செய்தியைக் கேட்டு நந்தா தன் தம்பி தங்கைகளுக்கு அழைத்து விசாரிக்க அவர்கள் எல்லோரும் பத்திரமாகவே வீடு சேர்ந்துவிட்டதாகச் சொல்லவும் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. அதற்குள் நியூஸ் பார்த்தவுடன் ரகு லவாவை அழைக்க,
"என்ன லவா இப்படி ஆகிடுச்சு? நீங்க இன்னும் கிளம்பல தானே?" என்று பதறியவாறு விசாரிக்க,
"இல்லப்பா கிளம்பலாம்னு தான் இருந்தோம்..." என்று இழுத்தவன் வைத்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைப் பற்றிச் சொல்ல வாயெடுக்க பிறகு சுதாரித்தவனாக அதை மறைத்தான். பின்னே தற்போது இதைப் பற்றித் தெரியப்படுத்தினால் தன் அன்னை எவ்வளவு வேதனைப்படுவார் என்று அறியாதவனா லவா.
"என்னாச்சு?"
"இல்ல அனு, பாரி, இசைன்னு ரொம்ப வருஷம் கழிச்சு எல்லோரும் மீட் பண்ணதால நைட் தங்கிட்டு காலையில கிளம்பலாம்னு இருந்தோம்..." என்று முடிப்பதற்குள்,
"அதெல்லாம் ஒன்னும் வர வேண்டாம். அத்தியாவிசயம் தவிர்த்து எதுவும் இயங்கக்கூடாதாம். அப்போ உனக்கும் வேலை இருக்காது தானே?" என்றவருக்கு,
"அப்பா நாங்க முக்கியமான ஒரு ரிசர்ச்ல இருக்கோம். நான் ஹைதராபாத் போகணும் தான்... ஆனா எப்படி? ப்ரொபெஸருக்கு கால் பண்ணேன் அவர் எடுக்கல..." என்று லவாவுக்கு இப்போது தான் தன்னுடைய வேலையைப் பற்றிய நினைவு வர அப்போது உள்ளே வந்த குஷாவின் காதில் இது தேன் போல் விழுந்தது. ஆனால் அது சொற்ப நேரம் கூட நீடிக்கப்போவதில்லை என்று அவனுக்கு இப்போது தெரியாது. பிறகு அன்னையிடம் பேசியவன் அலைபேசியை குஷாவிடம் கொடுக்க அவனிடம்,
"டேய் குஷா எதுக்கு காலையில் அவ்வளவு டென்ஷன் ஆன? என்ன இருந்தாலும் அவ சொன்னது சரிதானே? எனக்கு எவ்வளவு செஞ்சிருப்பாரு என் அப்பா... ஆனா என்னால வர முடியாம போயிடுச்சி..." என்று சொன்ன ஜானகி அனிச்சையாக அருகில் தன் கணவர் இருக்கிறாரா என்று திரும்பி பார்க்க அவர் இல்லை என்றதும்,
"எப்படிடா போச்சு இன்னைக்கு நாள்? போட்டோஸ் பார்த்தேன் இருந்தாலும் ஒரு ஆவல்..." என்று சொன்ன அன்னையின் பேச்சிலே அவர் இன்றைய நாளை எண்ணி எவ்வளவு வருத்தமடைந்து இருக்கிறார் என்று குஷாவுக்கும் புரிந்தது. இப்போது அவனுடைய கோவம் முழுவதும் வைத்தி மீதும் நந்தாவின் மீதும் சென்றது.
"இவ்வளவு பேசுற ஆள் வந்திருக்கலாமில்ல?" என்று கேசுவலாக கேட்பதைப் போல் இருந்தாலும் உண்மையில் தன் அன்னையின் மனதை அறிய வேண்டி தான் இக்கேள்வியைக் கேட்டான்.
"நான் மட்டும் வரதுன்னா எப்போவே வந்திருப்பேனே? உன் அப்பாவும் கூட வரணும். அது தான் அவருக்கும் மரியாதை எனக்கும் கௌரவம்..." என்றதும் தான் குஷாவின் கோவம் மெல்ல தணிந்தது.
"மதியாதோர் தலைவாசல் மிதியாதேனு சும்மாவா சொல்லியிருக்காங்க? சரி அதை விடு எனக்கு ஒரே இரிடேட்டிங்கா இருக்கும்மா... எப்போடா நம்ம வீட்டுக்கு வருவோம்னு தோணுது..." என்று குஷா சொன்ன குரலில் அத்தனை வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது. ஏனோ அக்குரல் ஜானகியை அசைத்துப்பார்க்க,
"என்னாச்சு கண்ணா? ஏன் இப்படிப் பேசுற? எப்படியும் நீங்க வர இருவது நாளாச்சும் ஆகுமில்ல?"
"அம்மா நீ வேணுனா நம்ம தனபால் அங்கிள் கிட்ட அப்பாவைப் பேசச்சொல்லு... வேற ஏதாவது வழியில நாளைக்கே ஊருக்கு வர முடியுமான்னு..." என்று குஷா பேச யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பியவன் அங்கே இருந்த கனகாவைப் பார்த்துச் சிரித்தவன்,"அம்மாச்சி வந்திருக்கு பேசுறியா?" என்று சொல்லி ரகசியமாய் தன் அன்னைக்கு நடந்த எதுவும் தெரியாது என்று சொல்லி அதையே மெயின்டைன் செய்யுமாறு சொல்ல அவனிடமிருந்து அழைப்பை வாங்கியவர் அடுத்த நாற்பது வினாடிக்குள் அழுது இன்று நடந்ததை எல்லாம் ஒப்பிக்க ஆரமித்து விட்டார்.
"ஏய் அம்மாச்சி... உன்கிட்ட என்ன சொல்லி போன் கொடுத்தேன்?" என்றவன் பேசுவதற்குள் அனைத்தையும் அவர் ஒப்பித்திருக்க இப்போது வைத்தியிடம் பேச ஏனோ தந்தையும் மகளும் நீண்ட நேரம் உரையாடினார்கள். அங்கே மகளிடம் தனக்கு எதுவுமில்லை என்றும் அவரை வீணாக கவலைகொள்ள வேண்டாம் என்றும் சமாதானப் படுத்தும் தன் தாத்தாவைக் கண்டு மொட்டுவுக்கு ஜானகி மீது இன்னும் கோவம் கூடியது.
பிறகு ஒருவழியாக இருவரும் சமாதானம் அடைந்ததும் தன் மகன்கள் இருவருக்கும் வாழ்த்தி வரம் கொடுக்கத் தொடங்கினார் ஜானகி. பிறகு அவர்கள் இருவரிடமும் வைத்தியை கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி ஜானகி அழைப்பைத் துண்டித்தார். ஏனோ பேரன்களின் முகத்தைப் பார்த்தே தன் மகள் திட்டியிருக்கிறாள் என்று அறிந்து,"என்னை மன்னிச்சுடுங்க கண்ணுங்களா... நீ வேணாம்னு சொல்லியும் நான் தான் உளறிட்டேன்..." என்று கனகா வருந்த தன் பங்கிற்கு அவரைத் திட்டிய வைத்தி,
"உனக்கும் கொஞ்சம் கூட கூறுங்கறதே கிடையாது... எனக்கு ஒன்னுனா ஜானு எவ்வளவு துடிப்பானு உனக்குத் தெரியாதா? அதும் இப்போ எப்படி அவ நிம்மதியா நாளைக் கடத்துவா?" என்று சொல்லி அவனைச் சாப்பிட அழைக்க ஏனோ குஷா தனக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறி மேலே சென்றுவிட்டான்.
"என்னாச்சு இந்தப் பையனுக்கு? காலையில இருந்து சாப்பிட்டதாவே தெரியலையே?" என்று சொல்லவும் இதில் என்னவோ இருக்கிறது என்று லவாவுக்குப் பொறி தட்டியது. மணவாளன் மேலே சென்று குஷாவைச் சாப்பிட அழைக்க அவனோ தனக்கு பசியில்லை என்று கூறிப் படுத்தான். அறை கதவைத் தாளிட்ட மணவாளன்,
"அத்தான் ப்ளீஸ் எனக்காகவாச்சும் வந்து சாப்பிடுங்க... அவ சொன்னா சொல்லிட்டுப்போறா... இந்த வீட்ல எங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அது உங்களுக்கும் இருக்கு தானே?" என்று கேட்க,
"நீ சொன்னதே போதும்... தேங்க்ஸ் போ..." என்றான் குஷா.
"ப்ளீஸ் விளையாடாதீங்க அத்தான், நீங்க காலையில இருந்து சாப்பிடல... கீழ அம்மா உங்களை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க..." என்று தன்னால் முடிந்த அளவுக்கு மன்றாடினான். ஆனால் குஷாவோ தன் பிடியில் உறுதியாக இருக்க ஒருவேளை மொட்டு வந்து அழைத்தால் சாப்பிட வருவாரோ என்று எண்ணி அவளையும் மேலே அழைத்தான். உண்மையில் மொட்டுவுக்கு குஷாவின் முகத்தைப் பார்க்கவே துணிவில்லை. தலைகுனிந்து வாறே இருந்தவளை அழைக்குமாறு மணவாளன் சொல்ல,"நமக்குள்ள என்ன பிரச்சனை வேணுனாலும் இருக்கட்டும்... ஆனா எந்தக் கோபத்தையும் சாப்பாட்டுல காட்டக் கூடாதுனு அப்பத்தா சொல்லிட்டே இருக்கும். நான் உண்மையிலே அதை மீன் பண்ணல... ஏதோ வாய்த் தவறி..." என்று நிமிர்ந்து அவனைப் பார்க்க தற்போது குஷாவும் வேறு சில யோசனையில் இருந்தான். தற்போதிருக்கும் நிலையில் அவன் இங்கு சாப்பிட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அதே நேரம் காலையில் அவளுடைய அந்த எள்ளல் நிறைந்த சிரிப்பை நினைக்கையில் இப்படியெல்லாம் சாப்பிட்டு தான் உயிர் வாழ வேண்டுமா என்றும் தோன்றியது.
"அத்தான் ப்ளீஸ் சாப்பிட வாங்க... நானும் அக்காவும் கூட மதியம் இருந்து சாப்பிடவே இல்ல" என்றதும் சந்தேகமாய் அவர்களைப் பார்த்த குஷாவிற்கு,
"நான் பொய்ச் சொல்லல... நானும் அக்காவும் இன்னும் சாப்பிடல... வீடு தேடி வந்தவங்கள சாப்பிட விடாம செஞ்சிட்டு நாங்க மட்டும் எப்படி நிம்மதியா சாப்பிடுவோம் சொல்லுங்க... ப்ளீஸ் நீங்க எங்களை மன்னிக்கலானாலும் கூடப் பரவாயில்லை தயவு செஞ்சு சாப்பிட வாங்க..." என்றதும் தன்னுடைய பர்ஸை எடுத்தவன் அதிலிருந்த சுமார் பனிரெண்டாயிரத்தை அங்கே வைத்தான். மொட்டுவும் மணவாளனும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க,"இதுக்கு மேலயும் இந்த வீட்ல என்னால சும்மா சாப்பிட முடியாது... நான் இங்க இருக்குற வரை நான் சாப்பிடறதுக்கும் தங்குறதுக்கும் இதை எடுத்துக்கோங்க..." என்று சொல்ல மொட்டு மற்றும் மணவாளன் இருவரும் தர்ம சங்கடமாய் உணர்ந்தனர்.
"ஐயோ என்ன அத்தான் இதெல்லாம்? இது உங்க வீடு... இங்க என் அப்பாக்கு என்ன உரிமை இருக்கோ அது அத்தைக்கும் இருக்கும்... ப்ளீஸ் இதெல்லாம் வேணாம் அண்ட் இனிமேல் இந்த மாதிரி நடக்காது... வாங்க" என்று மணவாளன் அவன் கையைப் பிடித்து இழுக்க அதற்குள் மொட்டு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டாள்.
"பைத்தியமா நீ? என்ன பண்ற மொட்டு?" என்று மணவாளன் தன் அக்காவிடம் குரல் உயர்த்தி அப்பணத்தைப் பிடுங்க முற்பட,
"அதான் பணம் எடுத்துகிட்டேனில்ல? இப்போவாச்சும் வந்து சாப்பிடு வா..." என்று மொட்டு கூறவும் குஷா வெளியேறினான்.
"உனக்கு என்ன ஆச்சு? இது வீட்ல தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?" என்று மணவாளன் ஆத்திரம் கொள்ள,
"இந்தப் பணத்தை நான் ஏன் எடுத்தேன்னு தெரிஞ்சா நீ இப்படிப் பேச மாட்ட... ஒருவேளை இதே வார்த்தையை யாராச்சும் என்கிட்டச் சொல்லியிருந்தா நான் சாப்பிடாம செத்தாலும் சாவேனே ஒழிய சாப்பிட மட்டும் ஒத்துக்கவே மாட்டேன் மணவாளா... இப்போ இதை நான் எடுத்துகிட்டதால அட்லீஸ்ட் நாம பணம் கொடுத்து தான் சாப்பிடுறோம்னு நெனச்சு அவன் கொஞ்சமாச்சும் சாப்பிடுவான்... இன்னைக்கு என் வாழ்க்கையிலே மன்னிக்க முடியாத நாளா போயிடுச்சு... அப்படி ஒரு தப்பு பண்ணிட்டேன்... அதைச் சரி பண்றேங்கற பேர்ல இன்னொரு மன்னிக்க முடியாத தப்பும் பண்ணிட்டேன்... அவன் சாப்பிடுறான்னா பாரு... நான் வரேன்..." என்று மொட்டு தனியாகச் சென்றவள்,'என்னை மன்னிச்சுடு குஷா...' என்று சொல்ல அவளையும் அறியாமல் கண்ணீர் உருண்டோடியது.
'முதல் கோணல் முற்றும் கோணல்' என்ற பழமொழிக்கு ஏதுவாய் விவரம் தெரிந்த நாளிலிருந்தே குஷாவுக்கும் மொட்டுவுக்கும் ஆகவே ஆகாது. அவர்களுக்குள் அப்படியொரு ஏழாம் பொருத்தம். நந்தாவுக்கும் சித்ராவுக்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அந்தச் சமயத்தில் தான் சுசீந்திரனுக்கு ஓராண்டுக்கும் மேலாக பெண் தேட எங்கேயும் பொருந்தாமல் போனது. இறுதியில் சித்ராவின் தங்கையான காவேரியை சுசீந்திரனுக்கு மனம் முடித்து வைக்க அப்போது இரு தம்பதிக்கு அடுத்த ஆண்டில் இரண்டு மாத இடைவெளியில் பிறந்தவர்கள் தான் பனித்துளியும் புல்வெளியும். அவர்கள் பிறகும் வேளையில் லவா குஷா இருவரும் சுமார் ஆறு வயதை அடைந்திருந்தனர். இவர்களே சிறுவர்களாக இருந்தாலும் அப்போது பிறந்த இரண்டு குழந்தைகளையும் லவா குஷா இருவரும் ஒரு குழந்தைக்கே உரிய குதூகலத்துடனும் பரவசத்துடனும் பார்த்தனர்.
இயல்பிலே லவா சற்று பொறுமைசாலி என்பதால் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் மொட்டு மீது அவனுக்கு பாசம் பொங்க அங்கே குஷாவிற்கு எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருக்கும் அனுவைச் சீண்டி விளையாட பிடித்தது. வீட்டில் இருக்கும் பொம்மைகளை ஆளுக்கொன்றாக வைத்து விளையாடி பழகிய சகோதரர்கள் அதே போல் வீட்டிலிருக்கும் இரண்டு குழந்தைகளை ஆளுக்கொன்றாகத் தேர்ந்தெடுத்து விளையாடினார்கள். இப்படியே சென்ற இவர்கள் வாழ்வில் அடுத்தடுத்து வருடங்களும் உருண்டோடியது. விடுமுறைக்கு வரும் பொழுதெல்லாம் அவர்களுடன் விளையாடி பொழுதைக் கழித்தனர். ஆனால் சிறு வயதிலிருந்தே வீட்டில் எதற்கெடுத்தாலும் குஷாவுக்கும் மொட்டுவுக்கும் முட்டிக்கொண்டே இருக்கும். வளர வளர அது போல் சண்டைகள் லவா அனு வாழ்விலும் நடந்தது தான். இன்னும் சில வருடங்கள் உருண்டோட மணவாளன், பாரி, அபி, இன்னிசை, மெல்லினி, ஆனந்தி, ரித்து என்று அடுத்தடுத்து குழந்தைகள் அக்குடும்பத்தில் தவழ தங்களுடைய நட்பு வட்டத்தை விரிவு படுத்திக்கொண்டே சென்றனர். பெரும்பாலும் இரு அணிகளாக பிரிந்து விளையாடும் பொழுதெல்லாம் லவாவும் மொட்டுவும் ஓரணியிலும் குஷாவும் அனுவும் மற்றொரு அணியிலும் தான் இருப்பார்கள். ஆனால் வருடம் கூட கூட குஷாவுக்கும் மொட்டுவுக்குமான அந்த ஈகோ சண்டை விடாமல் தொடர அனுவும் லவாவும் அதைக் காலப்போக்கில் கைவிட்டனர்.
இவர்கள் அனைவரில் மொட்டுவும் மணவாளனும் மட்டும் இவ்வூரில் இருக்கும் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்க மற்ற அனைவரும் அவரவர் ஊரில் படித்தனர். சென்னை திருச்சி ஸ்ரீரங்கம் என்று பெரிய ஊரில் பெரிய பள்ளியில் பயின்ற காரணத்தாலோ என்னவோ மொட்டு மற்றும் மணவாளனைத் தவிர்த்து மற்றவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்கினர். அவர்களுக்கெல்லாம் காலாண்டு அரையாண்டு முழாண்டு பரீட்சை முடிந்து விடுமுறைக்கு இங்கே வந்த பிறகு தான் மொட்டுவுக்கும் மணவாளனுக்கும் பரீட்சைகளே தொடங்கும். லவா குஷாவின் காலாண்டு அரையாண்டு விடுமுறை முடியும் நேரத்தில் தான் மொட்டுவுக்கு பரீட்சை முடியும். அதனால் ஒவ்வொரு வருடமும் வேண்டா வெறுப்பாகவே தான் படித்தாள் மொட்டு. பின்னே தன் சமவயதை உடையவர்கள் அனைவரும் ஓடியாடி விளையாடும் பொழுது இவளும் மணவாளனும் மட்டும் படிக்க நேர்ந்தால் அவர்களின் மன நிலை எந்த நிலையில் இருக்கும்? அது போக படித்துவிட்டேன் என்று மொட்டு அவர்களுடன் விளையாடச் சென்றாலும் ஜானகி அவளை அழைத்து கேள்விகளைக் கேட்பார். ஒழுங்காகப் படித்திருந்தால் அனைத்தையும் சொல்லி விடலாம் தான் ஆனால் மனமும் எண்ணமும் வெளியில் விளையாடும் அனு லவா மீது இருக்க அவள் மண்டையில் எவ்வாறு படித்ததெல்லாம் தங்கும்? ஜானகியோ படிப்பு விஷயத்தில் பயங்கர ஸ்ட்ரிக்ட் என்பதால் மொட்டு பதில் சொல்லி முடிக்கும் வரை அவளை விடவே மாட்டார். அது போக அந்த வயதிலே அவளுடைய மதிப்பெண்களை எண்ணி வைத்தி நந்தா இருவரும் கவலை கொள்ளவும் நேர்ந்ததால் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி ஜானகி அவளுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுப்பார். சமயங்களில் சரியாக ஒப்பிக்கவில்லை என்று இரவு வரை மொட்டுவைக் கேள்விகேட்கும் நேரத்தில் நிர்மலா உமா சுசி சபா ஆகியோருக்கே வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தும் சிறு வயதிலே அவள் படிப்பில் இவ்வளவு தடுமாறினால் நாளை எவ்வாறு அவள் பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியும் என்று எண்ணி அவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
என்ன தான் அவர்கள் எல்லோரும் அவளுடைய எதிர்கால நலனில் அக்கறை கொண்டாலும் அந்த அக்கறையானது மொட்டுவிற்கு ஒரு கொடுமையாகவே காட்சியளித்தது. அவள் நான்காவது ஐந்தாவது படிக்கும் பொழுதே லவா குஷா இருவரும் ஒன்பதாவது படித்ததால் சமயங்களில் அவர்களிடம் ஒப்பிக்குமாறு சொல்லிவிட லவாவாக இருந்தால் கொஞ்சமேனும் மொட்டு தப்பித்து விடுவாள். ஆனால் குஷாவிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான். அவள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பொழுது ஒரு ஆர்ட்டிகளையோ(a an the) இல்லை ப்ரிபொசிசனையோ(in on by of முதலியவை) விட்டாலும் அவளைத் திரும்ப ஒப்பிக்கச் சொல்லிவிடுவான்.
அநேகமாக குஷாவின் மீதும் ஜானகியின் மீதும் மொட்டுவுக்கு வெறுப்பு ஏற்பட இதுவே காரணமாக இருந்த்திருக்கக் கூடும். இது நாளடைவில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே சென்றதன் விளைவாக இன்று இருவருக்கும் எதை எடுத்தாலும் முட்டிக்கொள்ளும் குணம் வந்துவிட்டது. இது தான் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் சண்டைக்கானக் காரணம் என்று இதுவரை லவா நினைத்திருந்தான். ஆனால் அதன் பின் அவன் அறியாதப் பக்கங்களும் இருக்கிறதென்று லவாவுக்குத் தெரியவில்லை.
சிறுவயதில் குழந்தைகளின் மனதில் இதுபோல் தெரிந்தோ தெரியாமலோ நாம் விதைக்கும் சின்ன சின்ன விதைகள் தான் பின்னாளில் தாழ்வு மனப்பான்மை வெறுப்பு முதலிய விருட்சங்களாக வளர்ந்துவிடுகிறது. எங்கேயோ ஓரிடத்தில் நாம் செய்யும் தவறு தான் அவர்களிடையே உளவியல் ரீதியான மாற்றங்களுக்கு வித்திடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. படிப்பு முக்கியம் தான் ஆனால் வெறும் மதிப்பெண்கள் மட்டும் நமக்கு அனைத்தையும் பெற்றுத்தந்துவிடாது.
மொட்டுவின் விஷயத்தில் இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள நெடு நாட்கள் ஆனது. எல்லோரும் பதினொன்றாவதில் முதல் குரூப் எடுக்க அவளையும் அது தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் விளைவுகளை அவளுடைய பனிரெண்டாவது வகுப்பு மதிப்பெண்களின் தான் கண்டுகொண்டார்கள். ஆனால் காலம் கடந்து கிடைத்த ஞானத்தால் என்ன பயன் இருக்கிறது? லவா குஷா அனு மூவருமே நல்ல ரேங்க் ஹோல்டர்ஸ். மூவரும் மெரிட்டிலே இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்துவிட மொட்டுவின் மதிப்பெண்களுக்கு கலை கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. சரி அதிலாவது மேத்ஸ் பிசிக்ஸ் படிக்கவைக்கலாம் என்று நந்தா யோசிக்க படித்தால் அக்ரிகல்சர் தான் என்று உறுதியாக இருந்தவளிடம் என்ன சொல்லித் தேற்றுவது என்று முடியாமல் சேர்த்துவிட்டனர்.
நான்கு வருட கல்லூரி முடித்து அனு வேலையிலே சேர்ந்துவிட மொட்டுவோ தான் விரும்பி எடுத்த அக்ரியிலே இன்னும் அரியர் வைத்திருக்கிறாள். கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த மொட்டுவைத் தேடி வந்து ,"நீ ஏன் சாப்பிட வரல மொட்டு?" என்ற லவாவின் குரல் நிகழ்வுக்குக் கொண்டுவந்தது.
"வந்துட்டேன் லவா..." என்றவளை நிறுத்தியவன்,
"அழுதியா மொட்டு?" என்று கேட்க,
"இல்லையே" என்று வரவழைக்கப்பட்ட சிரிப்பை உதிர்க்க அவளையே தீர்க்கமாய்ப் பார்த்தவனின் தோளில் சாய்ந்து,"நான் தப்பு பண்ணிட்டேன் லவா... பெரிய தப்பு பண்ணிட்டேன்... என்னை மன்னிப்பையா?" என்று வினவ,
"என்னாச்சு? நான் ஏன் உன்னை மன்னிக்கணும்?"
"செஞ்ச தப்பை ஒத்துக்க ஒரு தைரியம் வேணும்... இப்போ எனக்கு அந்த தைரியம் இல்ல... இன்னொரு நாள் சொல்றேன்" என்று மொட்டு தற்போது மறைத்ததை பின்னாளில் குஷாவின் மூலம் அறிந்துகொள்ள நேர்ந்தால் அப்போதும் இவளை லவா மன்னிப்பானா? பார்ப்போம்...
கீழே கடமைக்கென்று சாப்பிட்டாலும் குஷாவின் மனம் நிலையில்லாமல் தவித்தது. உண்டு முடித்தவன்,"ஹேய் பூசணி வா கொஞ்சம் நடக்கலாம்..." என்று அங்கிருந்த அனுவைக் கிளப்பிக்கொண்டிருந்தான்.
"நல்ல பாட்டு ஓடுது அப்படியே கேட்டுட்டு இருக்கலாம்..." என்று சோம்பேறித்தனம் கொண்டவளை வலுக்கட்டாயமாக இழுத்தான் குஷா. பின் அவர்களுடன் பிள்ளைகள் அனைவரும் காற்றாட நடைபயின்றனர்.
(நேரம் கைகூடும்...)
"என்ன லவா இப்படி ஆகிடுச்சு? நீங்க இன்னும் கிளம்பல தானே?" என்று பதறியவாறு விசாரிக்க,
"இல்லப்பா கிளம்பலாம்னு தான் இருந்தோம்..." என்று இழுத்தவன் வைத்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதைப் பற்றிச் சொல்ல வாயெடுக்க பிறகு சுதாரித்தவனாக அதை மறைத்தான். பின்னே தற்போது இதைப் பற்றித் தெரியப்படுத்தினால் தன் அன்னை எவ்வளவு வேதனைப்படுவார் என்று அறியாதவனா லவா.
"என்னாச்சு?"
"இல்ல அனு, பாரி, இசைன்னு ரொம்ப வருஷம் கழிச்சு எல்லோரும் மீட் பண்ணதால நைட் தங்கிட்டு காலையில கிளம்பலாம்னு இருந்தோம்..." என்று முடிப்பதற்குள்,
"அதெல்லாம் ஒன்னும் வர வேண்டாம். அத்தியாவிசயம் தவிர்த்து எதுவும் இயங்கக்கூடாதாம். அப்போ உனக்கும் வேலை இருக்காது தானே?" என்றவருக்கு,
"அப்பா நாங்க முக்கியமான ஒரு ரிசர்ச்ல இருக்கோம். நான் ஹைதராபாத் போகணும் தான்... ஆனா எப்படி? ப்ரொபெஸருக்கு கால் பண்ணேன் அவர் எடுக்கல..." என்று லவாவுக்கு இப்போது தான் தன்னுடைய வேலையைப் பற்றிய நினைவு வர அப்போது உள்ளே வந்த குஷாவின் காதில் இது தேன் போல் விழுந்தது. ஆனால் அது சொற்ப நேரம் கூட நீடிக்கப்போவதில்லை என்று அவனுக்கு இப்போது தெரியாது. பிறகு அன்னையிடம் பேசியவன் அலைபேசியை குஷாவிடம் கொடுக்க அவனிடம்,
"டேய் குஷா எதுக்கு காலையில் அவ்வளவு டென்ஷன் ஆன? என்ன இருந்தாலும் அவ சொன்னது சரிதானே? எனக்கு எவ்வளவு செஞ்சிருப்பாரு என் அப்பா... ஆனா என்னால வர முடியாம போயிடுச்சி..." என்று சொன்ன ஜானகி அனிச்சையாக அருகில் தன் கணவர் இருக்கிறாரா என்று திரும்பி பார்க்க அவர் இல்லை என்றதும்,
"எப்படிடா போச்சு இன்னைக்கு நாள்? போட்டோஸ் பார்த்தேன் இருந்தாலும் ஒரு ஆவல்..." என்று சொன்ன அன்னையின் பேச்சிலே அவர் இன்றைய நாளை எண்ணி எவ்வளவு வருத்தமடைந்து இருக்கிறார் என்று குஷாவுக்கும் புரிந்தது. இப்போது அவனுடைய கோவம் முழுவதும் வைத்தி மீதும் நந்தாவின் மீதும் சென்றது.
"இவ்வளவு பேசுற ஆள் வந்திருக்கலாமில்ல?" என்று கேசுவலாக கேட்பதைப் போல் இருந்தாலும் உண்மையில் தன் அன்னையின் மனதை அறிய வேண்டி தான் இக்கேள்வியைக் கேட்டான்.
"நான் மட்டும் வரதுன்னா எப்போவே வந்திருப்பேனே? உன் அப்பாவும் கூட வரணும். அது தான் அவருக்கும் மரியாதை எனக்கும் கௌரவம்..." என்றதும் தான் குஷாவின் கோவம் மெல்ல தணிந்தது.
"மதியாதோர் தலைவாசல் மிதியாதேனு சும்மாவா சொல்லியிருக்காங்க? சரி அதை விடு எனக்கு ஒரே இரிடேட்டிங்கா இருக்கும்மா... எப்போடா நம்ம வீட்டுக்கு வருவோம்னு தோணுது..." என்று குஷா சொன்ன குரலில் அத்தனை வருத்தமும் ஏமாற்றமும் இருந்தது. ஏனோ அக்குரல் ஜானகியை அசைத்துப்பார்க்க,
"என்னாச்சு கண்ணா? ஏன் இப்படிப் பேசுற? எப்படியும் நீங்க வர இருவது நாளாச்சும் ஆகுமில்ல?"
"அம்மா நீ வேணுனா நம்ம தனபால் அங்கிள் கிட்ட அப்பாவைப் பேசச்சொல்லு... வேற ஏதாவது வழியில நாளைக்கே ஊருக்கு வர முடியுமான்னு..." என்று குஷா பேச யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பியவன் அங்கே இருந்த கனகாவைப் பார்த்துச் சிரித்தவன்,"அம்மாச்சி வந்திருக்கு பேசுறியா?" என்று சொல்லி ரகசியமாய் தன் அன்னைக்கு நடந்த எதுவும் தெரியாது என்று சொல்லி அதையே மெயின்டைன் செய்யுமாறு சொல்ல அவனிடமிருந்து அழைப்பை வாங்கியவர் அடுத்த நாற்பது வினாடிக்குள் அழுது இன்று நடந்ததை எல்லாம் ஒப்பிக்க ஆரமித்து விட்டார்.
"ஏய் அம்மாச்சி... உன்கிட்ட என்ன சொல்லி போன் கொடுத்தேன்?" என்றவன் பேசுவதற்குள் அனைத்தையும் அவர் ஒப்பித்திருக்க இப்போது வைத்தியிடம் பேச ஏனோ தந்தையும் மகளும் நீண்ட நேரம் உரையாடினார்கள். அங்கே மகளிடம் தனக்கு எதுவுமில்லை என்றும் அவரை வீணாக கவலைகொள்ள வேண்டாம் என்றும் சமாதானப் படுத்தும் தன் தாத்தாவைக் கண்டு மொட்டுவுக்கு ஜானகி மீது இன்னும் கோவம் கூடியது.
பிறகு ஒருவழியாக இருவரும் சமாதானம் அடைந்ததும் தன் மகன்கள் இருவருக்கும் வாழ்த்தி வரம் கொடுக்கத் தொடங்கினார் ஜானகி. பிறகு அவர்கள் இருவரிடமும் வைத்தியை கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லி ஜானகி அழைப்பைத் துண்டித்தார். ஏனோ பேரன்களின் முகத்தைப் பார்த்தே தன் மகள் திட்டியிருக்கிறாள் என்று அறிந்து,"என்னை மன்னிச்சுடுங்க கண்ணுங்களா... நீ வேணாம்னு சொல்லியும் நான் தான் உளறிட்டேன்..." என்று கனகா வருந்த தன் பங்கிற்கு அவரைத் திட்டிய வைத்தி,
"உனக்கும் கொஞ்சம் கூட கூறுங்கறதே கிடையாது... எனக்கு ஒன்னுனா ஜானு எவ்வளவு துடிப்பானு உனக்குத் தெரியாதா? அதும் இப்போ எப்படி அவ நிம்மதியா நாளைக் கடத்துவா?" என்று சொல்லி அவனைச் சாப்பிட அழைக்க ஏனோ குஷா தனக்கு அவசர அழைப்பு வந்ததாகக் கூறி மேலே சென்றுவிட்டான்.
"என்னாச்சு இந்தப் பையனுக்கு? காலையில இருந்து சாப்பிட்டதாவே தெரியலையே?" என்று சொல்லவும் இதில் என்னவோ இருக்கிறது என்று லவாவுக்குப் பொறி தட்டியது. மணவாளன் மேலே சென்று குஷாவைச் சாப்பிட அழைக்க அவனோ தனக்கு பசியில்லை என்று கூறிப் படுத்தான். அறை கதவைத் தாளிட்ட மணவாளன்,
"அத்தான் ப்ளீஸ் எனக்காகவாச்சும் வந்து சாப்பிடுங்க... அவ சொன்னா சொல்லிட்டுப்போறா... இந்த வீட்ல எங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அது உங்களுக்கும் இருக்கு தானே?" என்று கேட்க,
"நீ சொன்னதே போதும்... தேங்க்ஸ் போ..." என்றான் குஷா.
"ப்ளீஸ் விளையாடாதீங்க அத்தான், நீங்க காலையில இருந்து சாப்பிடல... கீழ அம்மா உங்களை கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க..." என்று தன்னால் முடிந்த அளவுக்கு மன்றாடினான். ஆனால் குஷாவோ தன் பிடியில் உறுதியாக இருக்க ஒருவேளை மொட்டு வந்து அழைத்தால் சாப்பிட வருவாரோ என்று எண்ணி அவளையும் மேலே அழைத்தான். உண்மையில் மொட்டுவுக்கு குஷாவின் முகத்தைப் பார்க்கவே துணிவில்லை. தலைகுனிந்து வாறே இருந்தவளை அழைக்குமாறு மணவாளன் சொல்ல,"நமக்குள்ள என்ன பிரச்சனை வேணுனாலும் இருக்கட்டும்... ஆனா எந்தக் கோபத்தையும் சாப்பாட்டுல காட்டக் கூடாதுனு அப்பத்தா சொல்லிட்டே இருக்கும். நான் உண்மையிலே அதை மீன் பண்ணல... ஏதோ வாய்த் தவறி..." என்று நிமிர்ந்து அவனைப் பார்க்க தற்போது குஷாவும் வேறு சில யோசனையில் இருந்தான். தற்போதிருக்கும் நிலையில் அவன் இங்கு சாப்பிட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அதே நேரம் காலையில் அவளுடைய அந்த எள்ளல் நிறைந்த சிரிப்பை நினைக்கையில் இப்படியெல்லாம் சாப்பிட்டு தான் உயிர் வாழ வேண்டுமா என்றும் தோன்றியது.
"அத்தான் ப்ளீஸ் சாப்பிட வாங்க... நானும் அக்காவும் கூட மதியம் இருந்து சாப்பிடவே இல்ல" என்றதும் சந்தேகமாய் அவர்களைப் பார்த்த குஷாவிற்கு,
"நான் பொய்ச் சொல்லல... நானும் அக்காவும் இன்னும் சாப்பிடல... வீடு தேடி வந்தவங்கள சாப்பிட விடாம செஞ்சிட்டு நாங்க மட்டும் எப்படி நிம்மதியா சாப்பிடுவோம் சொல்லுங்க... ப்ளீஸ் நீங்க எங்களை மன்னிக்கலானாலும் கூடப் பரவாயில்லை தயவு செஞ்சு சாப்பிட வாங்க..." என்றதும் தன்னுடைய பர்ஸை எடுத்தவன் அதிலிருந்த சுமார் பனிரெண்டாயிரத்தை அங்கே வைத்தான். மொட்டுவும் மணவாளனும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க,"இதுக்கு மேலயும் இந்த வீட்ல என்னால சும்மா சாப்பிட முடியாது... நான் இங்க இருக்குற வரை நான் சாப்பிடறதுக்கும் தங்குறதுக்கும் இதை எடுத்துக்கோங்க..." என்று சொல்ல மொட்டு மற்றும் மணவாளன் இருவரும் தர்ம சங்கடமாய் உணர்ந்தனர்.
"ஐயோ என்ன அத்தான் இதெல்லாம்? இது உங்க வீடு... இங்க என் அப்பாக்கு என்ன உரிமை இருக்கோ அது அத்தைக்கும் இருக்கும்... ப்ளீஸ் இதெல்லாம் வேணாம் அண்ட் இனிமேல் இந்த மாதிரி நடக்காது... வாங்க" என்று மணவாளன் அவன் கையைப் பிடித்து இழுக்க அதற்குள் மொட்டு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டாள்.
"பைத்தியமா நீ? என்ன பண்ற மொட்டு?" என்று மணவாளன் தன் அக்காவிடம் குரல் உயர்த்தி அப்பணத்தைப் பிடுங்க முற்பட,
"அதான் பணம் எடுத்துகிட்டேனில்ல? இப்போவாச்சும் வந்து சாப்பிடு வா..." என்று மொட்டு கூறவும் குஷா வெளியேறினான்.
"உனக்கு என்ன ஆச்சு? இது வீட்ல தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?" என்று மணவாளன் ஆத்திரம் கொள்ள,
"இந்தப் பணத்தை நான் ஏன் எடுத்தேன்னு தெரிஞ்சா நீ இப்படிப் பேச மாட்ட... ஒருவேளை இதே வார்த்தையை யாராச்சும் என்கிட்டச் சொல்லியிருந்தா நான் சாப்பிடாம செத்தாலும் சாவேனே ஒழிய சாப்பிட மட்டும் ஒத்துக்கவே மாட்டேன் மணவாளா... இப்போ இதை நான் எடுத்துகிட்டதால அட்லீஸ்ட் நாம பணம் கொடுத்து தான் சாப்பிடுறோம்னு நெனச்சு அவன் கொஞ்சமாச்சும் சாப்பிடுவான்... இன்னைக்கு என் வாழ்க்கையிலே மன்னிக்க முடியாத நாளா போயிடுச்சு... அப்படி ஒரு தப்பு பண்ணிட்டேன்... அதைச் சரி பண்றேங்கற பேர்ல இன்னொரு மன்னிக்க முடியாத தப்பும் பண்ணிட்டேன்... அவன் சாப்பிடுறான்னா பாரு... நான் வரேன்..." என்று மொட்டு தனியாகச் சென்றவள்,'என்னை மன்னிச்சுடு குஷா...' என்று சொல்ல அவளையும் அறியாமல் கண்ணீர் உருண்டோடியது.
'முதல் கோணல் முற்றும் கோணல்' என்ற பழமொழிக்கு ஏதுவாய் விவரம் தெரிந்த நாளிலிருந்தே குஷாவுக்கும் மொட்டுவுக்கும் ஆகவே ஆகாது. அவர்களுக்குள் அப்படியொரு ஏழாம் பொருத்தம். நந்தாவுக்கும் சித்ராவுக்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அந்தச் சமயத்தில் தான் சுசீந்திரனுக்கு ஓராண்டுக்கும் மேலாக பெண் தேட எங்கேயும் பொருந்தாமல் போனது. இறுதியில் சித்ராவின் தங்கையான காவேரியை சுசீந்திரனுக்கு மனம் முடித்து வைக்க அப்போது இரு தம்பதிக்கு அடுத்த ஆண்டில் இரண்டு மாத இடைவெளியில் பிறந்தவர்கள் தான் பனித்துளியும் புல்வெளியும். அவர்கள் பிறகும் வேளையில் லவா குஷா இருவரும் சுமார் ஆறு வயதை அடைந்திருந்தனர். இவர்களே சிறுவர்களாக இருந்தாலும் அப்போது பிறந்த இரண்டு குழந்தைகளையும் லவா குஷா இருவரும் ஒரு குழந்தைக்கே உரிய குதூகலத்துடனும் பரவசத்துடனும் பார்த்தனர்.
இயல்பிலே லவா சற்று பொறுமைசாலி என்பதால் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் மொட்டு மீது அவனுக்கு பாசம் பொங்க அங்கே குஷாவிற்கு எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருக்கும் அனுவைச் சீண்டி விளையாட பிடித்தது. வீட்டில் இருக்கும் பொம்மைகளை ஆளுக்கொன்றாக வைத்து விளையாடி பழகிய சகோதரர்கள் அதே போல் வீட்டிலிருக்கும் இரண்டு குழந்தைகளை ஆளுக்கொன்றாகத் தேர்ந்தெடுத்து விளையாடினார்கள். இப்படியே சென்ற இவர்கள் வாழ்வில் அடுத்தடுத்து வருடங்களும் உருண்டோடியது. விடுமுறைக்கு வரும் பொழுதெல்லாம் அவர்களுடன் விளையாடி பொழுதைக் கழித்தனர். ஆனால் சிறு வயதிலிருந்தே வீட்டில் எதற்கெடுத்தாலும் குஷாவுக்கும் மொட்டுவுக்கும் முட்டிக்கொண்டே இருக்கும். வளர வளர அது போல் சண்டைகள் லவா அனு வாழ்விலும் நடந்தது தான். இன்னும் சில வருடங்கள் உருண்டோட மணவாளன், பாரி, அபி, இன்னிசை, மெல்லினி, ஆனந்தி, ரித்து என்று அடுத்தடுத்து குழந்தைகள் அக்குடும்பத்தில் தவழ தங்களுடைய நட்பு வட்டத்தை விரிவு படுத்திக்கொண்டே சென்றனர். பெரும்பாலும் இரு அணிகளாக பிரிந்து விளையாடும் பொழுதெல்லாம் லவாவும் மொட்டுவும் ஓரணியிலும் குஷாவும் அனுவும் மற்றொரு அணியிலும் தான் இருப்பார்கள். ஆனால் வருடம் கூட கூட குஷாவுக்கும் மொட்டுவுக்குமான அந்த ஈகோ சண்டை விடாமல் தொடர அனுவும் லவாவும் அதைக் காலப்போக்கில் கைவிட்டனர்.
இவர்கள் அனைவரில் மொட்டுவும் மணவாளனும் மட்டும் இவ்வூரில் இருக்கும் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்க மற்ற அனைவரும் அவரவர் ஊரில் படித்தனர். சென்னை திருச்சி ஸ்ரீரங்கம் என்று பெரிய ஊரில் பெரிய பள்ளியில் பயின்ற காரணத்தாலோ என்னவோ மொட்டு மற்றும் மணவாளனைத் தவிர்த்து மற்றவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்கினர். அவர்களுக்கெல்லாம் காலாண்டு அரையாண்டு முழாண்டு பரீட்சை முடிந்து விடுமுறைக்கு இங்கே வந்த பிறகு தான் மொட்டுவுக்கும் மணவாளனுக்கும் பரீட்சைகளே தொடங்கும். லவா குஷாவின் காலாண்டு அரையாண்டு விடுமுறை முடியும் நேரத்தில் தான் மொட்டுவுக்கு பரீட்சை முடியும். அதனால் ஒவ்வொரு வருடமும் வேண்டா வெறுப்பாகவே தான் படித்தாள் மொட்டு. பின்னே தன் சமவயதை உடையவர்கள் அனைவரும் ஓடியாடி விளையாடும் பொழுது இவளும் மணவாளனும் மட்டும் படிக்க நேர்ந்தால் அவர்களின் மன நிலை எந்த நிலையில் இருக்கும்? அது போக படித்துவிட்டேன் என்று மொட்டு அவர்களுடன் விளையாடச் சென்றாலும் ஜானகி அவளை அழைத்து கேள்விகளைக் கேட்பார். ஒழுங்காகப் படித்திருந்தால் அனைத்தையும் சொல்லி விடலாம் தான் ஆனால் மனமும் எண்ணமும் வெளியில் விளையாடும் அனு லவா மீது இருக்க அவள் மண்டையில் எவ்வாறு படித்ததெல்லாம் தங்கும்? ஜானகியோ படிப்பு விஷயத்தில் பயங்கர ஸ்ட்ரிக்ட் என்பதால் மொட்டு பதில் சொல்லி முடிக்கும் வரை அவளை விடவே மாட்டார். அது போக அந்த வயதிலே அவளுடைய மதிப்பெண்களை எண்ணி வைத்தி நந்தா இருவரும் கவலை கொள்ளவும் நேர்ந்ததால் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி ஜானகி அவளுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுப்பார். சமயங்களில் சரியாக ஒப்பிக்கவில்லை என்று இரவு வரை மொட்டுவைக் கேள்விகேட்கும் நேரத்தில் நிர்மலா உமா சுசி சபா ஆகியோருக்கே வருத்தமாகத்தான் இருக்கும். இருந்தும் சிறு வயதிலே அவள் படிப்பில் இவ்வளவு தடுமாறினால் நாளை எவ்வாறு அவள் பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியும் என்று எண்ணி அவர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
என்ன தான் அவர்கள் எல்லோரும் அவளுடைய எதிர்கால நலனில் அக்கறை கொண்டாலும் அந்த அக்கறையானது மொட்டுவிற்கு ஒரு கொடுமையாகவே காட்சியளித்தது. அவள் நான்காவது ஐந்தாவது படிக்கும் பொழுதே லவா குஷா இருவரும் ஒன்பதாவது படித்ததால் சமயங்களில் அவர்களிடம் ஒப்பிக்குமாறு சொல்லிவிட லவாவாக இருந்தால் கொஞ்சமேனும் மொட்டு தப்பித்து விடுவாள். ஆனால் குஷாவிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவு தான். அவள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பொழுது ஒரு ஆர்ட்டிகளையோ(a an the) இல்லை ப்ரிபொசிசனையோ(in on by of முதலியவை) விட்டாலும் அவளைத் திரும்ப ஒப்பிக்கச் சொல்லிவிடுவான்.
அநேகமாக குஷாவின் மீதும் ஜானகியின் மீதும் மொட்டுவுக்கு வெறுப்பு ஏற்பட இதுவே காரணமாக இருந்த்திருக்கக் கூடும். இது நாளடைவில் தொடர்ந்து வளர்ந்துகொண்டே சென்றதன் விளைவாக இன்று இருவருக்கும் எதை எடுத்தாலும் முட்டிக்கொள்ளும் குணம் வந்துவிட்டது. இது தான் இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் சண்டைக்கானக் காரணம் என்று இதுவரை லவா நினைத்திருந்தான். ஆனால் அதன் பின் அவன் அறியாதப் பக்கங்களும் இருக்கிறதென்று லவாவுக்குத் தெரியவில்லை.
சிறுவயதில் குழந்தைகளின் மனதில் இதுபோல் தெரிந்தோ தெரியாமலோ நாம் விதைக்கும் சின்ன சின்ன விதைகள் தான் பின்னாளில் தாழ்வு மனப்பான்மை வெறுப்பு முதலிய விருட்சங்களாக வளர்ந்துவிடுகிறது. எங்கேயோ ஓரிடத்தில் நாம் செய்யும் தவறு தான் அவர்களிடையே உளவியல் ரீதியான மாற்றங்களுக்கு வித்திடுகிறது என்பது நிதர்சனமான உண்மை. படிப்பு முக்கியம் தான் ஆனால் வெறும் மதிப்பெண்கள் மட்டும் நமக்கு அனைத்தையும் பெற்றுத்தந்துவிடாது.
மொட்டுவின் விஷயத்தில் இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள நெடு நாட்கள் ஆனது. எல்லோரும் பதினொன்றாவதில் முதல் குரூப் எடுக்க அவளையும் அது தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் விளைவுகளை அவளுடைய பனிரெண்டாவது வகுப்பு மதிப்பெண்களின் தான் கண்டுகொண்டார்கள். ஆனால் காலம் கடந்து கிடைத்த ஞானத்தால் என்ன பயன் இருக்கிறது? லவா குஷா அனு மூவருமே நல்ல ரேங்க் ஹோல்டர்ஸ். மூவரும் மெரிட்டிலே இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்துவிட மொட்டுவின் மதிப்பெண்களுக்கு கலை கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. சரி அதிலாவது மேத்ஸ் பிசிக்ஸ் படிக்கவைக்கலாம் என்று நந்தா யோசிக்க படித்தால் அக்ரிகல்சர் தான் என்று உறுதியாக இருந்தவளிடம் என்ன சொல்லித் தேற்றுவது என்று முடியாமல் சேர்த்துவிட்டனர்.
நான்கு வருட கல்லூரி முடித்து அனு வேலையிலே சேர்ந்துவிட மொட்டுவோ தான் விரும்பி எடுத்த அக்ரியிலே இன்னும் அரியர் வைத்திருக்கிறாள். கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த மொட்டுவைத் தேடி வந்து ,"நீ ஏன் சாப்பிட வரல மொட்டு?" என்ற லவாவின் குரல் நிகழ்வுக்குக் கொண்டுவந்தது.
"வந்துட்டேன் லவா..." என்றவளை நிறுத்தியவன்,
"அழுதியா மொட்டு?" என்று கேட்க,
"இல்லையே" என்று வரவழைக்கப்பட்ட சிரிப்பை உதிர்க்க அவளையே தீர்க்கமாய்ப் பார்த்தவனின் தோளில் சாய்ந்து,"நான் தப்பு பண்ணிட்டேன் லவா... பெரிய தப்பு பண்ணிட்டேன்... என்னை மன்னிப்பையா?" என்று வினவ,
"என்னாச்சு? நான் ஏன் உன்னை மன்னிக்கணும்?"
"செஞ்ச தப்பை ஒத்துக்க ஒரு தைரியம் வேணும்... இப்போ எனக்கு அந்த தைரியம் இல்ல... இன்னொரு நாள் சொல்றேன்" என்று மொட்டு தற்போது மறைத்ததை பின்னாளில் குஷாவின் மூலம் அறிந்துகொள்ள நேர்ந்தால் அப்போதும் இவளை லவா மன்னிப்பானா? பார்ப்போம்...
கீழே கடமைக்கென்று சாப்பிட்டாலும் குஷாவின் மனம் நிலையில்லாமல் தவித்தது. உண்டு முடித்தவன்,"ஹேய் பூசணி வா கொஞ்சம் நடக்கலாம்..." என்று அங்கிருந்த அனுவைக் கிளப்பிக்கொண்டிருந்தான்.
"நல்ல பாட்டு ஓடுது அப்படியே கேட்டுட்டு இருக்கலாம்..." என்று சோம்பேறித்தனம் கொண்டவளை வலுக்கட்டாயமாக இழுத்தான் குஷா. பின் அவர்களுடன் பிள்ளைகள் அனைவரும் காற்றாட நடைபயின்றனர்.
(நேரம் கைகூடும்...)