“சரி.. சரி… என்னதான் நீ ட்ரை பண்ணாலும் நீ என்னோட பாசமலர் அண்ணனாக முடியாது….. சீன் போடாத…” என்றபடி வெளியேறினாள் கீர்த்தி.
சென்னையிலிருந்து அந்த பேருந்து தஞ்சை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கண்ணாடி வழியே காற்று அந்த கன்னிகையரைத் தழுவ வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்த மதுரவசனியைக் கலைத்தது அவளது தோழி ஹம்ச கீதாவின் குரல்.
மதுரவசனியும் ஹம்சாவும் தஞ்சாவூருக்கு மூன்று மாதம் கழித்து செல்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஸ்ரீராம், ஹம்சாவின் அண்ணன் எல்லாம் மாதம் ஒருமுறை வந்துப் பார்த்து விட்டுச் சென்றனர். மூன்று மாதம் ஆகிவிட்டமையால் ஒருமுறை ஊருக்கு செல்லலாம் என இருவரும் விடுப்புக் கேட்டு, இப்போது பேருந்தில் ஊருக்குச் செல்கின்றனர்.
“என்ன ஹம்சா..?”
“இல்ல…. இன்னிக்கு அந்த லலிதா கிட்ட உங்க வீட்டை விட்டுக்கொடுக்காம பேசினியே… என்ன திடீர்னு… இந்த மாற்றம்…. எப்போவும் அவங்களைக் குறை சொல்லத்தானே செய்வ…?”
“என்னது விட்டுக்கொடுக்காமப் பேசினேனா…. விட்டுக் கொடுக்கிற அளவுக்கு என் வீட்டுக்கு என்னடி குறை…?”
“இல்ல…. அவ நம்மளை சினிமாவுக்குக் கூப்பிட்டா.. நீ முடியாதுன்னு மறுத்திட்ட…. ஊர்ல என்னடான்னா சினிமாவுக்கு அழைச்சிட்டுப் போக மாட்றாங்கன்னு புலம்புவ….”
“அட……. ஹம்சா…… என்ன இருந்தாலும் அவங்க என் வீட்டு ஆளுங்க… அந்த லலிதா முன்னாடி எப்படி அவங்களைக் குறை சொல்ல முடியும்… குறை சொல்ற அளவுக்கு என்ன இருக்கு…? என்னால சினிமாவுக்குப் போக முடியாம இல்ல… எப்போவுமே வீட்டுல எல்லாருக்கு வேலை இருக்கு… அப்பாவுக்கு இல்லனா… பெரியப்பாவுக்கு இருக்கும்… சித்தப்பா ஃப்ரீயா இருந்தாருனா.. ராமண்ணாவுக்கு வேலை இருக்கும்…. நாங்க எல்லாமே ஒரே குடும்பமா வெளியே போகனும்னு ஆசை….. அதான் அப்படிச் சொல்வேன்….. சினிமாவுக்குத்தான் சரணும், வத்சனும் கூட்டிட்டுப் போவானுங்களே… ஆனா ஒன்னா போக முடியலன்னு கடுப்பில சொல்வேன் டி…”
“ஒஹ்… அப்படியா டி… சாரி… நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்… ஆனா ப்ர்ண்ட்ஸ் கூடச் சேர்ந்து போகனும்னு ஆசைப்படுவ இல்ல… இப்போ சான்ஸ் கிடைச்சும்… இப்படிப் போகாம…. என்னையும் போக விடாம செஞ்சிட்டியே மது…. சென்னைக்கு வந்து எத்தனை நாளாச்சு…. பீச்சைத் தவிர எதாவது பார்த்தோமா டி… நம்ம கூடப் படிச்சாளே அந்த மேனகா… அவ சென்னைவாசியாவே மாறிட்டா… ஒரே மாசத்தில சென்னையில ஒரு இடம் பாக்கி விடாம சுத்திட்டா… தெரியுமா…. நீயும் இருக்கியே…” எனப் புலம்ப,
“கிறுக்கி…… ப்ரண்ட்ஸ் கூடப் போகனும்னு எனக்கும் ஆசைதான்.. இப்போவும் வீட்ல விடமாட்டாங்கத்தான்… அது எனக்குக் கோபம் தான்… ஆனா இப்போ… என்னை நம்பி வேலைக்கு அனுப்பிருக்காங்க… தெரியாத ஊரு… இதே நம்ம ஊர்னா… எதாவது பிரச்சனைனா தெரிஞ்சவங்க ஓடி வருவாங்க… இங்க அப்படியா…. அதுவும் அந்த லலிதா நைட் ஷோவுக்குக் கூப்பிடுறா… வீட்டை விடு.. எனக்கே அதெல்லாம் பிடிக்காது… நம்ம பாதுகாப்பை நம்ம தான் பார்த்துக்கனும்… அவ கூடப் பசங்களும் வருவானுங்களாம்.. நமக்கு அதெல்லாம் ஒத்துவருமா..? அதான் ஒதுங்கிட்டேன்… உனக்கு வேணும்னா போக வேண்டியதுதானே……”
“நீ இல்லாம எப்படி டி…? சினிமாவுக்குப் போகனும்னு ஆசையில கேட்டேன்… கோவப்படாதடி…”
“இங்க பாரு ஹம்சா…. நம்மளை நம்பி அனுப்பியிருக்காங்க… என் ஆத்தா கிட்டக் கஷ்டப்பட்டு நான் அனுமதி வாங்கியிருக்கேன்… சுதந்திரத்தை தப்பா பயன்படுத்தக் கூடாது… the price of freedom is responsibility. எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு சுதந்திரம் தராங்களோ அவ்வளவுக்கு நாம பொறுப்பா இருக்கனும் டி…. நீ கவலைப்படாத…. நம்ம வீட்ல கேட்டு சினிமாவுக்குப் போகலாம்.. ராமண்ணாவோ இல்ல உங்கண்ணாவோ சென்னை வரட்டும்… நம்ம கேட்டு நம்ம அண்ணனுங்க மாட்டேனா சொல்வாங்க….? என்றவளுக்கு அண்ணன்களைப் பற்றியப் பெருமையே குரலில் நிரம்பி வழிந்தது.
