நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 29
அபிஅப்பாவின் பார்வையில் அருண் ஒரு கணம் அரண்டு போனான் ,சட்டென்று அபியை அருகிலிருந்த ஒரு இருக்கையில் அமரவைத்தான் ..அத்தியாயம் 29
அப்பா இவர்களை நோக்கி வருவதை பார்த்து அவனது இதயத்துடிப்பு எகிறியது..அப்போது அவனது நேரம் நன்றாக இருந்தது போலும் ,உறவினர் ஒருவர் அவரை நிறுத்தி பேசவும் அப்பாவும் அவருடன் பேசியபடி அங்கிருந்து சென்றார்.
அருண் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி கூட்டதில் தன் நண்பர்களைத் தேடிப்பிடித்து.அருகில் வருமாறு சைகை காட்டினான் ..
பூர்ணா வந்ததும்,”என்ன ஆச்சு அருண் ?“என்றாள்..
“தெரியலை ,அபி கொஞ்சம் தள்ளாடுற மாதிரி இருக்கு “என்றான் நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி..
“வாட் ..” என்று இருவருமே அதிர்ந்தனர்.
“ஆனால் அபி எப்படி இப்படி ?” என்று குழம்பினாள் பூர்ணா..
“அதான் நானும் கேட்டுட்டு இருந்தேன் ,,நீங்களும் கொஞ்சம் கேட்டு பாருங்க பூர்ணா..”என்றான் அருண்.
சம்மதமாக தலையாசைத்துவிட்டு ,பூர்ணா அபியிடம்
“அபி, கடைசியா என்ன சாப்பிட்ட?”என்று விசாரித்தாள்..
அபி அருணைக் கைகாட்டி “அருண் தான் ஒரு ஜுஸ் குடுத்தான் ,அதை குடிச்சதுக்கு அப்புறம் ,அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருக்கு..ரொம்ப அருமையான ஃபீல் இது ,பூர்ணா நீயும் ட்ரை பண்ணி பாரேன்..அருண் அந்த ஜுஸ் இன்னொரு பாட்டில் வாங்கு ப்ளீஸ்..”என்று கெஞ்சினாள்..
“ஐய்யயோ..அந்த ஜுஸ ஏன் டா அபிக்கு குடுத்த..?அதுல நான் ஓட்கா மிக்ஸ் பண்ணி வச்சிருந்தேனே..” என்று பதறினான் விக்கி..
அருண் அதிர்ச்சியில் நெற்றியில் ஓங்கி அறைந்து கொண்டு..விக்கியை எரித்துவிடுவான் போல் முறைத்தான்..
“ஃபுல்லா குடிச்சி காலி பண்ணிடாங்களாடா” என்று கவலையுடன் அவன் கேட்கவும்,
அருணுக்கு மேலும் ஆத்திரம் பொங்கியது..
“மகனே நீ செஞ்ச காரியத்துக்கு அபிக்கு மட்டும் எதாவது ஆச்சுனா நீ செத்தடா..” என்று கடித்த பற்களிடையே வார்த்தைகளை துப்பினான்.
“விக்கி உனக்கு அறிவே இல்லையாடா..?அருண்கிட்ட மொதல்லயே சொல்லி இருக்க வேண்டியது தானே..”என்று கடிந்தாள் பூர்ணா..
“சொன்னா அவன் அடிப்பான், அதான் சொல்லாம வச்சிருந்த்தேன்..”என்றான் விக்கிக பாவமாக…
“இப்ப மட்டும் என்ன உன்னை கொஞ்சுவேன்னு நினைப்பா? வெளிய வாடி உனக்கு இருக்கு ..” என்று மிரட்டினான் அருண்..
“சரி சரி ரெண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்திட்டு இப்ப அபியை எப்படி சமாளிக்கப் போறோம்ங்கறதை யோசிங்க..யாருக்காவது தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும் ..என்றாள் பூர்ணா..
அருணும் ,விக்கியும் ஆமோதிப்பாக தலையாட்டி விட்டு அபியின் பக்கம் திரும்பினால்,அவள் அமர்ந்திருந்த இருக்கை காலியாக இருந்தது..
பீதியுடன் அவளை நாலாபக்கமும் அவர்கள் தேட, அபி பந்தி நடக்கும் இடத்தை நோக்கி போய் கொண்டிருப்பதை அருண் பார்த்தான்..விரைந்து சென்று அவள் கையைப் பற்றி ..
