கதையின் ஆரம்பம் முதலே தொடர்ந்து அருமையான கருத்துக்களை பகிர்ந்து என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததற்கு நன்றிகள்ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கொஞ்சம் கூட சலிப்படைய வைக்கவில்லை ஒவ்வொரு எபியும் விருவிருப்பா சுவாரசியமாக இருந்துச்சு
சரசு மாதிரி சாகுற வரைக்கும் திருந்தாத பிறவிகள் இருக்கத்தான் செய்யுது
நந்தன் இவர் தான் சரசுவால அதிகம் பாதிக்கபட்டவர் . அவருக்கு கடைசியில் ஆத்திரம் தீர அந்த சரசுவை அடிக்கிற வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் ஆனாலும் எழில் கல்யாணம் புது வீடு விஷேசம் குழந்தையோட விஷேசம் எதிலும் அவர் கலந்து கொண்டது போல தெரியலையே
இனியாவது அலர் எழில் அவரை தங்களோட வச்சிக்கிட்டா நல்லது
அவந்திய நாதன் மாதிரி ஆட்கள் எல்லாம் மாற முடியாது கொஞ்ச நாள் முயற்சி பண்ணி பார்ப்பாங்க ஆனால் அடிப்படை குணம் தான் அதிகமாக தலைகாட்டும்
வளர்மதி மாதிரி வாழ்கிற பெண்கள் தான் நம்ம அம்மாக்கள் தலைமுறையில் அதிகம் இனி எதிர்காலத்தில் மாறினா சந்தோஷம் தான்.
அலர் ஆரம்பத்தில் இருந்தே இவளோட அப்பா பாசம் கடுப்பா தான் இருந்துச்சு ஆனால் கடைசியில் அப்பா நிக்க வச்சு கேள்வி கேட்டபோது ரொம்ப சந்தோஷம் ஆகிட்டேன்
அலர் மாதிரி பொண்டாட்டி என்கிற ஸ்தானத்துக்கு வந்த பிறகு தான் நம்ம அப்பா அம்மாவை எப்படி நடத்துறாருன்னு புரியும் அதே போல் நம்ம பிள்ளைகள் வந்த பிறகு தான் நம்ம அம்மாவையும் உணர்வோம் . அவங்களை எப்படி படுத்திருக்கோம்ன்னு அப்போ தான் புரியும்
அப்பத்தா நீலா சுடர் கொஞ்சம் தான் வந்தாங்க இருந்தாலும் எப்பவுமே நியாபகத்தில இருப்பாங்க
வெற்றி மாதிரி ஒரு பாவப்பட்ட நண்பன் எல்லா கேங்க்லயும் இருப்பான்
அலர் எப்படியோ தத்தி தடுமாறி திட்டு வாங்கி அடி வாங்கி கடைசியில் எழிலை புரிஞ்சிகிட்ட . ஆரம்பத்தில் அவன் காதலை சொன்ன போது புரிஞ்சுக்காமல் அவனை நோகடிச்சதுக்கும் இப்போ மருத்துவ மனையில் அந்த நிலைமையில் எழில் விட்டுட்டு போன போது கூட எழில் என்ன செஞ்சாலும் சரியா தான் இருக்கும் என்று நீ சொல்றதுக்கும் நடுவில் எழில் பெரும் போராட்டமே நடத்தி முடிச்சுட்டான்
எழில் முதலில் எதுக்கெடுத்தாலும் கோபபட்டு முரட்டு தனமாக நடந்துகிறானேனு தோணுச்சு ஆனால் கடைசியில் அவன் தான் பொறுமையாவும் நிதானமா எல்லோரையும் பத்தி யோசித்து நடந்திருக்கான் . யாரையும் காயப்படுத்தாமல் அவங்க மனநிலையையும் புரிஞ்சுகிட்டு யாருக்கும் எந்த வித கஷ்டமும் வராமல் தன்னோட காதலிலும் ஜெயிச்சு வாழ்க்கையிலும் ஜெயிச்சிட்டான்
தன் காதலோடு மதிப்பையும் தன் உறவுகளோட மதிப்பையும் சமமா கொண்டு போயிட்டான் . ஆனால் இவன் மகன் வளர்ந்து வந்து என்ன கூத்து பண்ண போறானோ தெரியல
கடைசியா ஒரு முக்கியமான ஆள் அந்த சந்திரு . டேய் யாருடா நீ கதையில் வராமலே மொத்த குடும்பத்தோட நிம்மதியையும் கெடுத்ததுல உன்னோட பங்கும் இருக்கு. கடைசி அவ பிணத்துக்கு உன்னோட அடையாளம் தான் .
எழில் தான் இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம்