எழுத்தாளருக்கு: நிறைய கதாபாத்திரத்தை கொண்ட அருமையான குடும்ப காதல் கதையை தந்தமைக்கு நன்றிகள் பல
நாயகன் நாயகி இருவருக்கும் மறுமணம்.... திருமணத்தில் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டு சுபமாக முடிகிறது கதை
பூர்ணசந்திரா : நம் கதையின் நாயகி கணவனை இழந்து பிறந்த வீட்டு உறவுகளால் உதாசீன படுத்தப்பட்டு.... புகுந்த வீட்டில் வசிக்கிறாள்... அவள் அங்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்...!!! ஆனால் உயிர்ப்புடன் இருக்கிறாளா என்பது தான் கேள்வி...????
நிரூபன் சக்ரவர்த்தி: நம் கதையின் நாயகன் மனைவியை இழந்து இவனால் ஆதாயம் காணும் சுயநலமிக்க சொந்தங்களை கொண்ட ஏமாளியான ரொம்ப நல்லவன் என்று சொன்னால் மிகையில்லை....!!!!
பூரணி இயல்பிலேயே வாய் துடுக்கும்....புத்திசாலித்தனம் நிறைந்த அருமையான பெண் படிக்கும் காலத்தில் நடராஜன் என்பவருடன் காதல் வயப்பட்டு இரு குடும்பத்தினராலும் காதல் மறுக்க பட்டு நடராஜனுக்கு வனஜா உடனும் பூரணிக்கு சிவலிங்கம் உடனும் திருமணம் முடிகிறது...!!!
விபத்தில் சிவலிங்கம் இறக்க 3 மாத திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது
இந்நிலையில் தன் அக்கா மகள் கமலினி யின் திருமணத்திற்கு பூரணியும் மணமகன் ராகுல் நிரூபனின் அக்கா வனஜா நடராஜனின் மகன்...!!!
அத்திருமணத்தில் தான் நாயகி நாயகனும் இருவரும் சந்திக்கிறார்கள்....வனஜாவின் கீழ்தரமான புத்தியால் ராகுல் _ கமலி திருமணம் நின்றுவிடுகிறது....!!!
முடிந்து போன பூரணி _ நிரூபனின் வாழ்க்கை பயணமும் அங்கு தான் பிரச்சினையின் மூலம் இனிதே தொடங்குகிறது
மார்த்தாண்டம்: கதையில் மிக முக்கியமான கதாபாத்திரம் சிவலிங்கத்தின் நெருங்கிய நண்பரும் சகோதரியின் கணவர் ஆவார். இவரால் தான் கதையில் முக்கிய திருப்பங்களும் இனிய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன
நிரூபன் பூரணியை கண்டதும் மனதிற்கு பிடித்து காதல் வயப்பட்ட நிலையில் அவளின் புகுந்த வீட்டினரின் முன் திருமணம் செய்ய கேட்கிறான் அதற்கு பூரணியும் லிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள் செவ்வந்தி மறுப்பு தெரிவித்து பூரணி அவளின் விருப்பமாக படிப்பை தொடர சென்று விடுகிறாள்
மார்த்தாண்டம் மற்றும் அவ்வீட்டின் இளைய பட்டாளமும் முன்னின்று அனைத்து உறவுகளையும் சரிக்கட்டி நிரூபன் பூரணி திருமணத்தை இனிதே நடத்தி முடிக்கிறார்கள்
நாயகன் நாயகி திருமணம் மட்டுமின்றி இக்கதையில் மற்ற நான்கு ஜோடிகளான ராகுல் _ மஞ்சு... இனியன் _ கமலினி.... மோகன் _ நித்யா இறுதியில் கவின் _ மதுரா ஆகியோரின் திருமணமும் பலவித விறுவிறுப்பான சம்பவங்களுடன் நடந்தேருகிறது
கதையில் நிறைய மாந்தர்கள் இருந்தாலும் அவர்களுக்கு தக்க பாத்திரங்களை வடிவமைத்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதையை கொண்டு சென்று நிறைவாக முடித்திருக்கிறார் நம் எழுத்தாளர்
ககனம் (ஆகாயம் மற்றும் சொர்க்கம் என்று பொருள் படும்)
பூர்ணசந்திரா என்கிற முழுநிலவு நிரூபன் என்கிற ஆகாயத்தை காதலுடன் வந்தடைகிறாள்
உறவுகளால் கசப்பையும் வலிகளையும் மட்டுமே அனுபவித்த நம் நாயகன் பூரணியின் வரவால் நல்உறவுகள் சூழ் சொர்க்கத்தை காண்கிறான்
இருவரின் காதலுக்கு பரிசாக சிவமித்ரன் கடவுளின் வரமாக
மிக அருமையான கதை
மிக நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நாயகன் நாயகி இருவருக்கும் மறுமணம்.... திருமணத்தில் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் எதிர் கொண்டு சுபமாக முடிகிறது கதை
பூர்ணசந்திரா : நம் கதையின் நாயகி கணவனை இழந்து பிறந்த வீட்டு உறவுகளால் உதாசீன படுத்தப்பட்டு.... புகுந்த வீட்டில் வசிக்கிறாள்... அவள் அங்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறாள்...!!! ஆனால் உயிர்ப்புடன் இருக்கிறாளா என்பது தான் கேள்வி...????
நிரூபன் சக்ரவர்த்தி: நம் கதையின் நாயகன் மனைவியை இழந்து இவனால் ஆதாயம் காணும் சுயநலமிக்க சொந்தங்களை கொண்ட ஏமாளியான ரொம்ப நல்லவன் என்று சொன்னால் மிகையில்லை....!!!!
பூரணி இயல்பிலேயே வாய் துடுக்கும்....புத்திசாலித்தனம் நிறைந்த அருமையான பெண் படிக்கும் காலத்தில் நடராஜன் என்பவருடன் காதல் வயப்பட்டு இரு குடும்பத்தினராலும் காதல் மறுக்க பட்டு நடராஜனுக்கு வனஜா உடனும் பூரணிக்கு சிவலிங்கம் உடனும் திருமணம் முடிகிறது...!!!
விபத்தில் சிவலிங்கம் இறக்க 3 மாத திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது
இந்நிலையில் தன் அக்கா மகள் கமலினி யின் திருமணத்திற்கு பூரணியும் மணமகன் ராகுல் நிரூபனின் அக்கா வனஜா நடராஜனின் மகன்...!!!
அத்திருமணத்தில் தான் நாயகி நாயகனும் இருவரும் சந்திக்கிறார்கள்....வனஜாவின் கீழ்தரமான புத்தியால் ராகுல் _ கமலி திருமணம் நின்றுவிடுகிறது....!!!
முடிந்து போன பூரணி _ நிரூபனின் வாழ்க்கை பயணமும் அங்கு தான் பிரச்சினையின் மூலம் இனிதே தொடங்குகிறது
மார்த்தாண்டம்: கதையில் மிக முக்கியமான கதாபாத்திரம் சிவலிங்கத்தின் நெருங்கிய நண்பரும் சகோதரியின் கணவர் ஆவார். இவரால் தான் கதையில் முக்கிய திருப்பங்களும் இனிய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன
நிரூபன் பூரணியை கண்டதும் மனதிற்கு பிடித்து காதல் வயப்பட்ட நிலையில் அவளின் புகுந்த வீட்டினரின் முன் திருமணம் செய்ய கேட்கிறான் அதற்கு பூரணியும் லிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள் செவ்வந்தி மறுப்பு தெரிவித்து பூரணி அவளின் விருப்பமாக படிப்பை தொடர சென்று விடுகிறாள்
மார்த்தாண்டம் மற்றும் அவ்வீட்டின் இளைய பட்டாளமும் முன்னின்று அனைத்து உறவுகளையும் சரிக்கட்டி நிரூபன் பூரணி திருமணத்தை இனிதே நடத்தி முடிக்கிறார்கள்
நாயகன் நாயகி திருமணம் மட்டுமின்றி இக்கதையில் மற்ற நான்கு ஜோடிகளான ராகுல் _ மஞ்சு... இனியன் _ கமலினி.... மோகன் _ நித்யா இறுதியில் கவின் _ மதுரா ஆகியோரின் திருமணமும் பலவித விறுவிறுப்பான சம்பவங்களுடன் நடந்தேருகிறது
கதையில் நிறைய மாந்தர்கள் இருந்தாலும் அவர்களுக்கு தக்க பாத்திரங்களை வடிவமைத்து விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதையை கொண்டு சென்று நிறைவாக முடித்திருக்கிறார் நம் எழுத்தாளர்
ககனம் (ஆகாயம் மற்றும் சொர்க்கம் என்று பொருள் படும்)
பூர்ணசந்திரா என்கிற முழுநிலவு நிரூபன் என்கிற ஆகாயத்தை காதலுடன் வந்தடைகிறாள்
உறவுகளால் கசப்பையும் வலிகளையும் மட்டுமே அனுபவித்த நம் நாயகன் பூரணியின் வரவால் நல்உறவுகள் சூழ் சொர்க்கத்தை காண்கிறான்
இருவரின் காதலுக்கு பரிசாக சிவமித்ரன் கடவுளின் வரமாக
மிக அருமையான கதை
மிக நிறைவான முடிவு
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்