Journalist -ன்னு சொன்னதுக்கு அப்புறம் கூட இந்த யமுனாக்கு யூகிக்க முடியலியே என்னத்த சொல்ல. இந்த அம்மா காலேஜ் professor வேற.
ஆனால் யமுனா சொல்லற ஒரு விஷயம் உண்மை. சிங்காரம் கல்கியோட ஒரே வீட்டில் தங்கி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை அமையாமல் இருந்திருந்தா கண்டிப்பா ஒரு 'கொல்டி' - பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிருப்பான்.
அடேய் அறிவுகெட்ட ஜெகா, கல்கி உன்னை என்னால அப்படி பார்க்க முடியாதுன்னு சொன்னதுக்கபுறமும் பின்வாசல் வழியா நுழைய நினைக்கிறியே இது சரியா?
உனக்கு உன் ஒருதலைக் காதலால் இன்னும் கொஞ்சம் வேதனை மிச்சம் இருக்குங்கறப்ப அதை நீ அனுபவிக்காமல் உன்னை விதி விட்டுட்டுமா என்ன? உன்னை நெனைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு.
சர்குணம் வீட்டுல ஒரு சமத்து உண்டுன்னா அது அஞ்சனா தான். எந்த மாற்றத்தையும் சரியா புரிஞ்சுக்கிட்டு பக்குவமா அடுத்து செயல்படும் குணம் உள்ள பொண்ணு. சத்தியமா இந்த குணம் அவளுக்கு - அவளுக்கு மட்டுமே அவ அம்மாகிட்ட இருந்து வந்துருக்கு. அதனால தான் அவளுக்கு கடவுளே நல்ல வாழ்க்கைத்துணையை அமைச்சு கொடுத்திருக்கார். எனக்கு அந்த கேரக்டர் மேல அவ்வளவு admiration - ஏன்னா என்னால அப்படி இருக்க முடிந்ததே கிடையாது.