Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(28) FINAL

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(28) F


“ சார்…. சார்…. எங்க ஓட பார்க்குறீங்க??... இருங்க சார்” என ஹர்ஷா கூற அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விஜயனை நோக்கினர்.

“ என்ன??... என்ன திரு இது??... என்னைய நிக்கவச்சு உன் வீட்டுல அசிங்கபடுத்து
றாங்க நீயும் பார்த்துகிட்டு இருக்க. உன் பையனுக்காகத்தான் வந்தேன். ஆனா நீயே என்னன்னா……..” என விஜயன் பதட்டத்துடன் திருவாசகத்திடம் கூற,

திருவாசகம் ஒன்னும் புரியாது ருத்ரனை நோக்கினார்.

“ என்ன ருத்ரா???”

“ அப்பா நான் சொல்றேன் எல்லாம். ஆனா அதுக்கு முதல்ல ஹர்ஷாவா பேச விடுங்க. அப்புறம் அங்கிள். ஹ்ம்ம்….. இல்ல இல்ல நீங்க பண்ணுன வேலைக்கு நான் அப்பிடி கூப்டுறது ரொம்ப தப்பு” என முக
சுளிப்புடன் கூறிய ருத்ரனை கண்டு கோபத்துடன்

“ ருத்ரா என்ன இது மரியாதை இல்லாம??... உனக்காகன்னு நான் வந்தா நீ என்னைய அசிங்கப்படுத்துற” என விஜயன் எகிற

“ பார்ரா!!.. அது சரி என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம். அப்போ நீங்கதான் என்னைய பார்க்கணும். அப்புறம் இன்னொரு விஷயம் இப்போ இங்க வர வச்சது என்னோட வேலை. எனக்கு கால் வலி எல்லாம் இல்ல உங்கள இப்போ இங்க வர வைக்க நானும் ஹர்சாவும் போட்ட பிளான் இது” என ருத்ரன் கூற

இன்னும் பதட்டமான விஜயன், “ என்ன என்னென்னமோ பேசுற நான் கிளம்புறேன் முதல்ல” விஜயன் மீண்டும் கிளம்ப பாக்க

“ சார் என்ன நீங்க போங்க. நான் உங்கள ரொம்ப புத்திசாலின்னு நினைச்சா இப்படி பம்முறீங்க. சரி விடுங்க உங்கள நாங்க வரவச்சா நீங்க என்னமோ கலயாணவீட்டுல மொய் எழுதிட்டேன் போய்ட்டுவாரேன் போய்ட்டுவாரேன்னு சொல்றமாதிரி கிளம்புறேன் கிளம்புறேன்னு சொல்றிங்க. அப்படியே விட்டுடுவோமா நாங்க??.....

அப்போ சட்டம் அதன் கடமையை எப்போதான் செய்றது. கொஞ்சம் இருங்க சார் ரொம்பதான்” என ஹர்ஷா பேசிக்கொண்டே அங்கிருந்த சோபாவில் விஜயனை சற்றே பலம்கொண்டு நகர்த்தி அமரவைத்து ருத்ரனிடம் கண் காட்ட ருத்ரனும் எழுந்து விஜயன் அருகில் அமர்ந்து எங்கும் நகர விடாது,

பின் சிம்மவர்மனை கண்டு “ சிம்மா நீ சாருக்கு இந்த பக்கம் உட்காரு ஓடுற போறாரு” என கூற சிம்மனும் மறுத்து எதுவும் கூறாது விஜயனின் மறுபக்கம் அமர்ந்தான்.

பின் ஹர்ஷா அங்கிருந்தவர்களை பார்த்துக்கொண்டே

“ இப்போ நான் ஒருத்தர கூப்புடுறேன் அவர் சொல்ற விஷயங்களை வச்சு மிச்சத்தை டாக்டர் விஜயன் சொல்வாரு சொல்லித்தான் ஆகணும்” என கூறி விஜயனின் கார் டிரைவர் மணியை அழைத்துவர,

அவனை கண்ட விஜனின் உடம்பில் நடுக்கம் ஏற்பட சிம்மவர்மன் திரும்பி விஜயனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு மணியின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.

“ ஹ்ம்ம் சொல்லு மணி ராஜேஷ் பத்தியும், அவனுக்கும் உங்க முதலாளி விஜயனுக்கு உள்ள பழக்கம் பத்தியும் என்கிட்டே சொன்னதை எல்லாம் சொல்லு” என ஹர்ஷா கூற ஏற்கனவே ஹர்ஷாவின் கவனிப்பில் போலீஸ் கவனிப்பிலும் பயந்திருந்தவன் மீண்டும் தனக்கு தெரிந்தவைகளை கூற ஆரம்பித்தான்.

“ சார் என் பேரு மணி. நான் டாக்டர் விஜயன் சார் வீட்டுல பத்து வருசமா கார் டிரைவரா இருக்கேன். என் பெரியப்பா பையன் ராஜேஷ் ஒரு ஏலெட்டு மாசத்துக்கு முன்னாடி வந்து அவன் மனைவிக்கு இதயத்துல பிரச்சனை ஆப்ரேசன் பண்ண பணம் கேட்டான். நான் விஜயன் சார் கிட்ட கேட்டேன் முதல்ல சார் தரமாட்டேன்னு சொல்லிட்டார்.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்டே ராஜேஷ் பத்தி விசாரிக்க நானும் அவன் லாரி டிரைவர் அப்படின்னு அவணை பத்தி எல்லாம் சொன்னே. உடனே ராஜேஷை பார்க்கனுன்னு சொன்னாரு நானும் ஏற்பாடு பண்ணுனேன்.

அப்புறம் கொஞ்ச நாளுல விஜயன் சாரே ராஜேஷ் மனைவிக்கு இலவசமா அவரோட ஹாஸ்பிடல்ல ஆப்ரேசன் பண்ணுனாரு. அப்புறம் ராஜேஷ்கிட்ட கேட்டேன் எப்படி பணம் தரவே ஒத்துக்காதவாறு இலவசமா மருத்துவம் பார்த்தாருன்னு. அப்புறம் சில விஷயம் தெரிய வந்துச்சு சார்” என கூறி மணி நிறுத்த

“ என்ன நிறுத்திட்டு ஹ்ம் சொல்லு மணி” என ஹர்ஷா அவனின் தோள்மீது கை போட்டு அழுத்த

“ ஹ்ம்ம் அது…. அது… ராஜேஷ் அவனோட லாரியை வச்சு ருத்ரன் சார் வந்த காரை இடிக்க சொல்லிருக்காரு. அதுவும் விபத்து மாதிரி இருக்கனும்ன்னு. அதுல இவரோட பெயர் வெளிய வராம பார்த்துக்கணுமாம். அதுக்கு உபகாரமா ராஜேஷ் மனைவிக்கு இலவசமா ஆப்ரேசனும் அவனை வெளியே எடுக்க மறைமுக்கமான வேலையும் பார்த்துருக்காரு” என மணி கூறி முடிக்க அனைவரும் கோபத்துடன் விஜயனை முறைக்க

திருவாசகம் பாய்ந்து விஜயனின் சட்டை பிடித்து எழுப்பி ஒரு அரை வைத்தார்.

“ டேய்!!... என்ன இது எல்லாம்???... என் மகனை ஆள் வச்சு கொல்லபார்த்துட்டு அப்புறம் நீயே அவனை காப்பதுறமாதிரி நடிச்சுருக்க. சொல்லுடா எதுக்கு அவனை கொல்ல பார்த்த சொல்லுடா வாய துறந்து சொல்லு. இப்போ சொல்ல போறியா இல்லையா???.....” என மீண்டும் மீண்டும் கன்னத்தில் மாறி மாறி அடிக்க அதில் கோவத்தில் திருவாசகனின் கையை தட்டிவிட்ட விஜயன்

“ டேய் என்ன பிள்ளை பாசமோ!!!.... அப்பிடித்தானே எல்லாருக்கும் இருக்கும். உனக்காவது நாலு பிள்ளை ஆனா எனக்கு ஒரே ஒரு பொண்ணுடா. அவ அம்மா போன அப்புறம் என் உலகமே அவள்தான். அவன் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அவ நினைக்கும் போதே நடத்தி வச்சவண்டா நான்.

ஆனா… ஆனா… உன் பையன் ருத்ரன் மேல ஆசைப்பட்டது மட்டும் எனக்கு ரொம்ப நாளா தெரியாம போச்சு. ஒரு வேளை முன்னாடியே நான் கண்டுபிடிச்சுருந்தா இவ்வளவு பிரச்சனை வந்துருக்காது” என கூறி விஜயன் நிறுத்த அனைவரும் புரியாது நோக்கினர்.

“ என்ன எல்லாரும் அப்படி பார்க்குறீங்க??... என் மக ஷாலுவும் ருத்ரனும் ஒண்ணா படிச்சவங்க. சின்ன வயசு பிரெண்ட்ஸ். அதுல எப்போ இவனை காதலிக்க ஆரம்பிச்சான்னு எனக்கு தெரியல. ஆனா நாலு வருசத்துக்கு முன்னாடி ஒரு நாள் அவ ரூம்குள்ள எதோ சத்தம் கேட்டுச்சுன்னு போனா என் ஷாலு ருத்ரன் போட்டோவை போட்டு உடைச்சுக்கிட்டு இருந்தா.

நான் என்னமான்னு கேட்டா அவள் ருத்ரன் வேணும் எனக்கு வேணும்ன்னு பைத்தியம் மாதிரி புலம்ப ஆரம்பிச்சா. அப்போ நான் அப்படியே துடிச்சு போய்ட்டேன். ஒரு தகப்பனாவும் ஒரு மருத்துவனாவும் என் மக நிலைமை என்னைய பயமுறுத்துச்சு.

அதனால திரு
கிட்ட இதைப்பத்தி பேசலாம்ன்னு வந்தா அன்னைக்குதான் சொல்றான் நித்திக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் பேசிருக்குறதா. எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல என் மகளை பத்தி.

கண்டிப்பா இந்த விஷயம் தெரிஞ்சுதான் இப்படி என் மக பைத்தியக்காரி மாதிரி புலம்புறா. எப்பிடி இதை சரி பன்றதுன்னு தெரியாம நித்திகிட்ட பேசி என் மகளை பத்தி சொல்லி ருத்ரனை விட்டுகுடுக்க சொல்லலாம்ன்னு நித்தியை பார்க்க அவளோட காலேஜ்க்கு போனேன்.

அப்போ யாரோ ஒரு பொண்ணுகிட்ட அநேகமா பிரெண்டுன்னு நினைக்குறேன் அவகிட்ட நித்தி அழுதுகிட்டே எனக்கு ருத்ரனை கட்டிக்க இஷ்டம் இல்ல நான் சிம்மா அத்தானைதான் விரும்புறேன் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கறதை கேட்டு அப்படியே வீட்டுக்கு போய்ட்டேன்.

அதை ஷாலுகிட்ட சொல்லி எப்படியாவது உனக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் செஞ்சுவைக்குறேனு சத்தியம் பண்ணி பேசி பேசி அவளை மீட்டேன். அப்புறம் ருத்ரனை எப்படியும் கல்யாணம் பண்ணி வச்சுடலாம்ன்னு ரொம்ப நம்பினேன்.

ஆனா இந்த சிந்தியா அவ அவ மட்டும் ருத்ரன் வாழ்க்கைல வந்துருக்கவே கூடாது. எப்போ ருத்ரனை ஷாலு விரும்புறான்னு தெரிஞ்சுச்சோ அப்போவே அவனை கண்காணிக்க ஆர்மபிச்சுட்டேன்.

ஏன்னா வேற எந்த பொண்ணும் ருத்ரன் வாழ்க்கைல வந்துரக்கூடாதுன்னு என் மகளோட வாழ்க்கைல நான் ரிஸ்க் எடுக்க விரும்பம் இல்ல. ஆனா இந்த சிந்தியா ருத்ரனோட
 
இங்க சுத்துனது இல்லாம கூடவே பாரின் வரைக்கும் போய் சுத்திருக்கா.

அங்க ரெண்டு பேரும் காதலிச்ச விஷயம் தெரிஞ்சு நான் பதறிட்டேன். என்ன செய்றதுன்னு ஒரே யோசனை அப்போதான் ஒரு முடிவு பண்ணுனே. அந்த பொண்ணை கொன்னுட்டா அந்த துக்கத்துல ருத்ரன் இருப்பான்.

அப்போ திருகிட்ட பேசி ஷாலுக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் பண்ணிடலாம்ன்னு முடிவு பண்ணி அந்த சிந்தியா இங்க வரதை தெரிஞ்சுக்கிட்டு ராஜேஷ் மூலமா கொலை பண்ணி விபத்துன்னு எல்லாரையும் நம்பவைச்சேன்.

இதுல நானே எதிர்பார்க்காதது ருத்ரன் அன்னைக்கு வந்ததும் விபத்துல மாட்டி கோமாவுக்கும் போனதும்தான்” என விஜயன் கூறி முடிக்க

“ அப்போ ருத்ரனுக்கு தென்றலை கல்யாணம் பண்ணிவைக்குறப்போ எப்பிடி அமைதியா இருந்திங்க உங்க மகளை கல்யாணம் பண்ணி வச்சுருக்க வேண்டியதுதானே” என ஹர்ஷா கேட்க

“ அது…. அது….. ஒரு மருத்துவனா ருத்ரன் குணமாகிடுவான்னு தெரிஞ்சாலும் ஒரு அப்பாவா எனக்கு ஷாலுவை கல்யாணம் பண்ணிவைக்குறதுல தயக்கம் இருந்தது. அதுல நான் யோசிக்குறதுக்குள்ள இந்த பட்டிக்காட்டை கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க.

அப்போ யோசிச்சுதான் ருத்ரன் உடல்நிலை காரணம் காட்டி ருத்ரன் கல்யாண விஷயத்தை மறைக்க சொன்னேன் . அப்படியே தெரிஞ்சாலும் ருத்ரன் குணத்துக்கு கண்டிப்பா ஏத்துக்க மாட்டான்னு நினைச்சேன்”

“ இது உங்க பொண்ணுக்கு தெரியுமா??”

“ ஹ்ம்ம் ருத்ரன் கல்யாணம் ஆனா விஷயம் இப்போதான் தெரியும் ஆனா ருத்ரனுக்கு தெரியாம பிடிக்காம நடந்தது எப்படியும் அவளுக்கும் ருத்ரனுக்கும் கல்யாணம் பண்ணிவச்சுருவேன்னு சொல்லி நம்பிக்கை குடுத்துவச்சுருக்கேன்” என கூறிக்கொண்டிருந்த விஜயன் திருவாசகத்தின் அருகில் சென்று

“ திரு… திரு… ப்ளீஸ்!! என் பொண்ணை ருத்ராவுக்கு கட்டி வைடா. நான் பண்ணுனது எல்லாம் தப்புத்தான். ஆனா என் பொண்ணு பாவம்டா அவ ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்கு கிடைக்கணும். நான்…. நான்… தண்டனை அனுபவிச்சுக்குறேண்டா. ஆனா என் பொண்ணுக்கு வாழ்க்கை தாடா” என விஜயன் கெஞ்சி பேசிகொண்டிருக்கையில் போலீஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்

அதை கண்ட விஜயன், “ திரு!... திரு!!... நான் உண்மையெல்லாம் ஒத்துக்குறேன் சரெண்டெர் ஆகிடுறேன் என் பொண்ணை உன் பையனுக்கு கட்டி வைடா” என கெஞ்ச அதனை கண்ட ஹர்ஷா,

“ சார் நீங்க ஒதுக்கலைனாலும் உங்களுக்கு எதிரா ஆதாரமும் இருக்கு. இப்போ நீங்க குடுத்த வாக்குமூலமும் பதிவா இருக்கு. சரியா அதனால் கிளம்புங்க” என கூற

“ இல்ல இல்ல நான் என் பொண்ணுக்கு அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை ஏற்படுத்தி குடுப்பேன்” என கத்த அதனை கண்ட ருத்ரன் அவரை நெருங்கி,

“ ஹ்ம்ம் நீங்க எல்லாம் டாக்டர். ஒரு உயிரை கொன்னுட்டு கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்க. ஆனா நீ சிந்தியாவை கொன்னதுக்கு அர்த்தமே இல்ல. ஏன்னா சிந்தியாவும் நானும் விரும்பவே இல்ல. அவ எனக்கு நல்ல தோழி. அதை எல்லாரும் நாங்க காதிலிக்குறதா சொன்னாங்க

ஆனா எனக்கும் சிந்தியாவுக்கும் ஒரு குணம் யாருகிட்டயும் போய் நாங்க இப்படிதான்னு சொல்லணும் நினைக்கமாட்டோம். யாரோட கற்பனைக்கும் நாங்க வாழணும்ன்னு நினைக்கல. எங்களுக்கு தெரியும் எங்க நட்பை பத்தி. அப்புறம் நான் காதலிச்ச என் சின்னு கூடத்தான் என் கல்யாணமும் நடந்துருக்கு” என கூறி அங்கு ஓரமாக நின்றுகொண்டிருந்த தென்றலின் அருகில் சென்று அவளின் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டான்.

தொடர்ந்து, “ அப்புறம் அன்னைக்கு சந்தியாவோட நான் வந்ததுக்கு காரணம் என் காதலி தென்றலை பார்த்து என் காதலை சொல்லத்தான். ஆனா அதுக்குள்ள….. ம்ப்ச்… உண்மையான அன்பு எப்போதும் தோல்வி அடையாது. உங்க மகளுக்கு ஆசை பட்டதை அடையனும். உங்களுக்கு உங்க மக ஆசைப்பட்ட எல்லாத்தையும் செய்யணும் ரெண்டு பேருக்குமே மன வியாதிதான்” என கூறிவிட்டு ருத்ரன் ஹர்ஷாவிடமும் விடைபெற்று அங்கிருந்து தென்றலை அழைத்துக்கொண்டு தனதறைக்கு சென்றுவிட கீழே போலீஸ் விஜயனை கைது செய்து சென்றுவிட்டார்கள்.

