வசீகர வனமாலி – சரயு
அத்தியாயம் – 1
“துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.....”
கசிந்துருகும் கந்த சஷ்டி கவசத்துடன் அன்றைய தினத்தின் சிவாகாமி அச்சகம் தன் வழக்கமான பணியினை தொடங்கிட, கமலி அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் அமர்ந்து, அன்றைய தினத்தில் முடிக்கவேண்டிய வேலைகள் என்னவென்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சிவகாசி... தீப்பெட்டி, வெடிப் பொருட்களுக்கு மட்டும் பெயர்போனது அல்ல.. அச்சக தொழிலுக்கும் பெயர் போனது.
அதிலும் சிவகாமி அச்சகம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் தங்கள் பணியை தரமாய் வழங்கும் அச்சகம்..
வருடங்கள் ஓடினாலும், தொழில்நுட்பங்கள் பெருகினாலும், அனைத்திற்கும் தன்னை ஈடு கொடுத்து, அச்சக தொழிலில் புதிது புதிதாய் வரும் அனைத்து விசயங்களையும் கற்று, ஏற்றுக்கொண்டு காலத்திற்கு ஏற்ப காலூன்றி நிற்கும் நிறுவனம் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.
சுமார் நாற்பது பணியாளர்களோடு அன்றைய தின வேலையை தொடங்கிய சிவகாமி அச்சகத்தின் புதிய தலைமை பொறுப்பு, அதாவது இந்த ஆறு மாத காலமாய் நீதான் இதனை இனிமேல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சிவகாமி பிடிவாதமாய் சொல்லிட அம்மாவின் வார்த்தைகளை மீற முடியாது வந்து தன் பொறுப்பினை ஏற்றுகொண்டாள் கமலி.
பிறந்ததில் இருந்து பார்க்கும் ஒன்றுதான். இருந்தாலும் பொறுப்பில் என்று அமர்ந்த பின்னே தானே அதன் சுமைகள் தெரியும். ஆனால் வந்த சில நாளிலேயே கமலிக்கு இந்த வேலைகள் புரிந்துவிட, பிடித்தும் விட்டது.
“கமலி ம்மா...” என்று கதவு அவள் அறையின் கண்ணாடி கதவுகள் லேசாய் திறந்திருந்தாலும், அது தட்டி நின்றவரின் குரலில் நிமிர்ந்தவள்,
“உள்ள வாங்க தாத்தா...” என்று சங்கிலி நாதனை அழைக்க, அவரோ கொஞ்சம் நடக்க சிரமப்பட்டே உள்ளே வந்தார்.
“என்னை கூப்பிட்டா நானே வரப் போறேன்...”
“வேலையா இருப்பே...”
“வீட்ல ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னாலும் கேட்கிறது இல்லை. டெய்லி இங்க வந்து எல்லாரையும் அதட்டணும்...” என்று கண்டிப்பாய் பேச முயன்றாலும் கமலிக்கு ஒருபுறம் சிரிப்பு வேறு.
சங்கிலிநாதன், சிவகாமி அச்சகம் தொடங்கிய நாளில் இருந்து இங்கே பணியாற்றியவர். கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒருத்தர் போல.. எழுபது வயது தாண்டினாலும், தினம் ஒருமுறையாவது இங்கே வந்துவிடுவார். அப்போதுதான் அவருக்கு உறக்கம் வருகிறதாம்.
அதிலும் கமலி வந்து பொறுப்பேற்ற பிறகு சொல்லவே வேண்டாம், பாதி நேரம் இங்கேதான். அவருக்கு வயதாகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், கமலிக்கு அவரிடம் வேலைகள் சொல்வது என்பது எப்போதுமே பிடிக்காது. அவரோ,
‘நான் இத செய்றேன்.. அத செய்றேன்...’ என்று வருவார்.
“இங்க வராம தூக்கம் வராது கமலி..” என்று வழக்கமான பதிலை அப்போதும் சொல்ல,
“சரி சொல்லுங்க ஏன் வந்தீங்க??” என்று தலையை ஆட்டி கமலி சிரிக்க,
“அது.. நம்ம வனா பையன்...” எனும்போதே, கமலியின் முகம் மாறிவிட்டது.
“தாத்தா...!!!” என்று கண்டிப்புடன் அழைக்க,
“இருடா.. நான் பேசிக்கிறேன்...” என்றவர் “நம்ம வனா பையன் உன்னை பாக்கணும்னு சொல்றான்....” என,
“முடியாதுன்னு சொல்லிடுங்க..” என்றாள் பட்டென்று.
“வாசல் வரைக்கும் வந்தவனை அப்படி திருப்பி அனுப்ப முடியாதேடா...” என்றவரை இப்போது வெளிப்படையாகவே கமலி முறைக்க,
“அவன் நினைச்சா நேரா உள்ள வந்திருக்கலாம். மரியாதைக்காக காத்திட்டு நிக்கிறான். நம்மளும் அந்த மரியாதை செய்யணுமே...”
“நான் நினைச்சா அவரை அப்படியே வெளிய போன்னு சொல்லலாம்..”
“நீ அப்படி சொல்லமாட்ட.. நீதான் மரியாதை தெரிஞ்ச பொண்ணாச்சே...” என்று சங்கிலிநாதன் சிரிக்க,
“ஆ...!!!! தாத்தா...” என்று பல்லைக் கடித்தவள், “அம்மா ஒரு பக்கம்னா நீங்க அதுக்குமேல...” என்று கடிய,
“சரி சரி அப்புறம் திட்டு... அவனை வர சொல்லவா...” என்று எழுந்தே விட்டார்..
‘வேணாம் சொன்னாமாட்டும்....’ என்றெண்ணியவளுக்கு ஒருமுறை சொல்லிப் பார்ப்போமே என்றும் தோன்ற, அதன்பின் அவன் அந்த வனமாலி.. நேராய் அம்மாவின் முன் போய் நிற்பான்.. அதன்பின் அம்மா இவளை அழைத்து கண்ணா பின்னா கச்சேரி தொடங்கும்.. அது தேவையா??
‘அட போங்கய்யா...’ என்று சொல்லவேண்டும் போல் இருந்தது, ஆனாலும் முடியாதே..
கமலி அமைதியாக இருக்க, அவளைப் பார்த்து ஒரு புன்னகை சிந்திய சங்கிலிநாதனோ வனமாலியை அழைக்க வெளியேறிட, அடுத்த இரண்டே நிமிடத்தில் வனமாலி அவளின் முன்னே இருந்தான்.
வனமாலி வந்தமர்ந்த அடுத்த நொடி “என்ன விஷயம்??” என்று கேட்டவளை,
“வாங்கன்னு தான் சொல்ல முடியாது... அட்லீஸ்ட் தன்மையா பேசக்கூடவா முடியாது...” என்றான் கண்டிக்கும் விதமாய்.
“எனக்கு அட்வைஸ் பண்ணத்தான் வந்தீங்களா??”
“எனக்கு வேற வேலை இல்லை பாரு...” என்று வனமாலியும் பதிலுக்கு கொடுக்க, கண்களை இடுக்கி அவனைப் பார்த்தவள், நீ பேசு என்பதுபோல் அமைதியாகிப் போனாள்.
அவனுக்குத் தெரியும், இப்படி பேசினால் மட்டுமே கமலியின் வாய் கொஞ்சம் மூடும் என்று. இல்லையெனில் பதிலுக்கு பதில் ஒன்றை பேசி, அவன் பேச வந்த விசயத்தையும் பேச விடாது செய்து, இறுதியில் அவனே சண்டையிடும் அளவும் செய்துவிடுவாள்.
பின்னே எத்தனை வருடமாய் பார்க்கிறான். அவளுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து கமலியிடம் காண்பது எல்லாம் இதே கடுகடுப்புதான். அவள் மீதும் குற்றமில்லை.. அந்த ஒரு காரணம் மட்டுமே வனமாலி பொறுத்துப் போவது.
அத்தியாயம் – 1
“துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.....”
கசிந்துருகும் கந்த சஷ்டி கவசத்துடன் அன்றைய தினத்தின் சிவாகாமி அச்சகம் தன் வழக்கமான பணியினை தொடங்கிட, கமலி அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் அமர்ந்து, அன்றைய தினத்தில் முடிக்கவேண்டிய வேலைகள் என்னவென்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.
சிவகாசி... தீப்பெட்டி, வெடிப் பொருட்களுக்கு மட்டும் பெயர்போனது அல்ல.. அச்சக தொழிலுக்கும் பெயர் போனது.
அதிலும் சிவகாமி அச்சகம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் தங்கள் பணியை தரமாய் வழங்கும் அச்சகம்..
வருடங்கள் ஓடினாலும், தொழில்நுட்பங்கள் பெருகினாலும், அனைத்திற்கும் தன்னை ஈடு கொடுத்து, அச்சக தொழிலில் புதிது புதிதாய் வரும் அனைத்து விசயங்களையும் கற்று, ஏற்றுக்கொண்டு காலத்திற்கு ஏற்ப காலூன்றி நிற்கும் நிறுவனம் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.
சுமார் நாற்பது பணியாளர்களோடு அன்றைய தின வேலையை தொடங்கிய சிவகாமி அச்சகத்தின் புதிய தலைமை பொறுப்பு, அதாவது இந்த ஆறு மாத காலமாய் நீதான் இதனை இனிமேல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சிவகாமி பிடிவாதமாய் சொல்லிட அம்மாவின் வார்த்தைகளை மீற முடியாது வந்து தன் பொறுப்பினை ஏற்றுகொண்டாள் கமலி.
பிறந்ததில் இருந்து பார்க்கும் ஒன்றுதான். இருந்தாலும் பொறுப்பில் என்று அமர்ந்த பின்னே தானே அதன் சுமைகள் தெரியும். ஆனால் வந்த சில நாளிலேயே கமலிக்கு இந்த வேலைகள் புரிந்துவிட, பிடித்தும் விட்டது.
“கமலி ம்மா...” என்று கதவு அவள் அறையின் கண்ணாடி கதவுகள் லேசாய் திறந்திருந்தாலும், அது தட்டி நின்றவரின் குரலில் நிமிர்ந்தவள்,
“உள்ள வாங்க தாத்தா...” என்று சங்கிலி நாதனை அழைக்க, அவரோ கொஞ்சம் நடக்க சிரமப்பட்டே உள்ளே வந்தார்.
“என்னை கூப்பிட்டா நானே வரப் போறேன்...”
“வேலையா இருப்பே...”
“வீட்ல ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னாலும் கேட்கிறது இல்லை. டெய்லி இங்க வந்து எல்லாரையும் அதட்டணும்...” என்று கண்டிப்பாய் பேச முயன்றாலும் கமலிக்கு ஒருபுறம் சிரிப்பு வேறு.
சங்கிலிநாதன், சிவகாமி அச்சகம் தொடங்கிய நாளில் இருந்து இங்கே பணியாற்றியவர். கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒருத்தர் போல.. எழுபது வயது தாண்டினாலும், தினம் ஒருமுறையாவது இங்கே வந்துவிடுவார். அப்போதுதான் அவருக்கு உறக்கம் வருகிறதாம்.
அதிலும் கமலி வந்து பொறுப்பேற்ற பிறகு சொல்லவே வேண்டாம், பாதி நேரம் இங்கேதான். அவருக்கு வயதாகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், கமலிக்கு அவரிடம் வேலைகள் சொல்வது என்பது எப்போதுமே பிடிக்காது. அவரோ,
‘நான் இத செய்றேன்.. அத செய்றேன்...’ என்று வருவார்.
“இங்க வராம தூக்கம் வராது கமலி..” என்று வழக்கமான பதிலை அப்போதும் சொல்ல,
“சரி சொல்லுங்க ஏன் வந்தீங்க??” என்று தலையை ஆட்டி கமலி சிரிக்க,
“அது.. நம்ம வனா பையன்...” எனும்போதே, கமலியின் முகம் மாறிவிட்டது.
“தாத்தா...!!!” என்று கண்டிப்புடன் அழைக்க,
“இருடா.. நான் பேசிக்கிறேன்...” என்றவர் “நம்ம வனா பையன் உன்னை பாக்கணும்னு சொல்றான்....” என,
“முடியாதுன்னு சொல்லிடுங்க..” என்றாள் பட்டென்று.
“வாசல் வரைக்கும் வந்தவனை அப்படி திருப்பி அனுப்ப முடியாதேடா...” என்றவரை இப்போது வெளிப்படையாகவே கமலி முறைக்க,
“அவன் நினைச்சா நேரா உள்ள வந்திருக்கலாம். மரியாதைக்காக காத்திட்டு நிக்கிறான். நம்மளும் அந்த மரியாதை செய்யணுமே...”
“நான் நினைச்சா அவரை அப்படியே வெளிய போன்னு சொல்லலாம்..”
“நீ அப்படி சொல்லமாட்ட.. நீதான் மரியாதை தெரிஞ்ச பொண்ணாச்சே...” என்று சங்கிலிநாதன் சிரிக்க,
“ஆ...!!!! தாத்தா...” என்று பல்லைக் கடித்தவள், “அம்மா ஒரு பக்கம்னா நீங்க அதுக்குமேல...” என்று கடிய,
“சரி சரி அப்புறம் திட்டு... அவனை வர சொல்லவா...” என்று எழுந்தே விட்டார்..
‘வேணாம் சொன்னாமாட்டும்....’ என்றெண்ணியவளுக்கு ஒருமுறை சொல்லிப் பார்ப்போமே என்றும் தோன்ற, அதன்பின் அவன் அந்த வனமாலி.. நேராய் அம்மாவின் முன் போய் நிற்பான்.. அதன்பின் அம்மா இவளை அழைத்து கண்ணா பின்னா கச்சேரி தொடங்கும்.. அது தேவையா??
‘அட போங்கய்யா...’ என்று சொல்லவேண்டும் போல் இருந்தது, ஆனாலும் முடியாதே..
கமலி அமைதியாக இருக்க, அவளைப் பார்த்து ஒரு புன்னகை சிந்திய சங்கிலிநாதனோ வனமாலியை அழைக்க வெளியேறிட, அடுத்த இரண்டே நிமிடத்தில் வனமாலி அவளின் முன்னே இருந்தான்.
வனமாலி வந்தமர்ந்த அடுத்த நொடி “என்ன விஷயம்??” என்று கேட்டவளை,
“வாங்கன்னு தான் சொல்ல முடியாது... அட்லீஸ்ட் தன்மையா பேசக்கூடவா முடியாது...” என்றான் கண்டிக்கும் விதமாய்.
“எனக்கு அட்வைஸ் பண்ணத்தான் வந்தீங்களா??”
“எனக்கு வேற வேலை இல்லை பாரு...” என்று வனமாலியும் பதிலுக்கு கொடுக்க, கண்களை இடுக்கி அவனைப் பார்த்தவள், நீ பேசு என்பதுபோல் அமைதியாகிப் போனாள்.
அவனுக்குத் தெரியும், இப்படி பேசினால் மட்டுமே கமலியின் வாய் கொஞ்சம் மூடும் என்று. இல்லையெனில் பதிலுக்கு பதில் ஒன்றை பேசி, அவன் பேச வந்த விசயத்தையும் பேச விடாது செய்து, இறுதியில் அவனே சண்டையிடும் அளவும் செய்துவிடுவாள்.
பின்னே எத்தனை வருடமாய் பார்க்கிறான். அவளுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து கமலியிடம் காண்பது எல்லாம் இதே கடுகடுப்புதான். அவள் மீதும் குற்றமில்லை.. அந்த ஒரு காரணம் மட்டுமே வனமாலி பொறுத்துப் போவது.