அன்பு மக்களே வணக்கம் ?
முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. ????
'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பத்தொன்பதாவது அத்தியாயம் இதோ.
மலர் 19 1
மலர் 19 2
கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல்.
உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
இத்தோடு ஓடி விடாமல் நேரம் இருந்தால் கீழே உள்ள என் கருத்துக்களையும் படித்துப் பாருங்கள்.
வானுக்கும் பூமிக்குமாக கடந்த சில நாட்களாக நாங்கள் கடந்து வரும் பாதை என்னைப் போல பல தாய்மார்க்களுக்கு உதவும் என்பதால் இந்தப் பதிவுடன் எனது சில கருத்துக்களும் இங்கு பதிவிடுகிறேன்.
என்ன ஆச்சு அசோகாக்கு எபி போடலை ஆளையும் காணுமேன்னு நீங்க யாரும் என்னைத் தேடலை தான் ??? ஆனாலும் நானே ஏன் லீவு போட்டேன்னு சொல்லிடறேன்.
வெளிநாட்டில் படிக்க வந்து எங்கோ தான் சறுக்கியதில் நடந்த சிறு தவறால் இன்று வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிய ஒரு இளைஞனுடன் தான் எங்களது கடந்த பத்து நாட்களும் செல்கிறது.
அவருடன் பேச, நேரம் செலவிட, அவரைத் தேற்ற, முக்கியமாக நல்லபடியாக அவரை மீண்டும் நாட்டிற்கு அனுப்ப என காலையில் விடிந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை அவர் தான் எங்கள் இல்லத்தின் ஹாட் டாபிக்.
அவரின் இந்நிலைக்கான காரணம் அவரின் அந்த சிறு தவறால் வந்ததல்ல. அந்தத் தவறை அவர் மறைக்க நினைத்ததில் வந்தது. இன்றும் அதை சரி செய்ய முடியாமல் தடுமாறி நிற்கிறார்.
இதில் பெற்றவர்களின் பங்கு என்னம்மான்னு நீங்க கேட்கலாம். சின்ன சின்ன சில விஷயங்களை நாம் நம்ம பிள்ளைகளிடம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அவை எனது பார்வையில்.
=> உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். கை கால் வலி என்றால் அவர்களை உங்களுக்கு உதவ சொல்லுங்கள். நின்று தோசை சுட முடியாத நாட்களில் இட்லி இருந்தாலும் சாப்பிடப் பழக்குங்கள்.
=> பள்ளியில் படிப்பில் முதல் மாணவனாக உங்கள் பிள்ளை இருப்பதால் அவன் தவற வாய்ப்பில்லை என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள். படிப்பு அவர்கள் அறிவு சம்பந்தப்பட்டது. ஆனால் நடத்தை அவர்களின் மனமும் குணமும் சார்ந்தது. அதில் உங்கள் பிள்ளைகளை முன்நிலை அடையச் செய்யுங்கள்.
=> உங்களின் வருமானம் அறிந்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள். ஒற்றைப் பிள்ளை அல்லது ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளை என அவர்கள் கேட்கும் எல்லாவற்றிற்கும் சரி சரி என சொல்லாதீர்கள்.
=> உங்களுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் சிறு சிறு வசதிக் குறைவுகளைப் பழக்கிக் கொடுங்கள். வேறொருவர் இல்லத்திற்கு அதாவது உறவினர் அல்லது நண்பர்கள் இல்லத்திற்கு செல்லும் பொது இத்தகைய வசதிக் குறைவுகள் இருந்தாலும் அதிலும் சந்தோஷப் பட சொல்லிக் கொடுங்கள்.
=> பிடித்ததை மட்டும் செய்யவோ அல்லது பிடித்ததை மட்டும் உண்ணவோ கண்டிப்பாக பழக்கப் படுத்தாதீர்கள்.
=>தோல்விகளும் வாழ்வின் ஒரு அங்கம் என எடுத்துச் சொல்லுங்கள்.
=> அனைத்திற்கும் மேலாக அவர்கள் தவறும் இடங்களில் பெற்றவர்களுக்கு பயம் கொள்ளாமல் உங்களிடம் உண்மையை சொல்லி உதவி பெறலாம் எனும் நம்பிக்கையை அவர்களின் அடி மனதில் விதையுங்கள்.
இத்தனையும் நான் இங்கு பகிரக் காரணம் இவை நாளை எனக்கும் என் பிள்ளைகளை வளர்க்கும் போது நியாபகப் படுத்தும் என்பதற்காக மட்டுமே.
இதையும் தாண்டி எங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நண்பர்கள் வரவால் வெகு சிறப்பாக இருந்தது. மீண்டும் இடியாக திங்கட் கிழமை என் பெரியம்மாவின் மரணம் என நான் என் நிலையில் இல்லை சில நாட்களாக.
புது வருடத்திற்குள்ளாக அர்ஜுன் வேதா விடை பெறுவார்கள் என நான் எண்ணி இருக்க அது எவ்வளவு நிறைவேறும் என்பது இனி ஆண்டவன் கைகளில் மட்டுமே.
நம்பிக்கை தானே வாழ்க்கை. நல்லதே நடக்கும். நாமும் நம்புவோம்.
அன்புடன்
அசோகா ???
முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. ????
'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' பத்தொன்பதாவது அத்தியாயம் இதோ.
மலர் 19 1
மலர் 19 2
கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல்.
உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
இத்தோடு ஓடி விடாமல் நேரம் இருந்தால் கீழே உள்ள என் கருத்துக்களையும் படித்துப் பாருங்கள்.
வானுக்கும் பூமிக்குமாக கடந்த சில நாட்களாக நாங்கள் கடந்து வரும் பாதை என்னைப் போல பல தாய்மார்க்களுக்கு உதவும் என்பதால் இந்தப் பதிவுடன் எனது சில கருத்துக்களும் இங்கு பதிவிடுகிறேன்.
என்ன ஆச்சு அசோகாக்கு எபி போடலை ஆளையும் காணுமேன்னு நீங்க யாரும் என்னைத் தேடலை தான் ??? ஆனாலும் நானே ஏன் லீவு போட்டேன்னு சொல்லிடறேன்.
வெளிநாட்டில் படிக்க வந்து எங்கோ தான் சறுக்கியதில் நடந்த சிறு தவறால் இன்று வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிய ஒரு இளைஞனுடன் தான் எங்களது கடந்த பத்து நாட்களும் செல்கிறது.
அவருடன் பேச, நேரம் செலவிட, அவரைத் தேற்ற, முக்கியமாக நல்லபடியாக அவரை மீண்டும் நாட்டிற்கு அனுப்ப என காலையில் விடிந்ததில் இருந்து இரவு உறங்கும் வரை அவர் தான் எங்கள் இல்லத்தின் ஹாட் டாபிக்.
அவரின் இந்நிலைக்கான காரணம் அவரின் அந்த சிறு தவறால் வந்ததல்ல. அந்தத் தவறை அவர் மறைக்க நினைத்ததில் வந்தது. இன்றும் அதை சரி செய்ய முடியாமல் தடுமாறி நிற்கிறார்.
இதில் பெற்றவர்களின் பங்கு என்னம்மான்னு நீங்க கேட்கலாம். சின்ன சின்ன சில விஷயங்களை நாம் நம்ம பிள்ளைகளிடம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அவை எனது பார்வையில்.
=> உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள். கை கால் வலி என்றால் அவர்களை உங்களுக்கு உதவ சொல்லுங்கள். நின்று தோசை சுட முடியாத நாட்களில் இட்லி இருந்தாலும் சாப்பிடப் பழக்குங்கள்.
=> பள்ளியில் படிப்பில் முதல் மாணவனாக உங்கள் பிள்ளை இருப்பதால் அவன் தவற வாய்ப்பில்லை என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள். படிப்பு அவர்கள் அறிவு சம்பந்தப்பட்டது. ஆனால் நடத்தை அவர்களின் மனமும் குணமும் சார்ந்தது. அதில் உங்கள் பிள்ளைகளை முன்நிலை அடையச் செய்யுங்கள்.
=> உங்களின் வருமானம் அறிந்து அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள். ஒற்றைப் பிள்ளை அல்லது ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளை என அவர்கள் கேட்கும் எல்லாவற்றிற்கும் சரி சரி என சொல்லாதீர்கள்.
=> உங்களுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் சிறு சிறு வசதிக் குறைவுகளைப் பழக்கிக் கொடுங்கள். வேறொருவர் இல்லத்திற்கு அதாவது உறவினர் அல்லது நண்பர்கள் இல்லத்திற்கு செல்லும் பொது இத்தகைய வசதிக் குறைவுகள் இருந்தாலும் அதிலும் சந்தோஷப் பட சொல்லிக் கொடுங்கள்.
=> பிடித்ததை மட்டும் செய்யவோ அல்லது பிடித்ததை மட்டும் உண்ணவோ கண்டிப்பாக பழக்கப் படுத்தாதீர்கள்.
=>தோல்விகளும் வாழ்வின் ஒரு அங்கம் என எடுத்துச் சொல்லுங்கள்.
=> அனைத்திற்கும் மேலாக அவர்கள் தவறும் இடங்களில் பெற்றவர்களுக்கு பயம் கொள்ளாமல் உங்களிடம் உண்மையை சொல்லி உதவி பெறலாம் எனும் நம்பிக்கையை அவர்களின் அடி மனதில் விதையுங்கள்.
இத்தனையும் நான் இங்கு பகிரக் காரணம் இவை நாளை எனக்கும் என் பிள்ளைகளை வளர்க்கும் போது நியாபகப் படுத்தும் என்பதற்காக மட்டுமே.
இதையும் தாண்டி எங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நண்பர்கள் வரவால் வெகு சிறப்பாக இருந்தது. மீண்டும் இடியாக திங்கட் கிழமை என் பெரியம்மாவின் மரணம் என நான் என் நிலையில் இல்லை சில நாட்களாக.
புது வருடத்திற்குள்ளாக அர்ஜுன் வேதா விடை பெறுவார்கள் என நான் எண்ணி இருக்க அது எவ்வளவு நிறைவேறும் என்பது இனி ஆண்டவன் கைகளில் மட்டுமே.
நம்பிக்கை தானே வாழ்க்கை. நல்லதே நடக்கும். நாமும் நம்புவோம்.
அன்புடன்
அசோகா ???