பின் ஹர்ஷாவும் விடைபெற்றான். புயல் அடித்து ஓய்ந்தது போன்ற மன நிலையில் இருந்தனர் அனைவரும். அப்பொழுது லீலாவதியும் சேதுராமனும் எழுந்து திருவாசகத்தின் முன் நின்றனர்.

அவர்களை கேள்வியாக அனைவரும் நோக்க, “ மச்சான் நானும் என் பொண்டாட்டியும் எங்க சொந்த ஊருக்கு போகலாம்ன்னு இருக்கோம்” என கூற திருவாசகம்

“ ஏன்??” என்ற பாவத்துடன் புருவத்தை சுளித்து கேள்வியுடன் பார்க்க

“ அது பொண்ணு எடுத்த வீட்டுல எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கலாம் ஆனா பொண்ணு குடுத்த வீட்டுல ஹம்ம்ம்ஹும் நாங்க கிளம்புறோம் மச்சான். எங்க பொண்ணுக்கு எங்களால உதவி இல்லைனாலும் பரவா இல்லை ஆனா கஷ்டம் வர கூடாது” என மாயாவதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூறிய சேதுராமனை கண்ட அனைவருக்கும் தெரிந்தது மாயாவதி காலையில் பேசிய பேச்சின் தாக்கம் தான் இந்த முடிவு என.

அப்பொழுது திருவாசகம் எதோ கூற வர உடனடியாக,

“ மாமா அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு போக முடியாது அதுவும் நீங்க இருக்குற போஸ்ட்க்கு எல்லாம் ஏழு மாசம் முன்னாடி நோட்டீஸ் குடுக்கணும் கம்பனிக்கு” என சிம்மவர்மன் இடைபுகுந்து கூற அதிசயமாக பார்த்தனர் அனைவரும்.

‘ என்னடா இது இவனா இவ்வளவு பேசுறான்’ என எண்ண சேதுராமன் தலை அசைத்து,

“ மாப்பிள்ளை அது….” என வேற எதோ கூற வர மீண்டும் இடைபுகுந்து

“ அதோட மாமா இந்த ஏழு மாசத்துக்குள்ள நீங்க தாத்தா ஆகிட்டாலும் நான் என் பொண்டாட்டிய தலை பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு அனுப்ப மாட்டேன். அதனால நீங்க இங்கதான் இருக்கனும் சரியா??” என கூறி நித்தியவதியை காதலுடன் பார்த்த சிம்மவர்மனை கண்டு அனைவரும் ஆவென வாய் பிளந்து பார்க்க நித்தியவதி கண்கலங்கி புன் சிரிப்புடன் செல்லமாக முறைத்துக்கொண்டிருந்தாள்.

அவர்களின் மோன நிலையை கண்ட திருவாசகம் “ க்கும்” என செருமிக்கொண்டு

“ அப்புறம் சேது நீங்களும் லீலாவும் எங்கையும் போக வேண்டியது இல்ல. நான் என் அப்பாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்துருக்கேன். என் தங்கச்சிகளை பார்த்துக்குவேன்னு. ஆனா இப்போ சில விஷயங்களை பத்தி பேசிக்கலாம். ஏன்னா என் தங்கச்சிகளை பார்த்து என் மனைவிக்கு நான் நியாயம் செய்யலைன்னு தோணுது” என கூறிகொண்டே ஜானுவை பார்த்த திருவாசகம் அருகில் வருமாறு தலை அசைக்க,

‘ ஹம்ம்ஹும் எல்லாரும் இருக்குறப்போ கூப்புட்டு நம்மள வர வச்சுருவாரு’ என மனதில் திட்டிக்கொண்டே ஜானவி திருவாசகம் அருகில் நிற்க

“ இப்போ சொல்றதுதான் எனக்கு நாலு மருமகள்கள் வந்தாலும் இந்த வீட்டோட முடிவை என் மனைவி தான் எடுப்பா. அவளை கட்டுபடுத்தணும்ன்னு யாரும் நினைச்சா தாராளமா அவுங்க இந்த வீட்டை விட்டு போகலாம். நான் தடுக்க மாட்டேன். இங்க இருக்கணும்ன்னா அதாவது என் சொந்தம் வேணும்ன்னா என் மனைவிதான் எல்லாம் இங்க” என கூறி தோளோடு மனைவியை அணைத்தார் அதில் ஜானவி நெளிந்துகொண்டே

“ ஹ்ம்ம் பேரன் எடுத்து கிழவன் ஆயாச்சு இப்போ மேல கைய போடணுமாக்கும்” என முணுமுணுப்புடன் ஜானவி அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் தன் கணவனின் வார்த்தைகளில் ஏனோ மனம் அமைதியடைந்தது.

இதனை வருட கல்யாண வாழ்க்கையில் திருவாசகத்திற்கு தங்கைகளுக்கு அடுத்துதான் தானோ என்ற எண்ணம் மாறவர்மன் பிரச்சனைக்கு அடுத்து மனதில் தோன்றி விருட்சமாக வளர்ந்து ஒரு வித விரக்தி நிலைமைதான் ஜானவியின் மனதில் ஏற்பட்டது. ஆனால் இன்று அவரின் நிலையை ஜானவி கூறாது அவராகவே புரிந்து மனைவிதான் தனக்கு முதல் என கூறி கணவனாகவும் காதலனாகவும் ஜானவியின் மனதில் மீண்டும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.

அனைவரும் அங்கிருந்து செல்ல சிம்மவர்மன் நித்தியவதியின் கையை பிடித்துக்கொண்டு தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.

“ ஏன் நித்தி சொல்லல??” என கேட்க

“ என்ன சொல்லல அத்தான்??”

“ ஹ்ம்ம் நீ என்னைய விரும்புவதை”

“ நீங்க சொன்னிங்களா??... சொல்லுங்க. இத்தனைக்கும் நான் நம்ம கல்யாணம் முடிஞ்சு பல தடவை சொல்ல பார்த்தேன் நீங்க என்னைய கண்டுக்கவே இல்ல. இதுல ருத்ரன் குணமான அன்னைக்கு கூட சொன்னேன் அப்போ நீங்க நம்பல நான் என்ன பண்ணுறது” என நித்தியவதி குறைபட

“ ஹ்ம்ம் என்ன சொல்லுறது நித்தி எனக்கு உன்னைய ரொம்ப பிடிக்கும் இதுல நீ ருத்ரனை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னதை நினைச்சு நான் குழப்பி. அப்புறம் என்னைய கல்யாணம் பண்ணுணத என் தம்பிக்கு செய்ற துரோகமா குழப்பி உன்னைய விட்டுகுடுக்க முடியாம அப்பா என்ன மாதிரி ஒரு கஷ்டம் தெரியுமா??... இப்போதான் ரொம்ப அமைதியா சந்தோசமா இருக்கு” என கூறி நித்தியவதியின் கையில் முத்தம் வைத்த சிம்மவர்மனை கண்டு அவன் மனைவி முகம் சிவக்க

அதனை ரசனையுடன் பார்த்துக்கொண்டே மண்டியிட்டு அமர்ந்த சிம்மவர்மன்,

“ நித்தி காலம் முழுதும் எனக்கு துணையா எனக்கு நட்பா மனைவியா தாயா சேயா சண்டைக்காரியா எல்லாமுமே இருப்பியா??” என கேட்க சந்தோசத்துடன் தலையசைத்து தன இடையோடு சிம்மவர்மனின் தலையை அழுத்தி அணைத்துக்கொள்ள சிம்மவர்மனும் சந்தோசத்துடன் அணைத்துக்கொண்டான்.

தென்றலுடன் அறைக்கு சென்ற ருத்ரன் எதுவும் பேசாது அமைதியாக பால்கனியில் வானத்தை வெறித்துக்கொண்டிருக்க அதனை கண்ட தென்றல்,

‘ என்ன இது இவ்வளவு நேரம் எதுவும் பேசாம அமைதியா இருக்காங்க இப்போ போறதா இல்ல இருக்கறதா ஒரு வேளை எதுவும் கவலைல இருப்பாங்களோ. அவுங்க தோழி செத்தத நினைச்சு’ என எண்ணிக்கொண்டு மெதுவாக ருத்ரனின் தோளை தொட்டாள் தென்றல்.

அதில் திரும்பிய ருத்ரன் எதுவும் கூறாது அவளின் கைகளை பிடித்துக்கொண்டு “ சின்னு” என அழைக்க

‘ யாரு அது சின்னு??’ என்ற யோசனையில் நின்றுகொண்டிருந்தாள்.

“ சின்னு” என மீணடும் அழைத்த ருத்ரனை கண்டு

“ என்ன என்ன மாமா?? என்னையா கூப்பிட்டீங்க??”

“ ம்ப்ச் இப்போ இங்க வேற யாரு இருக்கா கூப்புட” என சலிப்புடன் கேட்ட ருத்ரனை கண்டு தயங்கிக்கொண்டே

“ இல்ல அது… அது… சின்னு.. சின்னு. சொன்னிங்க. அதான் யாருன்னு….” என தென்றல் இழுக்க

“ அடியே அது நீந்தாண்டி என் செல்ல பொண்டாட்டி”

“ என்ன??... நானா!!....”

“ ஹ்ம்ம் நீதான் முதல்ல நீ ரொம்ப சின்ன பிள்ளையா இருந்தியா அப்போ உன்னைய நான் சின்னு தான் கூப்பிடுவேன் மனசுக்குள்ள. அதுவே எனக்கு பழகி….” என ருத்ரன் பேசிக்கொண்டிருக்கையில் தீடிரென தென்றல் ருத்ரனை அணைத்திருந்தாள்.

அவளின் முதல் அணைப்பு அதுவும் தீடிர் அணைப்பு ஒரு நிமிடம் ருத்ரன் இன்பமாக அதிர்ந்து நின்றான். அப்பொழுது தென்றலின் கண்ணீர் அவனின் மார்பை நனைக்க ஒருவாறு சுயநினைவு வந்து,

“ ஏய்!!.. பொண்டாட்டி குட்டிமா எதுக்குமா அழற??” என அவளின் முகத்தை இருகைகள்கொண்டு பிடித்து கேட்க


“ இல்ல இல்ல நீங்க சுயநினைவு திரும்பி வரும்போதும் சின்னு சின்னு தான் அலறுனீங்க. அப்போ நானும் அங்க தான் இருந்தேன். அப்போ சுயநினைவு இல்லாதப்போ கூட என்னோட நினைப்புல இருந்திருக்கிங்க. ஆனா… ஆனா… நா… நான்…” என தயங்கிய தென்றலை கண்டு
 
“ அடியே!!... என் அழகு ராட்சசி. நாம என்னமோ உயிர்க்கு உயிரா பழகி காதலிச்சுட்டு நீ என்னமோ என்னைய மறந்த மாதிரி அழற. நான் காதலிச்சது . உனக்கு தெரியாது அப்புறம் நீ என்ன பண்ணுவ” என ருத்ரன் கேட்க

“ இல்ல மாமா உங்களுக்கு என்னால கஷ்டம் தான் அதிகம். அதோட உங்களுக்குன்னு நான் ஒண்ணுமே பண்ணுனது இல்ல. அப்படி இருக்குறப்போ நீங்க என் மேல வச்சுருக்க பாசத்துக்கு நான் என்ன பண்ண போறேன்” என தென்றல் பரிதவிப்புடன் கேட்க

“ ஹ்ம்ம் நீ ஒன்னும் செய்ய வேணாம் என்னைய காதலிக்க கூட வேணாம். நான் உன்னைய காதலிக்குறதை ரசிச்சுகிட்டு அனுபவிச்சுக்கிட்டே இரு போதும்” என கூறி அவளை அணைத்துக்கொள்ள அவனின் அணைப்பில் பாந்தமாக இருந்துகொண்டு தூரம் தெரிந்த வான்வெளியை வெறித்துக்கொண்டே பேச ஆரம்பித்தாள்.

“ மாமா எனக்கு எங்க அம்மா இறந்ததை பத்தி எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல எல்லாரும் சொன்னப்போ எனக்கு எதுவுமே தோணலை. ஏன் அழுகை கூட வரல அவுங்க சுயநலமா எங்க அப்பாவோட போராட மனசு இல்லாம கோழைத்தனமான முடிவெடுத்துட்டாங்க.

என்னைய பத்தி யோசிக்கவே இல்ல. அதனால நானும் அவுங்கள பத்தி யோசிக்கக்கூடாதுன்னு வைராக்யமா எங்க அம்மாவை பத்தி எங்கையும் நான் கேட்டதும் இல்ல. அவுங்கள பத்தி இன்னைக்கு வரைக்கும் யோசிச்சதும் இல்ல.

அதே மாதிரி என்னோட அப்பா ம்ப்ச் அவரும் அப்படித்தான் என்ன எங்க அம்மா பூமில இல்ல அப்பா என் வாழ்க்கைல இல்ல. அப்புறம் என் அத்தை மாமா எல்லாருக்கும் நான் வேண்டாதவ ஒரு பாரம் அவுங்களுக்கு. என் ஆத்தாவுக்கு நான் தான் எல்லாம். ஆனா அவுங்க காது பிரச்சனைனால நான் அவுங்க கிட்ட எதையும் மனசுவிட்டு பேச முடியாது.

அதனாலதான் நீங்க என்கிட்ட நாலு வருஷம் முன்னாடி கல்யாணம் பத்தி பேசுனது எல்லாம் நான் வீட்டுல யாருகிட்டயும் சொல்லல. அதோட கல்யாணம் பண்ணனும்ன்னு வீட்டுல என் அத்தை சொல்லும்போது எனக்கு உங்க நியாபகம் ஒரு நிமிஷம் வந்துச்சு.

ஆனா நான் அதுக்கு மேல யோசிக்க விரும்பல. அப்புறம் என் ஆத்தாவுக்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். அதோட எனக்கு பார்த்த மாப்பிளைக்கு சுய நினைவு இல்லைன்றது கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்” என தென்றல் கூறிக்கொண்டிருக்கையில்

அதுவரை அவள் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த ருத்ரன் கடைசியாக கூறியதை கேட்டு அணைப்பை விடுத்து அவள் முகம் நோக்கி,

“ நீ என்ன என்ன சொல்லுற??.. அப்போ தெரிஞ்சே என்னைய கல்யாணம் பண்ணுனியா??.....”

“ ஹம்ம்ஹும் இல்ல மாமா. வீட்டுல என் ஆத்தாவுக்குத்தான் காது பிரச்சனை தவிர எனக்கு இல்ல. அத்தை பேசும்போதே எனக்கு தெரியும் எப்படி பட்ட மாப்பிள்ளைன்னு. ஆனா அதுவும் கல்யாணத்துக்கு முதல் நாள்தான். ஆனா கல்யாணத்தனைக்கு மயங்குனது உங்கள நான் அந்த நிலமைல எதிர்பாரக்கல” என கூறி நிறுத்த ருத்ரன் தென்றலை அணைத்துக்கொண்டான்.

“ சின்னு இனிமே நீ வாழ்க்கைல சந்தோசத்தை மட்டும் தான் பார்ப்ப உனக்கு துணையா நான் எப்பவும் இருப்பேன் நமக்குள்ள கோவம் சண்டை அழுகை சிரிப்பு எல்லாம் வரும் அதோட காதலும் வளரும். இந்த தென்றல் என்னைய அப்போ அப்போ வருடுனா போதும் நான் வாழ்க்கைல எங்கையோ போயிடுவேன்” என கூற

“ எங்கையும் வேணாம் என்கிட்ட மட்டும் இருங்க வரு மாமா” என கூறி தென்றல் வெட்கப்பட

“ வாறே வா எனக்கு செல்ல பேருகூட வச்சாச்சு என் செல்லக்குட்டி” என கூறி சந்தோசத்துடன் இறுக்க அணைத்துக்கொண்டான்.

நாட்கள் கடக்க இன்னும் ரெண்டு நாளில் ருத்ரன் தென்றல் முதல் திருமண நாள். ருத்ரன் திட்டவட்டமாக அனைவரிடமும் கூறிவிட்டான் முதல் திருமண நாள் அன்று காலை வீட்டில் தென்றலுக்கு தாலி கட்டிவிட்டு மாலை வரவேற்பில் கலந்துகொள்வதாக. வீட்டில் இருந்த அனைவருக்கும் அதில் மறுப்பு சொல்லத்தோன்றவில்லை ஏன்னெனில் அனைவருக்கும் தெரியுமே அவர்கள் திருமணம் நடந்த முறை.

அதோடு சிம்மவர்மனும் நித்தியவதியும் வரவேற்பு வேண்டாம் என கூறிவிட்டனர். காரணம் நித்யவதி சிம்மவர்மனின் வரிசை சுமப்பதால் வேண்டாம் என கூறிவிட்டனர்`

மேலும் மூன்று மாதம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வீட்டில் இருந்தவர்களும் கட்டாயப்படுத்தவில்லை. அன்று மாலை வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்த தென்றலை ஜானவி முறைத்துக்கொண்டிருந்தார். அருகில் சோபாவில் நித்தியவதி சிரிப்புடன் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அவளை பார்த்த தென்றல் “என்ன??” என கண்களால் வினவ நித்தி உதட்டை பிதுக்கினாள்.

“ அம்மா என்னமா ஏன் என்னைய முறைக்குறிங்க??” என கேட்டுக்கொண்டே அவரின் அருகே சென்ற தென்றலை கண்டு ஜானவி

“ உன் புருஸன்தான் என் பேச்சை கேட்க மாட்டேன்கிறானா நீயும் இப்படி இருக்க…..” என புலம்பிய ஜானவியை கண்டு

“ அம்மா நான் என்ன செய்யல”

“ ஹ்ம்ம் கல்யாணத்துக்கு இன்னமும் ரெண்டு நாள் தான் இருக்கு முகுர்த்தத்துக்கும் வரவேற்புக்கு இன்னும் புடவை எடுக்கல நானாவது எடுக்கவாடான்னா அதுவும் வேணாம் என் கல்யாணத்துக்கு நானேதான் பார்த்து பார்த்து செய்வேன்னு சொல்றான். நீயாவது சட்டுன்னு கூட்டிட்டு போய் புடவை நகை எல்லாம் எடுத்துட்டு வரலாம்ல” என பேசிக்கொண்டே ஜானவியிடம் எப்படி கூறுவது என தயங்கிக்கொண்டு நின்ற தென்றலை காப்பாற்றுவது போல டிரைவர்,

“ அம்மா இத எங்க வைக்கட்டும்??” என மிக பெரிய பெரிய பைகளாய் எடுத்துக்கொண்டு வர அதனை கண்ட ஜானவி

“ என்ன தென்றல் இது??” என கேட்க

“ அது அம்மா நானும் வரு மாமாவும் ஜவுளிக்கடை நகை கடைக்கு போயிட்டு எல்லாருக்கு டிரஸ் எடுத்துட்டு வந்தோம்” என கூறினாள்.

“ ஒரு வழியா எடுத்தாச்சா” என கேட்டுக்கொண்டே அனைத்தையும் பிரித்துப்பார்த்துக்கொண்டிருந்த ஜானவியிடம்

“ ஏன் அத்தை நீங்க சொன்னிங்கன்னா உங்க செல்ல மருமக கடைக்கு போயிருப்பா??” என கிண்டலுடன் நித்தி கேட்க தென்றல் வேகமாக தலையாட்டினாள்.

அதை பார்த்தும் பார்க்கத்ததும் போல ஜானவி,

“ ஹ்ம்ம் அதை சொல்லு நித்தி நாமளும்தான் படி படின்னு சொன்னோம் சுடிதார் போட சொன்னோம் எங்க…..” என கிண்டலுடன் கூறி தென்றலை காண வெள்ளை லெகினும் அதற்கு மெரூன் நிற குர்தியும் போட்டு நீண்ட கூந்தலை இடைவரைவெட்டி அனைத்தையும் ஒரு ரப்பர் பாண்டில் அடக்கி குதிரைவால்போட்டு தோரணையா நின்றுகொண்டிருந்த தென்றலை கண்ட நித்தியும்,

“ அதானே இப்போ பாருங்க ஆளே மாரி மேடம் காட்ரிங் வேற படிக்குறாங்க. அது முடிச்சவுடன் ருத்ரனும் மேடமும் ஹோட்டல் பிஸிநெஸ்ல இறங்க போறாங்க வேற” என கூறிய நித்தியை கண்டு கண்களால் கெஞ்சி “ அக்கா போதும்” என கூற

“ என்ன போதும்??. நாங்க எவ்வளவு சொன்னோம் படின்னு இப்போ புருஷன் சொன்னவுடன் ஹ்ம்ம்ன்னு மண்டை ஆட்டி படிக்க ஆரம்பிச்சுட்ட” என பொய் கோபத்துடன் கேட்ட நித்தியவதியிடம்

“ நீங்க இங்கிலீஷ் படிக்கச் சொன்னிங்க வரு மாமா எனக்கு என்ன புடிக்கும்ன்னு கேட்டாங்க நான் எங்க படிக்க சொல்லுவாரோனோ பயந்து சமைக்க பிடிக்கும்ன்னு சொன்னே அதுக்கு இத்தை படிக்க வைக்குறாரு. ஆனா அக்கா இதுவும் நல்ல இருக்கு” என கூறி சிரித்த தென்றலை ஜானவியும் நித்யவதியும் வாஞ்சையுடன் பார்த்தனர்.

இரண்டு நாள் கழித்து தென்றல் ருத்ரன் திருமண நாள் அன்று நல்ல நேரத்தில் ருத்ரன் திருமாங்கல்யம் பூட்டினான் தென்றலுக்கு. பின் வரவேற்பும் முடிந்து இரவு அவர்களுக்கான விசேஷமும் நடக்க அவனுடைய அறையை அண்ணன்கள் மூவரும் அலங்கரிக்க ருத்ரனிடம் ஜானவியும் திருவாசகமும் பேசிக்கொண்டிருந்தனர்.

“ டேய் சீக்கிரம் எங்களை பாட்டி தாத்தாவை ஆக்குடா” என திருவாசகம் கூற

“ ஆமா இப்போ மட்டும் இவரு குமரன்” என ஜானவி நொடிக்க

“ ஏண்டி எல்லா பசங்க பேர பிள்ளைகளையும் பார்த்தாச்சு நித்யவதி சீக்கிரம் பேரனோ பேத்தியோ பெத்துக்குடுத்துடுவா நம்ம ருத்ரன் பிள்ளைகளையும் பார்க்குற ஆசைல சொன்னேன்”

“ ஆமா அப்படியே இவரு வளக்க போற மாதிரித்தான் தூர இருந்து பார்த்துட்டு டேய் பேராண்டின்னு சொல்லிட்டு கம்பெனி போயிடுவீங்க இதுல எதோ ஸ்கூல்ல அட்டெண்டென்ஸ் எடுக்குற மாதிரி எல்லா பேர பிள்ளைகளையும் பார்க்கணும்ன்னு” என மீண்டும் ஜானவி குறைபட

“ ஏண்டி இதைகூட சொல்ல கூடாதா”

“ ஆமா சொல்ல கூடாது. நமக்கு ஆசை இருந்தாலும் அவுங்களுக்கு எப்போ சவுரியமோ அப்போ பெத்துக்குவாங்க அது அவுங்க தனிப்பட்ட விஷயம். அவன் சந்தோசமா இருக்கனும்ன்னு வாழ்த்துங்க அதுபோதும்” என ஜானவி கூற

“ நீ சொன்ன சரிதான் ஜாணுமா” என்று கூறிய தந்தையை பார்த்த ருத்ரனிடம்

“ எந்தவயசுலையும் பொண்டாட்டியை மட்டும் பகைச்சுக்கவே கூடாதுடா மகனே” என திருவாசகம் கூற ஜானவி செல்லமாக முறைச்சுக்கொண்டே இருந்தார்.

