இதெல்லாம் நடந்து முடிந்து,விவான் ஓய்வுக்காக நித்யாவோடு டூர் போகலாம் என்று முடிவெடுக் அது அப்படியே ஆட்களைச் சேர்க்க அன்றைய அனேஷியாவின் அழைப்பும் அதற்கு வலுசேர்த்தது. சொல்லப்போனால் விவான் தன்னுடைய திருமணத்திற்குக் கூட அனேஷியாவை முறையாக அழைக்கவில்லை. ஜஸ்ட் மெசேஜ் மட்டும் செய்தான். அப்போதும் தன்னைத் தொடர்ப்புக்கொள்ளாதவள் அன்று திடீரென்று அழைத்தது விவானுக்கே ஆச்சரியம். கல்லூரி சேர்ந்ததும் திவேஷ் ஒருநாள் விவான் துவாராவை அழைத்துப் பேச அவனையும் தங்களோடு சேர்த்துக்கொண்டனர். ஆக அனேஷியாவை விட்டது தொல்லை என்று நினைக்கும் போது தான் அனேஷியா துவாராவை சந்திக்க வேண்டுமென்று சொல்ல கோவத்தில் விவான் கண்டபடி திட்டி வைத்துவிட்டான். ஆனால் விடாமல் அழைத்து தொந்தரவு செய்ய வேறு வழியின்றி யாழ் மற்றும் துஷியிடம் நடந்ததைச் சொல்லி அதன் பின் தான் இந்த நாடகம் அரங்கேறியது.
அவர்கள் நால்வரும் (திவேஷும் இவர்கள் அணியில் சேர்த்துவிட்டான்) எதற்காக அவள் துவாராவை சந்திக்க விரும்புவதாகக் கேட்க, அவனிடம் மன்னிப்பு வேண்டும் என்றும் அதுவே தன் தாயின் இறுதி ஆசை என்றும் பேச மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டனர்.பின்னே துவாரா விஷயத்தில் மட்டும் தான் அவள் அப்படி நடந்துகொண்டாள். மற்றபடி அவர்கள் எல்லோருக்கும் அவள் என்றும் பழைய அனேஷியாவாகவே இருந்தாள். விவான் இதற்கு சம்மதித்ததற்கு ஒரே காரணம் சமீப காலங்களாக துவாராவின் நடவடிக்கை சரி இல்லை என்பதும் ஒருவேளை அவன் மனதில் இன்னும் அனேஷியா இருப்பதால் தான் அவன் இப்படி இருக்கிறானோ என்றும் யோசித்து அவள் திட்டத்திற்கு சம்மதித்தான். துஷியின் மூலமாக கீர்த்தி விஷயம் அறிந்து இது நடக்கவே கூடாது என்று தான் சரித்திராவை அனுப்பினாள்.
அனேஷியாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் அவள் அன்னை தான். கல்லூரி யூஜியை தன் வீட்டிலிருந்து டேஸ்காலராக தொடர அன்னையின் எண்ணமும் அன்பும் ஓரளவுக்கு அவளுக்குப் புரிந்தது. எப்போதும் தந்தையுடன் சேர்ந்து அன்னையை மட்டம் தட்டுவதும் கிண்டல் செய்வதுமாகவே இருந்தவளுக்கு கொஞ்சம் அன்னையின் வார்த்தைகளையும் கேட்க ஆரமித்தாள். யூஜி முடியும் வரையில் திரும்ப துவாராவை சந்திக்க அவள் விரும்பவில்லை ஆனால் பிஜி படிக்கும் போது அன்னையுடன் அதிகம் ஒன்றியிருந்தாள். அவரின் வார்த்தைகளில் உள்ள நியாயம் புரிய ஆரமித்தது. அவள் செய்த செயல்களை நினைக்கையில் அவளுக்கே தப்பாக இருக்க, துவாராவின் மீது அத்தனை வெறுப்பைக் காட்டியிருக்கக் கூடாதோ என்று யோசிக்கும் வேளையில் தான் அவளையே அறியாமல் அவனுக்கு ஆறா வடு ஒன்று கொடுத்தாள்.
அனேஷியா பிஜி முடித்து பிஎச்டி போட்ட அதே பல்கலைக்கழகத்தில் தான் கீர்த்தி மற்றும் சரித்திரா யூ.ஜி படித்தனர்.கீர்த்தியைப் பார்க்க வந்தவன் கண்களில் அன்று ஏன் அனேஷியா தென்பட்டால் ?அவன் ஏன் அனேஷியாவைப் பார்த்ததும் அப்படித் துள்ளி குதித்து ஓடினான்?அதே கல்லூரியில் படிக்கும் ஒருவன் ஏன் அனேஷியாவைக் காதலிப்பதாகச்சொல்லி டார்ச்சர் தர வேண்டும்? தினமும் தன் பின்னாலே வருபவனுக்கு அன்று ஏன் அனேஷியா பாடம் புகட்ட நினைக்க வேண்டும்? தன்னை நெருங்கியவனை எதற்கு அனேஷியா தன் காலில் இருந்த செருப்பைக் கழட்டி திரும்பி அவனை அடிக்க வேண்டும்?அதுவரை அனேஷியாவைப் பின்தொடந்தவன் அப்போது விலகி ஏன் இடையில் துவாரா நுழையவேண்டும்? ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முடிந்து கேம்பஸில் இருக்கும் போது ஏன் இது நடக்கவேண்டும்? தன் அண்ணனைத் தேடி சரித்திராவுடன் வெளிய வந்த கீர்த்தியின் கண்களிலும் ஏன் இது விழ வேண்டும்? ஆயிரம் நபர்கள் இருக்கும் இடத்தில் தான் ஒருவன் மட்டும் ஏன் நிர்வாணமாக இருப்பதைப் போல் துவாராவிற்குத் தோன்ற வேண்டும்? இதற்கு பெயர் தான் விதியோ?
