? ராஜா ராணி
காதல் 1 :
“ நித்யானந்தா சச்சிதானந்தா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா
நாராயணா சாய் நாராயணா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா
ப்ரேம ஸ்வரூப்பா ப்ரேமனந்தா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா…”
என்று இனிமையான இறைவனின் துதி பாடும் இசை ஒரு பக்கம் மனதுக்கு இதம் தரும் வகையில் சாமி ரூமில் ஒலிக்க, அதற்கு நேர்மாறாக அந்த பெரிய வீட்டின் திண்ணையில் பஞ்சாயத்து நடந்துக் கொண்டிருந்தது.
ஆமாம்..!
பஞ்சாயத்துதான்…! அப்படித்தான் அந்த வீட்டின் இன்றைய தலைமுறையினர் சொல்வார்கள்.
அந்த வீட்டில் யாரெனும் தவறுச் செய்தால் திண்ணையில் தான் அவர்களை வைத்து விசாரிப்பார் அந்த வீட்டின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும் அந்த குடும்பத்தின் ஆலவிழுதுமான மதுரவல்லி ஸ்ரீனிவாசன்.
மதுரவல்லி பேரப்பிள்ளைகளைப் பொருத்த வரையில் தலைவலி. குடும்பத்தின் தலைவி. அவரது கணவர் ஸ்ரீனிவாசன் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் இருந்த போதும் சரி அவர் இறந்த பின்னும் சரி அந்த குடும்பத்தின் குடுமி அவர் கையில் தான்.
சோழ வள நாட்டின் தலை நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ளது அவர்களது வீடு ஸ்ரீ நிவாசம். ஸ்ரீ குரூப்ஸ் தஞ்சையின் தன்னிகரற்ற ஒர் குழுமம், ஸ்ரீ காபி, ஸ்ரீ சில்க்ஸ், ஸ்ரீ கிரானைட்ஸ், ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்று அவர்கள் குடும்பம் பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது.
மதுரவல்லியின் முன் முகத்தைத் தொங்கப் போட்டு நின்றன அந்த வீட்டின் வாரிசுகள் ஸ்ரீஆயுஷ் மற்றும் திருவமுதன்.
அவர்களின் எதிரில் பயத்தோடு நின்றிருந்தனர் அவர்களது தாய்மார்கள் ஹரிணியும் மோகனாவும்.
“எதுக்கு உன்னை காசு கட்டிப் படிக்க வைக்கிறது…..? இப்படி முட்டையும் மூணு மார்க்கும் வாங்கிட்டு வரதுக்கா….. என் புள்ளைங்கக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொட்டினா…… நீங்க நோகாம இருந்துட்டு படிக்க கூட வலிக்குது…..” என்று சத்தமாகக் கேட்டார் மதுரவல்லி.
அவர் சொல்வதும் சரிதான். ஒரே நாளில் உருவானவர்கள் அல்ல அவரது குடும்பம். அவரின் தியாகம், கணவரின் கடின உழைப்பு, பிள்ளைகளின் பொறுப்பு எல்லாம் சேர்ந்ததுதான் அவர்களது நிறுவனம்.
“அவன் தான் சின்னவன்… உனக்கு என்னடா… அமுதா……. இன்னும் இரண்டு வருசத்துல பத்தாங்களாஸ் எழுதனும்… அந்த நினைப்பு இருக்காடா… உங்கப்பன்லாம் எப்படிப் படிப்பான் தெரியுமா…. அவன் தங்க மெடலு……… இப்படியே போனா.. எங்க உருப்புடுவடா நீன்னு….?” என்று பெரியவனை அதட்டினார்.
அதன்பின் தனது இளைய மருமகள் மோகனாவிடம் திரும்பியவர், “இங்க பாரு…. மோகனா….. நீ எப்பப் பாத்தாலும் கதை புஸ்தகத்தை எடுத்து வைச்சுப் படிக்கிற… வேண்டாம்னு நான் சொல்லல…. அதே மாதிரி உன் புள்ளையும் அவன் பாடப்புஸ்தகத்தை எடுத்துப் படிக்கிறானானு பாரு… பார்த்தியா அவன் மார்க்க… எல்லாத்திலேயும் அறுபது தாண்டல… பத்தாக்குறைக்குக் கணக்குல கோட்டு…. மூணு மார்க் வாங்கிருக்கான்…” எனச் சொல்ல
“சரிங்க அத்தை.. நான் இவன கவனிச்சிக்கிறேன்….” என்றார் உள்குத்துடன்.
அவரது கவனிக்கிறேன் என்பதின் பொருள் உணர்ந்த மகனோ தாயை உண்மையான மோகினியைப் பார்ப்பது போல் பயத்தோடு பார்த்தான். போன முறை இப்படி கவனிக்கிறேன் என்று சொல்லி அழைத்துப் போன தாயார் நன்றாகச் சாத்தி எடுத்து விட்டார். உண்மையில் தனது தாத்தா ஏன் மோகனா என்று பெயர் வைத்தார் என்பதை அன்றுதான் உணர்ந்தான் அமுதன்.
பின்னே…! தர்ம அடியாயிற்றே…!!
அதன்பின் பேரனின் மனைவியான ஹரிணியை அனல் கக்கும் பார்வை பார்த்தவர்,
“உன் மனசில நீ என்ன நினைச்சிட்டு இருக்க…. ஹரிணி….. எப்ப பார்த்தாலும் செல்ஃபோனும் கையுமா இருக்க….. நீ கெட்டதும் இல்லாம சின்னப் புள்ளையும் சேர்த்துக் கெடுக்கிற…. நீ…. ஆயுஷ்….. என்னடான்னா செல்போன்ல விளையாடிக்கிட்டே இருக்கான்….. இதெல்லாம் சரியில்ல... உங்க அம்மா கிட்டப் போன் பண்ணிச் சொல்லனுமா… என்ன….?...” என மிரட்டும் தொனியில் கேட்க
ஹரிணி அரண்டு போய்விட்டாள். அவள் தந்தை கணேஷ் மிகவும் சாது.மகளென்றால் கொள்ளைப் பிரியம்.ஆனால் தாய் தீபாவோ ஒளி தரும் தீபமாகவும் இருப்பார் அதே நேரம் கோபம் வந்தால் எரிக்கும் தழலாகவும் இருப்பார். அதுவும் மதுரவல்லி தீபாவின் பெரியம்மா. பெரியம்மாவின் குடும்பம் என்பதால் தான் ஹரிணி ஸ்ரீராமை விரும்பியப் போது அதை அரேஞ்ச் மேரேஜாக நடத்திக் கொடுத்தார்.
அதே சமயம் மதுரவல்லியிடம் கெட்டப் பெயர் எடுக்கக் கூடாது என்பது ஹரிணிக்கு தீபா இட்டக் கட்டளை. புகுந்த வீட்டில் பெண்கள் நற்பெயர் எடுக்க வேண்டுமென்பது தாய்மார்களின் அவா அன்றோ…?
தாயின் கண்டிப்பை அறிந்தவள் உடனே அப்ரூவராக மாறி ,
“ஆத்தா…… சாரி ஆத்தா… நான்.. இனிமே இவனுக்குப் போன் தர மாட்டேன்…. ஒழுங்கா இவன் படிப்பான்.. அடுத்த தடவ க்ளாஸ் ப்ர்ஸ்ட் வந்துடுவான்….. அம்மா கிட்டச் சொல்லிடாதீங்க…..” எனப் பவ்யமாய் சொல்லிவிட்டு தன் மகனை இழுத்துக் கொண்டு போனாள். மோகனாவும் அவ்விடம் விட்டு அகல, திருவமுதன் தாயின் பின்னால் போக, மதுரம் போட்ட அதட்டலில் அப்படியே நின்று விட்டான்.
“ஏய்…… அமுதா… நீ எங்கப் போற…. நான் போன தரம் சொன்னது ஞாபகமில்ல உனக்கு……”
அந்த வாலுக்கா ஞாபகம் இல்லை.. இருந்தும் மழுப்பலாக “என்ன ஆத்தா….” என்று முகத்தைச் சுருக்கி…. தலையில் கை வைத்து யோசிப்பது போல் செய்தான்.
“ம்ம்…. அடுத்த தரவ பாஸ் பண்ணலன்னா….. நம்ம தோட்டத்துத் தென்னை மரத்துக்கு தண்ணித் தூக்கித் தெனைக்கும் நீதான் ஊத்தனும்னு சொன்னேன்…. பேராண்டி தினமும் வல்லாரைக் கீரை சாப்பிடுறவ டா படுவா.... உன் தகிடத் தத்தம்லாம் பலிக்காதுடா…”
“ஆத்தா.. ப்ளீஸ்…. ஆத்தா… அடுத்தத் தடவக் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன் ஆத்தா…. இந்த தடவ விட்டுடு ஆத்தா… இருபத்தைஞ்சு மரத்துக்கு ஊத்துன்னா நான் நாளைக்குப் ஸ்கூல் போக முடியாது ஆத்தா…..” என அவரின் கீழ் உட்கார்ந்துக் கெஞ்ச ,
அவர் அசராமல், “சரி அப்போ… போய்… அந்த கொல்லையில புல் அறுத்துட்டு வாடா…. நம்ம கஸ்தூரிக்குப் போட….” என அடுத்த குண்டைப் போட
“அய்யோ…. ஆத்தா புல் அறுக்கிறதா…. கையெல்லாம் எரியும்… நான் அரிக்கறப் புல்ல கஸ்தூரிக்கு எப்படிப் பத்தும்.. நம்ம பாட்ஷாக்குக் கூட பத்தாது….” என்றான்
கஸ்தூரி அவர்கள் வீட்டின் பசு. பாட்ஷா பசுவின் கன்னுக்குட்டி. சிறுவனான அவன் கொண்டு வரும் புல் அந்த கஸ்தூரிக்குப் பத்தாது என்பதை மதுரமும் அறிவார்.
“படிக்கிறத விட இதெல்லாம் கஷ்டம்னு தெரியுதுல்ல… அப்புறம் ஏன் படிக்க வலிக்குது ராசா உனக்கு… ஒழுங்கு மரியாதையா நான் சொன்னதுல்ல எதாவது ஒன்ன செய்யுற… போ… எல்லாத்துக்கும் ஒரு தடவத் தான் மன்னிக்க முடியும்…… அடுத்த தடவ பாஸ் பண்ணு… ஆனா இந்த தடவ செஞ்ச தப்புக்குத் தண்டனையை அனுபவி…..” என்றார் உத்தரவிடும் குரலில்.
அந்த குரலில் சொல்லிவிட்டால் சொன்னது சொன்னதுதான் என்பதை வீட்டில் உள்ள அனைவரும் அறிவர். வேறு வழியின்றி தென்னை மரத்துக்குத் தண்ணீர் தூக்கி ஊற்றப் போனான்.
அடுத்து தனது மூத்த மருமகள் சுலோச்சனாவை அழைத்தவர் ,
“எங்கே உன் செல்லப் புள்ளையைக் காணோம்…. ஆபிஸ் பக்கம் வரலன்னா நாளைக்கு அவனுக்கு வீட்ல சோறுக் கிடையாதுன்னு சொல்லிவை.. ராமும் அவன மாறிதான….. அவன் பொறுப்பா இருக்கான்… இவனுக்கு என்ன நோவுதாம்…… எல்லாம் நீ கொடுக்கிற இடம்…”
“அப்புறம்… உன் மருமகளைக் கொஞ்சம் கண்டிச்சு வை…. என்ன புள்ள வளர்கிறா அவ… ஃபோனும் கையுமாதான் சுத்துறா… ஆயுஷ் போனத் தடவ ஐஞ்சாவது மார்க் வாங்கினான்… இப்போ பதினைஞ்சாவது மார்க்… என் வீட்டு வாரிசு…. இப்படித்தான் படிக்கிறதா… ஒழுங்கா எல்லாத்தையும் கவனி சுலோ..” என அவருக்கும் டோஸ் விட்டு அனுப்பினார்.
சமையலறைக்குள் நடந்த அந்த மாநாட்டில் குமுறிக்கொண்டிருந்தார் மோகனா. மாமியாரிடம் திட்டு வாங்கியப் பின் எப்போதும் இப்படி சமையலறைக்குள் சென்று தங்களுக்குள் புலம்புவது அவர்களது வாடிக்கை.
“அவனால நான் திட்டு வாங்கிறேன் அக்கா… மேக்ஸ் போட்டாதான் என்னவாம்… அவனுக்கு… அட்லீஸ்ட் பாஸ் மார்காவது வாங்க வேண்டாம்.. இப்போ அத்தைக்கிட்ட அரைப்பட்டது போதாதுன்னு உங்க கொழுந்தன் வேற வந்து கரிச்சிக் கொட்டுவாரு….” எனக் கேரட்டை வாணலியில் கொட்டியவாறே தனது ஆதங்கத்தையும் கொட்டினார்.
“இன்னும் வத்சன் வரல… அவன் எவ்வளவு மார்க் வாங்கிருக்கானோ தெரியல… பன்னிரெண்டாவது வேற… அடுத்தக் கோட்டா எனக்குத்தான்….” எனத் தேங்காயைத் துருவிக் கொண்டே புலம்பினார் பூம்பொழில், மதுரத்தின் இரண்டாவது மருமகள்.
மதுரவல்லியின் மூத்த மகன் ஸ்ரீரவிச்சந்திரன். அவரது மனைவி சுலோச்சனா. அவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் ஸ்ரீராம்.அவன் மனைவிதான் ஹரிணி. ஸ்ரீஆயுஷ் அவர்களின் வாரிசு. மதுரவல்லியின் கொள்ளுப் பேரன்.
ஸ்ரீராமின் தம்பி ஸ்ரீசரண். இருபத்தைந்து வயது புதிய தலைமுறை இளைஞன். எம்.பி.ஏ முடித்து விட்டுச் சுற்றும் வேலையில்லா பட்டதாரி. உண்மையில் வேலைக்குச் செல்ல விரும்பாதப் பட்டதாரி.
இரண்டாமவர் மதுரத்தின் செல்லப் பிள்ளை சிவச்சந்திரன். அவரது துணைவி பூம்பொழில். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் மஹாலஷ்மி. அவளுக்கு திருமணமாகி தற்போது ஐந்து மாதமாக இருக்கிறாள். அடுத்து மதுரவசனி. கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அவளது தம்பி ஸ்ரீவத்சன். பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன்.
அடுத்து மதுரத்தின் சின்ன மகன் கார்த்திக்கேயன். அவர்தான் மோகனாவின் கணவர். அந்த வீட்டில் முதல் வாரிசுகளுக்கு ஸ்ரீ என்று தொடங்கும் பெயரை வைப்பது வழக்கம். தமிழ்க்கடவுளின் பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ கார்த்திக்கேயனுக்குத் தமிழ்ப்பற்று அதிகம். ஆகையினாலே தனது மகனுக்கு ஸ்ரீ என்று பொருள் படும்படியாகத் திருவமுதன் என்று பெயரைச் சூட்டினார். திருவமுதனுக்கு ஒரு தங்கை ப்ரியா.
“நீயாவது பரவாயில்ல பொழில்… என்னைப் பாரு… பேரன் படிக்காததுக்கெல்லாம் திட்டு விழுது….” என நொந்துக் கொண்டார் சுலோச்சனா.
அப்போது “அத்தை…………..” என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அவரது மருமகள் ஹரிணி.
“அத்தை… அம்மாக்கிட்ட ஆத்தா சொல்லிடுவாங்களா…”
“உனக்கு உன் கவலை…” என மோகனா சொல்ல
“ப்ச்… போங்க மோகி அத்தை…. அம்மா பத்தி உங்களுக்குத் தெரியாது….. ஆத்தாவுக்கு மேல சாமியாடுவாங்க….”
மோகனாவோ, “அதான் தெரியுமே.. உங்க அம்மா தீப்பொறி தீபான்னு…. இரண்டாம் மதுரவல்லியாச்சே…” என மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
“நீ கவலைப்படாத ஹரிணிம்மா.. நான் தீபா கிட்டப் பேசறேன்.. அத்தை எப்போவும் ஒரு வாய்ப்புக் கொடுப்பாங்க….. உன்னை மாட்டி விடமாட்டாங்க… ஆனாலும்…. நீயும் ஆயுஷ் கிட்டப் போனக் கொடுக்காதா…” என சுலோச்சனா அறிவுறுத்த
“நான் என்னத்த செய்றது… ஃபோனைக் காமிச்சாதான் இவன் சாப்பிடுறான்… க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் விளையாட விட்டாதான் ஹொம்வொர்க் செய்வேன்னு சொல்றான்…. உங்க பேரன் எங்க என் பேச்ச கேட்கிறான்…?” என்று அலுத்துப் போனக் குரலில் சொன்னாள் ஹரிணி.
“ஹரிணி… அதெல்லாம் குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க…. டெய்லி ஓடி விளையாண்டா தானா பசிக்க ஆரம்பிச்சிடும்… அவன விளையாட விடு….. நீயும் போனும் கையுமா அத்தை முன்னாடி இருக்காத…” என்றார் பூம்பொழில்.
“சரிங்க அத்தை…” என்று தலையாட்டி விட்டுச் சென்றாள் ஹரிணி.
கல்லூரி விட்டு வீட்டுக்குள் நுழைந்த மதுரவசனி வீட்டில் நிலவிய அமைதியைக் கண்டு அதிசயித்து, தனது அறையில் பையை வைத்து விட்டு, சமையல் கட்டிற்குள் நுழைந்தாள்.
“அட மகளிர் அணி இங்க தான் இருக்கீங்களா…? என்ன வீட்டில யாரையுமே காணோம்… ஆத்தா கோவிலுக்குப் போயிருக்கும்… மத்தவங்களாம் எங்க…?” என்றவள் அங்கிருந்தக் கடலை உருண்டையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
காதல் 1 :
“ நித்யானந்தா சச்சிதானந்தா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா
நாராயணா சாய் நாராயணா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா
ப்ரேம ஸ்வரூப்பா ப்ரேமனந்தா
ஹரி ஹரி ஹரி ஓம் நாராயணா…”
என்று இனிமையான இறைவனின் துதி பாடும் இசை ஒரு பக்கம் மனதுக்கு இதம் தரும் வகையில் சாமி ரூமில் ஒலிக்க, அதற்கு நேர்மாறாக அந்த பெரிய வீட்டின் திண்ணையில் பஞ்சாயத்து நடந்துக் கொண்டிருந்தது.
ஆமாம்..!
பஞ்சாயத்துதான்…! அப்படித்தான் அந்த வீட்டின் இன்றைய தலைமுறையினர் சொல்வார்கள்.
அந்த வீட்டில் யாரெனும் தவறுச் செய்தால் திண்ணையில் தான் அவர்களை வைத்து விசாரிப்பார் அந்த வீட்டின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும் அந்த குடும்பத்தின் ஆலவிழுதுமான மதுரவல்லி ஸ்ரீனிவாசன்.
மதுரவல்லி பேரப்பிள்ளைகளைப் பொருத்த வரையில் தலைவலி. குடும்பத்தின் தலைவி. அவரது கணவர் ஸ்ரீனிவாசன் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர் இருந்த போதும் சரி அவர் இறந்த பின்னும் சரி அந்த குடும்பத்தின் குடுமி அவர் கையில் தான்.
சோழ வள நாட்டின் தலை நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ளது அவர்களது வீடு ஸ்ரீ நிவாசம். ஸ்ரீ குரூப்ஸ் தஞ்சையின் தன்னிகரற்ற ஒர் குழுமம், ஸ்ரீ காபி, ஸ்ரீ சில்க்ஸ், ஸ்ரீ கிரானைட்ஸ், ஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்று அவர்கள் குடும்பம் பல துறைகளில் முன்னிலை வகிக்கிறது.
மதுரவல்லியின் முன் முகத்தைத் தொங்கப் போட்டு நின்றன அந்த வீட்டின் வாரிசுகள் ஸ்ரீஆயுஷ் மற்றும் திருவமுதன்.
அவர்களின் எதிரில் பயத்தோடு நின்றிருந்தனர் அவர்களது தாய்மார்கள் ஹரிணியும் மோகனாவும்.
“எதுக்கு உன்னை காசு கட்டிப் படிக்க வைக்கிறது…..? இப்படி முட்டையும் மூணு மார்க்கும் வாங்கிட்டு வரதுக்கா….. என் புள்ளைங்கக் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொட்டினா…… நீங்க நோகாம இருந்துட்டு படிக்க கூட வலிக்குது…..” என்று சத்தமாகக் கேட்டார் மதுரவல்லி.
அவர் சொல்வதும் சரிதான். ஒரே நாளில் உருவானவர்கள் அல்ல அவரது குடும்பம். அவரின் தியாகம், கணவரின் கடின உழைப்பு, பிள்ளைகளின் பொறுப்பு எல்லாம் சேர்ந்ததுதான் அவர்களது நிறுவனம்.
“அவன் தான் சின்னவன்… உனக்கு என்னடா… அமுதா……. இன்னும் இரண்டு வருசத்துல பத்தாங்களாஸ் எழுதனும்… அந்த நினைப்பு இருக்காடா… உங்கப்பன்லாம் எப்படிப் படிப்பான் தெரியுமா…. அவன் தங்க மெடலு……… இப்படியே போனா.. எங்க உருப்புடுவடா நீன்னு….?” என்று பெரியவனை அதட்டினார்.
அதன்பின் தனது இளைய மருமகள் மோகனாவிடம் திரும்பியவர், “இங்க பாரு…. மோகனா….. நீ எப்பப் பாத்தாலும் கதை புஸ்தகத்தை எடுத்து வைச்சுப் படிக்கிற… வேண்டாம்னு நான் சொல்லல…. அதே மாதிரி உன் புள்ளையும் அவன் பாடப்புஸ்தகத்தை எடுத்துப் படிக்கிறானானு பாரு… பார்த்தியா அவன் மார்க்க… எல்லாத்திலேயும் அறுபது தாண்டல… பத்தாக்குறைக்குக் கணக்குல கோட்டு…. மூணு மார்க் வாங்கிருக்கான்…” எனச் சொல்ல
“சரிங்க அத்தை.. நான் இவன கவனிச்சிக்கிறேன்….” என்றார் உள்குத்துடன்.
அவரது கவனிக்கிறேன் என்பதின் பொருள் உணர்ந்த மகனோ தாயை உண்மையான மோகினியைப் பார்ப்பது போல் பயத்தோடு பார்த்தான். போன முறை இப்படி கவனிக்கிறேன் என்று சொல்லி அழைத்துப் போன தாயார் நன்றாகச் சாத்தி எடுத்து விட்டார். உண்மையில் தனது தாத்தா ஏன் மோகனா என்று பெயர் வைத்தார் என்பதை அன்றுதான் உணர்ந்தான் அமுதன்.
பின்னே…! தர்ம அடியாயிற்றே…!!
அதன்பின் பேரனின் மனைவியான ஹரிணியை அனல் கக்கும் பார்வை பார்த்தவர்,
“உன் மனசில நீ என்ன நினைச்சிட்டு இருக்க…. ஹரிணி….. எப்ப பார்த்தாலும் செல்ஃபோனும் கையுமா இருக்க….. நீ கெட்டதும் இல்லாம சின்னப் புள்ளையும் சேர்த்துக் கெடுக்கிற…. நீ…. ஆயுஷ்….. என்னடான்னா செல்போன்ல விளையாடிக்கிட்டே இருக்கான்….. இதெல்லாம் சரியில்ல... உங்க அம்மா கிட்டப் போன் பண்ணிச் சொல்லனுமா… என்ன….?...” என மிரட்டும் தொனியில் கேட்க
ஹரிணி அரண்டு போய்விட்டாள். அவள் தந்தை கணேஷ் மிகவும் சாது.மகளென்றால் கொள்ளைப் பிரியம்.ஆனால் தாய் தீபாவோ ஒளி தரும் தீபமாகவும் இருப்பார் அதே நேரம் கோபம் வந்தால் எரிக்கும் தழலாகவும் இருப்பார். அதுவும் மதுரவல்லி தீபாவின் பெரியம்மா. பெரியம்மாவின் குடும்பம் என்பதால் தான் ஹரிணி ஸ்ரீராமை விரும்பியப் போது அதை அரேஞ்ச் மேரேஜாக நடத்திக் கொடுத்தார்.
அதே சமயம் மதுரவல்லியிடம் கெட்டப் பெயர் எடுக்கக் கூடாது என்பது ஹரிணிக்கு தீபா இட்டக் கட்டளை. புகுந்த வீட்டில் பெண்கள் நற்பெயர் எடுக்க வேண்டுமென்பது தாய்மார்களின் அவா அன்றோ…?
தாயின் கண்டிப்பை அறிந்தவள் உடனே அப்ரூவராக மாறி ,
“ஆத்தா…… சாரி ஆத்தா… நான்.. இனிமே இவனுக்குப் போன் தர மாட்டேன்…. ஒழுங்கா இவன் படிப்பான்.. அடுத்த தடவ க்ளாஸ் ப்ர்ஸ்ட் வந்துடுவான்….. அம்மா கிட்டச் சொல்லிடாதீங்க…..” எனப் பவ்யமாய் சொல்லிவிட்டு தன் மகனை இழுத்துக் கொண்டு போனாள். மோகனாவும் அவ்விடம் விட்டு அகல, திருவமுதன் தாயின் பின்னால் போக, மதுரம் போட்ட அதட்டலில் அப்படியே நின்று விட்டான்.
“ஏய்…… அமுதா… நீ எங்கப் போற…. நான் போன தரம் சொன்னது ஞாபகமில்ல உனக்கு……”
அந்த வாலுக்கா ஞாபகம் இல்லை.. இருந்தும் மழுப்பலாக “என்ன ஆத்தா….” என்று முகத்தைச் சுருக்கி…. தலையில் கை வைத்து யோசிப்பது போல் செய்தான்.
“ம்ம்…. அடுத்த தரவ பாஸ் பண்ணலன்னா….. நம்ம தோட்டத்துத் தென்னை மரத்துக்கு தண்ணித் தூக்கித் தெனைக்கும் நீதான் ஊத்தனும்னு சொன்னேன்…. பேராண்டி தினமும் வல்லாரைக் கீரை சாப்பிடுறவ டா படுவா.... உன் தகிடத் தத்தம்லாம் பலிக்காதுடா…”
“ஆத்தா.. ப்ளீஸ்…. ஆத்தா… அடுத்தத் தடவக் கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன் ஆத்தா…. இந்த தடவ விட்டுடு ஆத்தா… இருபத்தைஞ்சு மரத்துக்கு ஊத்துன்னா நான் நாளைக்குப் ஸ்கூல் போக முடியாது ஆத்தா…..” என அவரின் கீழ் உட்கார்ந்துக் கெஞ்ச ,
அவர் அசராமல், “சரி அப்போ… போய்… அந்த கொல்லையில புல் அறுத்துட்டு வாடா…. நம்ம கஸ்தூரிக்குப் போட….” என அடுத்த குண்டைப் போட
“அய்யோ…. ஆத்தா புல் அறுக்கிறதா…. கையெல்லாம் எரியும்… நான் அரிக்கறப் புல்ல கஸ்தூரிக்கு எப்படிப் பத்தும்.. நம்ம பாட்ஷாக்குக் கூட பத்தாது….” என்றான்
கஸ்தூரி அவர்கள் வீட்டின் பசு. பாட்ஷா பசுவின் கன்னுக்குட்டி. சிறுவனான அவன் கொண்டு வரும் புல் அந்த கஸ்தூரிக்குப் பத்தாது என்பதை மதுரமும் அறிவார்.
“படிக்கிறத விட இதெல்லாம் கஷ்டம்னு தெரியுதுல்ல… அப்புறம் ஏன் படிக்க வலிக்குது ராசா உனக்கு… ஒழுங்கு மரியாதையா நான் சொன்னதுல்ல எதாவது ஒன்ன செய்யுற… போ… எல்லாத்துக்கும் ஒரு தடவத் தான் மன்னிக்க முடியும்…… அடுத்த தடவ பாஸ் பண்ணு… ஆனா இந்த தடவ செஞ்ச தப்புக்குத் தண்டனையை அனுபவி…..” என்றார் உத்தரவிடும் குரலில்.
அந்த குரலில் சொல்லிவிட்டால் சொன்னது சொன்னதுதான் என்பதை வீட்டில் உள்ள அனைவரும் அறிவர். வேறு வழியின்றி தென்னை மரத்துக்குத் தண்ணீர் தூக்கி ஊற்றப் போனான்.
அடுத்து தனது மூத்த மருமகள் சுலோச்சனாவை அழைத்தவர் ,
“எங்கே உன் செல்லப் புள்ளையைக் காணோம்…. ஆபிஸ் பக்கம் வரலன்னா நாளைக்கு அவனுக்கு வீட்ல சோறுக் கிடையாதுன்னு சொல்லிவை.. ராமும் அவன மாறிதான….. அவன் பொறுப்பா இருக்கான்… இவனுக்கு என்ன நோவுதாம்…… எல்லாம் நீ கொடுக்கிற இடம்…”
“அப்புறம்… உன் மருமகளைக் கொஞ்சம் கண்டிச்சு வை…. என்ன புள்ள வளர்கிறா அவ… ஃபோனும் கையுமாதான் சுத்துறா… ஆயுஷ் போனத் தடவ ஐஞ்சாவது மார்க் வாங்கினான்… இப்போ பதினைஞ்சாவது மார்க்… என் வீட்டு வாரிசு…. இப்படித்தான் படிக்கிறதா… ஒழுங்கா எல்லாத்தையும் கவனி சுலோ..” என அவருக்கும் டோஸ் விட்டு அனுப்பினார்.
சமையலறைக்குள் நடந்த அந்த மாநாட்டில் குமுறிக்கொண்டிருந்தார் மோகனா. மாமியாரிடம் திட்டு வாங்கியப் பின் எப்போதும் இப்படி சமையலறைக்குள் சென்று தங்களுக்குள் புலம்புவது அவர்களது வாடிக்கை.
“அவனால நான் திட்டு வாங்கிறேன் அக்கா… மேக்ஸ் போட்டாதான் என்னவாம்… அவனுக்கு… அட்லீஸ்ட் பாஸ் மார்காவது வாங்க வேண்டாம்.. இப்போ அத்தைக்கிட்ட அரைப்பட்டது போதாதுன்னு உங்க கொழுந்தன் வேற வந்து கரிச்சிக் கொட்டுவாரு….” எனக் கேரட்டை வாணலியில் கொட்டியவாறே தனது ஆதங்கத்தையும் கொட்டினார்.
“இன்னும் வத்சன் வரல… அவன் எவ்வளவு மார்க் வாங்கிருக்கானோ தெரியல… பன்னிரெண்டாவது வேற… அடுத்தக் கோட்டா எனக்குத்தான்….” எனத் தேங்காயைத் துருவிக் கொண்டே புலம்பினார் பூம்பொழில், மதுரத்தின் இரண்டாவது மருமகள்.
மதுரவல்லியின் மூத்த மகன் ஸ்ரீரவிச்சந்திரன். அவரது மனைவி சுலோச்சனா. அவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் ஸ்ரீராம்.அவன் மனைவிதான் ஹரிணி. ஸ்ரீஆயுஷ் அவர்களின் வாரிசு. மதுரவல்லியின் கொள்ளுப் பேரன்.
ஸ்ரீராமின் தம்பி ஸ்ரீசரண். இருபத்தைந்து வயது புதிய தலைமுறை இளைஞன். எம்.பி.ஏ முடித்து விட்டுச் சுற்றும் வேலையில்லா பட்டதாரி. உண்மையில் வேலைக்குச் செல்ல விரும்பாதப் பட்டதாரி.
இரண்டாமவர் மதுரத்தின் செல்லப் பிள்ளை சிவச்சந்திரன். அவரது துணைவி பூம்பொழில். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் மஹாலஷ்மி. அவளுக்கு திருமணமாகி தற்போது ஐந்து மாதமாக இருக்கிறாள். அடுத்து மதுரவசனி. கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். அவளது தம்பி ஸ்ரீவத்சன். பன்னிரெண்டாவது படிக்கும் மாணவன்.
அடுத்து மதுரத்தின் சின்ன மகன் கார்த்திக்கேயன். அவர்தான் மோகனாவின் கணவர். அந்த வீட்டில் முதல் வாரிசுகளுக்கு ஸ்ரீ என்று தொடங்கும் பெயரை வைப்பது வழக்கம். தமிழ்க்கடவுளின் பெயரை வைத்திருப்பதாலோ என்னவோ கார்த்திக்கேயனுக்குத் தமிழ்ப்பற்று அதிகம். ஆகையினாலே தனது மகனுக்கு ஸ்ரீ என்று பொருள் படும்படியாகத் திருவமுதன் என்று பெயரைச் சூட்டினார். திருவமுதனுக்கு ஒரு தங்கை ப்ரியா.
“நீயாவது பரவாயில்ல பொழில்… என்னைப் பாரு… பேரன் படிக்காததுக்கெல்லாம் திட்டு விழுது….” என நொந்துக் கொண்டார் சுலோச்சனா.
அப்போது “அத்தை…………..” என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு உள்ளே வந்தாள் அவரது மருமகள் ஹரிணி.
“அத்தை… அம்மாக்கிட்ட ஆத்தா சொல்லிடுவாங்களா…”
“உனக்கு உன் கவலை…” என மோகனா சொல்ல
“ப்ச்… போங்க மோகி அத்தை…. அம்மா பத்தி உங்களுக்குத் தெரியாது….. ஆத்தாவுக்கு மேல சாமியாடுவாங்க….”
மோகனாவோ, “அதான் தெரியுமே.. உங்க அம்மா தீப்பொறி தீபான்னு…. இரண்டாம் மதுரவல்லியாச்சே…” என மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
“நீ கவலைப்படாத ஹரிணிம்மா.. நான் தீபா கிட்டப் பேசறேன்.. அத்தை எப்போவும் ஒரு வாய்ப்புக் கொடுப்பாங்க….. உன்னை மாட்டி விடமாட்டாங்க… ஆனாலும்…. நீயும் ஆயுஷ் கிட்டப் போனக் கொடுக்காதா…” என சுலோச்சனா அறிவுறுத்த
“நான் என்னத்த செய்றது… ஃபோனைக் காமிச்சாதான் இவன் சாப்பிடுறான்… க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் விளையாட விட்டாதான் ஹொம்வொர்க் செய்வேன்னு சொல்றான்…. உங்க பேரன் எங்க என் பேச்ச கேட்கிறான்…?” என்று அலுத்துப் போனக் குரலில் சொன்னாள் ஹரிணி.
“ஹரிணி… அதெல்லாம் குழந்தைங்க அப்படிதான் இருப்பாங்க…. டெய்லி ஓடி விளையாண்டா தானா பசிக்க ஆரம்பிச்சிடும்… அவன விளையாட விடு….. நீயும் போனும் கையுமா அத்தை முன்னாடி இருக்காத…” என்றார் பூம்பொழில்.
“சரிங்க அத்தை…” என்று தலையாட்டி விட்டுச் சென்றாள் ஹரிணி.
கல்லூரி விட்டு வீட்டுக்குள் நுழைந்த மதுரவசனி வீட்டில் நிலவிய அமைதியைக் கண்டு அதிசயித்து, தனது அறையில் பையை வைத்து விட்டு, சமையல் கட்டிற்குள் நுழைந்தாள்.
“அட மகளிர் அணி இங்க தான் இருக்கீங்களா…? என்ன வீட்டில யாரையுமே காணோம்… ஆத்தா கோவிலுக்குப் போயிருக்கும்… மத்தவங்களாம் எங்க…?” என்றவள் அங்கிருந்தக் கடலை உருண்டையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.