Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 11

Advertisement

Krithika Pradeep

Member
Member
மது-வை யது ரூம் முன்னால் விட்டுவிட்டு வந்தார்கள் , அவளுக்கு அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு படபடப்பாக இருந்தது .

எவ்ளோ நேரம் வெளியே நிற்க முடியும் , கதவை திறந்து உள்ளே சென்றாள் , எங்கேயும் யதுவை காணவில்லை , ரொம்ப பெரிய ரூமாக இருந்தது , அவள் யதுநந்தன் ரூமிற்கு இதுவரை வந்தது இல்லை , இப்பொழுது பார்த்தால் பிரமாண்டமாக இருந்தது , கூடவே balcony இருந்தது , சரி பால் சொம்பை வைத்து விட்டு போய் பார்க்கலாம் என்று கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிள் மேல் பாலை வைத்து விட்டு balcony சென்றாள் .

அங்கே தான் யதுவும் இருந்தான் , வானத்தை வெறித்து பார்த்து கொண்டு .

பாவம் அந்த கீதாவை நினைத்து பீல் பன்றார் போல என்று நினைத்தாள்.
ஆனால் என்ன தான் பாவம் என்று நினைத்தாலும் கோவம் வந்தது , அவள் தான் போய்ட்டாளே இவர் எதற்கு அவளை நினைக்க வேண்டும் என்று அதனால் பக்கத்தில் சென்று அவள் வந்ததை உணர்த்த ம்க்கும் என்றாள் .

ஆனால் யது அப்போது மதுவை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தான் , அவள் கழுத்தில் எப்போது தாலி கட்டினானோ அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை . என்னால் மதுவிற்கு இன்னொரு வாழ்க்கை எல்லாம் அமைத்து கொடுக்க முடியாது , என்னோடு தான் அவள் இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தான் .

பக்கத்தில் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தால் மது தான் இருந்தாள் . அவளை கொஞ்சம் வம்பு செய்ய வேண்டும் என தோன்ற ஆரம்பித்து விட்டது .

என்னாச்சு பேபி , வந்து ரொம்ப நேரம் அச்சா வா உள்ள போலாம் , உனக்கு பனி ஒத்துக்காது என்றான் .

மது தான் யோசிக்க ஆரம்பித்து விட்டாள் , இதென்ன என்னை கீதா-னு நினைச்சு பேசறாரோ என்று.

ஆனால் மதுவிற்கு தெரியாது அவன் கீதாவை கீது என்று கூப்பிடுவதோடு சரி வேறு எதுவும் சொல்லி கூப்பிடமாட்டான் .

என்னாச்சு செல்லம் என்ன யோசிக்கற , நடந்து வரலாமா இல்ல தூக்கிட்டு போக சொல்லலாம்னா , தூக்கறதுக்கு நான் ரெடி என்று கிட்டே நெருங்கினான் .

ஐயோ இல்ல இல்ல நான் நடந்தே வரேன் என்று சொல்லிவிட்டு ஓட பார்த்தாள் .

ஏய் என்னாச்சு-மா எதுக்கு இவ்ளோ பயம் என்றான் .

அவளுக்கு தான் என்ன சொல்வதென்று தெரியவில்லை , கண்ணை சாஸ்ர் போல விரித்து என்ன நம்ம கிட்ட இவ்ளோ நல்லா பேசறார் என்று பார்த்தாள் .

அவனுக்கு தான் அவள் பார்வையை பார்த்து சிரிப்பு வந்து விட்டது , எவ்ளோ வாய் அடிப்பா ரிஷி-கிட்ட ஆனா நம்மகிட்ட என்னமோ ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி சீன் போடறா என்று நினைத்து சிரித்தான் .
இப்பொது என்னாச்சு என்று கேட்பது அவள் முறை ஆகிப்போனது .

யது அவளிடம் எல்லாம் பேசி முடிவு எடுத்து விடலாம் என்று முடிவு செய்து , சரி மது கொஞ்சம் சீரியஸ்-ஹ பேசலாமா என்றான் .

அவள் சரி என்று தலையை ஆட்டவும் .

first என்னை பார்த்து பயப்படுவதை நிறுத்து , முன்னாடி என்ன வேணாலும் நடந்திருக்கலாம் , தப்பு யார் மேல வேணாலும் இருக்கலாம் ஆனா இனிமேல் எல்லாமே உன் விருப்பப்படி இருக்கும் .

இன்னைக்கு உன்னால தான் என் அம்மா அப்பா முகத்துல போன சிரிப்பு வந்தது , எனக்கு காலையில் போன நிம்மதி திரும்பி வந்தது , you became very special to me , thanks for everything .

உனக்கு இன்னைக்கு வேணாம்-னு சொல்ல ஒரு நிமிஷம் ஆகியிருக்காது , என்ன தான் அம்மா , ரிஷி சொன்னாலும் உன்னோட decision தான் கடைசியா இருந்துச்சு , ஆனாலும் அவங்களுக்காக நீ சரி சொன்ன , அம்மா மொகத்துல சந்தோசத்தை வர வெச்ச எனக்கு அது போதும் மது , நீ என்னோட சாரி சாரி நம்மளோட குடும்பத்த நல்லா பாத்துப்பேன்னு நம்பிக்கை வந்திருச்சு .

என்னோட லைப்-ல marriage ஒரு தடவை தான், உனக்கும் இனி அப்படி தான் என்றான் (அவன் மனசாட்சியே அட பாவி காலைல வேற மாதிரி சொன்ன என்று துப்பியது ) அதெல்லாம் துடைத்து விட்டு continue பண்ண ஆரம்பித்தான் .

என்ன மது அப்படித்தானே என்றான் , இவளும் தலையை நன்றாக ஆட்டினாள் , வேற என்ன சொல்ல முடியும் , இல்லை நான் இன்னொரு கல்யாணம் பண்ண போறேன் என்றா . சரியான லூசு என்று மனதில் திட்டி கொண்டு இருந்தாள் .

நாம மொதல் friends-ஹ இருக்கலாம் , மத்தது எல்லாம் அப்புறம் யோசிக்கலாம் , நெறைய நேரம் இருக்கு நமக்கு , இப்போ உன்னோட கவனம் உன்னோட படிப்புல இருக்கட்டும் . உன்ன இங்கே யாரும் படிக்க வேணாம்-னு சொல்ல மாட்டாங்க என்றான் .

இப்போதும் மது தலையை தான் ஆட்டினாள் , அவள் தலையை ஆட்டுவதை பார்த்ததும் ஏதோ சின்ன குழந்தை மிஸ் கிட்ட சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டுவது போல் இருந்தது .

பக்கத்தில் அந்த முகத்தை பார்க்க வேண்டும் போல் இருந்தது , அவள் கையை பிடித்து பக்கத்தில் இழுத்தான் , அவன் இழுத்த உடன் கண்களை சாஸ்ர் போல மது விரிக்கவும் யோசிக்காமல் தன் முதல் முத்திரையை அவள் கண்களின் மேல் பதித்தான் , அவன் நெருங்கவுமே மது கண்களை முடி கொண்டாள் , அப்படியே அவளின் பட்டு கன்னத்திற்கு அடுத்த முத்தத்தை வைத்தான் , மதுவின் உடல் நடுங்க ஆரம்பித்து விட்டது , அதை புரிந்து கொண்டவன் அவளை இறுக்கி அணைத்து விடுவித்தான் .

பேபி நமக்குள் இப்போ எதுவும் நடக்காது பயப்படாத ஆனா எப்பவுமே இப்படியே இருக்க முடியதுலே , அதனால கிஸ் , ஹக் எல்லாம் இருக்கும் , என்ன பொறுத்த வரைக்கும் எப்போ உன் கழுத்தில் தாலி கட்டினேனோ எனக்கு உன்னிடம் எல்லா உரிமையும் வந்து விட்டது , அதே போல் தான் உனக்கும் என்றான் .

மதுவிற்கு இப்பொழுது தலையை கூட ஆட்ட முடியவில்லை , முதல் ஆணின் ஸ்பரிசம் , அவளுக்கு கொஞ்சம் டைம் தேவை பட்டது யோசிப்பதற்கு .

யதுவிற்கு அது நன்றாக புரிந்தது , ஆனால் ஏனோ அவனால் மதுவை விட்டுக்கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை , அதனால் தான் அதிரடியாக எல்லாம் சொல்லி/செய்து கொண்டு இருக்கிறான் .
 
Top