அதே நேரம் ஒப்பனையாளர்கள் உதவியுடன் பால்ரோஸ் நிறத்தில் தங்க ஜரிகையிட்ட பட்டு புடவையை நாட்டுப்புற கட்டு கட்டி கூந்தலை கொண்டையிட்டு அதனை சுற்றி மல்லிகை பூ வைத்து அம்சமாக வந்து நின்ற தென்றலிடம்

“ ஏய்!!... என்னடி இது??” என அருணா கேட்க அதற்கு பதில் கூறாது அமைதியாக கூச்சத்துடன் நெளிந்துகொண்டிருந்த தென்றலை கண்ட தமயந்தி

“ என்ன ருத்ரன் வேலையாக்கும் இது??....” என கேட்க

“ ஹ்ம்ம்….” என தலையாட்டினாள் தென்றல்.

“ எங்க ருத்ரன் ரசனையே வேறப்ப… ….” என நித்தியும் கிண்டல் செய்ய வேகமாக தங்கள் அறைக்குள் ஓடி சென்றுவிட்டாள்.

இவர்களை தூரம் நின்று பார்த்துக்கொண்டிருந்த சின்னாத்தா “ அய்யா கருப்பா இந்த வருஷ திருவிழாவுக்கு கிடா வெட்டுறேன்யா. என் பேத்தியை இதே சந்தோசத்துடன் வச்சுக்க கருப்பா” என வேண்டிக்கொண்டிருந்தார்.

அறைக்குள் நுழைந்த தென்றலை கண்ட ருத்ரன்,

“ பார்ரா என் பொண்டாடி என்னைய பார்க்க ஓடி வந்துருக்கா” என கூறி சிரிக்க

“ அச்சச்சோ அங்க தப்பிச்சு இங்க வந்து மாட்டிகிட்டேனே” என எண்ணிக்கொண்டு அறையை கவனிக்க அந்த அலங்காரம் அவளுக்கு இதுவரை இருந்த நிதானம் போய் ஒரு வித படபடப்பை தந்தது.

அதனை கவனித்த ருத்ரன்,

“ ஹே செல்லாகுட்டி ஏண்டி பயப்புடுற தயவு செய்து நீ என்னைய காதலா பார்கலைனாலும் பரவா இல்ல இப்படி அதிர்ச்சியா பயமா பார்க்கா”த என கூறிக்கொண்டு அவளின் அருகில் வந்து கைபிடித்து அழைத்து சென்று அமர வைத்தான்.

பின் எதுவும் பேசாது அவளின் கைகளை மட்டும் பிடித்துக்கொண்டு ஏதோ யோசனையில் இருந்த ருத்ரனை கண்டு,

“ என்ன மாமா??.. என்ன யோசனை??...”

“ ஹ்ம்ம் என்னடா”

“ இல்ல எதோ யோசனையில் இருக்குற மாதிரி”

“ ஹ்ம்ம் ஆமா யோசனைதான்”

“ என்ன மாமா எதுவும் பிரச்சனையா??”

“ இல்ல இல்ல பிரச்சனைன்னு சொல்ல முடியாது இது நான் ஒரு விஷயம் எதிர்பார்க்குறேன் அது நடக்கனும்னு ஆசை”

“ நடக்கும் மாமா ஏன் விசனைபடுறிங்க.”

“ ஹ்ம்ம்”

“ நீங்க எதிர்பார்த்தது நடக்கலைனாலும் நாம அதற்கான முயற்சியை செய்யலாம்”

“ ஹ்ம்ம் கண்டிப்பாடா அதுக்கு நீ மனசு வைக்கணும்”

“ சொல்லுங்க மாமா என்ன எதிர்பார்க்குறீங்க” என கேட்க

“ அது சின்னு எங்க வீட்டுல எல்லாரும் ஆம்பள பசங்க பொம்பள பிள்ளை இல்ல அதனால ஒரு பெண்குழந்தை பெத்து தறியா” என ருத்ரன் எதோ ஆம்லெட் போட்டு தறியா என்பது போல சாதரணமாக கேட்க

“ ஏது!!!...” என அதிர்ந்த தென்றலை அணைத்து அவர்களின் இல்லறத்தை ஆரம்பித்தான் இல்லாளின் அனுமதியுடன்.

சரியாக ஒரு வருடம் கடந்து பிரசவ அறையில் தென்றல் இருக்க வெளியே ருத்ரன் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தான். குடும்ப உறவினர்கள் அனைவரும் வெளியே நிற்க மாறவர்மன் ஒன்றைவயது மகனும் சிம்மவர்மன் ஐந்து மாத குழந்தையும் வீட்டில் மாயாவதி லீலாவதி பாதுகாப்பில் இருக்க இங்கு அனைவரும் கவலையுடன் இருந்தனர்.

சிறுது நேரத்தில் இவர்களின் கவலை போக்க வேகமாக அடுத்துட்டு ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தனர் ருத்ரன் தென்றலின் இரட்டை பெண் குழந்தைகள்.

அனைவரும் செய்தி கேட்டு சந்தோஷமடைய ருத்ரன் தென்றலை நார்மல்வார்டுக்கு மாத்தியவுடன் வேகமாக தென்றலை காண சென்றான்.

“ சின்னு குட்டி ஏண்டி மாமா மேல அம்ம்புட்டு லவ்வுவுவு…… நான் கேட்டேன்னு ஒன்னுக்குரெண்டு தேவதை குடுத்துருக்கடி தேங்க்ஸ் தேங்க்ஸ் செல்லக்குட்டி” என கூறி நெற்றில் முத்தம் வைக்க சோர்வுடன் புன்னகைத்த தென்றல்

“ வரு மாமா I LOVE U” என கூற ருத்ரன் தென்றலின் காதலை முதல் முறை வாய்மொழியாக கேட்க அந்த கண்ணீருடன் காதலாக பார்த்துக்கொண்டிருந்தான் அவன் மனைவியை.




என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால்

உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூங்தலில்மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்.......




Thanks for ur wonderful supporting friends to complete my second story

please drop ur comments about this story friends.....

thanks thanks....


:love::love:
 
Last edited:
Top