ஐயோ அம்மா வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுன்னு சொல்வாங்க
நேற்றிலிருந்து அதுபோலத்தான் நான் இருந்தேன், ஷோபா டியர்
இங்கே கமெண்ட்ஸ் எழுதலையே தவிர கோமலுக்கு என்னிடம் செம திட்டு கிடைத்தது
"லூசுப் பெண்
எந்த நேரம் எதை செய்யணுமுன்னு ஒரு விவஸ்தை கிடையாது
அது எப்படி அங்கே பாறைக்கு இடையில் போய் உட்கார்ந்து வானம் பார்த்தவுடன் தூக்கம் வரும்?
கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு
இப்போ போய் இப்படி பண்ணுறியேம்மா துளசி
எல்லாம் இந்த கணக்கு வாத்தியார் கொடுக்கும் இடம்
நல்லா நாலு போடு போட்டிருந்தால் இந்த முட்டாள் துளசி இப்படி செய்வாளா? "
இப்படி பல திட்டுக்கள் திட்டினேன் துளசியை
காலங் கெட்ட காலத்தில் மைனியை அங்கே கூட்டிட்டுப் போன அந்த செல்வன் பையனுக்கும் என்னிடம் செமத்தியாக கிடைத்தது