கரிசல் 13:
மீண்டும் மீண்டும் அவள் கையை உருவ முயற்சி செய்ய...அவள் முயற்சியை தோற்கடித்துக் கொண்டே இருந்தான்.
“விடுங்க மாமா...”என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல...
“பேசாம படத்தைப் பாரு..! அதென்ன அந்த முத்து பயகிட்ட மட்டும் இளிச்சு இளிச்சு பேசுற..என்னை கண்டா மட்டும் அப்படியே பம்முற..?” என்றான் கோபத்துடன்.
சாதாரணமாகவே அவனைக் கண்டு பயப்படும் மதி..அவன் கோபமாக பேசவும் அழுகும் நிலைக்கு சென்று விட்டாள்.அவள் கண்களில் கண்ணீரை பார்த்தவன்....
“இப்ப எதுக்கு உடனே அழுது சீன் போடுற..?” என்றவன் வெடுக்கென்று கைகளை விட...பட்டென்று எழுந்த மதி...”வா சுமதி வீட்டுக்கு போகலாம்..!” என்று தங்கையை அழைக்க...அவளோ படத்தின் இறுதி காட்சியில் மூழ்கியிருந்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு..? இந்நேரம் வரைக்கும் நல்லா தான இருந்த..?” என்று கங்கா கேட்க...
“இல்லை..எனக்கு தூக்கம் வருது..! வீட்டுக்குப் போகணும்..” என்று சொன்னவள்..அவர்களின் பேச்சைக் காதில் வாங்காமல்...சுமதியை அழைத்துக் கொண்டு வேகமாக சென்றாள்.
“எக்கா...நல்ல இடத்துல கூட்டிட்டு வந்துட்ட...படம் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிச்சுடும்...” என்று சுமதி மூஞ்சியைத் தூக்க...
“அக்கா அந்த படத்தை ஏற்கனவே பார்த்துட்டேன்..விட்ட இடத்துல இருந்து நான் உனக்கு கதை சொல்றேன் சரியா..?” என்றாள்.
“சரிக்கா..!” என்று அவளும் தலையை ஆட்டிக் கொண்டே பின்னாடியே செல்ல...முகிலனுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
“பெரிய இவ..? கையைப் பிடிச்சதுக்கு என்னவோ இப்படி சீன் போட்டுட்டு போறா...? போனா போடி.!” என்ற தெனாவெட்டுடன் இருந்தான் முகிலன்.
“என்ன மதி அதுக்குள்ள வந்துட்டிங்க..? நான் தான் கூப்பிட வரேன்னு சொன்னேன்ல..!” பார்வதி.
“இங்க பாருங்கம்மா...சொல்லி வச்சுக்கங்க..அந்த முகிலன் மாமாகிட்ட...! என் கையை பிடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்ன்னு..! இங்க பாருங்க என் கையே செவந்து போயிடுச்சு..!” என்று மூஞ்சியைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல....மதியையே யோசனையுடன் பார்த்தார் பார்வதி.
முகிலன் எப்போது அப்படி நடந்து கொள்பவன் அல்ல.ஆனால் அது கிராமம் ஆயிற்றே..! சின்ன விஷயம் கிடைத்தால் கூட அதை ஊதி ஊதி பெரிசு படுத்தி விடுவர்.அந்த பயம் தான் பார்வதிக்கு.
வீட்டினுள் கோபமாக நுழைந்த முகிலனைக் கண்ட மலர்..”என்ன ஆச்சு முகிலா...போறப்ப நல்லாத்தான போன..? இப்போ இவ்வளவு கோபமா வர..!” என்று கேட்க...
“உங்க அண்ணன் மக என்ன பெரிய ரதியா..? என்னமோ கையைப் பிடிச்சதுக்கே அப்படி சிலுப்பிட்டு போறா..?” என்றான்.
“யாரை சொல்ற மதியையா..?” என்றார் மலர்.
“அந்த சுரக்கா தான்..!” என்றான்.
“டேய்..! வயசுப் பிள்ளை கையைப் பிடிச்சா...அப்பறம் கொஞ்சுவாங்களா...? எப்பவும் இப்படி பண்ண மாட்டியே...? என்னடா இது புது பழக்கம்..!” என்று மலர் அதட்ட..
“ஐயோ அம்மா..! இப்படித்தான் பிடிச்சேன்..!” என்று மலரின் கையைப் பிடித்துக் காட்ட...
“எப்படின்னாலும் தப்பு முகிலா..!” என்று மலர் அதட்ட..
“அந்த முத்து பய கிட்ட மட்டும் பல்லைக் காட்டுறா..? என்னைக் கண்டாதான் அப்படியே பயப்படுற மாதிரி நடிக்குறா..?” என்றான்.
“தப்பா பேசாத முகிலா..” என்று மலர் சொல்ல..
“நான் எங்கம்மா தப்பா பேசுனேன்...!” என்று அவன் தலையில் அடிக்க..
“இப்ப சொன்னியே முத்து பய கூட மட்டும் பேசுறான்னு..!” என்று மலர் கேட்க..
“அம்மா..பிளீஸ்....! நீங்களும் இந்த ஊர்ல இருக்குறவங்க மாதிரியே பேசாதிங்க..! நான் அந்த அர்த்ததுல சொல்லலை...இந்த ஊரும் திருந்தாது... நீங்களும் திருந்த மாட்டிங்க..!” என்றபடி சென்று விட்டான்.
முகிலன் சொல்வதில் தப்பில்லை.ஒன்று என்றால் அது ஓராயிரமாக பரவி விடும் அந்த ஊரில்.அதை மனதில் வைத்துக் கொண்டு தான் சொன்னான்.
அன்றிலிருந்து முகிலன் அவளுடன் பேசுவதில்லை.அவளை அவ்வப்போது பார்த்தாலும் பார்க்காததைப் போல் சென்று விடுவான்.மதியும் அதை கண்டு கொள்ளவில்லை.இப்படியே மாதங்களும் கடக்க...மதியின் கவனம் முழுவதும் படிப்பில் இருக்க...முத்து அவளுக்கு நெருங்கிய நண்பனாகிப் போனான்.
கங்காவுக்கும்,செல்விக்குமே பொறாமை வரும் அளவிற்கு அவர்களின் நட்பு இருந்தது...அவளின் நட்பு என்று சொல்வது தான் நிஜம்.முகிலனும் கல்லூரி விடுதியிலேயே தங்கிக் கொண்டான்.
அன்று மதி கொஞ்சம் லேட்டாக கிளம்ப...கங்காவும்,செல்வியும் மெதுவாக முன்னாடி நடக்கிறோம் என்று சொல்லி சென்றிருந்தனர்.
வேக வேகமாய் கிளம்பியவள்..ஓட்டமும்,நடையுமாக வர...அவளையே எதிர்பார்த்திருந்து காத்திருந்தவன் போல் சைக்கிளில் வந்தான் முத்து.”
“வா மதி..! பின்னாடி ஏறிக்க...நேரம் ஆகிடுச்சு...! பஸ் வந்துடும்..!” என்று சொல்ல..தயங்கினாள் மதி.
“என்ன மதி யோசிக்கிற..? இன்னைக்கு பரிட்ச்சை வேற இருக்கு...! சீக்கிரம் வா..!எனக்கு ஒன்னும்மில்லை...நீ நல்லா படிக்கிற பிள்ளை...பார்த்துக்க..” என்றான்.
“ஆபத்துக்கு பாவமில்லை..” என்று நினைத்தவள்..அவனின் சைக்கிள்ன் பின்னால் உட்கார...வேகமாக சைக்கிளை ஓட்டினான் முத்து.
அவள் அவனின் பின்னால் அமர்ந்து போவதைப் பார்த்த அரசியும்,திலகாவும்..
“பார்த்திங்களா கூத்தை...நாளுக்கு நாள் இந்த மேனா மினுக்கி அடிக்கிற கூத்துக்கு அளவு இல்லாம போயிட்டு இருக்கு..! எப்ப பார்த்தாலும் அந்த முத்து பய கூடவே திரியறா...? ஆத்தாக்காரியும் கண்டுக்க மாட்டேங்கிறா..?” என்று திலகா சொல்ல..
“உண்மைதான் திலகா...என்னைக்கு எவனை இழுத்துட்டு ஓடப் போறாளோ..! இவ்வளவு பவுடர போட்டுட்டு போயி படிக்கவா செய்வா...?” என்றார் அரசியும் அவர் பங்குக்கு.சொந்த பெரியம்மாக்களின் வாயில் தான் அரை படுவதை அறியாத மதி...அங்கே முத்துவின் பின்னால்.
“படிச்சுட்டியா முத்து..!” என்றாள்.
“யாரைப் பார்த்து...என்ன கேள்வி கேட்குற..?“ என்றான் முத்து.
“ஒழுங்கா படிச்சாதான் இந்த வருஷம் பாஸாக முடியும்..” என்றாள்.
“அதெல்லாம் பக்கத்து பேப்பரைப் பார்த்து கூட இந்த வருஷம் பாஸ் பண்ணிடுவேன்..!” என்றான்.
இவர்கள் பேசிக் கொண்டே வந்து கொண்டிருக்க...அப்போது தான் வந்து இறங்கினான் முகிலன்.அந்த வாரம் ஊர் திருவிழா என்பதால்...மூன்று நாள் விடுப்பில் வந்திருந்தான்.
இறங்கியவன் கண்ட முதல் காட்சி...இவர்கள் காட்சி தான்.
“முத்து..சீக்கிரம் பஸ்ஸ எடுக்க போறாங்க..!” என்று அவள் கத்த.... வேகமாய் சென்று சைக்கிளை நிறுத்தியவன்....பஸ் ஏற ஓடி வர..அவனுக்கு முன்னால் வந்து ஏறி இருந்தால் மதி.
அவளுக்கு இருந்த பதட்டத்தில்...பஸ்ஸில் இருந்து இறங்கிய முகிலனையோ...அவன் தன்னை முறைத்ததையோ அவள் கவனிக்கவில்லை. அவளின் கவனம் எல்லாம் அன்று நடக்கப் போகும் பரீட்ச்சையில் இருந்தது.
ஆனால் முன்னாடியே ஏறி இருந்த கங்காவும்,செல்வியும் கவனித்தனர். அவர்கள் தான் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு பஸ்ஸை நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது எல்லாம்...பஸ்ஸைக் கண்டு ஒருவர் ஓடி வந்தால்..அவர் வரும் வரை நிறுத்தியிருந்து எடுக்கும் அளவுக்கு ஓட்டுனர்களுக்கு கருணையும், பொறுமையும் இருந்தது.
தன்னை மீறி கோபத்தைக் காட்ட கூடாது என்று எண்ணிய முகிலன் தன்னுடைய பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான்.
“என்னடி மதி..! முகிலன் அண்ணா உன்னைப் பார்த்துட்டே இருந்தாங்க...! நீ பேசாட்டுக்கு கண்டுக்காம பஸ்ல ஏறிட்ட..?” என்று செல்வி கேட்க...
“முகிலன் மாமா எங்க இருந்தாங்க..?” என்று மதி புரியாமல் கேட்க..
“சரியா போய்டுச்சு போ...! நீ அண்ணாவை கவனிக்கவே இல்லையா..?” என்று கங்கா கேட்க..
“ம்ம்கும்..” என்று தலையை ஆட்டினாள் மதி.முத்துவிற்கு அந்த பதில் சந்தோஷமாக இருந்தது.
“நீ பார்த்தியா முத்து..!” என்று மதி கேட்க...
“அவசரத்துல நானும் கவனிக்கலை மதி..!” என்றான் முத்துவும்.
அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள...முகிலன் மட்டும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.
மீண்டும் மீண்டும் அவள் கையை உருவ முயற்சி செய்ய...அவள் முயற்சியை தோற்கடித்துக் கொண்டே இருந்தான்.
“விடுங்க மாமா...”என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல...
“பேசாம படத்தைப் பாரு..! அதென்ன அந்த முத்து பயகிட்ட மட்டும் இளிச்சு இளிச்சு பேசுற..என்னை கண்டா மட்டும் அப்படியே பம்முற..?” என்றான் கோபத்துடன்.
சாதாரணமாகவே அவனைக் கண்டு பயப்படும் மதி..அவன் கோபமாக பேசவும் அழுகும் நிலைக்கு சென்று விட்டாள்.அவள் கண்களில் கண்ணீரை பார்த்தவன்....
“இப்ப எதுக்கு உடனே அழுது சீன் போடுற..?” என்றவன் வெடுக்கென்று கைகளை விட...பட்டென்று எழுந்த மதி...”வா சுமதி வீட்டுக்கு போகலாம்..!” என்று தங்கையை அழைக்க...அவளோ படத்தின் இறுதி காட்சியில் மூழ்கியிருந்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு..? இந்நேரம் வரைக்கும் நல்லா தான இருந்த..?” என்று கங்கா கேட்க...
“இல்லை..எனக்கு தூக்கம் வருது..! வீட்டுக்குப் போகணும்..” என்று சொன்னவள்..அவர்களின் பேச்சைக் காதில் வாங்காமல்...சுமதியை அழைத்துக் கொண்டு வேகமாக சென்றாள்.
“எக்கா...நல்ல இடத்துல கூட்டிட்டு வந்துட்ட...படம் இன்னும் கொஞ்ச நேரத்துல முடிச்சுடும்...” என்று சுமதி மூஞ்சியைத் தூக்க...
“அக்கா அந்த படத்தை ஏற்கனவே பார்த்துட்டேன்..விட்ட இடத்துல இருந்து நான் உனக்கு கதை சொல்றேன் சரியா..?” என்றாள்.
“சரிக்கா..!” என்று அவளும் தலையை ஆட்டிக் கொண்டே பின்னாடியே செல்ல...முகிலனுக்கு அவ்வளவு கோபம் வந்தது.
“பெரிய இவ..? கையைப் பிடிச்சதுக்கு என்னவோ இப்படி சீன் போட்டுட்டு போறா...? போனா போடி.!” என்ற தெனாவெட்டுடன் இருந்தான் முகிலன்.
“என்ன மதி அதுக்குள்ள வந்துட்டிங்க..? நான் தான் கூப்பிட வரேன்னு சொன்னேன்ல..!” பார்வதி.
“இங்க பாருங்கம்மா...சொல்லி வச்சுக்கங்க..அந்த முகிலன் மாமாகிட்ட...! என் கையை பிடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்ன்னு..! இங்க பாருங்க என் கையே செவந்து போயிடுச்சு..!” என்று மூஞ்சியைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல....மதியையே யோசனையுடன் பார்த்தார் பார்வதி.
முகிலன் எப்போது அப்படி நடந்து கொள்பவன் அல்ல.ஆனால் அது கிராமம் ஆயிற்றே..! சின்ன விஷயம் கிடைத்தால் கூட அதை ஊதி ஊதி பெரிசு படுத்தி விடுவர்.அந்த பயம் தான் பார்வதிக்கு.
வீட்டினுள் கோபமாக நுழைந்த முகிலனைக் கண்ட மலர்..”என்ன ஆச்சு முகிலா...போறப்ப நல்லாத்தான போன..? இப்போ இவ்வளவு கோபமா வர..!” என்று கேட்க...
“உங்க அண்ணன் மக என்ன பெரிய ரதியா..? என்னமோ கையைப் பிடிச்சதுக்கே அப்படி சிலுப்பிட்டு போறா..?” என்றான்.
“யாரை சொல்ற மதியையா..?” என்றார் மலர்.
“அந்த சுரக்கா தான்..!” என்றான்.
“டேய்..! வயசுப் பிள்ளை கையைப் பிடிச்சா...அப்பறம் கொஞ்சுவாங்களா...? எப்பவும் இப்படி பண்ண மாட்டியே...? என்னடா இது புது பழக்கம்..!” என்று மலர் அதட்ட..
“ஐயோ அம்மா..! இப்படித்தான் பிடிச்சேன்..!” என்று மலரின் கையைப் பிடித்துக் காட்ட...
“எப்படின்னாலும் தப்பு முகிலா..!” என்று மலர் அதட்ட..
“அந்த முத்து பய கிட்ட மட்டும் பல்லைக் காட்டுறா..? என்னைக் கண்டாதான் அப்படியே பயப்படுற மாதிரி நடிக்குறா..?” என்றான்.
“தப்பா பேசாத முகிலா..” என்று மலர் சொல்ல..
“நான் எங்கம்மா தப்பா பேசுனேன்...!” என்று அவன் தலையில் அடிக்க..
“இப்ப சொன்னியே முத்து பய கூட மட்டும் பேசுறான்னு..!” என்று மலர் கேட்க..
“அம்மா..பிளீஸ்....! நீங்களும் இந்த ஊர்ல இருக்குறவங்க மாதிரியே பேசாதிங்க..! நான் அந்த அர்த்ததுல சொல்லலை...இந்த ஊரும் திருந்தாது... நீங்களும் திருந்த மாட்டிங்க..!” என்றபடி சென்று விட்டான்.
முகிலன் சொல்வதில் தப்பில்லை.ஒன்று என்றால் அது ஓராயிரமாக பரவி விடும் அந்த ஊரில்.அதை மனதில் வைத்துக் கொண்டு தான் சொன்னான்.
அன்றிலிருந்து முகிலன் அவளுடன் பேசுவதில்லை.அவளை அவ்வப்போது பார்த்தாலும் பார்க்காததைப் போல் சென்று விடுவான்.மதியும் அதை கண்டு கொள்ளவில்லை.இப்படியே மாதங்களும் கடக்க...மதியின் கவனம் முழுவதும் படிப்பில் இருக்க...முத்து அவளுக்கு நெருங்கிய நண்பனாகிப் போனான்.
கங்காவுக்கும்,செல்விக்குமே பொறாமை வரும் அளவிற்கு அவர்களின் நட்பு இருந்தது...அவளின் நட்பு என்று சொல்வது தான் நிஜம்.முகிலனும் கல்லூரி விடுதியிலேயே தங்கிக் கொண்டான்.
அன்று மதி கொஞ்சம் லேட்டாக கிளம்ப...கங்காவும்,செல்வியும் மெதுவாக முன்னாடி நடக்கிறோம் என்று சொல்லி சென்றிருந்தனர்.
வேக வேகமாய் கிளம்பியவள்..ஓட்டமும்,நடையுமாக வர...அவளையே எதிர்பார்த்திருந்து காத்திருந்தவன் போல் சைக்கிளில் வந்தான் முத்து.”
“வா மதி..! பின்னாடி ஏறிக்க...நேரம் ஆகிடுச்சு...! பஸ் வந்துடும்..!” என்று சொல்ல..தயங்கினாள் மதி.
“என்ன மதி யோசிக்கிற..? இன்னைக்கு பரிட்ச்சை வேற இருக்கு...! சீக்கிரம் வா..!எனக்கு ஒன்னும்மில்லை...நீ நல்லா படிக்கிற பிள்ளை...பார்த்துக்க..” என்றான்.
“ஆபத்துக்கு பாவமில்லை..” என்று நினைத்தவள்..அவனின் சைக்கிள்ன் பின்னால் உட்கார...வேகமாக சைக்கிளை ஓட்டினான் முத்து.
அவள் அவனின் பின்னால் அமர்ந்து போவதைப் பார்த்த அரசியும்,திலகாவும்..
“பார்த்திங்களா கூத்தை...நாளுக்கு நாள் இந்த மேனா மினுக்கி அடிக்கிற கூத்துக்கு அளவு இல்லாம போயிட்டு இருக்கு..! எப்ப பார்த்தாலும் அந்த முத்து பய கூடவே திரியறா...? ஆத்தாக்காரியும் கண்டுக்க மாட்டேங்கிறா..?” என்று திலகா சொல்ல..
“உண்மைதான் திலகா...என்னைக்கு எவனை இழுத்துட்டு ஓடப் போறாளோ..! இவ்வளவு பவுடர போட்டுட்டு போயி படிக்கவா செய்வா...?” என்றார் அரசியும் அவர் பங்குக்கு.சொந்த பெரியம்மாக்களின் வாயில் தான் அரை படுவதை அறியாத மதி...அங்கே முத்துவின் பின்னால்.
“படிச்சுட்டியா முத்து..!” என்றாள்.
“யாரைப் பார்த்து...என்ன கேள்வி கேட்குற..?“ என்றான் முத்து.
“ஒழுங்கா படிச்சாதான் இந்த வருஷம் பாஸாக முடியும்..” என்றாள்.
“அதெல்லாம் பக்கத்து பேப்பரைப் பார்த்து கூட இந்த வருஷம் பாஸ் பண்ணிடுவேன்..!” என்றான்.
இவர்கள் பேசிக் கொண்டே வந்து கொண்டிருக்க...அப்போது தான் வந்து இறங்கினான் முகிலன்.அந்த வாரம் ஊர் திருவிழா என்பதால்...மூன்று நாள் விடுப்பில் வந்திருந்தான்.
இறங்கியவன் கண்ட முதல் காட்சி...இவர்கள் காட்சி தான்.
“முத்து..சீக்கிரம் பஸ்ஸ எடுக்க போறாங்க..!” என்று அவள் கத்த.... வேகமாய் சென்று சைக்கிளை நிறுத்தியவன்....பஸ் ஏற ஓடி வர..அவனுக்கு முன்னால் வந்து ஏறி இருந்தால் மதி.
அவளுக்கு இருந்த பதட்டத்தில்...பஸ்ஸில் இருந்து இறங்கிய முகிலனையோ...அவன் தன்னை முறைத்ததையோ அவள் கவனிக்கவில்லை. அவளின் கவனம் எல்லாம் அன்று நடக்கப் போகும் பரீட்ச்சையில் இருந்தது.
ஆனால் முன்னாடியே ஏறி இருந்த கங்காவும்,செல்வியும் கவனித்தனர். அவர்கள் தான் இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு பஸ்ஸை நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது எல்லாம்...பஸ்ஸைக் கண்டு ஒருவர் ஓடி வந்தால்..அவர் வரும் வரை நிறுத்தியிருந்து எடுக்கும் அளவுக்கு ஓட்டுனர்களுக்கு கருணையும், பொறுமையும் இருந்தது.
தன்னை மீறி கோபத்தைக் காட்ட கூடாது என்று எண்ணிய முகிலன் தன்னுடைய பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான்.
“என்னடி மதி..! முகிலன் அண்ணா உன்னைப் பார்த்துட்டே இருந்தாங்க...! நீ பேசாட்டுக்கு கண்டுக்காம பஸ்ல ஏறிட்ட..?” என்று செல்வி கேட்க...
“முகிலன் மாமா எங்க இருந்தாங்க..?” என்று மதி புரியாமல் கேட்க..
“சரியா போய்டுச்சு போ...! நீ அண்ணாவை கவனிக்கவே இல்லையா..?” என்று கங்கா கேட்க..
“ம்ம்கும்..” என்று தலையை ஆட்டினாள் மதி.முத்துவிற்கு அந்த பதில் சந்தோஷமாக இருந்தது.
“நீ பார்த்தியா முத்து..!” என்று மதி கேட்க...
“அவசரத்துல நானும் கவனிக்கலை மதி..!” என்றான் முத்துவும்.
அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள...முகிலன் மட்டும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.