அத்தியாயம் – 2
“சிவகாமிய கூப்பிட்டதே எனக்கு பிடிக்கல.. இதுல நீ அவளை வேற போய் தனியா வெத்தலைப் பாக்கு வச்சு அழைச்சியோ...” என்று மணிராதா, வனமாலியை கடிந்துகொண்டு இருக்க,
அவனோ “நீங்கள் என்னவோ பேசுங்கள்...” என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்..
“வனா... உன்னைத்தான் சொல்றேன்...” என,
அப்போது அங்கே வந்த கோவர்த்தணும், பமீலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, வந்தனாவோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.
“பாருடா.. சிவகாமி வீட்ல போய் கூப்பிட்டது பத்தலைன்னு அந்த கமலிய வேற போய் கூப்பிட்டு வந்திருக்கான்..” என்று சின்ன மகனிடம் மணிராதா புகர் செய்ய, கோவர்த்தனின் முகம் மாறியதோ இல்லையோ பமீலாவின் முகம் மாறிப்போனது..
‘கமலி...’ என்ற பெயரில் எப்போதுமே அவளுக்கு அச்சமுண்டு.. என்னதான் பமீலா வயதில் ஒன்றிருக்கு கமலியை விட மூத்தவள் என்றாலும், சிவகாமியின் மகள் கமலிக்கு தானே மகுடேஸ்வரன் குடும்பத்தில் முன்னுரிமை உண்டு.. இந்திராவின் மகள் பமீலாவிற்கு எப்போதுமே இரண்டாவது இடம்தானே..
இந்த உரிமை போராட்டம் எத்தனை ஆண்டுகளாய் நடந்துகொண்டு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் கமலியோ சிவகாமியோ தங்கள் உரிமையை நிலைநாட்டவென வந்துவிட கூடாது என்று எத்தனை பேரு அடி பொடி வேலைகள் செய்து இருக்கிறார்கள்.
இப்படி இந்திராவும் சரி, பமீலாவும் சரி, தாங்களே இங்கே எல்லாம். தங்களின் உரிமையே பிரதானமானது என்பதை உறுதி செய்துகொள்ள மணிராதா ஆடிய அத்தனை ஆட்டத்திற்கும் துணை போனார்களே..
அதில் ஒன்றுதான் கோவர்த்தன், பமீலா திருமணம்.
அதுவும் அவர்களுக்கு நிச்சயம் செய்து நடந்ததுவா என்ன?? இல்லையே இல்லையே..
மகுடேஸ்வரனிடம் முன்னமே மணிராதா கேட்டார்தான். பமீலாவை வனமாலிக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி.
அவரோ “விதி எனக்கு ரெண்டு குடும்பமாகிப் போச்சு.. ஒரு பொண்ண சொந்தத்துல கொடுத்துட்டு.. இன்னொரு பொண்ண அந்நியமா கொடுத்தா பிரச்னைதான் வரும். என் ரெண்டு பொண்ணுங்களையும் உன் பசங்களுக்கு கேளு.. ஒரேதா ரெண்டு கல்யாணம் செய்யலாம்.. இல்லையா ரெண்டுமே அந்நியமா போகட்டும்..” என்றுவிட,
‘என்னது... கமலியை தன் வீட்டிற்கு கொண்டு வருவதா?? அதுவும் எந்த சிவகாமியை வேண்டாம் என்று ஒதுக்கினோமோ அந்த சிவகாமியின் மகளை தன் வீட்டு மருமகளாய் ஏற்ப்பதா?? முடியாது...’ என்றுதான் மணிராதாவிற்கு தோன்ற, வனமாலிக்கு வெளியே பெண் தேட தொடங்கிவிட்டார்.
இதில் இந்திராவிற்கு வருத்தமே..
“என்ன அண்ணி...??” என்று கேட்க,
“நான் என்ன செய்றது?? அவன் ரெண்டு பொண்ணையும் கட்டுன்னு சொல்றான்... உன் பொண்ண கட்றேன் கட்டலை.. ஆனா அங்க அவ வீட்ல பேச மாட்டேன்..” என்றுவிட்டார் மணிராதா.
மகுடேஸ்வரனும் பெரிதாய் அதன்பின்னே இதில் எதுவும் அவர் விருப்பம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இதிலெல்லாம் ஒன்று உண்டு, வனமாலிக்கு பமீலாவை கட்டுவதில் எள்ளளவும் விருப்பமில்லை. அவளை பிடிக்காது என்றில்லை. ஆனால் அந்த திருமண பேச்சு பிடித்தமில்லை அவ்வளவே.
ஆக மணிராதா, தேடி அலைந்து, அவர்களின் குடும்பம், ஆஸ்தி, அந்தஸ்து என்று அனைத்திற்கும் தகுந்தவாறு கீர்த்தனா என்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க, வனமாலிக்கு அப்போது மறுக்கும் காரணம் வரவில்லை. ஆக சரியென்றுவிட்டான்.
ஒரே மாதத்தில் திருமணம்..
அனைத்துமே ஜரூராய் தடபுடலாய் ஏற்பாடு ஆக, மகுடேஸ்வரனுக்காக சிவகாமியை வேண்டா வெறுப்பாய் அழைத்திருந்தார் மணிராதா. ஆனால் வனமாலியோ “அத்தை நீங்களும் கமலியும் கண்டிப்பா வரணும்” என்றழைக்க,
“கமலிக்கு எப்படின்னு தெரியலை வனா.. ஆனா நான் கண்டிப்பா வருவேன்..” என்றுவிட்டார் சிவகாமி.
யார் தடுத்தாலும், யார் இடையில் வந்திருந்தாலும், மகுடேஸ்வரன் குடும்பத்து மூத்த மருமகளாய், மகுடேஸ்வரனின் முதல் மனைவியாய் அனைத்தையும் முன் நின்று செய்தது சிவகாமியே.. உறவுகள் முன்னிலையில், அதுவும் தன் முதல் மகனின் திருமணம் என்கையில் மணிராதாவால் வாயே திறக்க முடியவில்லை. இந்திரா கண்ணை கசக்க,
“இங்க பாரு இந்திரா.. நீ ஏன் கவலைப் படுற.. இந்த ஒருநாள்.. அப்புறம் அவ எதுக்கு வரப்போறா?? இல்லை நான்தான் கூப்பிட போறேனா?? நீயும் போய் கூட நில்லு.. ஏன் நீ தள்ளி வந்து நிக்கிற??” என்று மணிராதா சமாதானம் செய்ய,
அனைத்தையும் கண்டும் கேட்டும் இருந்தாலும் சிவகாமி எதையும் வெளிக்காட்டவில்லை.
அனைவரும் வனமாலி - கீர்த்தனா திருமணத்தை மகிழ்வாகவே எதிர்நோக்க, அந்தோ பரிதாபம் திருமண நாளின் விடியலில் மணப்பெண் மண்டபத்தில் இல்லை என்பது அனைவர்க்கும் தெரிய வர, யாவருமே ஸ்தம்பித்துதான் நின்றனர்.
என்ன?? ஏது?? எப்படி?? என்று பெண் வீட்டினரை பிடித்து உலுக்க, அதன்பின்னே தான் தெரிந்தது இது கீர்த்தனாவிற்கான கட்டாயத் திருமணம் என்பது.
‘ஐயோ..!!! இப்படியா என் குடும்ப மானம் போகணும்...’ என்று மணிராதா ஒப்பாரி வைக்க, வனமாலியோ அப்படியே நின்றுவிட்டான். மேற்கொண்டு என்ன?? என்ற கேள்விக்கு பதிலே அப்போது அவனிடம் இல்லை. இதை இப்பெண் முதலிலேயே என்னிடம் சொல்லியிருந்தால் இத்தனை தூரம் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் அவனுக்கு.
கோவர்த்தனோ அண்ணனுக்கு ஆதரவாய் நிற்க, மகுடேஸ்வரனும் இந்திராவும் மணிராதாவை சமாதானம் செய்ய, சிவகாமியோ அனைத்தையும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார். அடுத்து என்ன நடக்கும் என்ற யூகம் அவர் மனதில் இருந்ததுவோ என்னவோ.
அவர் சென்று பேசினாலும் மொத்த கோபத்தையும் மணிராதா அவர் மீது திருப்புவார் என்று தெரியும் ஆக, எதுவும் பேசாமல் அப்படியே நிற்க, மணிராதாவிற்கு அழுது புலம்புகையில் சற்று தள்ளியிருந்த பமீலா கண்ணில் பட, சடுதியில் புத்தியில் ஒரு மின்னல்வெட்டு..
‘கடவுளே எல்லாத்தையும் நல்லதா நடத்திக்கொடு...’ என்று கண்களை துடைத்தவர்,
“மகுடா... இப்ப நீதான் ஒரு முடிவுக்கு வரணும்டா...” என்றார் தம்பியிடம் கையெடுத்து கும்பிட்டு.
அம்மா இப்படி சொன்னதுமே வனமாலிக்குப் புரிந்து போனது அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது.. அடுத்த நொடி சுதாரித்தவன், “ம்மா.. ஒரு நிமிஷம்.. மாமா அவர் முடிவை சொல்றதுக்கு முன்ன நான் சொல்லிடறேன்..” என்றவன்,
அவன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டிவிட்டு “இனி நான் கல்யாணம் பத்தி யோசிக்க எல்லாம் ரொம்ப நாளாகும்..” என்றுவிட்டு மண்டபம் விட்டே கிளம்பிவிட்டான்.
“டேய் வனா.. நில்லுடா.. அம்மா சொல்றதை கேளுடா..” என்று மணிராதா பதறி எழ, வனமாலியோ நில்லாது சென்றேவிட, அது மணிராதாவிற்கு பெரும் அவமானமாய் போய்விட்டது.
அவர்களின் உறவுகள் பெரிது.. எல்லாம் பெரிய பெரிய ஆட்களும் கூட, அனைவரையும் அழைத்து விசேச வீடாய் இல்லாது இப்படி வெறும் வீடாய் திரும்ப அனுப்பினால் நாளைக்கு பின்னே என்னாகும்?? ‘இவங்க வீட்லே எப்பவும் இப்படிதான்...’ என்ற ஒரு எண்ணம் வராதா??
அதுவுமில்லாது, உறவுகளில் ஒருசிலர் ‘சிவகாமி விசயத்துல நீ நியாயமா இருந்திருக்கணும்..’ என்று இவர் காதுபடவே பேசுவதும் உண்டே..
இதெல்லாம் ஒன்று சேர, மணிராதா மனதினுள்ளே ஒரு பயம் கூட வந்துவிட்டது. எங்கே சிவகாமியின் கண்ணீர் துளிகள் தன் குடும்பத்தில் பிரளயத்தினை கொடுத்திடுமோ என்று..
‘இல்லை இல்லை..’ என்று தன்னை தானே உலுக்கியவர் “கோவர்த்தனா!!!” என்று இளைய மகனை அழைக்க, எப்போதுமே அம்மாவின் பிள்ளைதானே, மணிராதாவின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டான்.
மகுடேஸ்வரனோ “அக்கா.. இவ்வளோ அவசரமா செய்யனுமா??” என,
“நீ சம்மதிக்கலைன்னா.. நான் உயிரோட வீடு வர மாட்டேன்...” என்று மணிராதா பிடிவாதம் செய்ய,
இந்திராவோ “என்னங்க இதான் நடக்கணும்னு இருக்கு..” என்று ஊக்க, மகுடேஸ்வரன் முடிவெடுக்க முடியாது சிவகாமியைப் பார்த்தார்.
தன் கணவரின் பார்வை தன் பக்கம் திரும்பிய பின்னேதான், “சந்தோசமா செஞ்சு குடுங்க...” என்று அத்தனை நேரம் மௌனியாய் இருந்த சிவகாமி வாய் திறக்க, அதன் பின்னே நடந்தது தான் பமீலா கோவர்த்தன் திருமணம்.
ஆனால் அதன் பிறகுதான், இந்திராவின் நிலை மற்றும், பமீலாவின் நிலை அங்கே ஸ்திரமாகிவிட, சிவகாமி முற்றிலும் அனைத்திலும் இருந்தும் ஒதுக்கப்பட்டார்.
சிவகாமி மீது அத்தனை காழ்ப்புணர்வா மணிராதாவிற்கு?? அத்தனை பகையா?? அதன் காரணம் தான் என்ன? என்று கேட்டால் காரணம் எதுவுமே இல்லை.. சிலரை பிடிப்பதற்கு காரணம் எப்படி தேவையில்லையோ, அதே போலவே சிலரை பிடிக்காது போவதற்கும் காரணங்கள் தேவையில்லை.
மணிராதாவை, மதுரையில் திருமணம் செய்து கொடுத்து, கணவரை இழந்து, மூன்று பிள்ளைகளோடு தனியே நிற்க, என்னதான் சொத்து பணம் வசதி என்று இருந்தாலும் ஆள் பலம் வேண்டுமில்லையா, ஆக சிவகாசிக்கே திரும்பிவிட்டார்.
ஒரே வீட்டில் வேண்டாம் என்று, பிறந்த வீட்டிற்கு அருகிலேயே நான்கைந்து வீடுகள் தள்ளியே மணிராதா சொந்தமாகவே வீடு வாங்கி இருந்துவிட்டார். என்னதான் தனி வீடென்றாலும், முக்கால்வாசி நேரம் பிறந்தவீட்டில் இருக்க, மகுடேஸ்வரனுக்கு திருமணம் செய்யும் காலமும் வந்தது.
முதல் பெண்ணே சிவகாமி தான். பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்தும் விட்டது. அழகு.. படிப்பு.. வசதி.. நகை நட்டு சீர் வரிசை என்று மட்டுமல்லாது சொத்து பத்தோடு வரும் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது. ஆக அத்தனை நாள் வீட்டில் தனக்கே முன்னுரிமை என்றிருந்த மணிராதாவிற்கு சிவகாமியின் வரவு ஒரு அதிர்வை கொடுக்க,
சிறிது சிறிதாய் வீட்டினில் சண்டைகள் சச்சரவுகள் என்று எழும்பிக்கொண்டே இருந்தன. மகுடேஸ்வரனோ சிவகாமி மீது உயிரே வைத்திருக்க, அந்த வீட்டினில் கொஞ்சம் கொஞ்சமாய் சிவகாமியின் முடிவுகளே பிரதானாமாகின.
மணிராதா ஏதாவது சொன்னால் கூட “சிவாக்கிட்ட சொல்லேன் க்கா..” என்பார் மகுடேஸ்வரன்.
வஞ்சமும், பகையும் நொடிப் பொழுதில் தோன்றுபவை தான். ஆனால் மறைய வெகு காலங்கள் ஆகுமே. அதுபோலவே மணிராதா மனதில் சிவகாமி மீது காரணமேயில்லாத வஞ்சம் ஒன்று வளர்ந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில் அவர்கள் ஊரில் தியேட்டர் ஒன்று விலைக்கு வர, மணிராதா “அதை விலை பேசு மகுடா..” என்றுசொல்ல, வீட்டினர் யாருக்கும் அதில் உடன்பாடில்லை.
“அக்கா அது கொஞ்சம் பிரச்சனையான இடம் க்கா..” என்று மகுடேஸ்வரன் மறுக்க,
“உனக்கு வேணாட்டி எனக்கு வாங்கு..” என்றார்.
“சிவகாமிய கூப்பிட்டதே எனக்கு பிடிக்கல.. இதுல நீ அவளை வேற போய் தனியா வெத்தலைப் பாக்கு வச்சு அழைச்சியோ...” என்று மணிராதா, வனமாலியை கடிந்துகொண்டு இருக்க,
அவனோ “நீங்கள் என்னவோ பேசுங்கள்...” என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்..
“வனா... உன்னைத்தான் சொல்றேன்...” என,
அப்போது அங்கே வந்த கோவர்த்தணும், பமீலாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, வந்தனாவோ அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்தாள்.
“பாருடா.. சிவகாமி வீட்ல போய் கூப்பிட்டது பத்தலைன்னு அந்த கமலிய வேற போய் கூப்பிட்டு வந்திருக்கான்..” என்று சின்ன மகனிடம் மணிராதா புகர் செய்ய, கோவர்த்தனின் முகம் மாறியதோ இல்லையோ பமீலாவின் முகம் மாறிப்போனது..
‘கமலி...’ என்ற பெயரில் எப்போதுமே அவளுக்கு அச்சமுண்டு.. என்னதான் பமீலா வயதில் ஒன்றிருக்கு கமலியை விட மூத்தவள் என்றாலும், சிவகாமியின் மகள் கமலிக்கு தானே மகுடேஸ்வரன் குடும்பத்தில் முன்னுரிமை உண்டு.. இந்திராவின் மகள் பமீலாவிற்கு எப்போதுமே இரண்டாவது இடம்தானே..
இந்த உரிமை போராட்டம் எத்தனை ஆண்டுகளாய் நடந்துகொண்டு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் கமலியோ சிவகாமியோ தங்கள் உரிமையை நிலைநாட்டவென வந்துவிட கூடாது என்று எத்தனை பேரு அடி பொடி வேலைகள் செய்து இருக்கிறார்கள்.
இப்படி இந்திராவும் சரி, பமீலாவும் சரி, தாங்களே இங்கே எல்லாம். தங்களின் உரிமையே பிரதானமானது என்பதை உறுதி செய்துகொள்ள மணிராதா ஆடிய அத்தனை ஆட்டத்திற்கும் துணை போனார்களே..
அதில் ஒன்றுதான் கோவர்த்தன், பமீலா திருமணம்.
அதுவும் அவர்களுக்கு நிச்சயம் செய்து நடந்ததுவா என்ன?? இல்லையே இல்லையே..
மகுடேஸ்வரனிடம் முன்னமே மணிராதா கேட்டார்தான். பமீலாவை வனமாலிக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி.
அவரோ “விதி எனக்கு ரெண்டு குடும்பமாகிப் போச்சு.. ஒரு பொண்ண சொந்தத்துல கொடுத்துட்டு.. இன்னொரு பொண்ண அந்நியமா கொடுத்தா பிரச்னைதான் வரும். என் ரெண்டு பொண்ணுங்களையும் உன் பசங்களுக்கு கேளு.. ஒரேதா ரெண்டு கல்யாணம் செய்யலாம்.. இல்லையா ரெண்டுமே அந்நியமா போகட்டும்..” என்றுவிட,
‘என்னது... கமலியை தன் வீட்டிற்கு கொண்டு வருவதா?? அதுவும் எந்த சிவகாமியை வேண்டாம் என்று ஒதுக்கினோமோ அந்த சிவகாமியின் மகளை தன் வீட்டு மருமகளாய் ஏற்ப்பதா?? முடியாது...’ என்றுதான் மணிராதாவிற்கு தோன்ற, வனமாலிக்கு வெளியே பெண் தேட தொடங்கிவிட்டார்.
இதில் இந்திராவிற்கு வருத்தமே..
“என்ன அண்ணி...??” என்று கேட்க,
“நான் என்ன செய்றது?? அவன் ரெண்டு பொண்ணையும் கட்டுன்னு சொல்றான்... உன் பொண்ண கட்றேன் கட்டலை.. ஆனா அங்க அவ வீட்ல பேச மாட்டேன்..” என்றுவிட்டார் மணிராதா.
மகுடேஸ்வரனும் பெரிதாய் அதன்பின்னே இதில் எதுவும் அவர் விருப்பம் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இதிலெல்லாம் ஒன்று உண்டு, வனமாலிக்கு பமீலாவை கட்டுவதில் எள்ளளவும் விருப்பமில்லை. அவளை பிடிக்காது என்றில்லை. ஆனால் அந்த திருமண பேச்சு பிடித்தமில்லை அவ்வளவே.
ஆக மணிராதா, தேடி அலைந்து, அவர்களின் குடும்பம், ஆஸ்தி, அந்தஸ்து என்று அனைத்திற்கும் தகுந்தவாறு கீர்த்தனா என்ற ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க, வனமாலிக்கு அப்போது மறுக்கும் காரணம் வரவில்லை. ஆக சரியென்றுவிட்டான்.
ஒரே மாதத்தில் திருமணம்..
அனைத்துமே ஜரூராய் தடபுடலாய் ஏற்பாடு ஆக, மகுடேஸ்வரனுக்காக சிவகாமியை வேண்டா வெறுப்பாய் அழைத்திருந்தார் மணிராதா. ஆனால் வனமாலியோ “அத்தை நீங்களும் கமலியும் கண்டிப்பா வரணும்” என்றழைக்க,
“கமலிக்கு எப்படின்னு தெரியலை வனா.. ஆனா நான் கண்டிப்பா வருவேன்..” என்றுவிட்டார் சிவகாமி.
யார் தடுத்தாலும், யார் இடையில் வந்திருந்தாலும், மகுடேஸ்வரன் குடும்பத்து மூத்த மருமகளாய், மகுடேஸ்வரனின் முதல் மனைவியாய் அனைத்தையும் முன் நின்று செய்தது சிவகாமியே.. உறவுகள் முன்னிலையில், அதுவும் தன் முதல் மகனின் திருமணம் என்கையில் மணிராதாவால் வாயே திறக்க முடியவில்லை. இந்திரா கண்ணை கசக்க,
“இங்க பாரு இந்திரா.. நீ ஏன் கவலைப் படுற.. இந்த ஒருநாள்.. அப்புறம் அவ எதுக்கு வரப்போறா?? இல்லை நான்தான் கூப்பிட போறேனா?? நீயும் போய் கூட நில்லு.. ஏன் நீ தள்ளி வந்து நிக்கிற??” என்று மணிராதா சமாதானம் செய்ய,
அனைத்தையும் கண்டும் கேட்டும் இருந்தாலும் சிவகாமி எதையும் வெளிக்காட்டவில்லை.
அனைவரும் வனமாலி - கீர்த்தனா திருமணத்தை மகிழ்வாகவே எதிர்நோக்க, அந்தோ பரிதாபம் திருமண நாளின் விடியலில் மணப்பெண் மண்டபத்தில் இல்லை என்பது அனைவர்க்கும் தெரிய வர, யாவருமே ஸ்தம்பித்துதான் நின்றனர்.
என்ன?? ஏது?? எப்படி?? என்று பெண் வீட்டினரை பிடித்து உலுக்க, அதன்பின்னே தான் தெரிந்தது இது கீர்த்தனாவிற்கான கட்டாயத் திருமணம் என்பது.
‘ஐயோ..!!! இப்படியா என் குடும்ப மானம் போகணும்...’ என்று மணிராதா ஒப்பாரி வைக்க, வனமாலியோ அப்படியே நின்றுவிட்டான். மேற்கொண்டு என்ன?? என்ற கேள்விக்கு பதிலே அப்போது அவனிடம் இல்லை. இதை இப்பெண் முதலிலேயே என்னிடம் சொல்லியிருந்தால் இத்தனை தூரம் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் அவனுக்கு.
கோவர்த்தனோ அண்ணனுக்கு ஆதரவாய் நிற்க, மகுடேஸ்வரனும் இந்திராவும் மணிராதாவை சமாதானம் செய்ய, சிவகாமியோ அனைத்தையும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார். அடுத்து என்ன நடக்கும் என்ற யூகம் அவர் மனதில் இருந்ததுவோ என்னவோ.
அவர் சென்று பேசினாலும் மொத்த கோபத்தையும் மணிராதா அவர் மீது திருப்புவார் என்று தெரியும் ஆக, எதுவும் பேசாமல் அப்படியே நிற்க, மணிராதாவிற்கு அழுது புலம்புகையில் சற்று தள்ளியிருந்த பமீலா கண்ணில் பட, சடுதியில் புத்தியில் ஒரு மின்னல்வெட்டு..
‘கடவுளே எல்லாத்தையும் நல்லதா நடத்திக்கொடு...’ என்று கண்களை துடைத்தவர்,
“மகுடா... இப்ப நீதான் ஒரு முடிவுக்கு வரணும்டா...” என்றார் தம்பியிடம் கையெடுத்து கும்பிட்டு.
அம்மா இப்படி சொன்னதுமே வனமாலிக்குப் புரிந்து போனது அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது.. அடுத்த நொடி சுதாரித்தவன், “ம்மா.. ஒரு நிமிஷம்.. மாமா அவர் முடிவை சொல்றதுக்கு முன்ன நான் சொல்லிடறேன்..” என்றவன்,
அவன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டிவிட்டு “இனி நான் கல்யாணம் பத்தி யோசிக்க எல்லாம் ரொம்ப நாளாகும்..” என்றுவிட்டு மண்டபம் விட்டே கிளம்பிவிட்டான்.
“டேய் வனா.. நில்லுடா.. அம்மா சொல்றதை கேளுடா..” என்று மணிராதா பதறி எழ, வனமாலியோ நில்லாது சென்றேவிட, அது மணிராதாவிற்கு பெரும் அவமானமாய் போய்விட்டது.
அவர்களின் உறவுகள் பெரிது.. எல்லாம் பெரிய பெரிய ஆட்களும் கூட, அனைவரையும் அழைத்து விசேச வீடாய் இல்லாது இப்படி வெறும் வீடாய் திரும்ப அனுப்பினால் நாளைக்கு பின்னே என்னாகும்?? ‘இவங்க வீட்லே எப்பவும் இப்படிதான்...’ என்ற ஒரு எண்ணம் வராதா??
அதுவுமில்லாது, உறவுகளில் ஒருசிலர் ‘சிவகாமி விசயத்துல நீ நியாயமா இருந்திருக்கணும்..’ என்று இவர் காதுபடவே பேசுவதும் உண்டே..
இதெல்லாம் ஒன்று சேர, மணிராதா மனதினுள்ளே ஒரு பயம் கூட வந்துவிட்டது. எங்கே சிவகாமியின் கண்ணீர் துளிகள் தன் குடும்பத்தில் பிரளயத்தினை கொடுத்திடுமோ என்று..
‘இல்லை இல்லை..’ என்று தன்னை தானே உலுக்கியவர் “கோவர்த்தனா!!!” என்று இளைய மகனை அழைக்க, எப்போதுமே அம்மாவின் பிள்ளைதானே, மணிராதாவின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டான்.
மகுடேஸ்வரனோ “அக்கா.. இவ்வளோ அவசரமா செய்யனுமா??” என,
“நீ சம்மதிக்கலைன்னா.. நான் உயிரோட வீடு வர மாட்டேன்...” என்று மணிராதா பிடிவாதம் செய்ய,
இந்திராவோ “என்னங்க இதான் நடக்கணும்னு இருக்கு..” என்று ஊக்க, மகுடேஸ்வரன் முடிவெடுக்க முடியாது சிவகாமியைப் பார்த்தார்.
தன் கணவரின் பார்வை தன் பக்கம் திரும்பிய பின்னேதான், “சந்தோசமா செஞ்சு குடுங்க...” என்று அத்தனை நேரம் மௌனியாய் இருந்த சிவகாமி வாய் திறக்க, அதன் பின்னே நடந்தது தான் பமீலா கோவர்த்தன் திருமணம்.
ஆனால் அதன் பிறகுதான், இந்திராவின் நிலை மற்றும், பமீலாவின் நிலை அங்கே ஸ்திரமாகிவிட, சிவகாமி முற்றிலும் அனைத்திலும் இருந்தும் ஒதுக்கப்பட்டார்.
சிவகாமி மீது அத்தனை காழ்ப்புணர்வா மணிராதாவிற்கு?? அத்தனை பகையா?? அதன் காரணம் தான் என்ன? என்று கேட்டால் காரணம் எதுவுமே இல்லை.. சிலரை பிடிப்பதற்கு காரணம் எப்படி தேவையில்லையோ, அதே போலவே சிலரை பிடிக்காது போவதற்கும் காரணங்கள் தேவையில்லை.
மணிராதாவை, மதுரையில் திருமணம் செய்து கொடுத்து, கணவரை இழந்து, மூன்று பிள்ளைகளோடு தனியே நிற்க, என்னதான் சொத்து பணம் வசதி என்று இருந்தாலும் ஆள் பலம் வேண்டுமில்லையா, ஆக சிவகாசிக்கே திரும்பிவிட்டார்.
ஒரே வீட்டில் வேண்டாம் என்று, பிறந்த வீட்டிற்கு அருகிலேயே நான்கைந்து வீடுகள் தள்ளியே மணிராதா சொந்தமாகவே வீடு வாங்கி இருந்துவிட்டார். என்னதான் தனி வீடென்றாலும், முக்கால்வாசி நேரம் பிறந்தவீட்டில் இருக்க, மகுடேஸ்வரனுக்கு திருமணம் செய்யும் காலமும் வந்தது.
முதல் பெண்ணே சிவகாமி தான். பார்த்ததுமே அனைவருக்கும் பிடித்தும் விட்டது. அழகு.. படிப்பு.. வசதி.. நகை நட்டு சீர் வரிசை என்று மட்டுமல்லாது சொத்து பத்தோடு வரும் பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது. ஆக அத்தனை நாள் வீட்டில் தனக்கே முன்னுரிமை என்றிருந்த மணிராதாவிற்கு சிவகாமியின் வரவு ஒரு அதிர்வை கொடுக்க,
சிறிது சிறிதாய் வீட்டினில் சண்டைகள் சச்சரவுகள் என்று எழும்பிக்கொண்டே இருந்தன. மகுடேஸ்வரனோ சிவகாமி மீது உயிரே வைத்திருக்க, அந்த வீட்டினில் கொஞ்சம் கொஞ்சமாய் சிவகாமியின் முடிவுகளே பிரதானாமாகின.
மணிராதா ஏதாவது சொன்னால் கூட “சிவாக்கிட்ட சொல்லேன் க்கா..” என்பார் மகுடேஸ்வரன்.
வஞ்சமும், பகையும் நொடிப் பொழுதில் தோன்றுபவை தான். ஆனால் மறைய வெகு காலங்கள் ஆகுமே. அதுபோலவே மணிராதா மனதில் சிவகாமி மீது காரணமேயில்லாத வஞ்சம் ஒன்று வளர்ந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில் அவர்கள் ஊரில் தியேட்டர் ஒன்று விலைக்கு வர, மணிராதா “அதை விலை பேசு மகுடா..” என்றுசொல்ல, வீட்டினர் யாருக்கும் அதில் உடன்பாடில்லை.
“அக்கா அது கொஞ்சம் பிரச்சனையான இடம் க்கா..” என்று மகுடேஸ்வரன் மறுக்க,
“உனக்கு வேணாட்டி எனக்கு வாங்கு..” என்றார்.