Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் 14.2

Advertisement

SuupUOTE="Riyaraj, post: 27838, member: 758"]
அவனின் விழிகள், இதழினியின் பக்கம் செல்வதை கண்டு, அங்கு பார்த்தவனுக்கு பெரிதாய் யாதொரு மாற்றமும் தெரியாது போக, மீண்டும் கேள்வியாய் செழியனின் முகம் பார்த்தான். அதற்கு மேல் அங்கிருக்க முடியாது, விரைந்து அவர்களுக்கு அருகே இருந்த, மணமகன் அறைக்குள் நுழைந்தவனை, பின் தொடர்ந்த அனைத்து நண்பர்களையும், ஏதேதோ காரணங்கள் சொல்லி வெளியே நிறுத்திய சந்துரு, தான் மட்டும் உள்ளே செல்ல, தனது தொடையில் முழங்கைகளால் முட்டு கொடுத்து, தன் கரத்தில் முகம் புதைத்து, தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த செழியனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்துரு.

"டேய், செழியா.. என்னடா? எதுக்கு இப்ப இப்படி உக்காந்திருக்க?!" என்று ஆறுதலாய் அவன் தோளில் கரம் வைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவனின் நிலை கண்டு, மேலும் எதையுமே கேட்காது, அவனை தன் வயிற்றோடு அணைத்து, அவனின் முதுகில் ஆறுதலாய் வருடி விட துவங்கினான்.

சந்துருவின் செயலில், சில நிமிடத்தில் தன்னை மீட்டுக்கொண்ட செழியன், "சந்துரு நான் தப்பு பண்ணிட்டேன் டா. பாவம்டா, என் லிப்.... இதழினி.. நான் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து செய்தது, அவளுக்கு எத்தனை ஹர்ட்டிங்கா இருந்திருக்குமில்ல.. ச்ச.. அவள எந்த விதத்திலையும் வேதனை படுத்தாம, காலம் பூரா சந்தோஷத்தை மட்டுமே, கொடுக்கணுமின்னு ஆசை பட்ட நானே, இப்ப அவளை கஷ்டப்படுத்தி பார்த்துட்டேனேடா.." என சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

அவனை தேடி அறைக்கு வந்த, அபிதா, "மாமா, நீங்க இவ்வளவு ஃபீல் பண்ற அளவுக்கு இதுல உங்க மேல எந்த தப்பும் இல்ல.." என்றதும், "என்ன அபி சொல்ற?!" என பரபரப்பாய் கேட்ட செழியனிடம் வந்தவள்,

"ஆமாம் மாமா, நீங்க வந்து போன அன்னைக்கே அக்காகிட்ட, உங்க போட்டோ காட்டியாச்சு, அதோட பத்திரிக்கையையும், நானே கொடுத்து பார்க்க சொல்லியும், அக்கா பார்க்காம போனது, அவ தப்பு தானே. அக்கா மனசுல இருந்த குழப்பத்தை எங்கிட்ட சொல்லியிருந்தா, அது அப்பவே தீர்ந்திருக்கும். அத விட்டுட்டு, அவங்களா தேடிக்கிட்ட கஷ்டத்திற்கு, நீங்க எப்பவும் பொறுப்பில்ல.

அதோட, இப்ப தான் என்கிட்ட, நீங்க ரூமுக்கு போனத பார்த்துட்டு, நீங்க இப்படி தான் ஃபீல் பண்ணுவீங்க. போய் சமாதானப்படுத்துன்னு அனுப்பிவச்சாங்க, அக்கா. ஆனா மாமா, சும்மா சொல்லக்கூடாது… நேருல பார்த்து பலவருஷம் பழகி, கல்யாணம் பண்ணிக்கிறவங்க கிட்ட கூட இத்தனை புரிதல் இருக்காது.

உங்க ரெண்டு பேருக்கும் இருக்கற புரிதலை பார்த்தா பெருமையாவும் இருக்கு, அதே சமயம் கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு.. சோ, தேவையில்லாத விசயத்தை நினைச்சு குழம்பாம ப்ரஷ்ஸ்ஸா ரெடியாகி வாங்க, எங்க அக்கா உங்களுக்காக வெயிடிங்…" என்றவளை நன்றியோடும், தந்தை போன்று பாசத்தோடும் தலையை வருடியவன், மனமார, "தேங்க்ஸ்டா.." என்றிட,

"மாமா, என்ன வெறும் தேங்க்ஸ் சொல்லி எஸ்கேப் ஆக பார்க்கறீங்க. அதெல்லாம் முடியாது… நீங்க எப்படி, எங்க அக்கா மேல உயிரா இருக்கீங்க, அப்படி ஒரு பையனை எனக்கு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கறது உங்க பொறுப்பு…" என்று கண்சிமிட்டியவளின் வேடிக்கை பேச்சிற்கு,

"அவ்வளவு தானேடா, டன்.. அடுத்த மூகூர்த்ததுலயே முடுச்சிடலாமா, மாப்பிள்ளை பார்த்து.." என்றதும், அதிர்ச்சியில் விழிவிரித்தவள், "கெட்டது குடி… மாமா நான், சும்மா விளையாட்டுக்கு சொன்னா... என் படிப்புக்கு தடா போட்டுடுவீங்க போலவே.. நான் எஸ்கேப்புப்பா… சீக்கிரமா வாங்க… மேடைக்கு.." என்ற படி அந்த அறையிலிருந்து ஓடினாள், தன் பேச்சால் ஒருவனை பித்தனாக்கி கொண்டிருப்பதை உணராமலேயே…..

[/QUOTE]
Superb sis
 
Top