#Yagnithaareview
எழுத்தாளர் #சங்கீதா_ராஜா
#ஜிமிக்கியின்_ஜனனம்
இந்தக் கதை ஜனாவின்
ஜிமிக்கியின் ஜனனம்
நாயகன் ஜனகவேல்
நாயகி விஜயதாரணி
எதார்த்தமான, அருமையான குடும்ப கதை.......
ஒரு மனைவி தன் பொறுப்பில் இருந்து தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் ஒரு குடும்பத்தையே சுழற்றி அடிக்கும், அந்த சூழலில் மாட்டிக்கொண்டு இருந்த நம் ஜிமிக்கியை நம் நாயகன் தங்க பையன் எவ்வாறு மீட்டான் என்பதே கதைக்கலாம், அதை எழுத்தாளர் கொடுத்த விதமும் சொன்ன விதமும் அருமை
விஜயதாரணி தந்தையின் பிரின்சஸ்,தன் சிறுவயதில் ஏற்பட்ட தன் தந்தையின் பிரிவால் தன் மாமன் வீட்டிலேயே தன் அம்மாவுடன் அடைக்கலம் ஆகிறாள்... அதனால் ஏற்படும் உரிமை உணர்வும்,அடிமை உணர்வும் அவள் வாழ்வில் இக்கட்டான சூழ்நிலையில்,ஜனாவின் வாழ்வில் அடி எடுத்து வைக்கின்றாள் பெண் அவள்.......இவளின் தைரியமும், கோபம் , ஏக்கங்கள் என நம் மனதை
....
ஜனகவேல் இவனின் தங்கமான மனதிற்கு இவனுக்கு கிடைத்த பெயர் தங்கப் பையன் உண்மையில் இவன் கோல்ட்தான். இவனின் சுயநலத்திற்காக நட்பாக கைகோர்க்க ஜிமிக்கியை சந்தித்தவன், ஆனால் இவனின் நேர்கொண்ட எண்ணத்தினால் அவளின் நம்பிக்கை உரியவனாக மாறுகின்றான்... இவனின் பொறுமை, பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என இவனை அனைத்து இடங்களிலும் நம் மனதில் தங்க பயனாக சிம்மானமிட்டு அமர வைத்து விட்டான்.....
முத்தையா இவரின் அவசரத்தினால் பாதிக்கப்பட்டது, முழுக்க முழுக்கஇவரின் ஜிமிக்கி பெண் மட்டுமே
... இவரை குறை சொல்ல ஏனோ எனக்கு மனம் வரவில்லை
இவருடைய முடிவு மனதை அழுத்த செய்தாலும் இதுவே சரி என்று படுகிறது
....
ஜமுனா அவள் மனநிலையில் அவர் சரியே... அவளின் நிலையை அறிந்து எடுத்து சொல்லும் இடத்தில் இருந்த அவர் பெற்றோர் மீது தான் நான் முழு தவறையும் சொல்வேன்... இவர் வயதில் ஏற்பட்ட இன கவர்ச்சியினால், இவள் படும் மனதளவிலான துன்பம் மிகவும் கொடுமை
அதுவும் அடுத்த ஜென்மத்தில் தான் வாழும் வாழ்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதெல்லாம் வரமா!!! சாபமா!!!
மங்கை இவரைச் சுற்றி நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமே இவர்தான். ஆனால் அதைக் கூட அறியாத நிலைமையில் இருந்த போதும் அவர் சேர வேண்டிய கை சேர நினைத்தது அருமை,அதை முன்பே செய்திருந்தால் இந்த அப்பா மகள் காவியத்தில் இவருக்கு ஒரு பெரிய அங்கம் கிடைத்திருக்கும்
..
வசந்தா உங்கள் வளர்ப்பு என்றுமே சரியே...நீங்கள் அனுபவித்த ஏக்கங்கள், உங்கள் மகன் மூழியம் வரும் உங்கள் மகளிர்க்கு (மருமகள்) நடக்கக்கூடாது என்று பிள்ளைகளிடம் கூறி வளர்த்த விதம் அருமை ஆனால் அதை தவறியது ஏனோ
வார்த்தைகளை என்றும் அல்ல முடியாது வசந்தமா... கணவனோடு வாழும் இந்த வாழ்க்கை பயத்துடன் வாழ்வது கொடுமையே, இனி நீங்கள் இழந்ததை எல்லாம் கணவனோடு சேர்ந்து சந்தோஷமா வாழ்வீங்க... இதைக் காரணம் கொண்டு உங்களை தவறாக நினைக்க முடியவில்லை. நீங்க இந்த தங்க பையனுடைய தங்க அம்மா தான்
.....
"
உன் பொண்ணா பொறக்கனும் அந்த கடவுள் கிட்ட வேண்டிட்டே சாவுறேன். ஏனா! அந்த உறவுல தான் நான் என் பொண்ணுக் கூடவே இருக்க முடியும்."
இந்த வரிகள் படிக்கிறப்ப என் மனதில் ஏதோ ஒரு வழி, என் இதழ்களில் புன்னகை.....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி