கரிசல் 21:
திருமணத்திற்கு ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க... மலருக்கும், பார்வதிக்கும் வருபவர்களை வரவேற்பதில் நேரம் பறந்தது. பெரியசாமி ஒட்டுதல் இல்லாமல் இருக்க, மனோகரனோ அன்றும் குடித்துவிட்டு தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் வெள்ளையும் சொல்லையுமாக இருந்தார்.
தனபாண்டியும்,குணபாண்டியும் ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருந்தனர். எப்போதும் போல் அரசி அவர்களை முறைத்துக் கொண்டிருந்தார்.
மதியின் கடைசி சித்தப்பாவான கோபியும், சித்தி லட்சுமியும் யாருக்கோ கல்யாணம் என்கிற ரீதியில் கூட்டத்தில் ஒருவராய் அமர்ந்திருந்தனர்.
“எப்பா தனம், குணம் போய் முகிலன் கூட இருங்கப்பா. நீங்க அவனுக்கு மச்சினன் முறை ஆகணும்..!” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல,
“இங்க பாருடா தனபாண்டி. நமக்கும் முகிலன் வயசு தான் ஆகுது. அவங்க அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குது. ஆனா நமக்கும் தான் இருக்கே அம்மான்னு ஒன்னு..!” என்றான் குணபாண்டி.
“நானும் இதைத்தான் நேத்து இருந்து யோசிக்கிறேன் குணப்பாண்டி. முதல்ல நமக்கு ஒரு பொண்ணை பார்க்க சொல்லணும்..!” என்றான் அவன்.
“ஒரு பொண்ணு இல்லைடா..! ரெண்டு பொண்ணு..!” என்றான் குணப்பாண்டி.
“இப்ப இது ரொம்ப முக்கியம். போய் வேலையை பாருங்கடா..!” என்று பெரியசாமி விரட்ட,
“இந்த மாமனுக்கு கொழுப்பு கூடிடுச்சுடா..! மலர் அத்தைகிட்ட சொல்லி குறைக்க சொல்லணும்..” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சென்றனர்.
வீட்டின் முன் போடப்பட்டிருந்த அந்த மேடையில் வந்து அமர்ந்தான் மணி முகிலன்.
“எம்மா பொண்ண கூட்டிட்டு வாங்க..! நல்ல நேரம் முடிய போகுது..!” என்று சொல்ல, தோழியர்கள் புடை சூழ மணமேடைக்கு வந்தாள் வண்ண மதி.
மலரும் பெரியசாமியும் முகிலனுக்கு அருகில் நிற்க, பார்வதியும், மனோகரனும் மதிக்கு அருகில் நின்றனர்.சுமதி அக்காவையே பார்த்துக் கொண்டு அருகில் நின்றிருந்தாள்.
வண்ண மதியோ யாரையும் பார்க்கவில்லை.தரைக்குள் புதைந்தைப் போல தலையை கவிழ்த்தி வைத்திருந்தாள். முகிலனுக்கு தான் ஓரு வித சந்தோஷ உணர்வு. சுற்றுப் புறம் மறந்து அவன் கண்களில் விழுந்தது அவளின் பிம்பம் மட்டுமே.
“என்னாச்சு மதி..? கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்..!” என்றான் ஆசையாக.ஆனால் மதிக்கு தான் காதே கேட்கவில்லை. கேட்காதைத் போல் இருந்தாள் என்று சொன்னால் அது தான் உண்மை.
“மதி உன்னைத்தான்..!” என்றான் சற்று குனிந்து.
“மாப்பிள்ளை.. நேரா உட்காருங்க..! எதிர்த்தப்படி நாங்க எல்லாரும் இருக்கோமா இல்லையா..?” என்றான் தனபாண்டி.
அவனைப் பார்த்து முகிலன் முறைக்க, இவர்கள் இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர்.
