AshrafHameedaT
Administrator
அலை – 1
சிவகங்கை மாவட்டம் புதூர் கிராமம் துரைச்சாமி இல்லம். உயர்ந்த மதில்சுவர்களுக்கு நடுவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்த இரண்டடுக்கு பெரிய வீட்டு வாசலில் கரும்பு தட்டை, மஞ்சள் கொத்து கட்டப்பட்டு மாவிலை தோரணங்களுடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாட எதிர்நோக்கி இருந்தனர்.
வீடு முழுவதும் வெளியூரில் வசிக்கும் உற்றார் உறவினர்கள் அங்காளி பங்காளிகள் என நிரம்பி வழிய ஆட்டமும் பாட்டமும் உற்சாகமாய் திரியும் இளசுகள் மத்தியில் கடனே என அமர்ந்திருந்தான் ரிஷிவந்த்.
இத்தனை ஆர்ப்பாட்டமும் தன்னை ஈர்க்கவில்லை என்பதை போல இறுக்கமான முகபாவனையோடு தன் தாயை உறுத்துவிழித்தபடி பார்த்திருந்தான்.
அவனின் முறைப்பிற்கெல்லாம் அச்சம் கொள்ளாத சுமங்கலி வெகுநாட்கள் கழித்து சந்தித்த ஓரகத்திகள், அக்கா, தங்கைகள் அவர்கள் பிள்ளைகள் என அனைவரோடும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் மறந்தும் ரிஷியின் முகம் பார்க்கவில்லை.
அதில் இன்னும் ஏக கடுப்பிற்கு ஆளானான் அவர்களின் உத்தமபுத்திரன். தன் தாயை அழைக்க அவன் ஏக பிரயத்தனங்களை மேற்கொண்டும் பலனில்லாது போல பல்லைகடிக்கத்தான் முடிந்தது அவனால்.
துரைச்சாமி ஹாலிற்கு வர அத்தனை சலசலப்பும் அடங்கிப்போய் ஒரு அமைதி அலை பரவ மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நின்றனர். நடுவில் நின்றவர் அனைவரயும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தொண்டையை செருமியவர் வீட்டு பெண்களின் புறம் திரும்பி,
“மருமகள்களே, நாளைக்கு காலையில கோவில் பூசைக்கு தேவையான சரக்குகள் எல்லாம் எடுத்து பூஜையறையில வச்சாச்சா?...” என்று பொதுவாக கேட்டு சுற்றிலும் பார்வையை விட்டு வீட்டின் மூத்த மருமகளான திலகவதியிடம் நிறுத்த,
“ஆச்சுங்க மாமா. எல்லா வேலையும் முடிஞ்சது. நாளைக்கு பூசைக்கு எல்லாமே தயார் தான் மாமா. சரிபார்த்துட்டேன்...” என பணிவாக கூற,
“எல்லோரும் சாப்பிட்டாச்சா?...” மீண்டும் பார்வை வலத்தை தொடங்க,
“எல்லாமே பசியாறியாச்சுங்க மாமா...” என அடுத்த மருமகளான ரத்தினம்மாள் கூற,
“எல்லா வேலையும் ஆச்சுல. போய் உறங்கவேண்டியது தானே? இன்னும் என்ன இங்க பேச்சு?. காலையில எல்லோரும் நேரத்துக்கு கோவிலுக்கு கிளம்பனும். சூரியோதயத்துக்கு முன்னால பானை பொங்கனும். ஞாபகம் இருக்கட்டும்...” என கூறிவிட்டு ரிஷிவந்தை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்துவிட்டே சென்றார்.
அவர் சென்றதும் அனைவருமே ஒரு பெருமூச்சை ஆசுவாசமாக வெளியேற்ற ரிஷிவந்த் ஆயாசமாக உணர்ந்தான். மீண்டும் அமர்ந்த இடத்திலேயே அமர விளைய,
“போங்க. போங்க, போய் அவங்கவங்க ரூம்ல தூங்குங்க. அப்பா சொன்னத மறந்துடாதீங்க. நாம பட்டணத்துல பொழைச்சாலும் நம்ம மண்ணு வரைமுறைகளை சரியா பின்பற்றனும்...”
“பொழைக்க போன இடம் வேறா இருந்தாலும் நமக்குன்னு வழிவழியா வர பாரம்பரியம், கலாச்சாரத்தை நாம காப்பாத்தி நமக்கு பின்னால வரும் தலைமுறைகளுக்கான சீதனமா தரனும். புரியுதா?...” என்ற சிவராமன்,
அங்கிருக்கும் வயதுபிள்ளைகளுக்கு சொன்னாலும் கண்கள் மகன் ரிஷியையே கண்டனத்துடன் மொய்த்துக்கொண்டிருந்தன.
“என்னண்ணே நான் சொல்றது சரிதானா?...” என தன்னுடைய மூத்த அண்ணன்களிடம் மறக்காமல் கேட்டுக்கொண்டார்.
காரைக்குடி, புதுக்கோட்டையில் பெயர்பெற்ற கல்லூரிகளை திறம்பட நடத்திவரும் தன் தந்தையின் ஆங்கிலப்புலமை பற்றி எத்தனையோ முறை வியந்திருக்கிறான் ரிஷி.
யாரையும், எத்தனை பெரிய பதவியில் இருப்பவர்களையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் தந்தையின் திறனையும் தைரியத்தையும் எண்ணி பெருமைகொள்ளாத நாளே இல்லை எனலாம்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தந்தை சிவராமன் தாய், தகப்பன், அண்ணன், சொந்தங்கள் என வரும்போது தன்னுடைய உயரத்தையையும் பெருமைகளையும் விட்டு இறங்கி நின்று பேசுவதும் தந்தையிடமும், உடன்பிறந்த மூத்தவர்களிடமும் பணிந்து போவதையும் அவன் அறவே வெறுத்தான்.
தன் தந்தை இங்கு வந்ததும் தொலைந்து போகும் மாயம் இதுவரை அவன் அறியாதது. அவரை கட்டிவைக்கும் இந்த பாசத்தளைகளை அடியோடு வெறுக்கத்தான் செய்தான்.
ரிஷியை பொறுத்தவரை சிவராமனின் பாசம் என்பது தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிப்பதை போல. ஆனால் அவனின் தந்தைக்கோ அனைத்திற்கும் அப்பாற்பட்டது குடும்ப பற்றும் சொந்தங்களிடையே பகிரப்படும் பாசமும்.
தந்தையையே இந்நிலையில் காண விரும்பாதவனுக்கு தன்னையும் இந்த வலையில் அனைவரும் சேர்ந்தே பிணைக்கவிருப்பதை தடுக்கமுடியவில்லை. அதற்கு காரணம் தாய் சுமங்கலியும், தந்தை சிவராமனும்.
அனைவரிடமும் ஒரு எல்லையில் பழக நினைப்பவனுக்கு இந்த எல்லைகளற்ற அன்பு அலை மூச்சடைத்தது. வெளிவரும் வழி இருந்தும் சூழ்நிலை கைதியாக நிற்கவேண்டிய தன் இயலாமை அவதிக்குள்ளாக்கியது. வாய் மூடி மௌனியாக நடப்பவற்றை பார்த்திருந்தான்.
“நீ சொல்றது என்னைக்கு தப்பா இருந்திருக்கு ராமா? நம்ம அப்பா நமக்கு சொல்லிக்குடுத்ததை நாம நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்ததால தான் வெளியூர்ல வெளிநாட்டுல இருந்தாலும் தடம்பிறளாமல் நம்ம பிள்ளைங்க நம்ம பிள்ளைங்களாவே வளர்ந்திருக்காங்க...”
தம்பியின் பேச்சை மெச்சிக்கொண்ட அண்ணன் உசிதமணி பெருமையாக சகோதரனை அணைத்துக்கொண்டார். அவரின் அடுத்தவரான முருகானந்தமும், சிவராமனின் தம்பியான சிகாமணியும் புன்னகையுடன் பார்த்திருந்தனர்.
நான்கு உடன்பிறந்த சகோதரர்களும் ஒருவரை ஒருவர் தழுவி தங்கள் பெருமையை பறைசாற்றிக்கொண்டனர். என்னதான் ஒருவரை ஒருவர் எப்போதாவது பார்த்துகொள்வதாக இருப்பினும் இப்பண்டிகை நேரங்களில் யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் இணைந்தே இருப்பார்கள்.
சிவகங்கை மாவட்டம் புதூர் கிராமம் துரைச்சாமி இல்லம். உயர்ந்த மதில்சுவர்களுக்கு நடுவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்த இரண்டடுக்கு பெரிய வீட்டு வாசலில் கரும்பு தட்டை, மஞ்சள் கொத்து கட்டப்பட்டு மாவிலை தோரணங்களுடன் தைப்பொங்கல் திருநாளை கொண்டாட எதிர்நோக்கி இருந்தனர்.
வீடு முழுவதும் வெளியூரில் வசிக்கும் உற்றார் உறவினர்கள் அங்காளி பங்காளிகள் என நிரம்பி வழிய ஆட்டமும் பாட்டமும் உற்சாகமாய் திரியும் இளசுகள் மத்தியில் கடனே என அமர்ந்திருந்தான் ரிஷிவந்த்.
இத்தனை ஆர்ப்பாட்டமும் தன்னை ஈர்க்கவில்லை என்பதை போல இறுக்கமான முகபாவனையோடு தன் தாயை உறுத்துவிழித்தபடி பார்த்திருந்தான்.
அவனின் முறைப்பிற்கெல்லாம் அச்சம் கொள்ளாத சுமங்கலி வெகுநாட்கள் கழித்து சந்தித்த ஓரகத்திகள், அக்கா, தங்கைகள் அவர்கள் பிள்ளைகள் என அனைவரோடும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தவர் மறந்தும் ரிஷியின் முகம் பார்க்கவில்லை.
அதில் இன்னும் ஏக கடுப்பிற்கு ஆளானான் அவர்களின் உத்தமபுத்திரன். தன் தாயை அழைக்க அவன் ஏக பிரயத்தனங்களை மேற்கொண்டும் பலனில்லாது போல பல்லைகடிக்கத்தான் முடிந்தது அவனால்.
துரைச்சாமி ஹாலிற்கு வர அத்தனை சலசலப்பும் அடங்கிப்போய் ஒரு அமைதி அலை பரவ மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நின்றனர். நடுவில் நின்றவர் அனைவரயும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தொண்டையை செருமியவர் வீட்டு பெண்களின் புறம் திரும்பி,
“மருமகள்களே, நாளைக்கு காலையில கோவில் பூசைக்கு தேவையான சரக்குகள் எல்லாம் எடுத்து பூஜையறையில வச்சாச்சா?...” என்று பொதுவாக கேட்டு சுற்றிலும் பார்வையை விட்டு வீட்டின் மூத்த மருமகளான திலகவதியிடம் நிறுத்த,
“ஆச்சுங்க மாமா. எல்லா வேலையும் முடிஞ்சது. நாளைக்கு பூசைக்கு எல்லாமே தயார் தான் மாமா. சரிபார்த்துட்டேன்...” என பணிவாக கூற,
“எல்லோரும் சாப்பிட்டாச்சா?...” மீண்டும் பார்வை வலத்தை தொடங்க,
“எல்லாமே பசியாறியாச்சுங்க மாமா...” என அடுத்த மருமகளான ரத்தினம்மாள் கூற,
“எல்லா வேலையும் ஆச்சுல. போய் உறங்கவேண்டியது தானே? இன்னும் என்ன இங்க பேச்சு?. காலையில எல்லோரும் நேரத்துக்கு கோவிலுக்கு கிளம்பனும். சூரியோதயத்துக்கு முன்னால பானை பொங்கனும். ஞாபகம் இருக்கட்டும்...” என கூறிவிட்டு ரிஷிவந்தை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்துவிட்டே சென்றார்.
அவர் சென்றதும் அனைவருமே ஒரு பெருமூச்சை ஆசுவாசமாக வெளியேற்ற ரிஷிவந்த் ஆயாசமாக உணர்ந்தான். மீண்டும் அமர்ந்த இடத்திலேயே அமர விளைய,
“போங்க. போங்க, போய் அவங்கவங்க ரூம்ல தூங்குங்க. அப்பா சொன்னத மறந்துடாதீங்க. நாம பட்டணத்துல பொழைச்சாலும் நம்ம மண்ணு வரைமுறைகளை சரியா பின்பற்றனும்...”
“பொழைக்க போன இடம் வேறா இருந்தாலும் நமக்குன்னு வழிவழியா வர பாரம்பரியம், கலாச்சாரத்தை நாம காப்பாத்தி நமக்கு பின்னால வரும் தலைமுறைகளுக்கான சீதனமா தரனும். புரியுதா?...” என்ற சிவராமன்,
அங்கிருக்கும் வயதுபிள்ளைகளுக்கு சொன்னாலும் கண்கள் மகன் ரிஷியையே கண்டனத்துடன் மொய்த்துக்கொண்டிருந்தன.
“என்னண்ணே நான் சொல்றது சரிதானா?...” என தன்னுடைய மூத்த அண்ணன்களிடம் மறக்காமல் கேட்டுக்கொண்டார்.
காரைக்குடி, புதுக்கோட்டையில் பெயர்பெற்ற கல்லூரிகளை திறம்பட நடத்திவரும் தன் தந்தையின் ஆங்கிலப்புலமை பற்றி எத்தனையோ முறை வியந்திருக்கிறான் ரிஷி.
யாரையும், எத்தனை பெரிய பதவியில் இருப்பவர்களையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் தந்தையின் திறனையும் தைரியத்தையும் எண்ணி பெருமைகொள்ளாத நாளே இல்லை எனலாம்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தந்தை சிவராமன் தாய், தகப்பன், அண்ணன், சொந்தங்கள் என வரும்போது தன்னுடைய உயரத்தையையும் பெருமைகளையும் விட்டு இறங்கி நின்று பேசுவதும் தந்தையிடமும், உடன்பிறந்த மூத்தவர்களிடமும் பணிந்து போவதையும் அவன் அறவே வெறுத்தான்.
தன் தந்தை இங்கு வந்ததும் தொலைந்து போகும் மாயம் இதுவரை அவன் அறியாதது. அவரை கட்டிவைக்கும் இந்த பாசத்தளைகளை அடியோடு வெறுக்கத்தான் செய்தான்.
ரிஷியை பொறுத்தவரை சிவராமனின் பாசம் என்பது தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிப்பதை போல. ஆனால் அவனின் தந்தைக்கோ அனைத்திற்கும் அப்பாற்பட்டது குடும்ப பற்றும் சொந்தங்களிடையே பகிரப்படும் பாசமும்.
தந்தையையே இந்நிலையில் காண விரும்பாதவனுக்கு தன்னையும் இந்த வலையில் அனைவரும் சேர்ந்தே பிணைக்கவிருப்பதை தடுக்கமுடியவில்லை. அதற்கு காரணம் தாய் சுமங்கலியும், தந்தை சிவராமனும்.
அனைவரிடமும் ஒரு எல்லையில் பழக நினைப்பவனுக்கு இந்த எல்லைகளற்ற அன்பு அலை மூச்சடைத்தது. வெளிவரும் வழி இருந்தும் சூழ்நிலை கைதியாக நிற்கவேண்டிய தன் இயலாமை அவதிக்குள்ளாக்கியது. வாய் மூடி மௌனியாக நடப்பவற்றை பார்த்திருந்தான்.
“நீ சொல்றது என்னைக்கு தப்பா இருந்திருக்கு ராமா? நம்ம அப்பா நமக்கு சொல்லிக்குடுத்ததை நாம நம்ம பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்ததால தான் வெளியூர்ல வெளிநாட்டுல இருந்தாலும் தடம்பிறளாமல் நம்ம பிள்ளைங்க நம்ம பிள்ளைங்களாவே வளர்ந்திருக்காங்க...”
தம்பியின் பேச்சை மெச்சிக்கொண்ட அண்ணன் உசிதமணி பெருமையாக சகோதரனை அணைத்துக்கொண்டார். அவரின் அடுத்தவரான முருகானந்தமும், சிவராமனின் தம்பியான சிகாமணியும் புன்னகையுடன் பார்த்திருந்தனர்.
நான்கு உடன்பிறந்த சகோதரர்களும் ஒருவரை ஒருவர் தழுவி தங்கள் பெருமையை பறைசாற்றிக்கொண்டனர். என்னதான் ஒருவரை ஒருவர் எப்போதாவது பார்த்துகொள்வதாக இருப்பினும் இப்பண்டிகை நேரங்களில் யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் இணைந்தே இருப்பார்கள்.
Last edited: