'எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு..' என்றவாறு தங்கள் முன் நின்ற மகனை குடும்பமே அதிசயித்து பார்த்து நின்றது...
'என்ன சொல்ற கரண்?' என்று அதிர்வில் இருந்து முதலில் மீண்ட பசுபதி கேட்கவும்...
'தெளிவா தானே சொன்னேன் உங்களுக்கு காதுல ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே' என்றான் அவர் பின்னே இருந்த கூட்டத்தில் விழிகளை ஓடவிட்டு...
'நிஜமாவே உனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கா ?'
'ஆமா'
'யார் தம்பு அது ? பொண்ணு பேர் என்ன?'
'பப்...' என்று ஆரம்பித்தவன் குரலை செருமி 'தெரியாது' என்றான்.
எந்த ஊர்..??
தெரியாது
என்ன படிச்சிருக்கா..?
தெரியாது
'எங்க இருக்கா..?? அம்மா அப்பா என்ன பண்றாங்க..?'
தெரியாது
வேலைக்கு போறாளா இல்லையா ..?
தெரியாது
கேட்கும் கேள்விக்கெல்லாம் தெரியாது என்று பதிலளிப்பவனை என்னடா இது? என்பதாக குடும்பம் மொத்தமும் ஒருவரை ஒருவர் அடுத்து என்ன கேட்பது என்று புரியாமல் பார்த்துக்கொள்ள..
'இவ்ளோ நாள் நாயா பேயா அலைஞ்சு பொண்ணு தேடினோமே முன்னாடியே சொல்றதுக்கு என்ன? சரி சொல்லு எவ்ளோ வருஷமா?' என்று திரு பல்லைகடிக்க
'வருஷமெல்லாம் இல்லை '
'அப்போ எத்தனை மாசம் ..??'
'மாசமா..??'
'அப்போ எவ்ளோ நாள்ண்ணா?' என்றான் ஜித்து.
'ப்ச்' என்று வாட்சை பார்த்தவன் 'ஜஸ்ட் செவென் மினிட்ஸ் முன்னாடி தான் பார்த்தேன் பிடிச்சிருக்கு கட்டி வைங்க' என்று நாற்காலியில் அமர்ந்தவன் 'அப்பு பாதாம் டிரிங் எடுத்துட்டு வா' என்றான்.
'என்னது ஏழு நிமிஷமா..??' என்ற அபிராமிக்கு தலை கிறுகிறுத்து கொண்டு வந்தது..
'என்னடா சொல்ற ஏழு நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்த பெண்ணை கட்டி வைக்கணுமா ..??'
'ஆமா! இல்லனா கல்யாணமே வேண்டாம்' என்று அசால்ட்டாக சொன்னவன் பாதாம் பாலை குடிக்க தொடங்க பெற்றவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது.
'அண்ணா நீங்க லவ் பண்றீங்களா?' என்றான் ப்ரணவ் குதூகல குரலில்...
'லவ்வா?' என்று கீழ்கண்களால் தம்பியை பார்த்து 'இல்லை' என்பதாக தலையசைத்தவன், 'உனக்கு எப்படி தோணுதோ அப்படி வச்சுக்கோ..' என்றிட
'அப்புறம் எப்படிண்ணா..??'
'ப்ச் நீங்க தானே பொண்ணு பிடிச்சிருந்தா கூட்டிட்டு வரசொன்னீங்க... ஆனா இந்த கூட்டத்துல அவளை தேடி கூட்டிட்டு வர எனக்கு நேரமில்ல'
'ஆமா அந்த பொண்ணுகிட்ட பேசினியா..??'
'இல்லை'
'ஒருநிமிஷம் அப்போ நீ கேட்ட..' என்று திரு தன் வாக்கியத்தை நிறைவு செய்யும் முன்னமே..
'இருக்கு' என்று அழுத்தமான குரலில் சொன்னவன் கைபேசியை திறந்து பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து ...
'இவதான் உங்க மருமகள் சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க தாலி கட்டுறேன்' என்ற மகனை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்திருந்தனர்.
ஹாய் செல்லகுட்டீஸ்...
சொல்ல மறந்துட்டேன் இது முழுக்க முழுக்க ஜாலி ஸ்டோரி நோ கருத்து நோ எமோஷன் படிச்சிட்டு சொல்லுங்க...
Last edited: