Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(20)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே……..(20)

ருத்ரனின் சத்தத்தில் அங்கிருந்த அனைவரும் ருத்ரனை நோக்கி திரும்ப,

அங்கு மீண்டும் “ அம்மா!!...” என கத்தினான் ருத்ரவர்மன் அதனை கண்ட ஜானவி வேகமாக சின்னத்தாவை யோசனையுடன் காண அவரும் கண்களை திறந்து மூடினார்.

அதனால் நித்யவதியை அழைத்து வேகமாக தோட்டத்தில் வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு ஏற்பாட்டை கவனிக்குமாறு கூறி அனைவரையும் தோட்டத்திற்கு அனுப்ப குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர் நித்தியவதியை தவிர.

“ என்ன ருத்ரா எதுக்கு கத்துன??” என காலையில் பூஜைக்காக வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வந்த திருவாசகம் மூர்த்தி வினவ,

“ அப்பா இவுங்க யாரு??. நமக்கு எப்பிடி சொந்தம்??” என சின்னத்தாவை அழுத்தமாக இறுகிய முகத்துடன் வினவிய ருத்ரவர்மனை கண்ட திருவாசக மூர்த்தி சற்றே அதிர்ந்து

“ என்… என்னப்பா கேட்ட???” என திணறலுடன் வினவ

“ இவுங்க யாருன்னு கேட்டேன்” என சின்னாத்தாவை கைகாட்டி மீண்டும் ருத்ரவர்மன் வினவ

“ அவுங்க… அவுங்க…. நமக்கு சொந்தக்காரவங்க ருத்ரா”

“ அதான் என்ன முறையில நமக்கு சொந்தம்??...”

“ அது எதுக்கு உனக்கு??. சொந்தம்னா அதோடேவிடு ருத்ரா. சரி சரி பூஜை முடிஞ்சு வந்தவங்க எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்கல்ல வாங்க நாமளும் போலாம்” என கூறிக்கொண்டு மாயாவதி அனைவரையும் அங்கிருந்து கிளப்ப பார்க்க, அதனை
தொடர்ந்தே லீலாவதியும்,

“ ஆமா ஆமா வாங்க போலாம். அண்ணா வா போலாம் அங்க வந்தவங்கள விட்டுட்டு நாம மட்டும் இங்க இருந்து மாநாடு போட்டா வந்தவங்க என்ன நினைப்பாங்க” என கூறினார்.

மாயாவதியும் லீலாவதியும் உண்மை ருத்ரவர்மனுக்கு தெரிய படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் அங்கிருந்து அனைவரையும் கிளப்ப பார்க்க;

மாயாவதி கூறியது சின்னாத்தாவிற்கு சரியாக கேட்கவில்லை என்றாலும் லீலாவதி கடைசியாக கூறியது மட்டும் சிறுது கேட்க

“ ஹம்ம்கூம்…. இங்க பொண்ணு குடுத்த சம்மந்தியவே மதிக்கலை…. இதுல வந்தவங்கள மதிக்குறாங்கலாமா??..

அடியே..!! சுந்தரி உன் ஆத்தா மட்டும் நான் முகம் குடுத்து பேசாம திரும்புனா என் முடிய ஆஞ்சுபுட மாட்டா. ஹ்ம்ம் ஆனா இங்க என் நிலைமைய பாரு. அடி அதிரசம் குத்து கொழுக்கட்டை மாதிரி பொண்ணை எடுத்து உங்க ஆத்தாகிட்ட பேச்சும் இங்க என் பேத்திய குடுத்தும் இந்த கொள்ளிக்கட்டைக்கிட்ட எல்லாம் பேச்சு வாங்கவேண்டியதா இருக்கு. எல்லா நான் வாங்குன வரம் அப்படி….” என முழுமூச்சாக கத்திய சின்னாத்தாவை கண்டு மாயாவதி லீலாவதி இருவரும் முறைக்க, ருத்ரனோ

“ அப்பா இப்போ சொல்ல போறிங்களா இல்லையா யாரு இவுங்க??. யாருக்கு இங்க இவுங்க பேத்திய குடுத்துருக்காங்க??” என ருத்ரவர்மன் சத்தமாக கேட்க

அப்பொழுதும் அனைவரும் அமைதியாக இருக்க அதில் கோவம் அடைந்த ருத்ரன்

“ ஐயோ!!... ஏன் எல்லாரும் இப்படி அமைதியா இருக்கீங்க??. எனக்கு எதையெதையோ யோசிச்சு தலையே வெடிச்சுடும் போல…..” என கூறி தலையை பிடித்துக்கொண்டு ருத்ரன் சோபாவில் அமர

அதில் அனைவரும் பதறி அவனை நெருக்கும்போது அவனை நெருங்கி ஷாலினி ருத்ரனின் தோள்களில் அவளின் கரங்கள் கொண்டு அணைவாக பிடித்துக்கொள்ள டாக்டர் விஜயனோ வேகமாக ருத்ரனின் கரங்களை தலையில் இருந்து நீக்கி,

“ ருத்ரா என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ??. நீ இன்னும் முழுசா குணமாகல அதனால தேவை இல்லாம யோசிச்சு உன்னைய நீயே கெடுத்துக்காத. முதல்ல உன்னோட அறைக்கு போலாம் வா” என கூறி

“ ஷாலுமா ருத்ரனை அவனோட அறைக்கு அழைச்சுட்டு போ நான் மருந்து எடுத்து வரேன்” என கூறிவிட்டு திருவாசகத்திடம்,

“ திரு நான்தான் சொன்னேன்ல தேவை இல்லாம இப்போ எதையாவது சொல்லுறேன்னு சொல்லி அவனை ரொம்ப stress ஆக்குறிங்க” என சற்றே கோவமாக டாக்டர் விஜயன் கேட்க

அதற்கு மாயாவதி இடைபுகுந்து “ டாக்டர் சார் நாங்க என்ன பண்ணுனோம் எல்லா இந்த லூசு கிழவியால வந்தது. இப்போ உண்மைய சொல்லலைன்னு யாரு அழுதா. இந்த கிழவியோட பேத்தி வாழணும்ன்னு நம்ம ருத்ரனோட உடம்ப பத்தி யோசிக்கவே இல்ல. எல்லாம் சுயநலம். இதுக்கு இந்த ஜானவி அண்ணியும் உடந்தை” என கூறிக்கொண்டிருக்கையில்,

மாடிப்படியில் ஏதோ சிந்தனையில் ஷாலினியுடன் ஏறிக்கொண்டிருந்த ருத்ரன் எதோ ஒரு உந்துதலில் திரும்பி சின்னாத்தாவை காண அவரோ ஷாலினியை பயங்கரமாக முறைத்துக்கொண்டிருந்தார்.

அதனை கண்டு புரியாது ஜானவியை காண அவரோ கலங்கிய விழிகளால் சின்னத்தாத்தாவை பார்த்துக்கொண்டிருந்தவர். திரும்பி அவரின் அருகில் இருந்த தென்றலின் கரத்தை பிடிக்க அவரின் பார்வை தொடர்ந்து ருத்ரனின் பார்வையும் தென்றலின் முகத்தை காண
அழுகையை அடக்கி கொண்டு உதடுகள் துடிக்க கலங்கிய கண்களை சிமிட்டிகொண்டு குனிந்து நின்றுகொண்டிருந்த தென்றலை கண்டு ஏனோ மனம் கணக்க அதற்கு மேல் அறைக்கு செல்ல மனம் இல்லாது ஷாலினியின் கைகளை உதறிவிட்டு வேகமாக ஜானவியை நெருங்கினான்.

தீடிரென அருகில் வந்து நின்ற ருத்ரனை கண்ட ஜானவி,

“ என்ன… என்னப்பா??... எதுவும் வேணுமா?...” உடல்நிலை எதுவும் பிரச்னையோ என
பதட்டத்துடன் ஜானவி வினவ

ருத்ரன் ஜானவியின் கேள்வியை கவனிக்காது ஜானவியின் கையை பிடித்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு,

“ அம்மா இப்போ சொல்லுங்க….” என ஜானவியை கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்க ஜானவி அதிர்வுடன்

“ என்ன… என்ன… ருத்ரா சொல்லணும்??” என கேட்டுக்கொண்டு கையை ருத்ரனிடம் இருந்து உருவ பார்க்க

ருத்ரனோ கைகளை விடாது இறுக்கமாக பிடித்துக்கொண்டு,

“ அம்மா என் மேல சத்தியம் உண்மையை மட்டும் சொல்லுங்க. இந்த பாட்டி யாரு??. இவுங்க பேத்தி யாரு??. யாருக்கு இவுங்க பேத்தி கல்யாணம் செஞ்சுகுடுத்திருக்காங்க??” என தீர்க்கமாக ருத்ரவர்மன் வினவ

“ அது… அது…” என மீண்டு ஜானவி தயங்கினார்

“ அம்மா இப்போ நீங்க உண்மையா சொல்லத்தான் வேணும் இல்ல என்னைய நீங்க உயிரோட பார்க்க முடியாது. நான் ஏற்கனவே சாவோட விளிம்பு வரைக்கும் போயிட்டு வந்தவன்தான்” என ருத்ரவர்மன் பேசிக்கொண்டிருக்கையில் ஜானவி,

“ வேணாம் ருத்ர இந்த மாதிரி எல்லாம் பேசாத நீ நல்லா இருக்கணும். யாரு செஞ்ச புண்ணியமோ நீ இப்போ நல்லபடியா குணமாகி வந்துருக்க” என ஜானவி பேசிக்கொண்டிருக்கையில் இடைபுகுந்த ருத்ரன்

“ நான் நல்லா இருக்கணும்னா அது நீங்க சொல்ல போற பதில்ல இருக்குமா. சொல்லுங்க” என கேட்க ஜானவி ஒரு பெருமூச்சோடு கண்களை மூடிக்கொண்டு,

“ இதோ இங்க இருக்க பூந்தென்றல் செல்விதான் உன்னோட மனைவி. அந்த பாட்டியோட பேத்தி” என கூறிவிட்டு கணைகளை திறந்து ஜானவி ருத்ரனை காண ருத்ரன் எதுவும் கூறாது பாறைபோல் இறுகிய முகத்தோடும் கடின குரலோடும்

“ எப்படி??” என ஒற்றை கேள்வியை எழுப்ப

“ அது.. அது….” என ஜானவி மீண்டும் தயங்க

“ எப்படின்னு கேட்டேன்மா”

“ அது நீ கோமாவுல இருந்தப்போ ஜாதகத்துல…..” என அனைத்தையும் கூறி முடித்தார்
ஜானவி.

ஜானவி கூறி முடித்தவுடன் எதுவும் பேசாது அமைதியாக ருத்ரவர்மன் சோபாவில் அமர அதுவரை அமைதியாக இருந்த ராஜவர்மன் ஒன்றும் பேசாது ருத்ரவர்மனை அரவணைத்து அருகில் அமர்ந்தான்.

உண்மையை ஜானவி கூறியதை கண்டு அங்கிருந்த அனைவரும் சற்று பதட்டத்தோடு இருக்க மாயாவதி மட்டும் தன் எண்ணம் நடைபெறாமல் போவதில் கடுப்படைந்து கோவமாக ஜானவியிடம்,

“ அண்ணி இப்போ சந்தோசமா உங்களுக்கு. இப்போ உண்மைய சொன்னதால யாருக்கு என்ன லாபம்??. உங்களுக்கு எப்போதும் உங்க பிள்ளைங்களை விட மத்தவங்கதான் முக்கியம் இல்ல.

அன்னைக்கு மாறன் கல்யாணத்துலையும் அப்பிடித்தான் உங்க அண்ணன் பொண்ணுக்கு உதவி செஞ்சு குடும்பத்தை தலை குனிய வச்சிங்க. இப்போ யாருன்னே தெரியாதவளுக்காக உங்க பையனை பத்திக்கொஞ்சம் கூட யோசிக்காம இந்த கிழவி மாதிரி சுயநலமா இருக்கிறீங்க” என திருவாசகத்திற்கு மாறவர்மனுக்கும் பழைய கோவத்தை தூண்டிவிட்டு இந்த பிரச்சனையையும் சேர்த்து மொத்தமாக ஜானவியை வெறுக்க வைக்க மாயாவதி பேச

“ ஒரு நிமிஷம் நிறுத்துங்க” என வேகமாக ஒரு குரல் வர அனைவரும் குரல் வந்த திசையை நோக்க அங்கு தென்றல் உதடு துடிக்க வேக மூச்சுகளை எடுத்துக்கொண்டு மீண்டும்,

“ நிறுத்துங்க ரொம்ப பேசுறீங்க” என கிட்டத்தட்ட கத்தினாள்.

இதுவரை அதிகம் பேசாத, பேசினால் வீசும் தென்றலின் ஓசை அளவு மெலிந்துவரும் குரல் இன்று கடல் அலை போல கொந்தளிப்பதை கண்டு அனைவரும் திகைக்க மாயாவதியோ தன்னை எதிர்த்து பேசிய தென்றலின் மீது கோவம் கிளற,

“ ஏய்!!... எங்க இருந்து யாருகிட்ட சத்தம் போடுற??” என மீண்டும் கத்த

“ இங்க பாருங்க உங்க கூட சண்டை போடுறதோ இல்ல உறவாடுறதோ என்னோட நோக்கம் இல்ல. என்னைய பொறுத்தவரைக்கும் நான் பிரச்சனைனா ஒதிங்கி போறவ. நான் சின்னதுல இருந்தே அப்பிடித்தா. பேசத்தெரியாம இல்ல பேசக்கூடாது தேவை இல்லைன்னு கண்டுக்குறது இல்ல. அதோட நீங்க என்ன சொன்னிங்க என் ஆத்தா சுயநலமா??. என் ஆத்தவ பத்தி பேச இங்க யாருக்குமே தகுதி இல்ல” என கூறிக்கொண்டு சின்னாத்தாவின் அருகில் போய் நின்றுகொண்ட தென்றல்

“ தன்னோட சொந்த பிரச்சனைல என்னைய பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம தற்கொலை பண்ணிக்கிட்ட எங்க அம்மா ஒரு சுயநலவாதி, கொஞ்சம் கூட பெத்த பொண்ணை பத்தி கவலைப்படாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு இன்னைக்கு வரைக்கு நான் இருக்கேனா இல்ல செத்தேனான்னு கூட தெரியாம இருக்குற என்னோட அப்பா ஒரு சுயநலவாதி.

சொந்த தங்கச்சி பொண்ணுக்கு அநியாயம் நடக்குறதை கண்டுக்காம இருந்த என்னோட தாய் மாமா ஒரு சுயநலவாதி. ஏன் வீட்டுல வளர்ந்த பொண்ணுன்னுகூட பார்க்காம பணத்துக்காக கிட்டத்தட்ட என்னைய விற்க பார்த்த என் மாமா பொண்டாட்டி ஒரு சுயநலவாதி.

இதோ அண்ணன் குடும்பம்ன்னு பார்க்காம இங்க வந்து சொந்த அண்ணிய குறை சொல்லிக்கிட்டு இருக்குற நீங்க ஒரு சுயநலவாதி. அவ்வளவு ஏன் இவ்வளவு நேரம் நீங்க பேசுறதை கேட்டு கிட்டு நிக்குற உங்க குடும்பமே ஒரு சுயநலவாதி கூட்டம்தான். உங்களுக்கு என் ஆத்தாவை பத்தியோ இல்ல என் ஜானவி அம்மாவைப்பத்தி பேசவோ முதல்ல தகுதி இல்ல” என கோவமாக விரல் நீட்டி பேச
 
“ எனக்கு அப்பவே தெரியும்டி உண்மை எப்போ தெரியும் எப்போ உரிமை கொண்டாடலாம்ன்னு இவ்வளவு நாளு பிள்ளை பூச்சியாட்டம் இருந்துட்டு இப்போ இப்படி பேசுற” என லீலாவதி தன பங்குக்கு எகிற

“ இங்க பாருங்க எனக்கு உங்க வீட்டுல உரிமை கொண்டாடணும்ன்னு எப்பவும் எந்த எண்ணமும் இருந்தது இல்ல. அதோட நான் சின்னதுல இருந்து எங்க வீட்டுல அமைதியா பொறுமையா இருந்ததுக்கு காரணம் என்னால என் ஆத்தாவை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னுதான்” என சுந்தரியை பார்த்துக்கொண்டே கூறிய தென்றல் மீண்டும்

“ அதோட என் ஆத்தாவை பத்தி நீங்க பேசுன அப்புறமும் நான் இங்க இருக்க போறது இல்ல உங்க வீட்டு பையனுக்கும் நல்ல பொண்ண பார்த்து கட்டி வைங்க தகுதி இல்லாத நான் வேணாம் நான் ஒதிக்கிங்குறேன்” என கூறிவிட்டு சின்னாத்தாவை கையை பிடித்துக்கொண்டு அங்கிருந்து செல்ல பார்க்க தென்றலின் பேச்சில் மேலும் கோவம் அடைந்த லீலாவதி

“ போ போ என்னமோ உங்க வீட்டுல மகாராணியாட்டம் இருக்க போறமாதிரி இல்ல போற. அங்கேயும் வேலைக்காரிதான் அடிமை வாழ்க்கைதான்” என ஏளனமாக கூற அதனை கேட்ட தென்றல்

“ உரிமை இல்லாத இடத்துல அடிமையா வேலைக்காரியா இருக்கலாம் ஆனா எல்லா உரிமையும் இருக்குற வீட்டுல அப்படி இருக்கறதுதான் கொடுமை” என பதிலடி கொடுத்துவிட்டு ஏதோ பேச வந்த சின்னாத்தாவையும் பேசாத என தலையை ஆட்டி மறுத்துவிட்டு

ஜானவியிடம் ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து செல்லுவதற்கு திரும்புகையில்

“ அப்போ உனக்கு எல்லா உரிமையும் தரமாட்டேன்னு சொன்னது யாருமா??” என்ற ருத்ரவர்மனிடம் இருந்து குரல் வர அனைவரும் ருத்ரவர்மனை காண தென்றலும் பதட்டத்தோடு திரும்பி ருத்ரவர்மனை காண,

அங்கு சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டு கைகளை கட்டிக்கொண்டு பூஜைக்காக வெள்ளை வேட்டி அரக்கு நிற சட்டை அணிந்து தோரணையுடன் அமர்ந்திருந்த ருத்ரவரமனை கண்டு அதுவரை தென்றலுக்கு இருந்த தைரியம் காணாமல் போக லேசாக உடல் நடுங்க ஆரம்பித்தது.

அதனை சின்னாத்தாவின் கைகளில் இருந்த தென்றலின் கை நடுக்கத்தை உணர்ந்து தென்றலை நோக்கி தோள் பட்டையை சுரன்ட்ட

“ ம்ப்ச் என்னத்தா??” என லேசாக குனிய தென்றலின் பேச்சு புரியாவிடினும்

“ ஏண்டி இவ்வளவு நேரம் என்னைய சுயநலம்ன்னு சொன்னவுடன் ஏதோ கோவம் வந்த மாதிரி நடிச்சு இங்க இருந்து போக திட்டம் போட்டு பேசுன சரி. இப்போ என் பேரன்கிட்ட உன் பேச்சு திறமையை காட்ட வேண்டியது தானே. ஏண்டி நடுங்குற??” என சிறு நக்கலுடன் கேட்ட சின்னாத்தாவை கொலைவெறியுடன் தென்றல் முறைக்க

“ இங்க என்ன முறைப்பு அங்க பாரு உன் முறைப்புக்கு சொந்தகாரன” என சின்னாத்தா மீண்டும் கிசுகிசுக்க

“ அடியே என் பொண்டாட்டி முதல்ல மாமனை பார்த்து பதிலை சொல்லு. அப்புறம் உன் ஆத்தாகிட்ட பேசலாம்” என கேட்டுக்கொண்டு தென்றலை நெருங்கிய ருத்ரவர்மனை கண்டு அங்கிருந்த அனைவரும் வாயை பிளக்க

“ என்…. என்ன…. சொல்லணும்??” என தடுமாற்றத்துடன் கேட்ட தென்றலின் அருகில் வந்த ருத்ரவர்மன்

“ உனக்கு இங்க உரிமை கொடுக்காதது யாருன்னு கேட்டேன்??”

“ அது…. அது…. யாரு…. ம்… இல்ல. நான்… நானே தான்”

“ அப்போ நீதான் உரிமைய எடுத்துக்கல அப்படித்தானே??”

“ ஹ்ம்ம் ஹம்ம்ஹும்” என எல்லா பக்கமும் தலையை ஆட்டிய தென்றலின் தலைமீது தன்னுடைய உள்ளங்கையை வைத்து தலை ஆட்டலை நிப்பாட்டிய ருத்ரன்

“ ஹ்ம்ம் இப்போ சொல்லு ஏன் உன் உரிமையை நீ எடுத்துக்கல??” என கேட்க

“ அது…. அது உங்க தகுதிக்கு…”

“ இவ்வளவு பெரிய குடும்பத்துக்கு மருமகள வர தகுதி இருக்கு எனக்கு மனைவியை வர தகுதி இல்லையா??” என அழுத்தமாக ருத்ரன் வினவ தென்றலோ புரியாத பாவனையுடன் “ புரியல”
என கூற

“ ம்ப்ச் இல்ல தகுதி இல்லைனு சொன்னியே அப்போ நீ கல்யாணத்துக்கே சம்மதிச்சு இருந்துருக்க கூடாது.
ஏன்னா அப்போ என்னைய பத்தி மட்டும்தான் தெரியாது. ஆனா இந்த குடுமபத்தை பத்தி தெரியும்ல” என கேட்க எதுவும் கூறாது அமைதியாக தென்றல் குனிந்து நிற்க மேலும் தென்றலை நெருங்கிய ருத்ரன் தென்றலின் தாடையை தன் சுட்டுவிரலால் நிமிர்த்தி,

“ என் கண்ணை பாரு தென்றல்” என கனிவுடன் கூற அந்த குரலில் கட்டுண்டு நிமிர்ந்து ருத்ரனின் கண்களை பாவையின் கண்கள் நேர்கொண்டு சந்திக்க ருத்ரனோ நிதானமாக,

“ அப்போ உரிமைய எடுத்துக்கோ தென்றல்” என மெதுவாக அதே நேரம் உறுதியுடன் கூற

அதில் அதிர்வுடன் இரண்டடி பின்னகர்ந்த தென்றல் “ இல்ல” என எதோ மறுப்பு கூற வர தன் விரலை தென்றலின் உதட்டின் மீது வைத்து தடுத்து

“ தென்றல் உரிமையை எடுத்துக்குறியான்னு கேட்கல எடுத்துக்கோன்னு சொன்னே” என அழுத்தமாக அதே நேரம் தீவிரமான முக பாவத்துடன் கூறிய ருத்ரவர்மனை கண்டு பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டு இருந்த தென்றலை விடுத்து நேராக ஜானவியிடம் சென்ற ருத்ரன்

“ அம்மா என் பொண்டாட்டி இனிமே என் அறையிலதான் இருக்கனும். அதான் நான் அவளுக்கு குடுக்குற முதல் உரிமை சரியா முதல்ல அந்த ஏற்பட்ட பாருங்க” என கூறிவிட்டு போனுடன் அங்கிருந்த நகர பார்த்த ருத்ரனிடம்

“ ஏன் ருத்ரா உனக்கு மூளை எதுவும் குழம்பிபோச்சா??” என மாயாவதி சத்தமாக கேட்க

“ ஏன் அத்தை அப்படி கேட்குறீங்க??” என சிறு நக்கல் தொனியில் கேட்ட ருத்ரவர்மனின் நக்கலை கவனிக்காது

“ இல்ல இவளை உன்னோட பொண்டாட்டின்னு சொன்னவுடன் ஏத்துக்கிட்ட”

“ அப்போ நான் என்ன செய்யணும்ன்னு எதிர் பார்க்குறீங்க ??” என தீவிரமாக கேட்ட ருத்ரனிடம்

‘ என்ன கூறுவது’ என மாயாவதி யோசிக்க

“ உனக்கு கோவமே வரலையா??” என லீலாவதி இடைபுகுந்து கேட்க

“ ஏன் வராம அது எல்லாம் நிறைய இருக்கு உங்க எல்லார் மேலையும். ஆனா என் பொண்டாட்டியோட அழகை பார்த்தவுடன் கோவம் எல்லாம் பறந்து போச்சு.

அதோட என் பொண்டாட்டிக்கு முதல்ல உரிமை பிரச்சனைய முடிச்சு வச்சு தான் யாரு இங்க விருந்தாளி யாரு சொந்தக்கரவங்கா யாருன்னு எல்லாம் தெரியணும் .

சரி அத்தை உங்க கேள்விக்கு எல்லாம் நான் அப்புறம் பதில் சொல்றேன் இப்போ நான் முக்கியமான போன் பேசணும்’ என கூறிவிட்டு தென்றலிடம் கண்ணடித்துவிட்டு வெளியில் சென்ற ருத்ரவர்மனை சிந்தனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் சின்னாத்தா.

அதன் பின் உணவருந்த சென்ற உறவுகள் அனைவரும் வீட்டிற்குள் வர அத்துடன் அனைவரும் ருத்ரன் தென்றல் பிரச்சனையை ஒதுக்கி வைத்தனர்.

“ என்ன லீலா இப்படி ஆகிடுச்சு…??”

“ ஆமா க்கா இவன் தென்றலை ஏத்துக்கலைனா மூணு வருஷ முன்னாடி நடந்த பிரச்சனையை வச்சும் இந்த கல்யாணம் வச்சு கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாம விடலாம்ன்னு பார்த்தா இவன் ஏத்துக்கிட்டான். அதுவும் சந்தோசமா. ம்ப்ச் எனக்கு கடுப்பா வருதுக்கா” என மாயாவதியும் லீலாவதியும் புலம்பிக்கொண்டிருந்தனர்.

ருத்ரனின் அறைக்கு செல்ல மாட்டேன் என அடம்பிடித்த தென்றலை கண்ட சின்னாத்தா,

“ இங்க பாரு செல்வி இப்போ என்னத்துக்கு இவ்வளவு பயப்புடுற. உன் புருசனோட ரூம்புக்குத்தானே போற. பிறவு என்ன??” என கடுப்படிக்க

“ உனக்கு என்ன??.... அவரை பார்த்தா எனக்குல பயத்துல மயக்கம் வந்துடும் போல. இதுல பக்கத்துல அதுவும் ஒரே அறையில ஹ்ம்ம் கூம் நான் மாட்டேன்” என தென்றல் மீண்டும் அடம்பிடிக்க

“ மயக்கம் வந்தா என் பேரனை கெட்டியா பிடிச்சுக்க கீழ விழ மாட்ட” என கூறிய சின்னத்தவை கடுப்புடன் முறைத்த தென்றலிடம்

“ இங்க பாருடி உன் தாத்தாவை பார்த்து அந்த காலத்துல எட்டுப்பட்டி கிராமமும் பயப்புடும். ஆனா அந்த மனிசன் கடைசி வரைக்கும் என்கிட்டே பெட்டி பாம்பா அடங்கித்தான் இருந்தாரு. உன்னைய மாதிரி பயந்தா குடும்ப நடந்திருக்க முடியுமா இல்ல ரெண்டு பிள்ளையத்தான் பெத்துருக்க முடியுமா சொல்லு” என கூற

“ எப்படி ஆத்தா தாத்தாவை மடக்குன??” என வியந்து தென்றல் கேட்க

“ அது ஒன்னும் இல்லடி ஆரம்பத்துல இருந்து உங்க தாத்தாரு எதும் சொன்னாலும் என்ன இடம் எங்க இருக்கோம்ன்னு ஒன்னும் பார்க்க மாட்டேன் நின்ன இடத்துல இருந்து கத்தி ஒப்பாரி வைப்பேன் பாரு மனுஷன் அடங்கிடுவாரு” என சிறு வெட்கத்துடன் கூறிய சின்னாத்தாவை முறைத்த தென்றலை கண்டு சிரித்த ஜானவி

“ தென்றல் நீவாட்டுக்கு உன் ஆத்தா பேச்சை கேட்டு ருத்ரன் முன்னாடி அழுதுடாத அவனுக்கு அழுதா பிடிக்காது எரிஞ்சு விழுவான்” என தன் மகனை பற்றி நன்கு அறிந்தவராக கூற

“ அப்போ உனக்கு நான் வேற யோசனை சொல்றேன் செல்வி” என கூற வந்த சின்னாத்தாவை கண்டு

“ வேணாம் உன் யோசனைக்கு நான் அவருகிட்ட ரெண்டு அடிவேணும்ன்னா வாங்கிக்குறேன்” என சத்தமாக கூற இதுவரை அமைதியாக தென்றலை அலங்கரித்துக்கொண்டிருந்த நித்யவதி

“ ஒரு வேளை ஆத்தா அழுகாம இருந்திருந்தா இன்னும் ரெண்டு பிள்ளைகளை பெத்துருக்கலாம் போல” என போகிற போக்கிலசொல்லிவிட்டு தென்றலை அழைத்துக்கொண்டு ருத்ரனின் அறைக்கு செல்ல சின்னாத்தா நித்யவதியை முறைத்துக்கொண்டிருந்தார்

ஜானவியும் சின்னாத்தாவும் மிரட்டி கெஞ்சி கொஞ்சி அனுப்பிவைக்க பயத்துடன் சென்ற தென்றல் அங்கு அறையில் ருத்ரன் இல்லாததை கண்டு ஒரு நிம்மதியுடன் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்க சிறுது நேரத்தில் உறங்கியும் போனாள்.

நள்ளிரவில் எங்கோ பறப்பது போலவும் பனி காற்று ஊசிபோல குத்தவும் சற்றே கண்களை திறந்து பார்க்க ருத்ரன் தென்றலை தூக்கிக்கொண்டு பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர வைக்க அதில் முழு தூக்கமும் கலைய பயத்துடன் எழுந்து குனிந்து கொண்டு நிற்க;

அவள் உடல் நடுங்க ஆர்மபித்தது .அதற்கு காரணம் பனியா இல்லை ருத்ரனிடம் இருந்த பணிவா பயமா என அவள் மட்டுமே அறிந்த ஒன்று.

“ இப்போ எதுக்கு எழுந்து நிற்கிற முதல்ல உட்காரு” என சற்றே அதட்டிய ருத்ரவர்மனை கண்டு

‘ பேசாம நம்ம ஆத்தா சொன்னமாதிரி அழுதுட்டா’ என உள் மனது கூற இன்னொரு மனமோ ‘ வேணாம் செல்வி அப்புறம் அவுங்க கை பேசுனாலும் பேசும். அதனால வேணாம் பேசாம என்ன சொல்ல்லுறாங்கன்னு கவனி’ என தென்றல் மனதில் பட்டிமன்றம் நடத்த

“ ஏய் உன்னையதான் உட்காரு முதல்ல” என இன்னும் சற்றே அதட்டலுடன் கூற அதில் பயந்து அமர அவளின் இருபக்கமும் கைகளை ஊன்றி முகத்தை நெருங்கிய ருத்ரவர்மன்

“ மூணு வருசத்துக்கு முன்னாடி பிரச்சனை எல்லாம் முடிஞ்சவுடன் உன்கிட்ட பேச வந்தப்போ நான் என்ன சொன்னே நீ என்ன பண்ணிவச்சிருக்க” என கோவமாக கேட்ட ருத்ரவர்மனை அதுவரை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த தென்றல்,

அவனின் கேள்வியில் அன்றைய நாளின் நினைவில் ருத்ரனை தன் பலம்கொண்டு நகர்த்துவிட்டு எழுந்து நின்று முறைத்து கொண்டிருந்தாள்.

‘ என்ன முறைக்குறா??... ரைட்டு formkuக்கு வந்துட்டா. கோவத்தை விட்டுடாதடா ருத்ரா. கெத்தை maintain பண்ணு’ என மனதில் கூறிக்கொண்டு ருத்ரனும் தென்றலை முறைக்க ஆரம்பித்தான்.

அதே நேரம் தோட்டத்தில் சின்னாத்தா ஜானவி நித்யவதி அருணா ராஜவர்மன் சிம்மவர்மன் ஐவருக்கும் தென்றல் ருத்ரன் திருமணத்தன்று இரவு சின்னாத்தாவிடம் தென்றல் கூறிய கடந்த கால விஷயங்களை கூற ஆரம்பித்தார்.


friends sorry for the delay. என் பையனுக்கும் பொண்ணுக்கும் முதல் மொட்டை போட்டு ஒரு வழிய காது குத்தி விழாவை முடிச்சாச்சு அதுல கொஞ்சம் தாமதமாகிடுச்சு (இல்லைனா மட்டும் சீக்கிரம் போட்டுடுவியாக்கும் )

அடுத்த ரெண்டு epi யும் flashback தான் அதுல தெரிஞ்சுடும் ருத்ரனோட இந்த changes கான காரணம். அப்புறம் story boringaa இருக்க இல்ல எதாவது குறைன்னா சொல்லுங்க friends i will try to change that.

இது என்னோட ரெண்டாவது கதை அதோட typing தெரியாது ஒருவழியா thanglishla type பண்ணுறதால தப்பு இருந்தா சொல்லுங்க நான் மாத்திடுறேன்

and thanks for supporting friends
 
Top