“அபி நிள்ளு எங்க போற?”என்றான்.
அவன் பிடியிலிருந்து கையை விடுவித்துகொள்ள முயன்றபடி
“விடு அருண்..என் தங்கச்சி கல்யாணத்துல நான் பந்தி விசாரணை பண்ன வேண்டாமா..?”என்றாள் அபி..
ஆமா இப்ப அது ஒன்னுதான் குறைச்சல்..”என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு
“அபி சொன்னா கேளு வா, அங்க போய் உட்காரலாம்”என்று தன் பிடியை விடாமல் அவளை வெளியே கூட்டிவர முயன்றான்..
“போடா,நீ ரொம்ப மோசம் ,என் கைய இவ்வளவு அழுத்தமா பிடிக்கற?வலிக்குது தெரியுமா?போ உன் கூட பேசமாட்டேன்..” என்று தன் கையை உதறி விடுவித்து கொண்டு கூட்ட த்திற்குள் புகுந்து உள்ளே சென்றாள்..
“கடவுளே எந்த பிரச்சனையும் வராம காப்பாத்து பா..”
அருண் வேகமாக உள்மூச்சை இழுத்து ,ஒரு அவசர பிரார்த்தனையுடன் அவளைத் தொடர்ந்த்து சென்றான் ..
அபி எதை பற்றியும் கவலைப்படாமல் அவள் பாட்டிற்க்கு கூட்டத்தில் புகுந்து மளமளவென்று முன்னேறிச் செல்ல, அவளை கண்பார்வையில் விட்டுவிடாமல் தொடர அருண் திணறித்தான் போனான் ..பிறர் அறியாதவாறு அவள் கையைப் பிடித்து தடுக்க சிலமுறை முயன்றான் ,ஆனால் அபி அவனது கையை தட்டிவிட்டு சென்றுவிட்டாள்..அதற்கு மேல் அந்த முயற்சசியைத் தொடர்வது மற்றவரின் கவனத்தை ஈர்க்க கூடும் என்பதால், அபியை சில அடி தூர இடைவெளிவிட்டு கவனமாக பின் தொடர்ந்தான் ..
அபிக்கு இந்த கவலை எதுவும் இல்லை.. அங்கங்கே நின்று எதிர்படுவோரையெல்லாம் உறவு முறை சொல்லி அழைத்து அவள் மிகுந்த உற்சாகத்துடன் பேசியது ,பலரது புருவத்தை உயரச் செய்தது..
சாப்பிடும் அரங்கில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க ,வேகமாக சென்ற அபி சட்டென்று நின்றாள்..அவளையே பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த அருண் இதை சற்றும் எதிர்பாராமல் அவம் மேல் மோதிக்கொண்டான் ..
“அவுச்..”
அபி சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு பெண்மணியின் அருகில் சென்று அவளை இறுக கட்டிக்கொண்டாள்..
“அத்தை..எப்படி இருக்கீங்க?பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா?” என்று பாசமழையை பொழிந்து விட்டு..பிறகு சற்று தள்ளி நின்று மேலும் கீழும் பார்த்துவிட்டு மீண்டும் அவளை கட்டிகொண்டு
“அத்தை.. என்ன அத்தை இப்படி பாதியா இளைச்சுடீங்க..?”என்று அங்கலாய்த்தாள்.
அருண் அந்த கனத்த சரீரத்தை பார்த்து,”இது இளைச்சி போறதுன்னா இதுக்கு முன்னாடி ?”என்று ஆச்சரியமானான் ..
அந்த அத்தையம்மாளும் சிறிது அதிர்ந்துபோனதாக தோன்றியது..அதுமட்டுமில்லாமல் அபியை பற்றி மோசமாக பேசியவரும் இவர் தான் என்று அருணுக்கு அப்போதுதான் உறைத்தது.
“ஐயோ இந்த அபி இப்படி ஒவர் ஆக்டிங் பண்ணி மாட்டிக்குவா போல் இருக்கே..”என்று அவன் கவலையடையும் போதே,
“அத்தை இந்தாங்க இன்னொரு ஜாங்கிரி வச்சிகோங்க,,, இந்தாங்க சில்லி கோபி உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே..நீங்க தான் இந்த கல்யாணத்துக்காக ஓடியாடி வேலை செஞ்சிருபீங்கன்னு நினைக்கறேன் ..அதான் இப்படி துரும்பா இளைச்சி போய்டீங்க..நல்லா சாப்பிடுங்க ..”என்று விழுந்து விழுந்து கவனித்தாள்..
அந்த அம்மா பிளந்த வாய் மூடாமல் அபியை வெறிக்கவும்
அருண் மெதுவாக அபியின் அருகில் வந்து “ஷ்ஷ்..அபி வா போலாம்..” என்று கிசுகிசுத்தான் ..
“இரு அருண் ,இவங்க யாரு தெரியுமா ?என் சொந்த அத்தை…ரொம்ப பாசக்காரங்க.. என்னையும் அனுவையும் சொந்த பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க..எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு ஃபோட்டோ எடு அருண் ..” என்று அந்த அத்தையம்மாளோடு கன்னத்தோடு கன்னம் வைத்து உதட்டை குவித்து போஸ் கொடுத்தாள் அபி..
அருண் புன்னகையில் உதடு வளைய தன் மொபைல் ஃபோனில் அந்த முத்தான நிகழ்வை பதிவு செய்தான் ..
வாயடைத்து போன அத்தையம்மாள் அபியின் பாசவெள்ளத்தில் சிக்கி சிசைந்து போனார்..
“வாடி என் தங்கம் ,எப்படி மா இருக்க ?உன்னைப் போய் தப்பா பேசிட்டனே…என் ராஜாத்தி உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப “என்று கண்களில் நீருடன் மனமார வாழ்த்தினார்..
அடுத்து அபி அருண் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்து அப்படியே டேக் டைவர்ஷன் என்று வேறு புறம் சென்றாள்.
அருண் மீண்டும் அவளை தேடிப் பிடித்த போது அவள்
“சுரேஷ்ஷ்ஷ்…”என்றபடி அவனை கட்டிப்பிடித்து கொண்டிருந்தாள், அருணுக்கு மூளைக்குள் ரத்தம் பாய்ந்து மண்டை சூடேறியது..
சுரேஷ் முதலில் சிறிது திகைத்துப் போனாலும் உடனேயே சமாளித்துக் கொண்டு அவனும் அவளது அணைப்பை திருப்பினான் .
“ஹாய் அபி எப்படி இருக்க ?”என்றான் புன்னகையுடன் ..
அருணுக்கு அபி வேறோருவனை ஒட்டிக் கொண்டிருப்பதை காண சகிக்கவில்லை,இருப்பினும் இடம் பொருள் ஏவல் உணர்ந்து பல்லைக்கடித்து பொறுத்தான் ,ஆனால் அபி இப்போதைக்கு அவனை விடுவதாக இல்லை என்று தோன்றவே ..
“இந்த அபி என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்கறா..”என்று ஒரு பொறுமையிழந்த வேகமூச்சுடன் ,அவளை அவனிடமிருந்து பிரித்து நிறுத்தினான் ..
சுரேஷ் கோபமாக “ஹூ ஆர் யூ மேன்..”என்று கேட்டான் ..
அவனிடம் தணிந்த குரலில் ,”சாரி நான் அபிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும் “ என்று கூறிவிட்டு அவனது பதிலுக்கு காத்திராமல் அவள் கையை இரும்புப் பிடியாக பற்றி அங்கிருந்து இழுத்துச் சென்றான்..
யார் பார்க்கிறார்கள் ,என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவன் துளியும் கவலைப்படவில்லை..
அபியின் அப்பா இந்த காட்சியை பார்த்து சிலையாகி நின்றுவிட ,அருகிலிருந்த ஒரு உறவுக்கார பெரியவர்,
“யாருப்பா அது ,நம்ம பொண்ணை இத்தனைப் பேர் முன்னாடி ,கையை புடிச்சி கூட்டிப் போறது..?”என்றார்.
“மாமா, அது அபியோட கூட வேலை பார்க்குற தம்பி ..ரொம்ப நல்ல பையன்..” என்று அவர் அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
“பார்த்துப்பா…காலம் கெட்டு போய் இருக்கு ,பொண்ணு விஷயம் பார்த்து உடனே கவனி, இந்த காலத்துல புள்ளைங்க கூட படிக்கறவன், வேலை பார்க்கறவன் இவங்கள நம்பிதான் ஏமாறுதுங்க..” என்று அவர் இலவச அறிவுரை வழங்கவே அப்பா அவரை தடுத்து,
“மாமா என் பொண்ணை பத்தி எனக்கு தெரியும் ,நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்.. என் பொண்ணு தப்பு பண்ணமாட்டா எனக்கு தெரியும்..இப்ப என்ன அந்த பையனை காதலிக்கறாளா?பண்ணட்டுமே, தப்பு ஒன்னும் இல்லையே ..இந்த காலத்துல அது ரொம்ப சகஜம் தானே..என் பொண்ணு செலக்ஷன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு ,அவ ஒரு முடிவு எடுத்தா அது சரியா தான் இருக்கும் ..”என்றார் பெருமிதமாக.
அருண் அபியை கிட்ட தட்ட இழுத்துக்கொண்டு வந்தவன்,
“கையை விடு அருண் வலிக்குது “என்று அவள் மன்றாடியதை அவன் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை, மேலே மொட்டை மாடியில் யாருமில்லாத இட த்திற்கு வந்து தான் அவளது கையை விடுவித்தான்..
அபி தனது சிவந்த மணிக்கட்டை தடவியபடி அவனைப் பார்த்து முறைத்தாள்..
“இப்ப எதுக்கு என்னை இப்படி இழுத்துட்டு வந்த?”என்றாள் எரிச்சலாக.
“பின்ன அதன் சுரேஷ் மேல அப்படியே ஃபெவிகால் போட்ட மாதிரி ஒட்டிட்டு இருந்தா, பார்த்துட்டு சும்மா இருக்கணுமா?”என்றான் அவனும் அதே எரிச்சலுடன் .
“நான் அவனை ஹக் பண்ணா உனக்கு என்ன ப்ராப்ளம்?”
“நீ ஹக் பண்ணக் கூடாது..”
“ஏன் பண்ணக் கூடாது?”
“பண்ணக்கூடாதுன்னா கூடாது அவ்வளவு தான் “
“அவன் என் மாமா பையன் ,சின்ன வயசுல இருந்து கூட சேர்ந்து வளர்ந்த ஃப்ரெண்ட் ,நான் அப்படித்தான் ஹக் பண்ணுவேன் ,அதை கேக்க நீ யாரு ?”
“ஓஓ மாமா பையனா?நல்லது.. ரொம்ப நல்லது,போ.. போய் அவனையே கட்டிக்கோ..நடுவுல நான் யாரு கேக்குறதுக்கு?போங்க மேடம் உங்க இஷ்டப்படியே யாரை வேணா கட்டிக்கோங்க ..”என்று ஏளனமாக உரைத்தபடி அவளைப் பிடித்து வேகமாகத் தள்ளினான் ..
இதை சற்றும் எதிர்பாராத அபி, நிலை தடுமாறி விழப்போக,அவனே அவளை விழாமல் தாங்கிப்பிடித்து நிறுத்தினான் ..
அவளது அடிவாங்கிய தோற்றத்தைப் பார்த்து அருண் தன்னையே நொந்துகொண்டான்,அபி சுயநினைவுடன் இவை எதையும் செய்யவில்லை என்பதை மறந்து தான் அவளிடம் கடுமைக் காட்டியதற்காக மிகவும் வருந்தினான் ..
“போ.. நீ ரொம்ப மோசம் “என்று முகம் திருப்பினாள் அபி.
“சாரி அபி, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்..”என்று கெஞ்சினான் .
அவனை சந்தேகமாகப் பார்த்து “ப்ராமிஸ்?”என்று கையை நீட்டினாள்..
“ப்ராமிஸ்..” என்று நீட்டிய அவள் கையின் மீது தன் கையை வைத்து மூடினான் அருண்..
“யூ ஆர் சோ சுவீட் அருண்..” என்று அவனது கன்னத்தை பிடித்து கிள்ளினாள் அபி.
“ஹே என்ன பண்ற..?” என்றபடி பினடைந்தான் அருண்..
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் தெரியுமா?”
“தெரியும் ..”என்றான் புன்னகையுடன்.
“எப்படித் தெரியும் ?”என்றாள் அவள் கேள்வியாக
“உன் கண்ணைப் பார்த்தாலே தெரியும் “என்றான் அருண்.
பதிலுக்கு அவள் “ஈஈ ..”என்று அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு..
“அருண் ,நான் உன்ன ஹக் பண்ணலைன்னு தானே உனக்கு கோபம் ?தோ ..இப்பவே உன்னை ஹக் பண்றேன் பாரு “என்று அவன் கழுத்தை இறுக்க அணைத்தாள்..
“நோ அபி “என்று அவளை தீச்சுட்டவன் போல் விலக்கி நிறுத்தினான் ..
“ஏன் என்னை உனக்கு பிடிக்கலையா?” என்று பரிதாபமாக கேட்டாள் அபி..
“ஐயோ இவளுக்கு எப்படி புரியவைப்பேன் ,நான் படுகிற பாட்டை?இவ தன்னிலையில் இல்லாம இருக்கா, இப்ப இவளுக்கும் சேர்த்து நான் தானே கட்டுப்பாட்டோடு இருக்கணும்?நாளைக்கே இந்த மயக்கம் தெளிஞ்சபின்னாடி,அவளோட இந்த தன்னிலை மறந்திருந்த நிலமையை யூஸ் பண்ணிக்கிட்டியான்னு கேட்டா நான் என்ன சொல்றது?”என்று இருதலைக் கொள்ளி எரும்பாக தவித்தான் ..
“அப்படிலாம் இல்லை அபி ..”
“அப்போ என்னை ஹக் பண்ணு” என்று இருகையையும் விரித்தாள்..
”கடவுளே என்னை எப்படி கொண்டுவந்து மாட்டிவிட்டிருக்கீங்க?”என்று மனதிற்குள் புலம்பினான்.
“என்னை ஹக் பண்ணலைன்னா உனக்கு என்னை பிடிக்கலைன்னு அர்த்தம் “என்று உதட்டை பிதுக்கி அவள் குறை கூறவும் வேறுவழியில்லாமல்..
“சரி “என்று அவளை பட்டும் படாமல் லேசாக அணைத்தான் ..
“போடா உனக்கு சரியா ஹக் பண்ண கூட தெரியலை..” என்று அவனை இழுத்து தன்னுடன் சேர்த்து இருக்கி அணைத்தாள் அபி..
அவ்வளவுதான் அதுவரை அவன் கட்டிக் காத்த கட்டுப்பாடெல்லாம் காற்றில் பறக்க அவனை மீறிய உணர்ச்சிப் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டான்..எலும்பு நொருங்கிவிடும் போல அவளை இறுக அணைத்தவனின் அனல் தெரிக்கும் கைகள் அவளின் தண்ணென்ற முதுகைத் தொட்டதும் உடல் சிலிர்த்தது இருவருக்கும் .. அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டவன் லேசாக முகம் உயர்த்தி நிலவொளியில் ஜொலித்த அவள் வதனத்தை கண்டு மயங்கி கிறங்கி முற்றிலும் தன்வசமிழந்து அவன் செவிதழ்களை நோக்கி குனிந்தான் ..
விர்ர்..ரென்று அதிர்ந்த தனது மொபைல்ஃபோன் அதிர்வில்,சட்டென்று அவளைவிட்டு விலகி நின்றான்..
தான் ஆசையாக வைத்திருந்த டெட்டி பியரை யாரோ பரித்துகொண்டது போல் ஏமாற்றத்துடன் அருணைப் பார்த்தாள் அபி..
அவளை நேராகப் பார்ப்பதை தவிர்த்து..முகத்தை திருப்பிக்கொண்டு ஃபோனை எடுத்து பேசினான் ..
மறுமுனையில் பூர்ணா..”அருண் எங்க இருகீங்க ?உங்களை காணாம நாங்க இங்க கவலை பட்டுட்டு இருக்கோம்..”என்றாள்..
“நாங்க இங்க மொட்டை மாடியில இருக்கோம் ,கொஞ்சம் சீக்கிரம் வாங்க பூர்ணா”என்றான் மன்றாடும் குரலில் ..அவனுக்கு அபியுடன் தனிமையில் இருக்க இப்போது பயமாக இருந்தது. தன்னை மீறி ஏதேனும் ஏடாகூடமாக நடந்து விடுமோ என்று அஞ்சினான்..
பூர்ணாவும் விக்கியும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தனர் ..
“அபியை காணலைன்னு கீழ அவங்க அம்மா கேட்டாங்க அருண் நான் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன் ..இப்ப என்ன பண்றது?”என்றாள் கவலையாக..
“பூர்ணா ஃபன்ஷன் கிட்டத்தட்ட முடிஞ்சிடுச்சி,நீங்க அபிய உங்களோட ரூமுக்கு கூட்டிட்டு போய் தூங்க வச்சிடுங்க,நாளைக்கு காலையில அவ சரி ஆகிடுவா..” என்றான் அருண்..
“அது முடியாதே அருண்,என்னோட ரூம்ல அனுவோட ஃப்ரெண்ட் தங்கி இருக்கா,இப்போ அபியை அங்க கூட்டிட்டு போனா அவளுக்கு தெரிஞ்சிடுமே..அதை அபி விரும்ப மாட்டான்னு நெனைக்கறேன்…பேசாம உன்னோட ரூமுக்கு கூட்டிடு போய்டு அருண்,நான் அபியோட அப்பா அம்மாகிட்ட அபி என்கூட நைட் தங்க போறான்னு சொல்லி சமாளிச்சிடுறேன் “என்றாள் பூர்ணா..
“அது சரியா வராது பூர்ணா”என்று உடனடியாக மறுத்தான் அருண்..
“ஏன் அருண்?”என்று புரியாமல் கேட்டாள் பூர்ணா..
“விக்கியும் நானும் இருக்கற ரூம்ல அபி சரியா வராது வேண்டாம் “
“டேய் மச்சான், நான் எதாவது பேச்சிலர் ரூம்ல தங்கிக்கறேன் என்னை பத்தி கவலைப் படாத ,அபிய பார்த்துக்கோ” என்றான் விக்கி..
அருண் எவ்வளவோ மறுத்தும் விடாமல் பூர்ணாவும் விக்கியும் அவனை சம்மதிக்க வைத்தனர்..
அன்று மாலையிலிருந்து அவன் அனுபவிக்கும் மன உளைச்சலுக்கு எப்போது படுக்கையில் விழுவோம் என்றிருந்தது அவனுக்கு,ஆனால் அவனின் கண்மணி அவனை விடுவதாக இல்லையே.
அபியை வெறும்வயிறாக தூங்க வைக்க்க கூடாதென்று,அவர்கள் பயணத்தின் போது வாங்கிய பிரெட் மற்றும் பிஸ்கட்டை கொடுத்து சாப்பிட சொன்னான் ..
அபி முகம் சுளித்து..”இந்த யக்கீ ஃபுட் லாம் சாப்பிட மாட்டேன் “என்றாள்.
“அபி என் பொறுமைய சோதிக்காத கொஞ்சமாவது சாப்பிட்டுட்டு தூங்கு..” என்றான் கண்டிப்புடன் ..
அந்த பிஸ்கட்டை தூக்கி எரிந்துவிட்டு. “எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும்” என்று அடம் பிடித்தாள்..
“இந்த நேரத்துல நான் எங்க போய் ஐஸ்கிரீம் வங்குறது அபி ?”
“அதெல்லாம் தெரியாது நான் ஐஸ்கிரீம் மட்டும் தான் சாப்பிடுவேன்..” என்று தர்ணா செய்தாள்..
“இந்த விக்கிய...இருடா நாளைக்கு உனக்கு இருக்கு.”என்று மனதிற்குள் அவனை திட்டிவிட்டு,
“சரி இரு நான் போய் வாங்கிட்டு வரேன் “என்றான்.
“நானும் வரேன் அருண்..” என்று அபியும் எழ முயல..
“நோ…”என்று அதட்டி அவளை உட்காரவைத்தான்.
“ப்ளீஸ் அருண் ..”என்று கெஞ்சியவள் அவன் முறைக்கவும் அமைதியானாள்..
“நான் திரும்பி வர்ற வரைக்கும் ஒரு சத்தம் போடாம அசையாம அமைதியா இருக்கணும் சரியா?என்று அதட்டிவிட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றான்…
நல்ல வேளையாக கல்யாணவிருந்தில் ஐஸ்கிரீம் பார்த்த நியாபகத்தில் அங்கு சென்று கேட்டரிங்கில் பணிபுரிந்த ஒருவனிடம் பணம் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கி வந்தான் ..ரூமை திறந்தால் கும்மிருட்டாக இருந்தது..சுவிட்சை தேடிப்பிடித்து விளக்கை ஒளிரவிட்டவன் அபியை பார்த்து திகைத்து போனான் ..அவள் தன் கனமான புடவை நகைகளை களைந்து விட்டு அவனுடைய லூசான டீ ஷர்ட் மற்றும் அரை டிரவுஸரில் இருந்தாள்..
புடவையை விட இப்போது இன்னும் அழகு கூடி தெரிய “இப்ப இது ஒன்னு தான் குறைச்சலா இருந்தது கடவுளே இவ என்னை ரொம்ப சோதிக்கறா..”என்று புலம்பினான் ..
அதற்குள் அருணின் கையிருந்த ஐஸ்கிரீமை கண்டுவிட்ட அபி ,சிறுபிள்ளை போல பாய்ந்து வந்து அவனிடமிருந்து வாங்கி உண்ணத்தொடங்கினாள்..
சாப்பிட்டு முடித்ததும் ..உறங்குவதற்கு தயாராக அபி , பெட்டில் சாய்ந்து கொண்டு அருணை வருமாறு அழைத்தாள்..
“அருண் வா சேர்ந்து தூங்கலாம் “
“நோ வே..நீ மேல படுத்துக்கோ ,நான் கீழ தூங்கறேன் ..”என்றான்.
“அதான் பெட் இருக்குல்ல ஏன் கீழ தூங்குற?நான் தூக்கத்துல உன்னை உதைப்பேன்னு பயப்படுறியா?கவலைப்படாத நான் அப்படிலாம் பண்ண மாட்டேன் ..”என்று கிளுக்கி சிரித்தாள்..
அவளிடம் மறுத்து வாதாட தெம்பும் இல்லாமல், பேசாமல் பெட்டில் ஒரு ஓரமாக கைகளை மடக்கி தலைக்கு வைத்து மோட்டுவளையை பார்த்தபடி படுத்தான் ..
அபி மெதுவாக அவன் புறமாக ஊர்ந்து வந்து அவன் மார்பில் தலை வைத்து படுத்தாள்..
மின்சாரம் தக்கியவன் போல அதிர்ந்தான் அருண்.
“அபி என்ன பண்ற?”
“தூங்கப்போறேன்..”
“என் மேல ஏன் தூங்குற?தலையணை இருக்கு ல?”
“எனக்கு இந்த தலையணை தான் பிடிச்சிருக்கு..” என்று அவன் மேல் இன்னும் வாகாக சாய்ந்து கொண்டாள்.
“இதையெல்லாம் நீ சுய நினைவோட செஞ்சா பரவாயில்லை ,இப்ப நீ சொல்றதை எல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்க்கறதுன்னே தெரியலையே”என்று முணுமுணுத்தான் ..
“என்ன சொன்ன?”என்று அபி கேட்க
“ஒன்னுமில்லை..” என்றுவிட்டு கண்ணை மூடி, ஆசைக்கும் அறிவுக்கும் மத்தியில் ஊசலாடிக்கொண்டிருந்த தன் மனதை கட்டுக்குள் வைக்கப் போராடினான்.
“அருண்…”என்று அவன் காதருகில் கிசுகிசுத்தாள்.
“ம்ம்..”
“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்”
“சொல்லு”
“எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..”
“ஏற்கனவே சொல்லிட்ட..”
“ஆனா நீ திருப்பி ஒன்னும் சொல்லவே இல்லை..”என்ற அபியின் குரலில் தெரிந்த வலியில் அவன் சட்டென்று கண் திறந்து பார்த்தான் ..
அவன் மீது முகவாயை வைத்துகொண்டு தலையை நிமிர்த்தி அகல விரித்து அவனைப் பார்த்திருந்த கண்களில் நீர் நிறைந்திருந்தது..
“ஏன் அருண் உனக்கு என்னைப் பிடிக்கலையா?”என்று கேட்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடி அவன் சட்டையை நனைத்தது.
அருணுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை ..அவன் வயடைத்துப்போயிருக்க..
அபியே தொடர்ந்து பேசினாள்..
“அருண் நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?இந்த உலகத்திலேயே உன்னை தான் அதிகமா லவ் பண்றேன் ..ஐ லவ் யூ சோ மச்..”என்று உணர்ச்சி பொங்க பேசினாள்..
அருண் திகைத்துப் போய் அவளை வெறித்தான்..அவள் பேசிய போது துளியும் மதுவின் போதையில் பேசுவது போல் இல்லை ..அவள் வார்த்தையை கேட்டு முழுமையாக மகிழக்கூட முடியாமல் அவன் குழம்பிப் போனான் ..
எப்படி இருந்தாலும் அபி அவள் மனதை திறந்து அவன் மீது தனக்கிருக்கும் அன்பை பறைசாற்றியிருக்கிறாள்..இது அவன் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய நேரம் அவள் அறிவின் சமநிலையை ஆராய்ச்சி செய்யும் நேரமில்லை..
“அவள் தெளிவுடன் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன தன்னுடைய காதலை சொல்லியதே போதுமே..”அவனது மனம் பூரித்துபோனது..அவனது எண்ண ஓட்டம் இவ்வாறு இருக்க ,அபி எதையோ எதிர்பார்த்து அவன் முகத்தை பார்த்திருந்துவிட்டு அவனிடம் எந்த சலனமும் இல்லாமல் போகவே..
மிகுந்த ஏமாற்றத்துடன் “எனக்கு தெரியும் நீ ஏன் பேசாம இருக்கேன்னு …யூ டோன்ட் லவ் மீ இல்லையா அருண்?”
“என்ன உளறல் இது ?”என்று அவன் மனதில் நினைக்கும் போதே..
“ஏன் அப்படி சொன்ன அருண்?எப்படி முடிஞ்சது உன்னால?”என்று மிகுந்த வேதனையுடன் அபி கேட்க..அவனுக்கு அவள் எதை பற்றி கேட்கிறாள் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்ற?”
“காலையில அனுகிட்ட ஏன் அப்படி சொன்ன?கார்த்திக் உங்க கால்ல சரணாகதி அடைஞ்சதுல ஆச்சரியமே இல்லைன்னு”
அருணுக்கு தூக்கிவாரிப் போட்டது.கடவுளே அபி அதை கேட்டாளா?அவன் ஏதோ யோசியாமல் விளையாட்டாக கூறியது, ஆனால் அபிக்கு அப்போது எப்படி வலித்திருக்கும், இப்போது அபியின் இடத்திலிருந்து பார்த்தால்தான் எவ்வளவு பெரிய குளறுபடி செய்திருக்கிறான் என்பது உரைத்தது அருணுக்கு..
அபியின் அடுத்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தை ஈட்டியால் துளைப்பது போல் இருந்தது..
“கார்த்திக் இடத்துல இருந்திருந்தா நீயும் அனுவை தான் தேர்ந்தெடுத்து இருப்ப இல்லை?”
அருண் வேகமாக எழுந்து அபியின் தோளை பிடித்து உளுக்கினான் ..
“ஹவ் டேர் யூ ..எப்படி உன்னால இப்படி நினைக்க முடியுது?”என்று கோபமாக கேட்டாலும் அவனது குரலிலும் வேதனையே நிரம்பியிருந்தது.
“அப்புறம் ஏன் அப்படி சொன்ன?"
“அது..அது வந்து சும்மா ஒரு ஜோக்..”
“உனக்கும் மத்தவங்க மாதிரி என்னொட ஃபீலிங்க்ஸ் வெறும் ஜோக் அப்படி தானே.?
என்று கேட்கும் போதே அவள் குரல் உடைந்து கண்களில் கடகடவேன்று கண்ணீர் வரவே,
அதற்கு மேல் தாங்க மாட்டாமல்
அவளைத் தன்னோடு சேர்த்து இருக்க அணைத்து அவளது முகத்தை தனது இதயத்தில் வைத்து அழுத்தி..
“இங்க கேளு..அது எப்பவும் அபி அபின்னு உன்னோட பேர சொல்லி தான் துடிச்சிட்டு இருக்கும் ,வேற ஒரு பேர் எப்பவுமே கேட்டாது புரியுதா?”
“தெரியாம உன்னை காயப்படுத்தினதுக்கு ரொம்ப சாரி அபி..இனிமேல் இந்த தப்பை ஒரு நாளும் செய்யமாட்டேன்.”.என்று உறுதியளித்தான் அருண்..
“ஐ யம் சாரி அபி..அண்ட் ஐ லவ் யூ சோ… மச் ..என்று அவளை மேலும் அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான் ..
அதன் பிறகு அபி உறங்கிய பின்பும் வெகு நேரம் வரை ..அவள் முதுகைத்தடவி கொடுத்துக் கொண்டே..”ஐ யம் சாரி….சாரி..” என்று மந்திரம் போல ஜபித்துக் கொண்டிருந்தான்..
தொடரும்.