காதல் 2:
ஒரு மாதம் கழித்து , மதுரவசனி தனது தந்தை சிவச்சந்திரனிடம்,
“அப்பா….. என்னப்பா எதுவும் பேசாம இருக்கீங்க….” என நீண்ட நேரம் நிலவிய அமைதியைக் கலைத்துக் கேட்டாள் .
அவள் வேலைக்குச் செல்ல அனுமதி வேண்டி தந்தையிடம் கேட்க.
சிவாவோ, “நம்ம ஆத்தா கிட்டத் தான் டா கேட்கனும்… ஆனா…. ஏன் டா… சென்னை வரைக்கும் போகனும்… இங்கேயே நம்ம ஆடிட்டர் கிட்ட டிரெயினிங் எடுக்கலாமில்லயா….. நம்ம கம்பெனி அக்கௌண்ட்ஸ் பாத்தாலே போதும் மா….”
“இல்லப்பா… எனக்கு வெளியே போய் வேலைப் பார்க்கனும்னு ஆசைப்பா…. ப்ளீஸ்ப்பா…. நானும் வெளி உலகத்தைப் பார்க்கனும் பா… என் திறமைக்குக் கிடைச்ச வேலைப்பா…. ப்ளீஸ் பா… ப்ளீஸ்பா….. இது வரைக்கும் நீங்க சொன்ன எல்லாம் நான் கேட்டேன்ல….” என தாஜா செய்ய
காலையிலேயே டைமண்ட் குழுமத்திடமிருந்து அவளுக்கு இமெயில் வந்து விட்டது. அதனால் தான் தன் குடும்பத்தினரின் சம்மதம் வேண்டித் தந்தையைக் காக்கா பிடிக்க வந்தாள்.
“என்னம்மா… நீ…. அப்பா கேட்டா நான் செய்ய மாட்டேனா…. ஆனா ஆத்தா பெரியப்பாலாம் ஒத்துப்பாங்களா…டா… நம்ம பொன்னு வெளியில வேலைக்குப் போனா.. நமக்கு என்ன மரியாதைடா…”
“அப்போ…. என்னை அனுப்ப மாட்டீங்க…. ராமண்ணா என்ன கேட்டாலும் செய்வீங்க….. மஹா கேட்டா செய்வீங்க… வத்சன் டூர் போக கேட்டப்போ ஓகே சொன்னீங்க…. நான் கேட்டா செய்ய மாட்டீங்க…..” எனக் கோபமாக முகம் சிவக்கச் சொல்ல,
“ப்ச்… என்னமா நீ…? நான் அம்மாகிட்டப் பேசுறேன்… எல்லாருமே என் பசங்க தான் டா… ஏன் நீ பிரிச்சுப் பேசுற… எங்க எல்லாருக்கும் எல்லாரும் ஒன்னுதான் மது… ஸ்ரீராம் தான் என் மூத்தப் பிள்ளை ப்ரீக்குட்டி தான் என் கடைசிப்பொன்னு… உனக்கு வேலைக்குப் போகனும்.. அவ்வளவுதானே... அப்பா பெரிப்பா கிட்டச் சொல்லிடுறேன்.. அவர் ஆத்தா கிட்ட பேசுவார்… என்ன சரியா….?” எனக் கேட்ட நேரம்,
மோகனா குரல் கொடுத்தார், “மாமா மஹா வந்துட்டா… நீங்க சீக்கிரம் வாங்க…”
“சரிம்மா…. வரேன்….” என்றவர் மகளிடம் திரும்பி ,
“அக்கா… வந்துருக்கா இல்ல…. அவளையும் மாப்பிள்ளையும் வந்து கூப்பிடு….. என்ன….?
“ம்ம்ம்ம்… சரிப்பா” என்றாள்
அங்கே வாசலிலே மஹாவுக்குத் தடபுடலான வரவேற்பு. ரவிச்சந்திரன் மஹாலஷ்மியையும் அவளது கணவனையும் போய் அழைத்து வந்துவிட்டார்.
சுலோச்சனா ஆரத்தி எடுக்க, உள்ளே வந்தாள் மஹாலஷ்மி. மூன்று மாதம் கழித்துப் பிறந்த வீட்டிற்கு வந்தவளைக் குடும்பமே சூழ்ந்துக் கொண்டது.
அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்துக் கொடுத்தார் மோகனா. ஆண்கள் அனைவரும் வீட்டு மாப்பிள்ளையோடு பேசிக்கொண்டிருக்க , பெண்கள் அனைவரும் தனியே ஒரு மாநாடு நடத்தினர்.
“மஹா….. உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களாமா…..”
“எல்லாம் நல்லாயிருக்காங்கமா… ஆமா... அமுதன்,வத்சன்லாம் எங்க…?”
“அவனுங்க ரெண்டு பேருக்கும்… இன்னிக்கு ஸ்கூல்.. மஹா…..” எனச் சொன்னார் சுலோச்சனா.
“ஆயுஷ் குட்டி அத்தைக் கிட்ட வர மாட்டீங்களா….?.. ஏன் உம்முன்னு இருக்கீங்க…?” என அண்ணன் மகனைக் கை நீட்டி அழைக்க
அத்தையிடம் ஓடியவன், அவளிடம், “அத்த… இந்த மம்மி… என்னை அடிச்சிடுச்சு…..”எனப் புகார் வாசிக்க ,
“ஏன் ஹரிணி அடிச்ச….?”
“மஹா… உன் மருமகனுக்கு ஆப்பிள் ஐ.போன் கொடுத்தாதான் சாப்பாடு இறங்குது.. இதனால் நான் தான் ஆத்தாகிட்ட அரைப்படுறேன்… அதான்… போன் தர மாட்டேன்னு சொன்னேன்.. இவன் அடம்பிடிச்சானா….அதான் ஒன்னு வைச்சேன்..”
“ஏன் ஹரிணி.. குழந்தை மேல கை வைக்கிற…. சின்ன குழந்தைக்கு என்ன தெரியும்….. வாயால சொன்னா கேட்கப் போறான்..” எனச் சீரியசாக அட்வைஸ் செய்த மோகனாவை சிரிப்போடும் முறைப்போடும் பார்த்தாள் அவரது மகள் ப்ரியா.
“என்னடி.. அப்படி முறைக்கிற…?”
“ஏன் ப்ரிகுட்டி அம்மாவை முறைக்கிறீங்க…” என மஹா தன் குட்டித் தங்கையிடம் கேட்க ,
“இல்லக்கா…. நேத்து மட்டும் அண்ணாவை அடிச்சாங்க….. என்னைப் போன வாரம் ஃப்ரைடே அடிச்சாங்க… இப்ப மட்டும் இப்படி அடிக்க கூடாதுன்னு அண்ணிக்கிட்ட சொல்றாங்கல…”
“அடிச்ச கிழமை கூட ஞாபகம் இருக்கும்.. ஆனா ஏன் அடிச்சன்னு ஞாபகம் இருக்காது… அவன் சின்னகுழந்தைடி… உனக்குப் பத்து வயசாகப்போது…. இன்னமுமா நீ குழந்தை… நீ குட்டிப்பிசாசுடி.”
“ப்ச்.. விடு மோகனா….. பிள்ளைங்க மேல கை நீட்டாத…. அத்தைக்குப் பிடிக்காது…” எனச் சுலோச்சனா சொல்ல
“அக்கா… உங்க பாப்பா… எப்ப வெளியே வரும்…” எனப் ப்ரியா ஆர்வமாய்க் கேட்க
“அக்காவோட பாப்பா…. இன்னும் ஃபோர் மந்த்ஸ்ல வெளியே வரும் ப்ரிகுட்டி….”
“அப்போ…. நிறையா நாள் இருக்கா….”
“ஆமாடா…. உனக்கு லீவ் வரும்ல அப்போ பாப்பா வரும்..."
“பாப்பா… என்னை என்னச் சொல்லிக் கூப்பிடும்… அக்கா…”
“பாப்பா உன்னை சித்தின்னு கூப்பிடும்டா..”
“அப்போ… என்னை அத்த….” என ஆயுஷ் மழலைக் குரலில் கேட்க
“உன்னை பாப்பா மாமானு சொல்லனும் ஆயுஷ் …”
“மாமாவா…. அப்போ…. நான் பிக் பாயா…..?” எனக் கண்ணில் ஆர்வம் மின்னக் கேட்க ,
“ஆமா… பிக் பாய் தான்... நீ…”
“அப்போ… பாப்பாவ நீங்கத் தரீங்களா… நான் தூக்க….?” என ஆசையோடு வினவ ,
“டேய்… அது என் பாப்பா…. உனக்கு நான் தர மாட்டேன்….டா…” என அவனை விட நாலு வயது பெரியவளான ப்ரியா மல்லுக்கட்ட
ஒரு மாதம் கழித்து , மதுரவசனி தனது தந்தை சிவச்சந்திரனிடம்,
“அப்பா….. என்னப்பா எதுவும் பேசாம இருக்கீங்க….” என நீண்ட நேரம் நிலவிய அமைதியைக் கலைத்துக் கேட்டாள் .
அவள் வேலைக்குச் செல்ல அனுமதி வேண்டி தந்தையிடம் கேட்க.
சிவாவோ, “நம்ம ஆத்தா கிட்டத் தான் டா கேட்கனும்… ஆனா…. ஏன் டா… சென்னை வரைக்கும் போகனும்… இங்கேயே நம்ம ஆடிட்டர் கிட்ட டிரெயினிங் எடுக்கலாமில்லயா….. நம்ம கம்பெனி அக்கௌண்ட்ஸ் பாத்தாலே போதும் மா….”
“இல்லப்பா… எனக்கு வெளியே போய் வேலைப் பார்க்கனும்னு ஆசைப்பா…. ப்ளீஸ்ப்பா…. நானும் வெளி உலகத்தைப் பார்க்கனும் பா… என் திறமைக்குக் கிடைச்ச வேலைப்பா…. ப்ளீஸ் பா… ப்ளீஸ்பா….. இது வரைக்கும் நீங்க சொன்ன எல்லாம் நான் கேட்டேன்ல….” என தாஜா செய்ய
காலையிலேயே டைமண்ட் குழுமத்திடமிருந்து அவளுக்கு இமெயில் வந்து விட்டது. அதனால் தான் தன் குடும்பத்தினரின் சம்மதம் வேண்டித் தந்தையைக் காக்கா பிடிக்க வந்தாள்.
“என்னம்மா… நீ…. அப்பா கேட்டா நான் செய்ய மாட்டேனா…. ஆனா ஆத்தா பெரியப்பாலாம் ஒத்துப்பாங்களா…டா… நம்ம பொன்னு வெளியில வேலைக்குப் போனா.. நமக்கு என்ன மரியாதைடா…”
“அப்போ…. என்னை அனுப்ப மாட்டீங்க…. ராமண்ணா என்ன கேட்டாலும் செய்வீங்க….. மஹா கேட்டா செய்வீங்க… வத்சன் டூர் போக கேட்டப்போ ஓகே சொன்னீங்க…. நான் கேட்டா செய்ய மாட்டீங்க…..” எனக் கோபமாக முகம் சிவக்கச் சொல்ல,
“ப்ச்… என்னமா நீ…? நான் அம்மாகிட்டப் பேசுறேன்… எல்லாருமே என் பசங்க தான் டா… ஏன் நீ பிரிச்சுப் பேசுற… எங்க எல்லாருக்கும் எல்லாரும் ஒன்னுதான் மது… ஸ்ரீராம் தான் என் மூத்தப் பிள்ளை ப்ரீக்குட்டி தான் என் கடைசிப்பொன்னு… உனக்கு வேலைக்குப் போகனும்.. அவ்வளவுதானே... அப்பா பெரிப்பா கிட்டச் சொல்லிடுறேன்.. அவர் ஆத்தா கிட்ட பேசுவார்… என்ன சரியா….?” எனக் கேட்ட நேரம்,
மோகனா குரல் கொடுத்தார், “மாமா மஹா வந்துட்டா… நீங்க சீக்கிரம் வாங்க…”
“சரிம்மா…. வரேன்….” என்றவர் மகளிடம் திரும்பி ,
“அக்கா… வந்துருக்கா இல்ல…. அவளையும் மாப்பிள்ளையும் வந்து கூப்பிடு….. என்ன….?
“ம்ம்ம்ம்… சரிப்பா” என்றாள்
அங்கே வாசலிலே மஹாவுக்குத் தடபுடலான வரவேற்பு. ரவிச்சந்திரன் மஹாலஷ்மியையும் அவளது கணவனையும் போய் அழைத்து வந்துவிட்டார்.
சுலோச்சனா ஆரத்தி எடுக்க, உள்ளே வந்தாள் மஹாலஷ்மி. மூன்று மாதம் கழித்துப் பிறந்த வீட்டிற்கு வந்தவளைக் குடும்பமே சூழ்ந்துக் கொண்டது.
அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்துக் கொடுத்தார் மோகனா. ஆண்கள் அனைவரும் வீட்டு மாப்பிள்ளையோடு பேசிக்கொண்டிருக்க , பெண்கள் அனைவரும் தனியே ஒரு மாநாடு நடத்தினர்.
“மஹா….. உங்க வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களாமா…..”
“எல்லாம் நல்லாயிருக்காங்கமா… ஆமா... அமுதன்,வத்சன்லாம் எங்க…?”
“அவனுங்க ரெண்டு பேருக்கும்… இன்னிக்கு ஸ்கூல்.. மஹா…..” எனச் சொன்னார் சுலோச்சனா.
“ஆயுஷ் குட்டி அத்தைக் கிட்ட வர மாட்டீங்களா….?.. ஏன் உம்முன்னு இருக்கீங்க…?” என அண்ணன் மகனைக் கை நீட்டி அழைக்க
அத்தையிடம் ஓடியவன், அவளிடம், “அத்த… இந்த மம்மி… என்னை அடிச்சிடுச்சு…..”எனப் புகார் வாசிக்க ,
“ஏன் ஹரிணி அடிச்ச….?”
“மஹா… உன் மருமகனுக்கு ஆப்பிள் ஐ.போன் கொடுத்தாதான் சாப்பாடு இறங்குது.. இதனால் நான் தான் ஆத்தாகிட்ட அரைப்படுறேன்… அதான்… போன் தர மாட்டேன்னு சொன்னேன்.. இவன் அடம்பிடிச்சானா….அதான் ஒன்னு வைச்சேன்..”
“ஏன் ஹரிணி.. குழந்தை மேல கை வைக்கிற…. சின்ன குழந்தைக்கு என்ன தெரியும்….. வாயால சொன்னா கேட்கப் போறான்..” எனச் சீரியசாக அட்வைஸ் செய்த மோகனாவை சிரிப்போடும் முறைப்போடும் பார்த்தாள் அவரது மகள் ப்ரியா.
“என்னடி.. அப்படி முறைக்கிற…?”
“ஏன் ப்ரிகுட்டி அம்மாவை முறைக்கிறீங்க…” என மஹா தன் குட்டித் தங்கையிடம் கேட்க ,
“இல்லக்கா…. நேத்து மட்டும் அண்ணாவை அடிச்சாங்க….. என்னைப் போன வாரம் ஃப்ரைடே அடிச்சாங்க… இப்ப மட்டும் இப்படி அடிக்க கூடாதுன்னு அண்ணிக்கிட்ட சொல்றாங்கல…”
“அடிச்ச கிழமை கூட ஞாபகம் இருக்கும்.. ஆனா ஏன் அடிச்சன்னு ஞாபகம் இருக்காது… அவன் சின்னகுழந்தைடி… உனக்குப் பத்து வயசாகப்போது…. இன்னமுமா நீ குழந்தை… நீ குட்டிப்பிசாசுடி.”
“ப்ச்.. விடு மோகனா….. பிள்ளைங்க மேல கை நீட்டாத…. அத்தைக்குப் பிடிக்காது…” எனச் சுலோச்சனா சொல்ல
“அக்கா… உங்க பாப்பா… எப்ப வெளியே வரும்…” எனப் ப்ரியா ஆர்வமாய்க் கேட்க
“அக்காவோட பாப்பா…. இன்னும் ஃபோர் மந்த்ஸ்ல வெளியே வரும் ப்ரிகுட்டி….”
“அப்போ…. நிறையா நாள் இருக்கா….”
“ஆமாடா…. உனக்கு லீவ் வரும்ல அப்போ பாப்பா வரும்..."
“பாப்பா… என்னை என்னச் சொல்லிக் கூப்பிடும்… அக்கா…”
“பாப்பா உன்னை சித்தின்னு கூப்பிடும்டா..”
“அப்போ… என்னை அத்த….” என ஆயுஷ் மழலைக் குரலில் கேட்க
“உன்னை பாப்பா மாமானு சொல்லனும் ஆயுஷ் …”
“மாமாவா…. அப்போ…. நான் பிக் பாயா…..?” எனக் கண்ணில் ஆர்வம் மின்னக் கேட்க ,
“ஆமா… பிக் பாய் தான்... நீ…”
“அப்போ… பாப்பாவ நீங்கத் தரீங்களா… நான் தூக்க….?” என ஆசையோடு வினவ ,
“டேய்… அது என் பாப்பா…. உனக்கு நான் தர மாட்டேன்….டா…” என அவனை விட நாலு வயது பெரியவளான ப்ரியா மல்லுக்கட்ட