பூ 1:
ஓவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஒவ்வொரு விதமான ஆசைகள்.சிலருக்கு இளையராஜா பாடல்கள் என்றால் சிலருக்கு கண்ணதாசன் பாடல்கள். சிலருக்கு மழை பிடிக்கும்,சிலருக்கு மழையைக் கண்டாலே ஆகாது.சிலர் பிறந்து விட்டோம் என்று வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள். அதில் வெகு சிலர் தான்...வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் வாழ்கின்றனர்.
நாம் வாழும் வாழ்க்கையும் அப்படித்தான்...மனோபாவங்கள் எல்லாருக்கும் ஒன்றாய் அமைவதில்லை. அதே போல் வாழ்க்கையும் அப்படி அமைவதில்லை. கிடைத்ததை, பிடித்ததாய் மாற்றிக் கொள்கிறவர்கள் மட்டுமே புத்திசாலி. அவர்களை மட்டுமே இந்த வாழ்க்கை ஜெயிக்க வைக்கிறது. எதார்த்தங்களோடு பயணிக்கிறவர்கள் மட்டுமே....பாதையை அடைய முடியும்...!
வாழ்க்கை வாழ்வதற்கே...வாழ்ந்து காட்டுவோம்..!!!
ஈரோட்டின்...முக்கிய பிரதான வீதிகளில் இருந்து பிரிந்து... செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அந்த வீட்டைச் சுற்றி உள்ள வீடுகள் அனைத்தும், இன்றைய நவீன தலை முறைக்கு ஏற்ப கட்டப்பட்டிருக்க, அந்த ஒரு வீடு மட்டும்...பழமையும் மாறாமல், அதே சமயம் கொஞ்சம் புதுமைகளைப் புகுத்தி...அந்த வழியில் செல்வோர் திரும்பிப் பார்க்கும் விதத்தில்...அழகியலுடன் இருந்தது.
ஈரோடு... பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், திப்பு சுல்தான் முதலானவர்களின் கையில் இருந்த போது...அவர்களுக்கு வரி வசூலித்துக் கொடுக்கும் பட்டயக்காரர்களாக... அந்த வீட்டின் முன்னோர் இருந்தனர். அவர்களின் வழியில்..அந்த பட்டையக்காரர் பரம்பரை செழித்து வளர...அதற்கு அடுத்து வந்த தலை முறையினர்..அதை மேலும் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர்.
பட்டையக்காரர்களாக இருந்த போது கிடைத்த அதே மதிப்பும், மரியாதையும் இன்றளவும் அவர்களுக்கு மாறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் பணம் தான் என்றாலும்...அந்த வீட்டில் உள்ளவர்களின் குணமும் அடங்கும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாய இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிச்சாலை, மஞ்சள் ஏற்றுமதி நிறுவனம், பின்னலாடை நிறுவனம்...பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம்...இப்படி இவர்களின் நிறுவனம் ஈரோடு எங்கும் விரிந்திருந்தது.
அவர்கள் தயாரிக்கும் விவசாய எந்திரங்கள்...அனைத்து முக்கிய ஊர்களிலும்...அவர்களின் சொந்த ஷோரூமிலேயே விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதற்கான மெயின் பிரான்ச் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்தது.
தொழில் வழிக் குடும்பம் என்பதால்..அவர்களுக்கு தொழில் வட்டாரத்திலும் நல்ல பெயர் இருந்தது. மொத்தத்தில் அந்த குடும்பம் ஈரோட்டின் ஒரு முக்கிய அடையாளம்.
அப்படிப் பட்ட அந்த குடும்பத்தில்....ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. பரந்து விரிந்த ஹாலில்...முகம் முழுவதும் கோபத்துடன் அமர்ந்திருந்தார் ரத்னவேல். அவருக்கு அருகில், கணவருக்கு குறையாத அதே கோபத்துடன் வள்ளியம்மை நின்றிருந்தார்.
முகத்தில் எந்த வித பாவனையையும் காட்டாமல், அமைதியாய் நின்றிருந்தார் ராஜ சேகர். ரத்னவேலின் மூத்த மகன் அவர்.
அவருக்கு அருகில், முகத்தில் அதிர்ச்சியும், கோபமுமாய் அவருடைய தம்பி சுந்தர சேகரும், அவரின் மனைவி நீலாவதியும் நின்றிருந்தனர்.
இவர்களுக்கு எதிரில் ரத்னவேலின் மகள் வித்யாவும், அவரின் கணவர் சுரேஷும் நின்றிருந்தனர். வித்யாவின் முகத்தில், கோபம், அதிர்ச்சி, ஆங்காரம் என அனைத்தும் கலந்த ஒரு பாவனை.கதறிவிடத் துடித்த மனம், அதை செய்யமுடியாமல் தவிக்கும் நிலை..என வித்யாவின் நிலை தான் மோசமாக இருந்தது. தன் இரண்டு அண்ணன்களையும் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.முக்கியமாக அப்பா, அம்மா முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை.
அவரால் எப்படி முடியும்? பாராட்டி, சீராட்டி வளர்த்த மகள்...இன்றைக்கு வந்து நிற்கும் கோலம் அப்படி.
“வொய் திஸ் அமைதி...?” என்று அவள் போக்கில் கேட்டுக், கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள் விஷ்வ துளசி. வித்யா-சுரேஷின் மகள்.அவளுக்கு ஒரு அண்ணன்...பிரவீண் பாலா.
“தாத்தாதா...வொய் முறைச்சிபயிங்...பாத்தீஈஈஈஈஈஈஈஈஇ...யு ஆல்ஸோ...” என்றபடி பொத்தென்று அங்கிருந்த சோபாவில் விழுந்தாள் விஷ்வ துளசி.
அவளின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரத்னவேலிற்கு ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் விஷ்வ துளசி கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை. அவரின் கோபத்தை தெரிந்து கொள்ளும் நிலையிலா அவள் இருக்கிறாள்..???
அவளின் அப்பா...சுரேஷின் அருகில் சென்றவள்...”தெய்ய்வங்க்கள் எல்லாம் தோற்றே ப்போகும்..அப்பாஆஆஆஆ அன்பின் முன்ன்னே...!” என்று குழறலாய் பாடியவள்...”ஐ லவ் மை டாடி...” என்றாள் தடுமாறிக் கொண்டே.
“வித்யா......” என்று அந்த வீடே அதிரும் படி கத்தினார் ரத்னவேல் தாத்தா.அவர் கத்தி முடிக்க,“ஹேக்...!” என்றபடி விக்கினாள் விஷ்வ துளசி.
“அப்பா..!” என்று வித்யா கண்ணீர் விட,
“என்ன நடக்குது இந்த வீட்ல..?” என்றார் கோபமாய்.
“நீங்க நடக்குறிங்க...இதோ நான் நல்லா நடக்குறேன்...பெரிய மாமா.. சும்மா ஜம்முன்னு நடப்பாரு....” என்று வித்யாவிற்கு முந்திக் கொண்டு குழறலாய் பதில் அளித்தால் விஷ்வ துளசி.
“விஷ்வா....இப்போ அமைதியா இருக்கப் போறியா இல்லையா...?” என்று வித்யா பல்லைக் கடித்துக் கொண்டு பேச,
“மாட்டேன்...மாட்டவே மாட்டேன்...! “ என்று நடுஹாலில் சம்மணம் இட்டு அமர்ந்தாள் விஷ்வ துளசி.
அவள் தினமும் குடிப்பவள் அல்ல. இன்றுதான் முதல் முறை. அதைத்தான் அந்த குடும்பத்தில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆண்கள் குடிப்பதற்கே அந்த வீட்டில் அனுமதி இல்லை எனும் போது, பெண்களை எப்படி அனுமதிப்பார்கள்.
“விஷ்வாவ உள்ளக் கூட்டிட்டு போ வித்யா..!” என்றார் நீலாவதி. அந்த வீட்டின் இரண்டாவது மருமகள்.
“நீலா சொல்றது தான் சரி. நீ உள்ள கூட்டிட்டு போ வித்யா.எதுவா இருந்தாலும் விடிஞ்சதுக்கு அப்பறமா பேசிக்கலாம்..” என்றார் வள்ளியம்மை.
“நான் எதுக்கு உள்ள போகணும்...? சொல்லுங்க நான் எதுக்கு... உள்ள்ள...போகணும்ம்..!” என்று அவள் நிறுத்தி நிதானமாய் கேட்க,
“சொன்னா கேளு விஷ்வா....வா..!” என்று வித்யா அழைக்க,
“மாட்டேன்..!” என்று ஒரே கத்தாய் கத்தினாள்.
“என்னம்மா சத்தம்..?” என்றபடி அருண் குமார் வெளியே வந்தான். சுந்தர சேகர்- நீலாவதியின் மகன். அவனுடைய தங்கை பவித்ரா.
வெளியே வந்த அருணின் கண்களில், விஷ்வ துளசி இருந்த நிலை தெரிய, உள்ளுக்குள் குளிர் எடுத்தது அவனுக்கு.
“பாவி..! எவ்வளவு தைரியம் இவளுக்கு. நானே இதுவரைக்கும் சரக்கடிச்சது இல்லை. இவ அடிச்சுட்டு வந்தது மட்டும் இல்லாம, குடும்பத்தையே கூட்டி வச்சு லந்தக் குடுத்துட்டு இருக்காளே... ஏற்கனவே பெருசு ஆடும். இன்னைக்கு இவளுக்கு ஒரு கச்சேரியே இருக்கு..!” என்று மனதிற்குள் நினைத்தான். வெளியில் சொல்லவில்லை.
அருண் வந்து நின்றதும் ரத்னவேலின் கோபம், அவனின் பக்கம் திரும்பியது. அவரின் முறைக்கும் பார்வையைக் கண்டவன்...
“பெருசு எதுக்கு நம்மளை முறைக்குது. இந்த சம்பவத்துல நம்மோட பங்கு எதுவும் இல்லையே..?” என்ற படி முழித்துக் கொண்டிருந்தான் அருண்.
“இப்ப எதுக்கு உங்க மாமனார் என்னை முறைக்கிறார்..?” என்றான் நீலாவதியின் காதில்.
“கொஞ்ச நேரம் பேசாம இரு அருண். தாத்தா கோவத்துல இருக்காரு..!” என்றார் நீலாவதி.
“அவரெல்லாம் நிதானமா இருந்தாத்தான் ஆச்சர்யம்..!” என்றவன், லேசாக சிரித்து வைத்தான்.
அந்த சிரிப்புக்கும் ரத்னவேலின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்.
“விஷ்வா...! சொன்னா கேளு...முதல்ல ரூம்க்கு நட..” என்று வித்யா கொஞ்சம் கோபமாகவே சொல்லிக் கொண்டிருந்தார்.
“நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கம்மா...! மிஸ்டர் ரத்னவேலுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு. இவரு பெரிய இவரு...அப்படியே முறைக்கிறாரு. வயசானாலும் உன் கோபமும், திமிரும் உன்னைவிட்டு போகலை வேலு...!” என்று ரத்னவேலுவின் சட்டையைப் பிடித்து, குளறிப் பேசிக் கொண்டிருந்தாள். நிற்க முடியாத அளவிற்கு தள்ளாட்டம் வேறு.
“அப்படி சொல்லுடி என் அத்தை மகளே..!” என்று அருண் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டிருந்தான்.
“துளசி என்ன இது...? தாத்தான்னு ஒரு மரியாதை இல்லாம இப்படி பேசிட்டு இருக்க..?” என்று வள்ளியம்மை சத்தம் போட,
“இது யாரு...? இந்தா வரேன்..!” என்றபடி வள்ளிப் பாட்டியின் அருகில் சென்றவள், அவரை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வையை பார்த்தாள்.
“கள்ளி..சாரி..சாரி...வள்ளி... உனக்கு என்ன மனசுல ஜான்சி ராணின்னு நினைப்பா...?ரொம்ப பேசுற நீ... நீ மட்டும் உன் புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சிருக்க. ஆனா, பாவம் நீலா அத்தை...அவங்க புருஷனும் நீ சொல்றதைத் தான் கேட்குறார். இப்படி எல்லாரையும் உன் கைப்பிடியில் வச்சிருக்க வித்தை என்ன...?” என்றபடி தள்ளாட,
“வந்த நிலைமை தப்புன்னாலும், பேசுற விஷயம் கரெக்ட்டு..!” என்று நீலாவதியும் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டார்.
ஓவ்வொரு மனிதனுக்கும் மனதில் ஒவ்வொரு விதமான ஆசைகள்.சிலருக்கு இளையராஜா பாடல்கள் என்றால் சிலருக்கு கண்ணதாசன் பாடல்கள். சிலருக்கு மழை பிடிக்கும்,சிலருக்கு மழையைக் கண்டாலே ஆகாது.சிலர் பிறந்து விட்டோம் என்று வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காகவே பிறக்கிறார்கள். அதில் வெகு சிலர் தான்...வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் வாழ்கின்றனர்.
நாம் வாழும் வாழ்க்கையும் அப்படித்தான்...மனோபாவங்கள் எல்லாருக்கும் ஒன்றாய் அமைவதில்லை. அதே போல் வாழ்க்கையும் அப்படி அமைவதில்லை. கிடைத்ததை, பிடித்ததாய் மாற்றிக் கொள்கிறவர்கள் மட்டுமே புத்திசாலி. அவர்களை மட்டுமே இந்த வாழ்க்கை ஜெயிக்க வைக்கிறது. எதார்த்தங்களோடு பயணிக்கிறவர்கள் மட்டுமே....பாதையை அடைய முடியும்...!
வாழ்க்கை வாழ்வதற்கே...வாழ்ந்து காட்டுவோம்..!!!
ஈரோட்டின்...முக்கிய பிரதான வீதிகளில் இருந்து பிரிந்து... செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. அந்த வீட்டைச் சுற்றி உள்ள வீடுகள் அனைத்தும், இன்றைய நவீன தலை முறைக்கு ஏற்ப கட்டப்பட்டிருக்க, அந்த ஒரு வீடு மட்டும்...பழமையும் மாறாமல், அதே சமயம் கொஞ்சம் புதுமைகளைப் புகுத்தி...அந்த வழியில் செல்வோர் திரும்பிப் பார்க்கும் விதத்தில்...அழகியலுடன் இருந்தது.
ஈரோடு... பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசர்கள், திப்பு சுல்தான் முதலானவர்களின் கையில் இருந்த போது...அவர்களுக்கு வரி வசூலித்துக் கொடுக்கும் பட்டயக்காரர்களாக... அந்த வீட்டின் முன்னோர் இருந்தனர். அவர்களின் வழியில்..அந்த பட்டையக்காரர் பரம்பரை செழித்து வளர...அதற்கு அடுத்து வந்த தலை முறையினர்..அதை மேலும் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர்.
பட்டையக்காரர்களாக இருந்த போது கிடைத்த அதே மதிப்பும், மரியாதையும் இன்றளவும் அவர்களுக்கு மாறாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் பணம் தான் என்றாலும்...அந்த வீட்டில் உள்ளவர்களின் குணமும் அடங்கும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
விவசாய இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிச்சாலை, மஞ்சள் ஏற்றுமதி நிறுவனம், பின்னலாடை நிறுவனம்...பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம்...இப்படி இவர்களின் நிறுவனம் ஈரோடு எங்கும் விரிந்திருந்தது.
அவர்கள் தயாரிக்கும் விவசாய எந்திரங்கள்...அனைத்து முக்கிய ஊர்களிலும்...அவர்களின் சொந்த ஷோரூமிலேயே விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதற்கான மெயின் பிரான்ச் சென்னையில் இயங்கிக் கொண்டிருந்தது.
தொழில் வழிக் குடும்பம் என்பதால்..அவர்களுக்கு தொழில் வட்டாரத்திலும் நல்ல பெயர் இருந்தது. மொத்தத்தில் அந்த குடும்பம் ஈரோட்டின் ஒரு முக்கிய அடையாளம்.
அப்படிப் பட்ட அந்த குடும்பத்தில்....ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. பரந்து விரிந்த ஹாலில்...முகம் முழுவதும் கோபத்துடன் அமர்ந்திருந்தார் ரத்னவேல். அவருக்கு அருகில், கணவருக்கு குறையாத அதே கோபத்துடன் வள்ளியம்மை நின்றிருந்தார்.
முகத்தில் எந்த வித பாவனையையும் காட்டாமல், அமைதியாய் நின்றிருந்தார் ராஜ சேகர். ரத்னவேலின் மூத்த மகன் அவர்.
அவருக்கு அருகில், முகத்தில் அதிர்ச்சியும், கோபமுமாய் அவருடைய தம்பி சுந்தர சேகரும், அவரின் மனைவி நீலாவதியும் நின்றிருந்தனர்.