“இந்தாங்க..! இந்த மாலையை மாத்திக்கங்க..!” என்று சொல்ல,
ஒருவருக்கு ஒருவர் மாலையை மாத்திக் கொண்டனர். அப்போது கூட மதி அவனைப் பார்க்கவில்லை. குனிந்து கொண்டே மாலையைப் போட போக, அவனோ கொஞ்சம் பின்னால் சென்றான்.அதன் பிறகு தான் கொஞ்சம் நிமிர்ந்தாள் மதி.
அவளைப் பார்த்து சிரித்த முகிலன், பிறகு அவளைப் பார்த்துக் கொண்டே மாலையைப் போட்டான். அடுத்ததாக அவன் கையில் தாலியை கொடுக்க, கெட்டிமேளச் சத்தம் கேட்டது.
“கெட்டிமேளம்..!கெட்டிமேளம்..!”
நிறுத்தி நிதானமாக மதியின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான் மணி முகிலன். வண்ண மதி மனோகரன், வண்ண மதி மணி முகிலன் ஆனாள் அந்த நிமிடம் முதல்.
பார்வதிக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வர, அவரைப் பார்த்த மதிக்கும் அழுகை வந்தது. கங்காவும், செல்வியும் கூட கண் கலங்கினர். பின் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த முத்துவுக்கும் கண்ணீர் வந்தது. அதைவிட பிரதானமாக கோபமே வந்தது. தான் எண்ணியது நடக்கவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.
அட்சதையைத் தூவிய திலகாவின் மனதிற்குள் ஆயிரம் வஞ்சம். இப்படி பலரும் பலதரப்பட்ட எண்ணங்களில் இருக்கும் போது அங்கு வந்த போலீசைக் கண்டு திகைப்பில் அனைவரும் எழுந்தனர்.
“என்ன ஆச்சு..? போலீஸ் வந்திருக்கு...! நம்ம ஊருக்கு போலீஸ் எல்லாம் வராதே..!” என்றபடி ஆளுக்கு ஒரு விதத்தில் பேச ஆரம்பிக்க, கல்யாணம் நடப்பதற்கு முன் வரவேண்டிய போலீஸ், நடந்து முடிந்த பிறகு வந்திருந்தது.
அவர்களின் அருகில் ஓடி சென்ற பெரியசாமி..”வாங்க சார்...? என்ன பிரச்சனை..? எதுக்காக வந்திருக்கிங்க..?” என்றார் பதட்டத்துடன்.
“நீங்க மைனர் பொண்ணைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றதா எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு..! பதினெட்டு வயசு முடியாம கல்யாணம் பண்றது சட்டப்படி தப்பு. அதனால இந்த கல்யாணத்தை நிறுத்துங்க..!” என்றனர்.
“கல்யாணம் முடிஞ்சுடுச்சு சார்..!” என்றனர் கொஞ்சம் பயந்த குரலில்.
“அப்போ மைனர் பொண்ணை கல்யாணம் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த குற்றத்துக்காக நாங்க உங்க பையனை அரஸ்ட் பண்றோம்..!” என்றனர்.
“என் பொண்ணை யாரும் கட்டாயப்படுத்தலை. இது அவ சம்மதிச்சு நடந்த கல்யாணம் தான்..!” என்றார் பார்வதி.
“எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு..!” என்றனர் காவல் துறையினர்.
“யாரு புகார் கொடுத்தது..?” என்றார் பெரியசாமி.
“புகார் குடுத்தவங்க பேரு எதையும் சொல்லலை. எங்களுக்கு போன் வந்தது..!” என்றனர்.
“இந்த ஊர்லையே இந்த மாப்பிள்ளை வீட்ல மட்டும் தான் போன் இருக்கு. அவங்களே எதுக்கு போன் பண்ணி புகார் குடுக்க போறாங்க..?” என்றனர்.
“அதைப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்கு புகார் வந்தது. இங்க வந்து பார்த்தா அதே மாதிரி தான் நடந்திருக்கு. ஒன்னு உங்க பொண்ணு மேஜர் தான் அப்படின்னு ஆதாரம் காட்டுங்க. இல்லைன்னா வழியை விடுங்க நாங்க அரஸ்ட் பண்ணனும்.
ஸ்டேஷன்ல வந்து எதுன்னாலும் பேசிக்கோங்க..!” என்றனர்.
“சார் அவன் படிக்கிற பையன். டாக்டருக்கு படிக்கிறான்.இப்படி அரஸ்ட் பண்ணினா அவன் எதிர்காலமே கேள்விக் குறி ஆகிடும்..!” என்று மலர் கெஞ்ச, முகிலன் அவமானத்தால் தலை குனிந்து நின்றான்.
“எங்களுக்கு ஒத்துழைப்பு குடுங்க. இல்லைன்னா பையனோட அம்மா, அப்பா உங்களையும் சேர்த்து நாங்க அரஸ்ட் பண்ண வேண்டியது வரும்..!” என்றனர்.
“எங்க ஊருக்குள்ள இது தான் வழக்கம். எங்களுக்கு வயசு முக்கியமில்லை. இது மாதிரி நிறைய கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. இதென்ன புதுசா இருக்கு..?” என்று அனைவரும் கேள்வி எழுப்ப,
“நீங்க பண்ணி வச்சிருக்க கல்யாணத்துக்கு எல்லாம் சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. அதுமட்டுமில்லை, அந்த நேரத்துல எங்களுக்கு எந்த புகாரும் வரலை. அப்படி வந்திருந்தா அப்பவும் நாங்க வந்து அரஸ்ட் பண்ணியிருப்போம். உங்களுக்கு இவ்வளவு விளக்கம் போதும்ன்னு நினைக்கிறேன்..!” என்ற காவலர்,
“மிஸ்டர்..!” என்று இழுக்க,
“மணி முகிலன்..!” என்றான் கம்பீரமாய்.
நடந்த அனைத்தையும் பேந்த பேந்த பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, மதிக்கு போலீசைக் கண்டு உடல் வெடவெடத்தது. இப்போது போல் அப்போது போலீஸ் எல்லாம் சாதாரணம் இல்லை என்ற எண்ணம். அவள் பயந்து ஒதுங்கி பார்வதியின் பின் ஒதுங்க, அதைப் பார்த்த முகிலன் செத்தே விட்டான். அந்த நொடி, அவளின் இடத்தில் அவனும் யோசிக்கவில்லை. அவனின் இடத்தில் யோசிக்கும் பக்குவமும் அவளுக்கு இல்லை.
“எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு. நீங்க என்னை மட்டும் அரஸ்ட் பண்ணுங்க..!” என்றான் முகிலன்.
“சார்..! மேற்கொண்டு எதுவும் பண்ண வேண்டாம். இதை எப்படி முடிக்கனுமோ அப்படி முடிச்சுக்கலாம்..! அவன் படிக்கிற பையன்..!” என்று பெரியசாமி கெஞ்ச,
“நீங்க ஸ்டேஷன்ல வந்து இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிக்கோங்க. ஆனா இப்ப வரைக்கும் எப்ஐஆர் போடலை..!” என்ற போலீசார் முகிலனைப் பார்க்க, அவன் அவர்கள் பின்னால் செல்ல ஆயத்தம் ஆனான்.
கணவன் என்ற முறையில் மதிக்கு எதுவும் தோன்றாமல் இருந்தாலும், அவளின் மணி மாமாவாக அவளுக்கு உள்ளுக்குள் பிசைந்தது.
“மணி மாமா..!” என்று அழைத்த படி அவள் அழ ஆரம்பிக்க, அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் என்ன இருந்தது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் முகம் இறுகிப் போய் இருந்தது.
திருமணத்திற்கு ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க... மலருக்கும், பார்வதிக்கும் வருபவர்களை வரவேற்பதில் நேரம் பறந்தது. பெரியசாமி ஒட்டுதல் இல்லாமல் இருக்க, மனோகரனோ அன்றும் குடித்துவிட்டு தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் வெள்ளையும் சொல்லையுமாக இருந்தார்.
தனபாண்டியும்,குணபாண்டியும் ஆளுக்கொரு வேலையை செய்து கொண்டிருந்தனர். எப்போதும் போல் அரசி அவர்களை முறைத்துக் கொண்டிருந்தார்.
மதியின் கடைசி சித்தப்பாவான கோபியும், சித்தி லட்சுமியும் யாருக்கோ கல்யாணம் என்கிற ரீதியில் கூட்டத்தில் ஒருவராய் அமர்ந்திருந்தனர்.
“எப்பா தனம், குணம் போய் முகிலன் கூட இருங்கப்பா. நீங்க அவனுக்கு மச்சினன் முறை ஆகணும்..!” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல,
“இங்க பாருடா தனபாண்டி. நமக்கும் முகிலன் வயசு தான் ஆகுது. அவங்க அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்குது. ஆனா நமக்கும் தான் இருக்கே அம்மான்னு ஒன்னு..!” என்றான் குணபாண்டி.
“நானும் இதைத்தான் நேத்து இருந்து யோசிக்கிறேன் குணப்பாண்டி. முதல்ல நமக்கு ஒரு பொண்ணை பார்க்க சொல்லணும்..!” என்றான் அவன்.
“ஒரு பொண்ணு இல்லைடா..! ரெண்டு பொண்ணு..!” என்றான் குணப்பாண்டி.
“இப்ப இது ரொம்ப முக்கியம். போய் வேலையை பாருங்கடா..!” என்று பெரியசாமி விரட்ட,
“இந்த மாமனுக்கு கொழுப்பு கூடிடுச்சுடா..! மலர் அத்தைகிட்ட சொல்லி குறைக்க சொல்லணும்..” என்றபடி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சென்றனர்.
வீட்டின் முன் போடப்பட்டிருந்த அந்த மேடையில் வந்து அமர்ந்தான் மணி முகிலன்.
“எம்மா பொண்ண கூட்டிட்டு வாங்க..! நல்ல நேரம் முடிய போகுது..!” என்று சொல்ல, தோழியர்கள் புடை சூழ மணமேடைக்கு வந்தாள் வண்ண மதி.
மலரும் பெரியசாமியும் முகிலனுக்கு அருகில் நிற்க, பார்வதியும், மனோகரனும் மதிக்கு அருகில் நின்றனர்.சுமதி அக்காவையே பார்த்துக் கொண்டு அருகில் நின்றிருந்தாள்.
வண்ண மதியோ யாரையும் பார்க்கவில்லை.தரைக்குள் புதைந்தைப் போல தலையை கவிழ்த்தி வைத்திருந்தாள். முகிலனுக்கு தான் ஓரு வித சந்தோஷ உணர்வு. சுற்றுப் புறம் மறந்து அவன் கண்களில் விழுந்தது அவளின் பிம்பம் மட்டுமே.
“என்னாச்சு மதி..? கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்..!” என்றான் ஆசையாக.ஆனால் மதிக்கு தான் காதே கேட்கவில்லை. கேட்காதைத் போல் இருந்தாள் என்று சொன்னால் அது தான் உண்மை.
“மதி உன்னைத்தான்..!” என்றான் சற்று குனிந்து.
“மாப்பிள்ளை.. நேரா உட்காருங்க..! எதிர்த்தப்படி நாங்க எல்லாரும் இருக்கோமா இல்லையா..?” என்றான் தனபாண்டி.
அவனைப் பார்த்து முகிலன் முறைக்க, இவர்கள் இருவரும் சேர்ந்து அவனை முறைத்தனர்.
“இந்தாங்க..! இந்த மாலையை மாத்திக்கங்க..!” என்று சொல்ல,
ஒருவருக்கு ஒருவர் மாலையை மாத்திக் கொண்டனர். அப்போது கூட மதி அவனைப் பார்க்கவில்லை. குனிந்து கொண்டே மாலையைப் போட போக, அவனோ கொஞ்சம் பின்னால் சென்றான்.அதன் பிறகு தான் கொஞ்சம் நிமிர்ந்தாள் மதி.
அவளைப் பார்த்து சிரித்த முகிலன், பிறகு அவளைப் பார்த்துக் கொண்டே மாலையைப் போட்டான். அடுத்ததாக அவன் கையில் தாலியை கொடுக்க, கெட்டிமேளச் சத்தம் கேட்டது.
“கெட்டிமேளம்..!கெட்டிமேளம்..!”
நிறுத்தி நிதானமாக மதியின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான் மணி முகிலன். வண்ண மதி மனோகரன், வண்ண மதி மணி முகிலன் ஆனாள் அந்த நிமிடம் முதல்.
பார்வதிக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வர, அவரைப் பார்த்த மதிக்கும் அழுகை வந்தது. கங்காவும், செல்வியும் கூட கண் கலங்கினர். பின் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த முத்துவுக்கும் கண்ணீர் வந்தது. அதைவிட பிரதானமாக கோபமே வந்தது. தான் எண்ணியது நடக்கவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.
அட்சதையைத் தூவிய திலகாவின் மனதிற்குள் ஆயிரம் வஞ்சம். இப்படி பலரும் பலதரப்பட்ட எண்ணங்களில் இருக்கும் போது அங்கு வந்த போலீசைக் கண்டு திகைப்பில் அனைவரும் எழுந்தனர்.
“என்ன ஆச்சு..? போலீஸ் வந்திருக்கு...! நம்ம ஊருக்கு போலீஸ் எல்லாம் வராதே..!” என்றபடி ஆளுக்கு ஒரு விதத்தில் பேச ஆரம்பிக்க, கல்யாணம் நடப்பதற்கு முன் வரவேண்டிய போலீஸ், நடந்து முடிந்த பிறகு வந்திருந்தது.
அவர்களின் அருகில் ஓடி சென்ற பெரியசாமி..”வாங்க சார்...? என்ன பிரச்சனை..? எதுக்காக வந்திருக்கிங்க..?” என்றார் பதட்டத்துடன்.
“நீங்க மைனர் பொண்ணைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றதா எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு..! பதினெட்டு வயசு முடியாம கல்யாணம் பண்றது சட்டப்படி தப்பு. அதனால இந்த கல்யாணத்தை நிறுத்துங்க..!” என்றனர்.
“கல்யாணம் முடிஞ்சுடுச்சு சார்..!” என்றனர் கொஞ்சம் பயந்த குரலில்.
“அப்போ மைனர் பொண்ணை கல்யாணம் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்த குற்றத்துக்காக நாங்க உங்க பையனை அரஸ்ட் பண்றோம்..!” என்றனர்.
“என் பொண்ணை யாரும் கட்டாயப்படுத்தலை. இது அவ சம்மதிச்சு நடந்த கல்யாணம் தான்..!” என்றார் பார்வதி.
“எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு..!” என்றனர் காவல் துறையினர்.
“யாரு புகார் கொடுத்தது..?” என்றார் பெரியசாமி.
“புகார் குடுத்தவங்க பேரு எதையும் சொல்லலை. எங்களுக்கு போன் வந்தது..!” என்றனர்.
“இந்த ஊர்லையே இந்த மாப்பிள்ளை வீட்ல மட்டும் தான் போன் இருக்கு. அவங்களே எதுக்கு போன் பண்ணி புகார் குடுக்க போறாங்க..?” என்றனர்.
“அதைப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்கு புகார் வந்தது. இங்க வந்து பார்த்தா அதே மாதிரி தான் நடந்திருக்கு. ஒன்னு உங்க பொண்ணு மேஜர் தான் அப்படின்னு ஆதாரம் காட்டுங்க. இல்லைன்னா வழியை விடுங்க நாங்க அரஸ்ட் பண்ணனும்.
ஸ்டேஷன்ல வந்து எதுன்னாலும் பேசிக்கோங்க..!” என்றனர்.
“சார் அவன் படிக்கிற பையன். டாக்டருக்கு படிக்கிறான்.இப்படி அரஸ்ட் பண்ணினா அவன் எதிர்காலமே கேள்விக் குறி ஆகிடும்..!” என்று மலர் கெஞ்ச, முகிலன் அவமானத்தால் தலை குனிந்து நின்றான்.
“எங்களுக்கு ஒத்துழைப்பு குடுங்க. இல்லைன்னா பையனோட அம்மா, அப்பா உங்களையும் சேர்த்து நாங்க அரஸ்ட் பண்ண வேண்டியது வரும்..!” என்றனர்.
“எங்க ஊருக்குள்ள இது தான் வழக்கம். எங்களுக்கு வயசு முக்கியமில்லை. இது மாதிரி நிறைய கல்யாணம் பண்ணி வச்சிருக்கோம்.. இதென்ன புதுசா இருக்கு..?” என்று அனைவரும் கேள்வி எழுப்ப,
“நீங்க பண்ணி வச்சிருக்க கல்யாணத்துக்கு எல்லாம் சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. அதுமட்டுமில்லை, அந்த நேரத்துல எங்களுக்கு எந்த புகாரும் வரலை. அப்படி வந்திருந்தா அப்பவும் நாங்க வந்து அரஸ்ட் பண்ணியிருப்போம். உங்களுக்கு இவ்வளவு விளக்கம் போதும்ன்னு நினைக்கிறேன்..!” என்ற காவலர்,
“மிஸ்டர்..!” என்று இழுக்க,
“மணி முகிலன்..!” என்றான் கம்பீரமாய்.
நடந்த அனைத்தையும் பேந்த பேந்த பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, மதிக்கு போலீசைக் கண்டு உடல் வெடவெடத்தது. இப்போது போல் அப்போது போலீஸ் எல்லாம் சாதாரணம் இல்லை என்ற எண்ணம். அவள் பயந்து ஒதுங்கி பார்வதியின் பின் ஒதுங்க, அதைப் பார்த்த முகிலன் செத்தே விட்டான். அந்த நொடி, அவளின் இடத்தில் அவனும் யோசிக்கவில்லை. அவனின் இடத்தில் யோசிக்கும் பக்குவமும் அவளுக்கு இல்லை.
“எல்லாத்துக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு. நீங்க என்னை மட்டும் அரஸ்ட் பண்ணுங்க..!” என்றான் முகிலன்.
“சார்..! மேற்கொண்டு எதுவும் பண்ண வேண்டாம். இதை எப்படி முடிக்கனுமோ அப்படி முடிச்சுக்கலாம்..! அவன் படிக்கிற பையன்..!” என்று பெரியசாமி கெஞ்ச,
“நீங்க ஸ்டேஷன்ல வந்து இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிக்கோங்க. ஆனா இப்ப வரைக்கும் எப்ஐஆர் போடலை..!” என்ற போலீசார் முகிலனைப் பார்க்க, அவன் அவர்கள் பின்னால் செல்ல ஆயத்தம் ஆனான்.
கணவன் என்ற முறையில் மதிக்கு எதுவும் தோன்றாமல் இருந்தாலும், அவளின் மணி மாமாவாக அவளுக்கு உள்ளுக்குள் பிசைந்தது.
“மணி மாமா..!” என்று அழைத்த படி அவள் அழ ஆரம்பிக்க, அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தில் என்ன இருந்தது என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் முகம் இறுகிப் போய் இருந்தது.