Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

கரிசல் 15:

தன் பத்தாம் வகுப்பின் இறுதித் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்தாள் மதி.ஏதோ உலகத்தையே வசப்படுத்திய உணர்வு.காலையில் முகிலனைப் பார்த்ததில் இருந்து அவளின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்து கொண்டே தான் இருந்தது.

அந்த ஒருவித சுகமான மனநிலையை ஒதுக்கி வைத்துவிட்டு பரீட்ச்சையை எழுதி முடிப்பதற்குள் அவளுக்குள் போதும் போதும் என்ற நிலைதான்.பேப்பரிலும் மணி முகிலனின் முகம் வந்து போக.. என்னவென்று அறியாமல் குழம்பித்தான் போனாள்.

அப்போது எல்லாம்...பிஞ்சிலேயே பழுத்த கதை எல்லாம் இல்லையே. மூக்கைத் தொடுவதற்கே தலையை சுற்றி தொட்ட காலம்..மனதில் இருக்கும் உணர்வை இனம் காணத் தெரியவில்லை அவளுக்கு.

இதுவரை பார்த்து பயந்த...பேச பயந்த ஒரு முகம்..மனதிற்குள் மீண்டும் மீண்டும் வந்து போனால் அவளும் தான் என்ன செய்வாள்.கவனத்தை சிதறவிடாமல் ஒரு வழியாக எழுதி முடித்து வெளியே வந்து விட்டாள் வண்ண மதி.

அவளின் முகத்தில் இருந்த அந்த சந்தோசம் அங்கே பலரின் முகத்திலும் இருந்தது.எதையோ வென்ற உணர்வு..ஏதோ பாதி வாழ்க்கையை கடந்த உணர்வு.பப்ளிக் எக்ஸாம் என்ற காய்ச்சலுக்கு அன்றோடு விடை கொடுத்தனர் அந்த மாணவர்கள்.

தோளில் கைப்போட்டப்டி அவர்களின் ஆராவாரம் மற்றவர்களின் காதுகளை அடைக்க செய்ய..மிச்சம் மீதி இருந்த பேனா மையும்...மற்ற மாணவர்களின் சட்டைகளில் வண்ணங்களாய் மாற...ஒருவருக்கு ஒருவர் ஓடி ஓடி..பேனா மையை சட்டையில் தெளித்துக் கொண்டிருந்தனர்.

அனைவரும் அந்த பள்ளியை விட்டு வெளியே வர...வெளியில் தன் நண்பர்களுக்காக காத்திருந்தான் முத்து.

“என்ன முத்து இங்க வந்து நிக்குற...? அதுக்கு நீ ஒழுங்கா பரீட்சையே எழுதி இருக்கலாம்..” என்று செல்வி வசை பாட...

“உன்னோட அறிவுரைக்கு ரொம்ப நன்றி.எனக்குத் தெரியும்..நான் என் தோஸ்த்களை பார்க்க வந்தேன்...உன் வேலையைப் பாரு..!” என்று பட்டென்று சொன்னான்.

“என்ன முத்து இப்படி பேசுற..?” என்று மதி கேட்க...

“இனி இப்படித்தான்..!” என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு போக...

“அவனுக்கு வேற வேலை இல்லை..நீங்க வாங்கடி..!” என்று கங்கா சொல்ல..

“ஏய்..! நீங்களும் நம்ம ஸ்கூல் வரைக்கும் வாங்கடி...போயிட்டு டீச்சரை பார்த்த உடனே வந்துடலாம்...!” என்று மதி கூப்பிட...

“என்ன விளையாடுறியா மதி..! நான் தான் காலைலயே சொன்னேன் தான...? வேணுமின்னா செல்வியை கூட்டிட்டு போ..!” என்று கங்கா சொல்ல..

“மறுபடியும் பள்ளிக் கூடத்துக்கா..என்னால முடியாது...! அதுவும் அந்த டீச்சருக்கு என்னைக் கண்டாலே ஆவாது..!” என்று செல்வியும் கழண்டு கொள்ள..

“சரி..! நானே போயிட்டு வரேன்..!” என்றபடி நடந்து சென்றனர்.

இவர்களின் பேச்சை பின்னால் இருந்து முத்து கேட்டுக் கொண்டே வர..

“நான் வேணுமின்னா வரவா மதி..!” என்றான்.

“இல்லை முத்து..! வேண்டாம்.நானே போயிட்டு வரேன்..!” என்றபடி அப்போது வந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.

“நான் அடுத்த ஸ்டாப்ல இறங்கி ஸ்கூலுக்கு போயிட்டு வந்திடுறேன் கங்கா..! எங்கம்மாகிட்ட மட்டும் சொல்லிடு..!” என்று மதி சொல்ல..

“சரிடி..” என்று அவர்கள் சொல்ல..அவள் மட்டும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினாள்.

உள்ளே நுழையும் போதே... அவளுக்கு கஷ்ட்டமாக இருந்தது.அந்த பள்ளியில் பத்தாவது வரைதான்.அதற்கு மேல் வேறு பள்ளிக்குத்தான் போக வேண்டும்.இனி இப்படி இங்க வர முடியாது என்று நினைத்தபடி டீச்சரைத் தேடி செல்ல...

“குட் ஆப்டர்நூன் டீச்சர்..!”

“வா மதி..எக்ஸாம் எப்படி எழுதியிருக்க..? ஸ்கூல் பர்ஸ்ட் வந்துடுவியா..?” என்றார்.

“ரொம்ப நல்லா எழுதி இருக்கேன் டீச்சர்.கண்டிப்பா பர்ஸ்ட் வந்துடுவேன்..!” என்றாள் நம்பிக்கையாய்.

“வெரிகுட்..” என்றபடி அவளிடம் இருந்த அந்த வருட புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார் அவர்.

“இன்னிக்கு நீங்க எக்ஸாம் ஹாலுக்கு போகலையா டீச்சர்..?” என்றாள்.

“இல்லம்மா..! இன்னைக்கு எனக்கு ஹால் இல்லை..அதான் உன்னைய வர சொன்னேன்..!” என்று பேசிக் கொண்டிருக்க..மற்ற சில மாணவர்கள், ஆசிரியர்கள் என அங்கங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“அடுத்தும் நல்லா படிக்கணும் மதி..அப்ப தான் நீ நினைச்ச மாதிரி டீச்சர் ஆக முடியும்...எப்பவும் கவனம் படிப்பில் மட்டும் தான் இருக்கணும்...!” என்று ஒரு ஆசிரியராய் அவர் அறிவுரை சொல்ல..

“கண்டிப்பா டீச்சர்...எதிர்காலத்துல நானும் கண்டிப்பா டீச்சர் ஆகிடுவேன்..!” என்றாள் முகம் முழுவதும் புன்னகையாய்.ஏனோ அந்த ஆசிரியருக்கு கூட மதியின் புன்னகை முகம் பிடித்து விட்டது போல..அவளை வாஞ்சையுடன் பார்த்து வைத்தார்.இத்தனை வருடங்களில் அவளைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆயிற்றே.

அவரிடம் விடை பெற்றவள்...அங்கே மேலும் சில சகாக்களைப் பார்த்து பேசிவிட்டு,நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பினாள்.அவளுடைய கெட்ட நேரமோ என்னமோ..அந்த நேரத்திற்கு வர வேண்டிய பஸ்சும் வராமல் போக...மதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“அப்படியே நடப்போம்..பஸ் வந்தா இடையில நிப்பாட்டி ஏறிக்கலாம்..” என்று மனதில் நினைத்தவள்..அப்படியே மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.

அதற்காகவே காத்திருந்தவன் போல்...சைக்கிளை உருட்டிக் கொண்டே வந்தான் முத்து.

“என்ன முத்து..? இன்னும் நீ வீட்டுக்கு போகலையா..?” என்றாள்.

“எங்க போறது...! சைக்கிள் பஞ்சர் ஆகிடுச்சு..! அதான் சைக்கிள் கடைக்கு போனேன்..அங்க கடையும் பூட்டியிருக்கு.இனி நம்ம ஊரு கடைல தான் போய் வேலை பார்க்கணும்...அதான் உருட்டிட்டே போய்டலாம்ன்னு போயிட்டு இருக்கேன்..!” என்றான்.

