Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 4

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 4

யமுனா மற்றும் அவளுடைய குழு ப்ரெசென்தேஷன் முடித்து விட்டு அமரச் செய்தனர் அப்போது யமுனாவை இரண்டு கண்கள் அலசிக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை அந்த இரண்டு கண்ணின் சொந்தக்காரன் ஆன சத்ய தேவ் யமுனாவை கைக்காட்டி அவனின் பியெ விடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். காலையில் ஆரம்பித்த கான்பரன்ஸ் இரவு வரை நீடித்தது. இரவு டின்னர் காக ஒரு மணிநேரம் இடைவேளி விட்டார்கள். அப்போது யமுனா வாஷ்ரூம் சென்று விட்டு வெளியே வரும் போது திவ்யாவிடம் இருந்து போன் வந்தது.

சொல்லு திவி என்ன ஆச்சு இப்போ உடம்பு பரவாயில்லையா என்று கேட்டாள்.அவளிடம் இருந்து பதிலே வரவில்லை என்ன ஆச்சு டி சொல்லு என்றாள் யமுனா டாக்டர் வந்து என்னை செக் பண்ணாங்கடி நா ப்ரெக்நென்ட்டா இருக்கிறதா சொன்னாங்க என்று அழுதாள். நான் உயிரோடு இருக்கிறது அர்த்தமே இல்லை யமுனா அதற்கு சாகுறதே மேல் என்றாள்.

"என்னடி இவ்வளவு ஈஸியா சொல்ற நம்ம நியாயம் கேட்கலாம் ஆனால் நீ ஏன்டீ இந்த ஆம்பளைங்கல நம்புற ஒரு பொண்ணுக்கு உயிர விட கற்பு தான் முக்கியம் அதயே தொலைச்சிட்டு வந்திருக்க. சேரி நான் உன்கிட்ட வந்து பேசுற இங்க கான்பரன்ஸ்ல இருக்க என்று கால் கட் பண்ண போனாள். யமுனா ஒரு நிமிஷம் இன்னொரு விஷயம். என்னடி சீக்கிரம் சொல்லு என்றாள் அது வந்து என் கம்பெனி சிஇஓ அங்க பார்க் ஹையாத்ல உன்னோட கான்பரன்ஸ்ல தான் இருக்காராம் உன்ன பாக்கனும்னு சொல்ராரு டி. என்னது உன்னோட சிஇஓ என்ன பாக்கனும்மா எதுக்கு? நான் என் கம்பெனி சிஇஓ வே பார்த்தது இல்ல டி எதுக்கு இவர பார்க்கனும் என்னால முடியாது என்றாள். "அவரே என்கிட்ட கால் பண்ணி கேட்டுருக்கார் ப்ளீஸ் டி எனக்காக என்று கெஞ்சினாள்.

ஒரு வேள நம்மளோட ப்ரெசென்தேஷன் பத்தி எதாவது இருக்குமோ என்று யோசித்தவள் சேரி என்றாள். அவர் எங்க இருக்கார்னு சொல்லு என்றாள். அவர் உன்னை இந்த ஹோட்டல் ரிசப்ஷனில் வைட் பண்ண சொல்லிர்காரு ப்ளீஸ் எனக்காக பண்ணிடு என்றாள்.

சேரி என்று ஹோட்டல் ரிசப்ஷனில் வைட் பண்ணிட்டிருந்த யமுனா விற்கு மனது ஏதொ படபடவென்று அடித்தது. ஏதோ தைரியத்தில் வந்துட்டோம் ஆனால் பயமா இருக்கே என்று எண்ணினாள் அப்போது ஹாய் யமுனா! என்று கம்பீரமான ஆண் குரல் அவள் முன்னே அமருவதைக் கண்டவள் அதிர்ந்தாள். அந்த ஆறடி ஆணழகன் தான் திவ்யா ஆபிஸ் சிஇஓ வா? ஹலொ யமுனா! ஐ அம் சத்யதேவ் "சத்யா குருப் ஆப் கம்பெனீஸ்" எம்டி அன்ந் சிஇஓ என்றான். ஹலோ சார் என்றாள் மரியாதைக்காக.

"நீ திவ்யாவிற்கு யாரு? உன்ன போன வாரம் என் ஆபிஸ் கீழ பாத்த திவ்யாவ பிக் அப் பண்ண வந்த." நான் திவ்யாவோட பிரண்ட் சார் நானும் அவளும் ஒரே ஹாஸ்டலில் தான் இருக்கிறோம் அவ ரொம்ப நல்ல பொண்ணு அவளையும் அவ குணாவும் சேர்த்து வெச்சிருங்க ப்ளீஸ் என்றாள். திவாகர் யாரு உனக்கு என்று கேட்டான். இந்த கேள்வியில் அதிர்ந்த யமுனா " திவாகர் என்னுடைய மாமா மகன் உங்களுக்கு எப்படி தெரியும் சார் திவா அத்தான் பத்தி என்று கேட்டாள்." டாம் இட்! என்று உறுமினான் அப்போ நீ தான் அந்த திவாகரின் காதலி கரெக்ட் ஆ என்று கர்ஜித்தான். என்னது காதலா எனக்கு திவா அத்தான் பிடிக்கும் அவ்வளவு தான் காதல் லாம் இல்ல அப்படியே நாங்க காதலிச்சாலும் உங்களுக்கு என்ன நீங்க திவ்யா பத்தி யோசிச்சு பாருங்க சார் என்றாள். லுக் மிஸ் யமுனா நீ திவாகருக்கு காதலியாவே இருந்தாலும் பரவால திவாகர் பிரியாவ தான் கல்யாணம் பண்ணணும். அப்படி அவன் பண்ணல நீயும் சேரி அந்த திவாகரும் சேரி உயிரோட இருக்க மாட்டீங்க என்று கத்திவிட்டு கிளம்பினான்.

யமுனா விற்கு மண்டையே குளம்பியது. அந்த நிமிடம் உக்கார்ந்து யோசித்தவள் திவாகருக்கு கால் பண்ணினாள். "யமுனா நானே சென்னைக்கு தான் வந்துட்டு இருக்கேன். உன் ஹாஸ்டல் முகவரி எஸ்எம்எஸ் அனுப்பு என்று காலை கட் செய்து விட்டான். அவளும் அனுப்பினாள்.

நாம் திவ்யாவைப் பற்றி பேச நினைத்தோம் இவர் என்ன புது கதை சொல்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தாள் யமுனா.

~மாயம் செய்ய வருவான் ~
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

வந்துடுச்சா வந்துடுச்சா நான் சொன்ன மாதிரி திவ்யாவுக்கு பேபி வந்துடுச்சா?
ஆனால் திவ்யாவின் வாழ்க்கைக்கும் யமுனாவுக்கும் அவளுடைய மாமா பையனுக்கும் என்ன சம்பந்தம்?
மண்டையைப் பிச்சிக்க வைக்கறீங்களே
ஒருவேளை விஜயலட்சுமி பயந்த மாதிரியே சேகர் மாமா பையன் திவாகர் யமுனாவைத்தான் லவ் பண்ணுறானா?
ஆனால் பிரியா யாரு?
அவளுக்காக சத்யதேவ் யமுனாவை ஏன் மிரட்டுறான்?
யமுனாவுக்கு மட்டுமில்லை எனக்கும் மண்டை குழம்புது
 
Top