Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.22-2

Advertisement

மண்டபம் சென்ற பிறகு,"ஏன்? வேணி உன் மருமகள் கழுத்துல ஒன்னையும் காணோம், வாங்கி போட்டு கூட்டிட்டு வர கூடாது."என்று வேணியின் அத்தை ஒருவர் கேட்ட பிறகு தான்.சர்வாவுமே பெண்ணின் கழுத்தை ஆராய்ந்தான்.

அவன் போட்டு விட்டிருந்த தாலிக்கொடியில் மாங்கல்யத்தை கோர்த்து அணிந்திருந்தவள்.திருமணத்திற்கு சரவணன் பரிசளித்திருந்த ஒரு நெக்லஸை மட்டுமே அணிந்திருந்தாள்.அதிலும் பெண் அத்தனை பாந்தமாக தான் தெரிந்தாள்.



வீட்டில் எப்படி இருந்தாலும்.வேணி மருமகளை அங்கு விட்டு தரவில்லை."அது அத்தை மத்தவங்களை மாதிரி அவளுக்கு அவ்ளோவா நகையை அள்ளி போட்டுக்குறது பிடிக்கிறது இல்லை,எப்பவும் சிம்பிள் தான்,"

"என்னை கூட கம்மியா தான் போட சொன்னா ,நான் தான் நீயும் போடலை ,நானும் போடலைனா,பாக்குறவங்க தப்பா பேசுவாங்கன்னு சொன்னேன்."

"அதுக்கும் அவள் சொன்னா ,வேலை வெட்டி இல்லாமல்,புறணி பேசிட்டு திரியிறவங்க ஆயிரம் பேசுவாங்க, அதுக்கு ஏன்? நாம கவலை படணும்னு, இப்போ நீங்க கேட்டுட்டீங்க,அதுக்காக நீங்க புறணி பேசுறிங்கண்ணா சொல்ல முடியும்."

"அம்மாடி மருமகளே பெரியவர்களை அப்படி எல்லாம் பேச கூடாதும்மா," என்று சிவாவை பேசுவது போல, அந்த பெண்மணியை மட்டம் தட்டி இருந்தாலும்.தனியாக வந்து, "உனக்கு நகை வாங்க பசங்க பணம் கொடுத்தாங்க தானே ,நாளைக்கு சர்வா கூட போய் வாங்கிட்டு வந்துடு,"என்று அதட்டலாக சொல்லி இருந்தார்.

அதன் பிறகு சர்வா மனைவியை தனியாக விடாமல் அவளோடு இருந்தவன்.நிச்சயம் முடிந்ததும்.பெற்றோர்கள் காலை திருமணம் முடிந்து வருவதாக சொல்லியதால் அவளை தன்னோடு அழைத்து கொண்டு கிளம்பி இருந்தான்.

வரும் பொழுது சர்வாவுமே கேட்டான்,"நாளைக்கு நகை வாங்க போகலாமா,இல்லை பார்கவியை வர சொல்லி ரெண்டு பேரும் சேர்ந்து போய் வாங்கிறீங்களா," என்று

"ஏன்? ஒரு நெக்லஸ் மட்டும் போட்டால் பத்தாதா,நகை எல்லாம் தேவை இல்லாத செலவு ,நான் வேற பிளான் வச்சிருக்கேன்,"அவள் விழிகளை சுருக்கி சொல்ல ,

அவளின் பாவனையில் அப்படியே அள்ளிக்கொள்ள வேண்டும் போல தோன்ற,அது முடியாத கடுப்பில், "அதுக்கு ஏண்டி மூஞ்சியை இப்படி வச்சிருக்க,"என்று அவன் கடிந்து கொள்ள,அதற்கும் அமைதியாக இராமல். அவள் உதட்டை சுளித்து வக்கலம் காட்டியதை ,சைடு மிரரில் பார்த்தவன் .மனமோ சிறகு இல்லாமல் பறந்தது.

அமைதியான இரவு நேரத்தில், சிலு சிலுவென கூதல் காற்றுவீச.. மனதிற்க்கு பிடித்த மணாளனோடு இனிமையான பயணம் ,மனதிற்கு அத்தனை இதமாய் இருந்தது பென்னவளுக்கு,பார்க்கும் அத்தனை காட்சிகளும்,ரம்மியமாய் தெரிந்தது.அவனின் அருகாமையில்............

சர்வாவிற்கும் அப்படியே இருந்தது போலும் ,வண்டியை பிடித்திருந்த நங்கையவளின் கையை எடுத்து தனது இடுப்பை சுற்றி போட்டவனின் கைகளில், வாகனம் பறந்து கொண்டிருந்தது.

வீடு வந்து சேர்ந்த பின்னும் அந்த மோன நிலை தொடர்ந்து கொண்டிருந்தது, வீட்டில் யாரும் இல்லை,உரிமையான இரு இதயத்திற்கும் கிடைத்த முதல் தனிமை,அவனின் அருகாமை பெண்ணுக்கு ஒரு இன்ப அவஸ்தையை கொடுத்திருந்தது,அதை புரிந்திருந்த அவனுக்குமே உணர்வுகள் கட்டவிழ தொடங்கியிருந்தது.



சிவா அமைதியாய் வண்டியில் இருந்து இறங்கியவள் .கதவை திறந்து கொண்டிருந்தாள். இங்கு சர்வாவிற்கோ! எங்கே தன் பிரம்மச்சரியம் களைந்து விடுமோ என்று பயமாகி போனது.

பின்னே சர்வாவும் சாதாரண ஆண் மகன் தானே ,அவனும் உரிமை உள்ள பெண்ணை கண்டால் கிறங்கி போவான் தானே.

அதனால்' டேய் சர்வா,இன்னும் ஆறே மாசம் தான் ,அவள் படிப்பை முடிச்சிடுவா, அதுவரைக்கும் தான். கொஞ்சம் ஸ்டடியா இருடா,ஸ்டடி ....ஸ்டடி 'என்று உள்ளுக்குள் ஜபித்தபடியே!வண்டியை நிறுத்தியவன் உள்ளே வர,

அதற்குள் சமையலறை சென்று நீர் அருந்தி வந்தவள்,அவனுக்கும் கொண்டு வந்து கொடுத்திருந்தாள், அவள் கூந்தலில் இருந்த அடுக்கு மல்லியின் வாசம் வேறு அவனை சுண்டி இழுக்க ,எப்போது வேண்டுமானாலும் அவளை தீண்டி விடும் அபாய கட்டத்தில் அவன் இருந்தான்.

'வணி ப்ளீஸ் ,எதுவுமே பேசாத,அமைதியாவே இரு ,நான் அப்படியே ரூம் போயிடுறேன்.'என்று உள்ளுக்குள் அலறியபடியே!நீர் அருந்திய சொம்பை அவளிடம் கொடுத்தான்.

அவனின் வணிக்கு அது புரியவில்லை போலும் ,"வேற ஏதாவது வேண்டுமா" என்று அவனுக்கு ,இல்லை இல்லை அவளுக்கு அவளே சூனியம் வைத்திருந்தாள்.

அவள் கேட்ட அடுத்த நொடியே!"நீதான்" என்றிருந்தான் சர்வேஸ்வரன்,"ஹான்" என்று அவள் விழிக்க,

"டீ வேணும் ,டீதான் வேணும்" என்றான் சற்று தடுமாறியபடியே!அவளுக்குள்ளும் ஒரு மயக்கம் இருக்க,பெரிதாய் அவனின் செய்கைகளை கணக்கில் கொள்ளாமல்.டீபோட சென்றிருந்தாள்.

அவள் திரும்ப வரும் பொழுது சர்வா ஹாலில் இல்லாமல்,வழக்கத்திற்கு மாறாய் அவனின் அறையில் இருந்தான்.வாசல் கதவு அடைத்திருப்பதும் அவளின் கண்ணில் பட்டது.

உடை மாற்றி இருந்தவன், டீசர்டை அணிந்து கொண்டிருக்க ,காபியை கொண்டு போய் அவனின் லேப்டாப் டேபிளில் வைத்தவள்."எடுத்துக்கோங்க" என்க ,அதற்குள் மாற்றியிருந்தவன்.அவளின் அருகே வந்து ,அவளை ஆழ்ந்து பார்த்தவாறே "எடுத்துக்கவா" என்று அழுத்தமாய் கேட்டிருந்தான்.

"எடுத்துக்கோங்க" அவள் சாதாரணமாய் சொல்ல ,

அவளின் ஒற்றை கையை தனது கைக்குள் பொத்தி வைத்தவன்,"உன்னை எடுத்துக்கவா,"என்று மிக மிக மென்மையாக ,அதே நேரம் யாசிக்கும் குரலில் கேட்க........... புரியவில்லை, மங்கைக்கு

"எதுக்கு" என்று கேட்டிருந்தாள்.

"எதுக்குன்னா, எனக்கு நீ வேணும் ,மொத்தமா ,எடுத்துக்கவா" மீண்டும் அந்த கள்ளன் கிசுகிசுப்பாய் கேட்க,அந்த குரலா ,இல்லை அவளின் கரத்தை பற்றியிருந்த அவன் விரல்களின் ஜாலமா, ஏதோ! ஒன்று பெண்ணை தலை ஆட்ட வைத்திருந்தது,

அவளுக்கு தெரிந்தது எல்லாம், அவளின் தலை அசைந்தது ,மட்டும் தான், சர்வா எப்போது படுக்கையில் சாய்த்தான்,எப்போது அவளுள் புதைந்தான் என்றெல்லாம் தெரியவே இல்லை.

சிவா,அவன் கைகளில் சிக்கிய பொம்மை ஆனாள், அவள் இதனை எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்க்கவில்லை என்பதை விட அவளுக்கு தெரியவில்லை என்பது தான் உண்மை

அவனின் இந்த அவதாரத்தில் மிரண்டது பெண்மை ,"பயமா இருக்கு ,வேணாம்" என்றாள் சன்ன குரலில்,அவளிற்கான பதில் எல்லாம்,

"வணிமா,ஒன்னும் இல்லடா ப்ளீஸ் , நான் தானே, சரி ஆகிடும் ,"இதுவாக தான் இருந்தது.

அவனின் கொஞ்சலான கெஞ்சலில் முற்றிலும் தளர்ந்தது பெண் மேனி ,உணர்வுகள் மொத்தமும் தூண்டப்பட்ட நிலையில்,தன்னை அறியாமல் ,"சர்வா மாமா ,மாமா" என்று புலம்பி கொண்டிருந்தாள் காரிகை.

அவன் விருப்பப்படி அவளை மொத்தமாக கொள்ளையிட்டு முடித்ததும்,விலகியவன் குளியலறைக்குள் நுழைந்திருக்க,ஒரு சுகமான அயர்வு, மங்கையிடத்தில்.

'ஒன்னும் தெரியாமல் காதல் பண்ணி, கனவுல ரெண்டு பிள்ளை வேற பெத்துட்ட,போடி சிவா ,'என்று அலுத்து கொண்டவள் .சிறிது நேரம் அப்படியே படுத்து கிடந்தவள்.

பின் ஆடைகளை அணிந்து கொண்டு, பின்கட்டில் இருந்த குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்,இங்கு வெளியில் வந்த சர்வாவிற்கு அவளில்லாத அறை ஏமாற்றத்தை கொடுத்த நொடி ,எல்லை மீறி நடந்து பெண்ணை காயப்படுத்தி விட்டோமோ! என்ற பதட்டத்தையும் சேர்த்தே கொடுத்தது.

படுக்கை விரிப்பை சரி செய்தபடியே ,அறைக்குள் நடந்ததை அசைபோட்டு பார்த்தான் ,அவளை விட்டு விலகிய நேரம் கூட ,இமைகளை முடி தானே கிடந்தாள் என்று தோன்றவும். கதவை திறந்து வெளியேற போன நொடி,அலைபேசிஅதிர்ந்தது.

சதா தான் ,இவன் ஏற்றதும் ,"அண்ணா வந்து கதவை திற,"என்றவன் .சர்வா திறந்ததும் உள்ளே நுழைந்திருந்தான் ,

"என்னடா, இந்த நேரம் வந்துருக்க "அண்ணன் கேட்க

"நாளைக்கு ப்ரண்ட் கல்யாணம், வர வேண்டாம்னு நினச்சேன் பசங்க சண்டை போடுறானுங்க, அதான் வந்தேன்." என்றபடியே !

சோபாவில் சரிந்தவன் ,"உன் வீட்டம்மா கிட்ட சொல்லி, ஒரு டீ வாங்கி தாயேன்."என்று அப்போது தான் பின்கட்டில் இருந்து வந்து கொண்டிருந்த சிவாவை காட்ட,

சட்டென திரும்பி அவளை கண்ட சர்வா , 'ஹோ! குளிக்க போயிருந்தாளா' என்றுஆசுவாசமானாலும்,'ஒவ்வொரு முறையும் குளிச்சா,ஒரு நாளைக்கு எத்தனை தரம் குளிப்பாளாம்,' என்று உள்ளுக்குள் கவுண்டர் கொடுத்து கொண்டிருக்க,

சதா "டேய்! அண்ணா வாங்கி தாயேன்,தலை வலி தெறிக்குது" என்க,மற்றைய நேர என்றால், "நீயே கேட்டுக்கோ" என்று சர்வா இடத்தை காலிசெய்திருப்பான்.

இன்று மனம் முழுவதும் அவள் மட்டுமே ஆட்சி செய்திருக்க, அவளை பார்த்தவாறு "ஒரு டீ வேணும்" என்றான்."ஹான்" என்று முன்னர், அவன் கேட்ட டீயை நினைத்து பெண் பதற,

சர்வாவிடம் ஒரு குறும்பு புன்னகை ,வெட்கம் வேறு வந்து தொலைத்தது அவனுக்கு.இப்போது அவளை அருகாமை தேவை பட ,தலையை அழுந்த கோதியவாறே!நெருங்கி வந்தவன்.

"குடிக்க டீ வேணும்,சதாக்கு" என்றான்.நிறுத்தி நிதானமாய் ,சிவாவின் முகத்திலும் ஒரு லட்ஜை.அமைதியாக கிடச்சனுக்குள் ,அவள் நுழைந்து கொள்ள,தம்பியை நினைத்து சிறிது தயங்கி, பின் அவனும் பின்னோடு சென்றான்.

ஏதும் பேசாமல். அவளையே பார்த்த படி நின்றிருந்தான்.சாதாரண பார்வை இல்லை. உடைக்குள் ஊடுருவும் பார்வை பார்த்திருந்தான்.

அவனின் பார்வையில் கூசிப்போனவளாய், "கொண்டு போய்க்கொடுங்க,"என்று ஒற்றை டம்ளரை அவள் கொடுக்க,"எனக்கும் ஒன்னு," அவன் கேட்க ,

"ம்ம் சேர்த்து தான் போட்டேன்,எடுத்துக்கோங்க" அவள் சொல்ல ,

"எடுத்துக்க ஆசை தான் ,ஹால்ல ஒரு கரடி இருக்கே! என்ன பண்ண," என்று விட்டுஅவன் போக முற்பட, சிவாவின் இதழ்களில் புன்னகை ,

"இருங்க அண்ணாகிட்ட சொல்றேன்."அவள் மிரட்ட

"நான் ஒன்னும் அவனுக்கு பயப்படலை, போய் சொல்லிக்கோடி,"என்றவன். வேண்டுமென்றே அவளை உரசி கொண்டு செல்ல,இங்கு சிவாவிற்கு கன்னங்கள் சிவந்து சூடேறி போனது.

அவளும் சிறிது நேரம் கழித்து வெளியில் செல்ல,இருவரும் ஏதோ பேசியபடி அமர்ந்திருந்தனர்,அவர்களை தாண்டி தனது அறைக்குள் சென்ற சிவா, ஒரு கணம் சர்வாவை திரும்பி பார்க்க,அவனிடம் ஒரு பெருமூச்சு,

அதை விட முகத்தில் ,வடை....... இல்லை இல்லை'டீ போச்சே' என்ற பாவனை.

அன்று மட்டும் அல்ல ,அடுத்த நாளும் ,இதே கதை தான்,தம்பி அண்ணனோடு அவனின் அறைக்குள் இருக்க,சர்வாவிற்கு,டீ குடிக்க முடியாமல் போனது. ஒரு வழியாய் அன்றய இரவு சதா கிளம்புவதாக இருந்தவன்.

"அண்ணா என்னை பஸ்டாண்டில் விடேன்,"என்று கேட்கவும்.செல்லும் பொழுது கூட மனைவியை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தான் சென்றான்.

அந்த பார்வையின் அர்த்தம் அவளுக்கும் புரிந்தது தான், ஆனால் ஹாலில் அமர்ந்திருக்கும் சங்கர் .

"போய் தூங்குடா ,நாளைக்கு காலேஜ் போகணும் இல்லை" என்றதும்.மறுக்க முடியாமல் சென்று படுத்திருந்தாள்.

தம்பியை அனுப்பிவிட்டு வந்திருந்த சர்வா ,மூடியிருந்த மனைவியின் அறையின் முன்னே கடுப்பாய் நின்றிருந்தான்.ஹாலில் தந்தை இல்லை என்றால்,உறங்குபுவளை தூக்கி கொண்டு போயிருப்பான்,

அவர் வேறு இருக்க ஒன்றும் செய்ய முடியா நிலை,குமுறும் மனதோடு சென்று படுக்கையில் விழுந்திருந்தான்.

அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம் தவிர
எதுவும் இல்லையே அன்பே







வருவாள் ................







லைக்ஸ் கமெண்ட்ஸ் கொடுத்த அனைவர்க்கும் எனது நன்றிகள் பல,...........
















Very nice
 
Top