“அச்சச்சோ..!” என்று அவனுக்காக பரிதாபப் பட்டாள் வண்ண மதி.அதைத் தாண்டி அவள் வேறு எதையும் யோசிக்கவில்லை.

இருவரும் சிறிது தூரம் அமைதியாய் நடக்க...அந்த அமைதியை விரும்பாத முத்து...

“அப்பறம் மதி..! அடுத்து என்ன செய்ய போற..?” என்றான் வாய் பேச்சாய்.

“அடுத்து என்ன செய்ய முத்து..? மேல படிக்க போறேன்..!” என்றாள்.

“மேல படிச்சு என்ன செய்ய போற...? பேசாம மத்த பொண்ணுக மாதிரி நீயும் கல்யாணம் பண்ணிக்கோ..உனக்கு பிடிச்சவனா பார்த்து...!” என்றான் கீழ் கண்ணால் நோக்கி.

“ஐய..! ஆளையும் மூஞ்சியையும் பாரு..! எல்லாரையும் மாதிரி கிடையாது இந்த வண்ண மதி.எனக்கு நிறைய படிக்கணும்...அப்பறம் பெரிய டீச்சர் ஆகணும்...நம்ம ஸ்டெல்லா டீச்சர் எப்படி சூப்பரா சொல்லித் தருவாங்க..அதே மாதிரி நானும் சொல்லித் தரனும்...” என்று அவள் பட்டியல் நீண்டு கொண்டே போக..

“போதும்..போதும்..கேட்க முடியலை..!”என்றான் நக்கலாய்.

“உனக்கு இப்ப நக்கலாய் இருக்கலாம்.ஆனா பாரு ஒரு நாள் டீச்சர் ஆகி இந்த ஊருக்குள்ள சும்மா கெத்தா நடந்து வருவேன்..!” என்ற அவள் வார்த்தைகளில் கனவுகள் மிதக்க..அவளின் முகமோ..அந்த நாளுக்கே சென்று விட்டதைப் போன்ற சந்தோஷத்தைக் காட்டியது.
“கேட்க நல்லா இருக்கு மதி...ஆனா நம்ப ஊரைப் பத்திதான் உனக்குத் தெரியுமே..!” என்றான்.

“அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை கிடையாது.எங்கம்மா என்னை கண்டிப்பா படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க..!” மதி.

“என்னவோ போ மதி...! எனக்கென்னமோ இது சரியா வரும்ன்னு தோணலை..!”

“உனக்கு சரியா வந்தா என்ன? தப்பா வந்தா எனக்கென்ன..? எனக்கு படிக்க பிடிக்குது நான் படிக்கிறேன்..!” என்றாள்.

“நான் படிக்காதவன்னு கிண்டல் பண்றியா..?” என்றான்.

“நான் அப்படி சொல்லலை.அப்படி நினைச்சிருந்தா உன்கூட பேசி இருக்கவே மாட்டேன்..!” என்றாள்.

“நீ,வா,போன்னு சொல்லாதன்னு சொன்னேன்ல காலைலயே..!”என்றான்.

“என்னால திடீர்ன்னு எல்லாம் மாத்த முடியாது..!” என்றாள்.

“திடீர்ன்னு அந்த முகிலனை எல்லாம் அன்பா பார்க்கத் தெரியுது..!”

“நான் எப்ப அப்படிப் பார்த்தேன்..?”

“காலைல பார்த்தியே..! நானும் பார்த்தேனே..!”

“இல்லை..”

“ஆமா...உண்மை...அவனும் என்னமோ அப்படி பார்க்குறான்...! முன்னாடி எல்லாம் அவனைக் கண்டாலே பயப்படுவ..? அவன் கூட பேசவே யோசிப்ப..?இப்ப என்னடான்னா..அவன் கூட சிரிச்சு எல்லாம் பேசுற..?” என்றான்.

“முத்து..அவங்க எனக்கு அத்தை பையன்..அவங்ககிட்ட எப்படி பேசாம இருக்க முடியும்..?” என்றாள்.
Superb sis
 
Top