இது தான் நீங்கள் இவ்வளவு நாளாக எதிர்பார்த்த 'அந்த' சம்பவம் . (பயணங்கள் முடிவதில்லை )
அவர்கள் நால்வரும் (திவேஷும் இவர்கள் அணியில் சேர்த்துவிட்டான்) எதற்காக அவள் துவாராவை சந்திக்க விரும்புவதாகக் கேட்க, அவனிடம் மன்னிப்பு வேண்டும் என்றும் அதுவே தன் தாயின் இறுதி ஆசை என்றும் பேச மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டனர்.பின்னே துவாரா விஷயத்தில் மட்டும் தான் அவள் அப்படி நடந்துகொண்டாள். மற்றபடி அவர்கள் எல்லோருக்கும் அவள் என்றும் பழைய அனேஷியாவாகவே இருந்தாள். விவான் இதற்கு சம்மதித்ததற்கு ஒரே காரணம் சமீப காலங்களாக துவாராவின் நடவடிக்கை சரி இல்லை என்பதும் ஒருவேளை அவன் மனதில் இன்னும் அனேஷியா இருப்பதால் தான் அவன் இப்படி இருக்கிறானோ என்றும் யோசித்து அவள் திட்டத்திற்கு சம்மதித்தான். துஷியின் மூலமாக கீர்த்தி விஷயம் அறிந்து இது நடக்கவே கூடாது என்று தான் சரித்திராவை அனுப்பினாள்.
அனேஷியாவின் இந்த மாற்றத்திற்கு காரணம் அவள் அன்னை தான். கல்லூரி யூஜியை தன் வீட்டிலிருந்து டேஸ்காலராக தொடர அன்னையின் எண்ணமும் அன்பும் ஓரளவுக்கு அவளுக்குப் புரிந்தது. எப்போதும் தந்தையுடன் சேர்ந்து அன்னையை மட்டம் தட்டுவதும் கிண்டல் செய்வதுமாகவே இருந்தவளுக்கு கொஞ்சம் அன்னையின் வார்த்தைகளையும் கேட்க ஆரமித்தாள். யூஜி முடியும் வரையில் திரும்ப துவாராவை சந்திக்க அவள் விரும்பவில்லை ஆனால் பிஜி படிக்கும் போது அன்னையுடன் அதிகம் ஒன்றியிருந்தாள். அவரின் வார்த்தைகளில் உள்ள நியாயம் புரிய ஆரமித்தது. அவள் செய்த செயல்களை நினைக்கையில் அவளுக்கே தப்பாக இருக்க, துவாராவின் மீது அத்தனை வெறுப்பைக் காட்டியிருக்கக் கூடாதோ என்று யோசிக்கும் வேளையில் தான் அவளையே அறியாமல் அவனுக்கு ஆறா வடு ஒன்று கொடுத்தாள்.
அனேஷியா பிஜி முடித்து பிஎச்டி போட்ட அதே பல்கலைக்கழகத்தில் தான் கீர்த்தி மற்றும் சரித்திரா யூ.ஜி படித்தனர்.கீர்த்தியைப் பார்க்க வந்தவன் கண்களில் அன்று ஏன் அனேஷியா தென்பட்டால் ?அவன் ஏன் அனேஷியாவைப் பார்த்ததும் அப்படித் துள்ளி குதித்து ஓடினான்?அதே கல்லூரியில் படிக்கும் ஒருவன் ஏன் அனேஷியாவைக் காதலிப்பதாகச்சொல்லி டார்ச்சர் தர வேண்டும்? தினமும் தன் பின்னாலே வருபவனுக்கு அன்று ஏன் அனேஷியா பாடம் புகட்ட நினைக்க வேண்டும்? தன்னை நெருங்கியவனை எதற்கு அனேஷியா தன் காலில் இருந்த செருப்பைக் கழட்டி திரும்பி அவனை அடிக்க வேண்டும்?அதுவரை அனேஷியாவைப் பின்தொடந்தவன் அப்போது விலகி ஏன் இடையில் துவாரா நுழையவேண்டும்? ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முடிந்து கேம்பஸில் இருக்கும் போது ஏன் இது நடக்கவேண்டும்? தன் அண்ணனைத் தேடி சரித்திராவுடன் வெளிய வந்த கீர்த்தியின் கண்களிலும் ஏன் இது விழ வேண்டும்? ஆயிரம் நபர்கள் இருக்கும் இடத்தில் தான் ஒருவன் மட்டும் ஏன் நிர்வாணமாக இருப்பதைப் போல் துவாராவிற்குத் தோன்ற வேண்டும்? இதற்கு பெயர் தான் விதியோ?
இது தான் நீங்கள் இவ்வளவு நாளாக எதிர்பார்த்த 'அந்த' சம்பவம் . (பயணங்கள் முடிவதில்லை )