கதையின் ஆரம்பமே தந்தை அன்பில் நனைந்த பொற்காலங்களில் நினைவில் ஏங்கும் ஜிமிக்கியின் மன வலிகளுடன் நெகிழ்ச்சியாகவே நகரத் துவங்கியது.
விஜயதாரணி: அன்பானவள், மென்மையானவள், வைராக்கியமும் குற்றத்தை மன்னிக்காத நங்கையாகவும் பல பரிமாணங்களில் என்னை கவர்ந்தாள் .
தந்தையின் மீது கொண்ட பேரன்பில் அவரையே உலகமாக வாழ்ந்தவளை திடீரென விதியின் சதியால் தந்தை உறவையே வெறுத்து மன்னிக்காமல் தினந்தினம் அவளது தந்தையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்களின் நினைவில் வாழ்ந்து தன் ஏக்கத்திற்கு மருந்தாக அந்தக் காலங்களை பூசிக்கொண்டு வாழ்வதை காணும் போது மனது ரணமாகியது.
தெய்வம் அளித்த பரிசாக அவள் மீது உண்மையான நேசம் கொண்ட உறவாய் ஜனகவேல் கணவனாக அமைந்து அவள் வாழ்வை மேன்மையுடன் வாழ்வதை காணும் பொழுது மனம் மகிழ்ச்சியாகியது.
ஜனகவேல் : உண்மையில் தங்கப் பையன் தான். மனச்சாட்சிக்கு நேர்மையாக நடந்து விஜியிடம் அனைத்து உண்மையையும் கூறியதெல்லாம் அவன் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது.
விஜயின் மீது உயிர் காதலை கொண்டது மட்டுமில்லாமல் அவளையும் அவள் உறவுகளையும் ஏற்று அனைவரையும் அனுசரித்து தாய் தந்தையின் வளர்ப்பை மெச்சும்படி செய்து விட்டான்.
மங்கை: நல்ல வாழ்க்கைத் துணை அமைந்தும் தன்னுடைய சோம்பேறித்தனத்தாலும் இயலாமையினாலும் மனைவி கடமையை தவிர்த்ததால் வாழ்க்கையே திசை மாறி பிறகு மனநலம் குன்றி தன் கணவர், மகள், தங்கை, தமையன் என அனைத்து உறவுகளுக்கும் இடையே சிக்கலை ஏற்படுத்திய அறியாமை கொண்ட மங்கை
முத்தையா:
என்ன சொல்ல முத்தையா கோபத்தாலும், அவசரத்தாலும் மனம் ஒவ்வாததாக இருந்தாலும் ஜமுனாவை திருமண பந்தத்தில் இணைத்து மங்கைக்கு மட்டுமல்ல விஜிக்கும் தீராத வலியை கொடுத்துட்டாருன்னு தான் சொல்லணும்
கடைசியில் மகள் பாசத்தையும், நிம்மதியையும் இழந்து மகளின் மன்னிப்பிற்காக ஏங்கித் தவித்து கடைசியில் மறுபிறவியில் மகளுக்கு மகளாய் பிறக்க கடவுளை பிரார்த்தித்து இறைவனடி சேர்ந்து மனதை மிகவும் கலங்க செய்துவிட்டார்.
ஜமுனா:
ஜமுனாவே தீட்டிக்கொண்ட அலங்கோல ஓவியம் தான் முத்தையாவுடன் ஏற்பட்ட திருமண பந்தம், ஜமுனாவும் நிம்மதியை இழந்து தன் தவறை உணர்ந்தாலும் அதை சரி செய்ய இயலாத உடைந்த கண்ணாடியாய் அவரை பார்க்கும் பொழுது பாவமாகவும் இருந்தது.. விஜியின் மீது கொண்ட அன்பினாலும், அந்த வயதிற்கு உரிய ஈர்ப்பினாலும் தவறு செய்து விட்டாலும் பாசமான பெண்மணி தான்
வசந்தா: பிள்ளைகளை மிக அருமையாக வழி நடத்தி இருக்கிறார்.
அவரது வாழ்வில் கணவர் உடனான வாழ்வில் பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அது நிராசையாக மாறிப்போன பொழுதும் கணவருக்கு சேவை செய்யும் நல்ல குடும்பத் தலைவி.
சில காரணங்களால் விஜியுடன் முரண்பட்டாலும் அவளை அரவணைத்து வழிநடத்தவும் செய்தார்.
குட்டி ஜிமிக்கியின் ஜனனம்
முத்தையாவின் ஏக்கத்திற்கும் விஜயின் தந்தை பாசத்திற்கும் நியாயம் செய்ய மறு பிறப்பெடுத்து அனைவர் மனதிலும் வாசம் வீச வந்த அழகு பெண் தேவதை.
விஜி -ஜனா தங்கள் குட்டி இளவரசியுடன் மென்மேலும் சிறப்பாக வாழ்க்கை இதே காதலுடன் புரிந்துணர்வுடன் வாழ்வார்கள் என்று நம்புகிறோம்.
கதையின் நகர்வு அழுத்தமானதாக இருந்தாலும் கதையின் நிறைவு மனதிற்கு நெகிழ்ச்சியை கொடுத்தது,.. தந்தை மகள் பாச துடிப்பு , தங்கப் பையனின் காதல், நண்பர்கள் அமர் மற்றும் ரென்லாவின் கலகலப்பு, பரிதவிப்பு, மகிழ்ச்சி என அனைத்து வித உணர்வையும் கொடுத்து சுவாரஸ்யத்துடன் கதை நிறைவு பெற்றது.