ஹம்சாவின் வீடும் மதுவின் வீடும் பங்காளிகள். அதனால் ஹம்சாவின் அண்ணன் தமிழ்செல்வனும் மதுவிடமும் பாசமாக பழகுவான்.
“நீ சொல்றது சரிதான் மது… இதே நம்ம ஊர்னா. ஜாலியா சுத்தலாம் டி.. அங்கன்னா நம்ம எப்படித் திருட்டுத்தனம் செஞ்சாலும் ஈசியா மாட்டிக்குவோம்…. இங்க மாட்ட மாட்டோமே…”
“மாட்னா தான் டி த்ரில்லே…”
“அடிப்பாவி..” என ஹம்சா வாயைத் திறக்க, மதுவோ கொட்டாவி விட்டு ,
“தூங்குடி…. எனக்குத் தூக்கம் வருது…” என்றபடியே உறங்கிப் போனாள்… அடுத்த நாள் விடியற்காலை ஐந்தரை மணிக்கு அவளது சித்தப்பா கார்த்திகேயன் காரை எடுத்துக் கொண்டு அழைக்க வந்துவிட்டார். ஹம்சாவை அவள் வீட்டில் இறக்கி விட்டு, அவர்களின் வீட்டுக்குச் சென்றனர்.
அனைவரும் அந்த அதிகாலையிலேயே விழித்திருந்தனர். எப்போதுமே அனைவரும் எழும் நேரம் தான் என்றாலும் அமுதன், ஸ்ரீவத்சன், ப்ரியா, ஆயுஷ் எல்லாம் சின்னவர்கள். அவர்கள் தாமதமாகவே எழுவார்கள்…. அவர்களும் கூட இவளுக்காக சீக்கிரமே எழுந்தனர். கார் கேட்டினுள் நுழைந்ததுமே ,
“அக்கா…….” என்றபடி அமுதனும் ப்ரியாவும் ஓட
“அத்த…….” என்று கத்திக்கொண்டு ஆயுஷ் ஓடினான்.
அதைப் பார்த்து மதுரவசனியின் கண்கள் கலங்கிவிட்டன.
“என்னடா அதிசயமா எல்லாம் சீக்கிரம் எழுந்திட்டீங்க…..”
“உன்னைப் பார்க்கத்தான் கா….” என்று ப்ரியா சொல்ல
“அக்கா தான் வந்துட்டாளே இன்னும் இரண்டு நாள் இங்க தான் இருப்பா... வீட்டுக்குள்ளப் போய் பேசிக்கலாம்…. வா மது… டேய் வத்சா… அக்கா கிட்டயிருந்து பேக்கை வாங்கு…..” என்று கார்த்திகேயன் சித்தப்பா சொல்ல
“வந்தவுடனே என்னை வேலை வாங்குறியா…” என வத்சன் அக்காவிடம் கேட்க,
“ஹே… நான் எங்கடா சொன்னேன்… சித்தப்பா தானே சொன்னாரு… நீ தூக்க வேண்டாம் விடு… நானே தூக்கிக்கிறேன்……” என்று தம்பியிடம் சொல்ல
“ஹே…! கீழா (லூசு) கோச்சுக்கிட்டியா… சும்மா.. மூனு மாசம் நான் வம்பிழுக்க ஆள் இல்லாம இருந்தேனா.. அதான்... அக்கா… இந்த ப்ரியாவை வம்பிழுத்தா உடனே கத்தி ஊரைக் கூட்டுறா…” என்றவன் அவள் கையைப் பிடித்துப் பையை வாங்கி ,
“ஐ மிஸ் யூ கா…” என்றான் உண்மையாக. பிரிவின் தாக்கம் அவனின் குரலில் தெரிய, தம்பியின் தலையைக் கலைத்தவள்,
“நானும் டா..” என்றாள். மதுவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை… தன் தம்பியா இப்படி பேசுவது என… இத்தனை நாள் அருகில் இருக்கும்போது அவளின் அருமை அவனுக்குத் தெரியவில்லை. இப்போது பிரிந்தவுடன் தெரிகிறது போல என்று நினைத்துக் கொண்டாள். மது எப்போதுமே மஹாவும் வத்சனும் நெருக்கம்… அவள் மீதுதான் பாசம் ஜாஸ்தி என்று நினைத்திருந்தாள். ஆனால் தம்பியின் இன்றைய செயலால் அது உண்மையில்லை, தம் மீதும் அவனுக்குப் பாசம் உண்டு என்பதை அவள் அறிந்துக் கொண்டாள்.
எல்லாரிடமும் பேசி மகிழ்ந்து, காலை உணவை உண்ட பின், ஆண்கள் அனைவரும் வேலைக்குப் போனதும், ஒரு பெட்டியை எடுத்து வந்து சுலோச்சனாவிடம் நீட்டினாள் மதுரவசனி. அனைவரும் என்னவென்று பார்க்க, அதில் அழகான ஜோடி தங்கவளையல் இருந்தது.
அதைக் கண்ட சுலோச்சனாவின் கண்கள் கலங்க,
“உங்களுக்குத் தான் பெரிம்மா… இந்த மது சோழர் வம்சம்னு நிரூபிக்க வேண்டாம்.. வேலைக்குப் போய் உங்களுக்கு வளையல் வாங்கித் தருவேன்னு சொன்னேன்ல..” என
மதுரவல்லிக்குத் தன் பேத்தியை நினைத்துப் பெருமையாக இருந்தது.
“தேங்க்ஸ்டா மது….ரொம்ப நல்லாயிருக்கு…”
“மது….. எப்படி இப்படி…. சம்பளம் மொத்தமும் காலியா….” என ஹரிணி கேட்க
“அதானே…. மது… எப்படி டா… நீ சரியா சாப்பிட்டியா இல்லையா… இல்ல மிச்சம் பிடிக்கிறேன்னு பட்டினி கிடந்தியா …” என்று மோகனா சித்தி கேட்க,
“பட்டினியா போங்க சித்தி… மிச்சம் பிடிச்சின்ன… நானு.. மொத்தமா பிடிச்சேன்… ஊருக்குப் போறதுக்கு முன்னாடி…. அம்மா கிட்ட சொல்லாதன்னு நீங்க கொடுத்த ஆயிரம், பெரியம்மா கொடுத்த ஆயிரம், அம்மா கொடுத்த ஆயிரம்…. அப்புறம்.. பெரியப்பா, அப்பா, சித்தப்பா, அண்ணா, மகா, மாமானு நீங்கக் கொடுத்தப் பணம், அதில்லாம மூணு தடவை என்னைப் பார்க்க வந்துட்டு செலவுக்குன்னு காசு கொடுத்தாங்க… எல்லா சாமானையும் செந்தில் அண்ணாவையே வாங்கித் தர சொல்லிட்டீங்க.. ஒரு சோப்பு கூட என் செலவுல வாங்கல…. அப்புறம் என்ன செலவு… எனக்கு…..?” என்றதும் அனைவரும் முகத்திலும் அசட்டுப் புன்னகை.
“சரி மது.. உங்க பெரியம்மாவுக்கு மட்டும் வாங்கியிருக்கியே… இந்த சித்திக்கு ஒன்னுமில்லையா…?”
“சித்தி.. உங்களை எப்படி மறப்பேன்.. இந்தாங்க உங்க பார்சல்…”என்றபடி அவள் கொடுத்த டப்பாவைப் பிரிக்க, அதில் அவருக்குப் பிடித்த மாதிரி கதைப் புத்தகங்கள்.
“ஹே… மது… தேங்க்ஸ்மா…. சூப்பர்… நான் எதிர்ப்பார்க்கவே இல்லை..” என்று அவர் மகிழ
தனது அம்மாவுக்கும் ஆத்தாவுக்கும் தான் வாங்கிய புடவையைக் கொடுத்தாள். குழந்தைகள் அனைவருக்கும் சாக்லெட்ஸ் தந்தவள் ,
“அடுத்த தடவ அக்கா.. உங்களுக்கு கிஃப்ட்ஸ் வாங்கித்தரேன்…” என