பிரியதர்ஷினி யின் என் ரோஜா நீயா எனது பார்வையில். சுடர் கல்வி குழுமத்தினை நிர்வகிக்கும் விஸ்வரூபனின் குழந்தையை சுடர் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து போலி சான்றிதழ்கள் கொடுத்து தத்தெடுத்து வருகிறாள் அவனின் காதலி சம்ருதி. பணவசதியில் அதிகம் இருக்கும் விஷ்வா அதிக வசதியில்லாத சம்ருதியை விரும்புகிறான். ஆனால் அவனது தாய் மாமா புருஷோத்தமனின் சதியால் சம்ருதி தன் அப்பாவை இழக்கிறாள். இருந்தாலும் நம்பிக்கையுடன் விஷ்வாவை அவன் மாமா மற்றும் அத்தை பெண்ணான அஞ்சலியின் திருமணத்தில் சந்திக்க வருகிறாள். ஆனால் மாப்பிள்ளை அஞ்சலியின் காதலன் ஓடிப் போய்விடுவதால் விஸ்வரூபனின் அம்மாவின் வற்புறுத்தலால் அஞ்சலியுடன் திருமணம் நடக்கிறது. அதனால் மனமுடைந்து திரும்பிச் செல்லும் சம்ரு வெளியூரில் வேலைக்கு சென்றுவிடுகிறாள். விஷ்வாவிற்கு விவாகரத்து நடந்துவிடுவதால் விஷ்வாவின் குழந்தை என்று தெரிந்து தத்தெடுக்கும் சம்ரு விஷ்வாவின் கல்வி குழுமத்தில் வேலைக்கு சேருகிறாள். அங்கு பணிபுரியும் மற்றவர்களால் தவறாக பேசப்படும் சம்ருதியை அவள் கொடுத்த விஸ்வரூபனுடனான பதிவு திருமணச் சான்றிதழை உண்மையாக்கி திருமணம் செய்து கொள்கிறான். அவனது பழைய வாழ்க்கைக்கு விளக்கம் கொடுக்க வருவதைத் தடுக்கிறாள். இருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நேரத்தில் தன் இரண்டாவது வாழ்வில் தோல்வி அடைந்து மீண்டும் விஷ்வாவின் வாழ்க்கையில் நுழைய வருகிறாள். எப்பொழுதும் அண்ணன் மகள் என்று அண்ணன் சார்பாகவே யோசிக்கும் விஷ்வாவின் அம்மா சுஜாதா இந்நிலையில் என்ன முடிவு எடுத்தார் மற்றும் விஷ்வா, சம்ருதி தம்பதிகள் எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள் என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார்.