@Sangeetha Raja போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி
விஜயதாரணி: அன்பானவள், மென்மையானவள், வைராக்கியமும் குற்றத்தை மன்னிக்காத நங்கையாகவும் பல பரிமாணங்களில் என்னை கவர்ந்தாள் .
தந்தையின் மீது கொண்ட பேரன்பில் அவரையே உலகமாக வாழ்ந்தவளை திடீரென விதியின் சதியால் தந்தை உறவையே வெறுத்து மன்னிக்காமல் தினந்தினம் அவளது தந்தையாக வாழ்ந்த அந்தப் பொற்காலங்களின் நினைவில் வாழ்ந்து தன் ஏக்கத்திற்கு மருந்தாக அந்தக் காலங்களை பூசிக்கொண்டு வாழ்வதை காணும் போது மனது ரணமாகியது.
தெய்வம் அளித்த பரிசாக அவள் மீது உண்மையான நேசம் கொண்ட உறவாய் ஜனகவேல் கணவனாக அமைந்து அவள் வாழ்வை மேன்மையுடன் வாழ்வதை காணும் பொழுது மனம் மகிழ்ச்சியாகியது.
ஜனகவேல் : உண்மையில் தங்கப் பையன் தான். மனச்சாட்சிக்கு நேர்மையாக நடந்து விஜியிடம் அனைத்து உண்மையையும் கூறியதெல்லாம் அவன் மீது நன்மதிப்பை ஏற்படுத்தியது.
விஜயின் மீது உயிர் காதலை கொண்டது மட்டுமில்லாமல் அவளையும் அவள் உறவுகளையும் ஏற்று அனைவரையும் அனுசரித்து தாய் தந்தையின் வளர்ப்பை மெச்சும்படி செய்து விட்டான்.
மங்கை: நல்ல வாழ்க்கைத் துணை அமைந்தும் தன்னுடைய சோம்பேறித்தனத்தாலும் இயலாமையினாலும் மனைவி கடமையை தவிர்த்ததால் வாழ்க்கையே திசை மாறி பிறகு மனநலம் குன்றி தன் கணவர், மகள், தங்கை, தமையன் என அனைத்து உறவுகளுக்கும் இடையே சிக்கலை ஏற்படுத்திய அறியாமை கொண்ட மங்கை
முத்தையா:
என்ன சொல்ல முத்தையா கோபத்தாலும், அவசரத்தாலும் மனம் ஒவ்வாததாக இருந்தாலும் ஜமுனாவை திருமண பந்தத்தில் இணைத்து மங்கைக்கு மட்டுமல்ல விஜிக்கும் தீராத வலியை கொடுத்துட்டாருன்னு தான் சொல்லணும்
கடைசியில் மகள் பாசத்தையும், நிம்மதியையும் இழந்து மகளின் மன்னிப்பிற்காக ஏங்கித் தவித்து கடைசியில் மறுபிறவியில் மகளுக்கு மகளாய் பிறக்க கடவுளை பிரார்த்தித்து இறைவனடி சேர்ந்து மனதை மிகவும் கலங்க செய்துவிட்டார்.
ஜமுனா:
ஜமுனாவே தீட்டிக்கொண்ட அலங்கோல ஓவியம் தான் முத்தையாவுடன் ஏற்பட்ட திருமண பந்தம், ஜமுனாவும் நிம்மதியை இழந்து தன் தவறை உணர்ந்தாலும் அதை சரி செய்ய இயலாத உடைந்த கண்ணாடியாய் அவரை பார்க்கும் பொழுது பாவமாகவும் இருந்தது.. விஜியின் மீது கொண்ட அன்பினாலும், அந்த வயதிற்கு உரிய ஈர்ப்பினாலும் தவறு செய்து விட்டாலும் பாசமான பெண்மணி தான்
வசந்தா: பிள்ளைகளை மிக அருமையாக வழி நடத்தி இருக்கிறார்.
அவரது வாழ்வில் கணவர் உடனான வாழ்வில் பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் அது நிராசையாக மாறிப்போன பொழுதும் கணவருக்கு சேவை செய்யும் நல்ல குடும்பத் தலைவி.
சில காரணங்களால் விஜியுடன் முரண்பட்டாலும் அவளை அரவணைத்து வழிநடத்தவும் செய்தார்.
குட்டி ஜிமிக்கியின் ஜனனம்
முத்தையாவின் ஏக்கத்திற்கும் விஜயின் தந்தை பாசத்திற்கும் நியாயம் செய்ய மறு பிறப்பெடுத்து அனைவர் மனதிலும் வாசம் வீச வந்த அழகு பெண் தேவதை.
விஜி -ஜனா தங்கள் குட்டி இளவரசியுடன் மென்மேலும் சிறப்பாக வாழ்க்கை இதே காதலுடன் புரிந்துணர்வுடன் வாழ்வார்கள் என்று நம்புகிறோம்.
கதையின் நகர்வு அழுத்தமானதாக இருந்தாலும் கதையின் நிறைவு மனதிற்கு நெகிழ்ச்சியை கொடுத்தது,.. தந்தை மகள் பாச துடிப்பு , தங்கப் பையனின் காதல், நண்பர்கள் அமர் மற்றும் ரென்லாவின் கலகலப்பு, பரிதவிப்பு, மகிழ்ச்சி என அனைத்து வித உணர்வையும் கொடுத்து சுவாரஸ்யத்துடன் கதை நிறைவு பெற்றது.
@Sangeetha Raja போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி
Last edited: