அடப்பாவி மணி
முதலிலேயே துளசியிடம் இவன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டானா?
அப்போ நிச்சயமாக துளசியின் கல்யாணத்தை இவன் நடத்த விடமாட்டான்
கோமல்தான் துளசின்னு மணிக்கு இன்னும் தெரியலை
தெரிய வரும் பொழுது நிச்சயம் கணக்கு வாத்தியாரின் கல்யாணம் நின்று விடும்
அந்த கூமுட்டை எம் பி சார் வேற பானு அக்காவுக்காக மணி திருந்துவதற்காக என்ன கேட்டாலும் செய்வேன்னு சொல்றான்
அப்போ துளசியைத் தூக்கி மணியிடம் கொடுத்து விடுவானா?
தனக்கு கிடைக்காத துளசியை நிச்சயமாக மணி கேவலமாகப் பேசப் போறான்
கூட அந்த கூட்டாளிங்களும் ஏதோ பண்ணப் போறானுங்க
கல்யாணம் நின்று துளசியான கோமலின் துயர் துடைக்க சூரசம்ஹாரம் செய்ய மூர்த்தி ஸார் மும்பை போகப் போறாரா?
ஆனா ஒண்ணு
கல்யாணம்ன்னு சொல்லி ஆசை காட்டி மோசம் செய்து துளசியை உயிரோடு வதைக்கப் போகிறார்கள்
மூர்த்திக்கும் பானுவுக்கும் மட்டும் தெரிந்த (மணிக்கும் தெரிந்த) கோமலின் நாற்றப் பக்கங்கள் எல்லோரின் முன்பும் கடை பரப்பப்படப் போகிறது
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஷோபா டியர்