவின் கதாபாத்திரமும் அப்படித்தான். புதிதாக வந்த ஓரகத்தியிடம் ஒட்டிப்பழகாமல் விலகியிருப்பது, பிறகு புரிந்து கொள்வதும் நேர்த்தியாக இருந்தது ஆத்தரே.
இதில் சாமியின் பிரச்சனை மட்டும்தான் சற்று நீளமாக எழுதிவிட்டீர்கள் என்று எனக்குத் தோன்றியது. இங்கரே-தொரையின் மனஸ்தாபங்கள் படிப்படியாக குறைந்து அழகிய புரிதல் வளரும் வேளையிலே, சாமி மாட்டிக்கொண்ட பிரச்சனை, அதிலிருந்து அவனை மீட்டெடுக்க தமயா-நளன் பாடுப்படுவது, கதையின் சுவாரசியத்தைக் குறைக்கும் விதமாக இருந்தது என்று எனக்குத் தோன்றியது ஆத்தரே.
அதே மாதிரி நளனின் வயது தான் இக்கதையின் முக்கிய அம்சம். அதை தமயா எப்படி ஏற்பாள் என்ற அதீத Curiosityயுடன் தான் படித்தேன். அவன் குணம் உணர்ந்து, தமயாவின் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அசத்தல். குறிப்பாக அவனைத் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி சீண்டிய இடங்களும், டீச்சராக மாறி மிரட்டிய இடங்களும் மனத்தைக் கொள்ளைக் கொண்டது.
அந்த இடத்தில், நளனின் தோற்றம் பற்றிய வர்ணனை (45 என்று சொல்லமுடியாத இளமையான தோற்றம்) என்பதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம். அவனின் “நற்குணண்களை” மட்டுமே கருத்தில் கொண்டு படிக்கும் வாசகர்களாகிய எங்கள் கற்பனைக்கே அவன் உருவ அமைப்பைப் பற்றியும் விட்டுவிட்டிருந்தால் அவர்களின் காதலின் ஆழம் இன்னும் அழகாகப் பிரதிபலித்திருக்கும். (Heroes need not necessarily be handsome. It is just my personal thought.)
மறப்போம் மன்னிப்போம் என்ற கூட்டுக்குடும்பத்தின் தார்மீக மந்திரத்தையும், கணவன் மனைவிக்கு இடையே, ஒருவர் கோபம் கொள்ளும்போது, மற்றவரும் அதற்கு இணையாக எகிறி சண்டை போடாமல், அந்த இடத்தில் தன் சரிபாதியின் மனநிலை உணர்ந்து நிதானமாகச் செயல்பட்டால் பிரச்சனைகள் தீரும் என்று சொல்லும் விதமாக இங்கரே-தொரை, அவர்கள் குடும்பத்தினர் மூலம் அழகிய கதை தந்த ஆத்தருக்கு என் மனம்நிறைந்த நன்றிகள் பல பல.
நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள் நட்பே.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.