இவர்களுக்கு எதிரில் ரத்னவேலின் மகள் வித்யாவும், அவரின் கணவர் சுரேஷும் நின்றிருந்தனர். வித்யாவின் முகத்தில், கோபம், அதிர்ச்சி, ஆங்காரம் என அனைத்தும் கலந்த ஒரு பாவனை.கதறிவிடத் துடித்த மனம், அதை செய்யமுடியாமல் தவிக்கும் நிலை..என வித்யாவின் நிலை தான் மோசமாக இருந்தது. தன் இரண்டு அண்ணன்களையும் அவரால் எதிர்கொள்ள முடியவில்லை.முக்கியமாக அப்பா, அம்மா முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை.
அவரால் எப்படி முடியும்? பாராட்டி, சீராட்டி வளர்த்த மகள்...இன்றைக்கு வந்து நிற்கும் கோலம் அப்படி.
“வொய் திஸ் அமைதி...?” என்று அவள் போக்கில் கேட்டுக், கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருந்தாள் விஷ்வ துளசி. வித்யா-சுரேஷின் மகள்.அவளுக்கு ஒரு அண்ணன்...பிரவீண் பாலா.
“தாத்தாதா...வொய் முறைச்சிபயிங்...பாத்தீஈஈஈஈஈஈஈஈஇ...யு ஆல்ஸோ...” என்றபடி பொத்தென்று அங்கிருந்த சோபாவில் விழுந்தாள் விஷ்வ துளசி.
அவளின் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரத்னவேலிற்கு ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் விஷ்வ துளசி கவலைப்பட்ட மாதிரித் தெரியவில்லை. அவரின் கோபத்தை தெரிந்து கொள்ளும் நிலையிலா அவள் இருக்கிறாள்..???
அவளின் அப்பா...சுரேஷின் அருகில் சென்றவள்...”தெய்ய்வங்க்கள் எல்லாம் தோற்றே ப்போகும்..அப்பாஆஆஆஆ அன்பின் முன்ன்னே...!” என்று குழறலாய் பாடியவள்...”ஐ லவ் மை டாடி...” என்றாள் தடுமாறிக் கொண்டே.
“வித்யா......” என்று அந்த வீடே அதிரும் படி கத்தினார் ரத்னவேல் தாத்தா.அவர் கத்தி முடிக்க,“ஹேக்...!” என்றபடி விக்கினாள் விஷ்வ துளசி.
“அப்பா..!” என்று வித்யா கண்ணீர் விட,
“என்ன நடக்குது இந்த வீட்ல..?” என்றார் கோபமாய்.
“நீங்க நடக்குறிங்க...இதோ நான் நல்லா நடக்குறேன்...பெரிய மாமா.. சும்மா ஜம்முன்னு நடப்பாரு....” என்று வித்யாவிற்கு முந்திக் கொண்டு குழறலாய் பதில் அளித்தால் விஷ்வ துளசி.
“விஷ்வா....இப்போ அமைதியா இருக்கப் போறியா இல்லையா...?” என்று வித்யா பல்லைக் கடித்துக் கொண்டு பேச,
“மாட்டேன்...மாட்டவே மாட்டேன்...! “ என்று நடுஹாலில் சம்மணம் இட்டு அமர்ந்தாள் விஷ்வ துளசி.
அவள் தினமும் குடிப்பவள் அல்ல. இன்றுதான் முதல் முறை. அதைத்தான் அந்த குடும்பத்தில் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆண்கள் குடிப்பதற்கே அந்த வீட்டில் அனுமதி இல்லை எனும் போது, பெண்களை எப்படி அனுமதிப்பார்கள்.
“விஷ்வாவ உள்ளக் கூட்டிட்டு போ வித்யா..!” என்றார் நீலாவதி. அந்த வீட்டின் இரண்டாவது மருமகள்.
“நீலா சொல்றது தான் சரி. நீ உள்ள கூட்டிட்டு போ வித்யா.எதுவா இருந்தாலும் விடிஞ்சதுக்கு அப்பறமா பேசிக்கலாம்..” என்றார் வள்ளியம்மை.
“நான் எதுக்கு உள்ள போகணும்...? சொல்லுங்க நான் எதுக்கு... உள்ள்ள...போகணும்ம்..!” என்று அவள் நிறுத்தி நிதானமாய் கேட்க,
“சொன்னா கேளு விஷ்வா....வா..!” என்று வித்யா அழைக்க,
“மாட்டேன்..!” என்று ஒரே கத்தாய் கத்தினாள்.
“என்னம்மா சத்தம்..?” என்றபடி அருண் குமார் வெளியே வந்தான். சுந்தர சேகர்- நீலாவதியின் மகன். அவனுடைய தங்கை பவித்ரா.
வெளியே வந்த அருணின் கண்களில், விஷ்வ துளசி இருந்த நிலை தெரிய, உள்ளுக்குள் குளிர் எடுத்தது அவனுக்கு.
“பாவி..! எவ்வளவு தைரியம் இவளுக்கு. நானே இதுவரைக்கும் சரக்கடிச்சது இல்லை. இவ அடிச்சுட்டு வந்தது மட்டும் இல்லாம, குடும்பத்தையே கூட்டி வச்சு லந்தக் குடுத்துட்டு இருக்காளே... ஏற்கனவே பெருசு ஆடும். இன்னைக்கு இவளுக்கு ஒரு கச்சேரியே இருக்கு..!” என்று மனதிற்குள் நினைத்தான். வெளியில் சொல்லவில்லை.
அருண் வந்து நின்றதும் ரத்னவேலின் கோபம், அவனின் பக்கம் திரும்பியது. அவரின் முறைக்கும் பார்வையைக் கண்டவன்...
“பெருசு எதுக்கு நம்மளை முறைக்குது. இந்த சம்பவத்துல நம்மோட பங்கு எதுவும் இல்லையே..?” என்ற படி முழித்துக் கொண்டிருந்தான் அருண்.
“இப்ப எதுக்கு உங்க மாமனார் என்னை முறைக்கிறார்..?” என்றான் நீலாவதியின் காதில்.
“கொஞ்ச நேரம் பேசாம இரு அருண். தாத்தா கோவத்துல இருக்காரு..!” என்றார் நீலாவதி.
“அவரெல்லாம் நிதானமா இருந்தாத்தான் ஆச்சர்யம்..!” என்றவன், லேசாக சிரித்து வைத்தான்.
அந்த சிரிப்புக்கும் ரத்னவேலின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டான்.
“விஷ்வா...! சொன்னா கேளு...முதல்ல ரூம்க்கு நட..” என்று வித்யா கொஞ்சம் கோபமாகவே சொல்லிக் கொண்டிருந்தார்.
“நீங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்கம்மா...! மிஸ்டர் ரத்னவேலுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு. இவரு பெரிய இவரு...அப்படியே முறைக்கிறாரு. வயசானாலும் உன் கோபமும், திமிரும் உன்னைவிட்டு போகலை வேலு...!” என்று ரத்னவேலுவின் சட்டையைப் பிடித்து, குளறிப் பேசிக் கொண்டிருந்தாள். நிற்க முடியாத அளவிற்கு தள்ளாட்டம் வேறு.
“அப்படி சொல்லுடி என் அத்தை மகளே..!” என்று அருண் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டிருந்தான்.
“துளசி என்ன இது...? தாத்தான்னு ஒரு மரியாதை இல்லாம இப்படி பேசிட்டு இருக்க..?” என்று வள்ளியம்மை சத்தம் போட,
“இது யாரு...? இந்தா வரேன்..!” என்றபடி வள்ளிப் பாட்டியின் அருகில் சென்றவள், அவரை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வையை பார்த்தாள்.
“கள்ளி..சாரி..சாரி...வள்ளி... உனக்கு என்ன மனசுல ஜான்சி ராணின்னு நினைப்பா...?ரொம்ப பேசுற நீ... நீ மட்டும் உன் புருஷனை முந்தானையில் முடிஞ்சு வச்சிருக்க. ஆனா, பாவம் நீலா அத்தை...அவங்க புருஷனும் நீ சொல்றதைத் தான் கேட்குறார். இப்படி எல்லாரையும் உன் கைப்பிடியில் வச்சிருக்க வித்தை என்ன...?” என்றபடி தள்ளாட,
“வந்த நிலைமை தப்புன்னாலும், பேசுற விஷயம் கரெக்ட்டு..!” என்று நீலாவதியும் மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டார்.