Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-19

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-19
1946


பூவா , தூங்கிட்டியா என்று சுந்தரி செல்லில் கேட்க,

பெட்டில் படுத்துக் கொண்டே,இல்ல, தூக்கம் வரல ஒரே போரா இருக்கு. நெட்டல உட்கார கூட புடிக்கல பயங்கற வெறுப்பா இருக்கு, ஐ வாண்ட் யூ.

எனக்கும் பூவா.

சரி பேசிட்டே இரு, நான் அங்க வரேன்.

திருட்டு தனமா மாடி ஏறி அவள் ரூமின் கதவை திறந்து உள்ளே வந்தான்.

அவள் திரும்பி பார்த்து , ஹய் மாமா வந்திட்டியா, என்ன டிரஸு மாமா இது,

ஏன் நல்லா இல்லியா நைட்ல ஷார்ட்ஸ் தான் போடுவேன்.

டிராயரு சொல்லு சின்ன பசங்க போடறதெல்லாம் போடு. எப்படி மாமா வந்தே,

ம்ம் நான் பொறந்த வீடுடி எனக்கு எல்லா வழியும் தெரியும். அவள் மடியில் படுத்துக்கொண்டே பேசினான்.

திருட்டுத்தனமா வரது கூட திரில்லா இருக்கு பொம்மி.

ஆமா எரும வயசு ஆச்சு, பசங்கல ஸ்கூல் அனுப்புற வயதுல வந்து ஸைட் அடி அதுவும் உலகத்திலே கட்டின பொண்டாட்டிய திருட்டுதனமா பார்த்தது நீ மட்டும் தான் பூவா.

உனக்கு எதுவுமே தெரியாது பொம்மி, மாமா எத்தனை வாட்டி உனக்கு தெரியாம சைட் அடிச்சேன் தெரியுமா.

பொய் சொல்லாத நீ எப்பவும் முறைச்சி முறைச்சிதான் பார்ப்ப, அதான் உன் டிரேட் மார்க்.

சொல்லட்டா, கிஸ் பண்ணு சொல்லுறேன், அவள் பூவரசனை முத்தமிட்டாள், இப்ப நான் சொல்லி முடிச்சவுடனே எவ்வளவு கிஸ் பண்ணுவ பார் . நீ வயசுக்கு வந்தப்ப கம்மல்,வளையல் எல்லாம் கழிட்டு போட்டு மாமா வேனும் சொன்னியே அப்ப, டூர் போனப்ப உனக்கே தெரியாம நீ தங்கன இடத்துக்கு வந்து பார்த்தேன் அப்ப, நீ பஸ்ஸ விட்டு இறங்கினவுடனியே மாமான்னு ஓடி வந்து கட்டிபிடிச்சியே அப்ப, அப்பறம் டூவல்த் முடிச்சிட்டு வரச்சொல்ல தான் நீ ஒரு பயங்கிற ஃபிகரா இருந்த , முன்னுக்கும், பின்னுக்கும் செம ஷேப்புடி

ச்சீ இப்படியா பேசுவ,

அதைவிட ஒரு பிட்டு படம் ஒட்டினியே நாட் போடற மாதிரி சூப்பர்டி, மாமா மனச கொள்ள அடிச்சடி அப்ப விழுந்ததுதான் உன்கிட்ட.இன்னும் அந்த வீடியோவ என் செல்ல வச்சிருக்கேன்டி. அத வேணா இப்ப டிரை பண்ணலாமா, ச்சே ,நீ நைட் டிரஸ்சில்ல போட்டிருக்க.

மாமா , கொஞ்சம் எழுந்திரேன், ஜில்லு புடவையா கட்டப்போற.

அவன் மேல் ஏறி உட்கார்ந்தாள், பூவரசனின் தலை முடியை பிடித்து, ஏன்டா கதை முழுக்க நல்லவன் வேஷம் போட்டுட்டு என்னவோ நான் தான் உன் பின்னாடியே சுத்தனமாதிரி, பூவசரனை திருப்பி போட்டு அடிக்க.

ஏய் விடுடி வலிக்குது,

டேய் என்னவோ நான் கிஸ் பண்ணது புடிக்காது மாதிரி அடிச்ச பாரு ,அதுவும் ஹாஸ்ட்டல எவ்வளவு அடி. கடைசில நீதான்டா என்னைய பார்த்து ஜொள்ளு விட்டிருக்க.

எஸ் அப்கோர்ஸ், உன்ன ஹாஸ்ட்டல்ல சேர்த்ததே அதுக்குதான்டி எப்புதப்பா நான் பன்னிட்டேனா. எங்க அக்காவுக்கு யாரு பதில் சொல்லுவா.

உன்னைய கையை பிடிச்சு கடித்தாள்,ஏன்டி கையை கடிக்கிற மாமா லிப்ஸ்ல கடி ஒரு மார்கமா இருக்கும்.

டேய் உன்ன

கூல் பேபி , நான் கொஞ்சம் பேசி முடிக்கிறேன், நடுவுல கொஞ்சம் யொசிக்க ஆரம்பிச்சேன் பொம்மி, நான் உனக்கு பொருத்தமா இருப்பேனா ரொம்ப தாழ்வு மனப்பாண்மை வந்திடுச்சி, அது பவி கல்யாணத்திக்கு அப்பறம் ஒரு ஸேடி மைண்ட்டே இல்ல. இப்பவும் என்னுடைய கோவத்தால நீ தான் கஷ்டப்படுவ பொம்மி. என்னுடைய அதீத அன்பு உன்னைய காயப்படுத்தும். எவ்வளவு பிரச்சனையானலும் மாமா விட்டு போயிடாத

ஏய் மாமா எதுக்கு இப்படி ஓவரா சென்டிமென்ட். சரி நாளைக்கு என்ன பிளான்.

சூப்பர் பிளான்டி நீ கேட்டா ஷாக் ஆயிடுவே.சொல்லு பூவா.

மாட்டேன், நான் எதுக்கு வந்தேன், லைட்ட ஆப் பண்ணுடி, மாமாவ அடிச்சிட்ட இல்ல ,நீ எப்படி தூங்கிற பார்க்கிறேன்.

காலை பொழுது விடிந்தது, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் சுந்தரி, அம்மா காபி கொடு, இந்தாடி ஏழு கழுத வயசு ஆச்சு, இன்னும் காபி போட்டுக்க மாட்டே.

சரி இன்னொரு காபி கொடு ,யாருக்கு

மாமாவுக்கு.

என்ன இவ்வளவு காலையிலே வா வந்துட்டான், வெளியே எட்டி பார்த்தாள்.

அவன் நேத்தே வந்துட்டான் ம்மா, மேல தூங்குறான்,காபி கொடு இல்லனா கத்தும் “பொம்மி காபி”.

என்னடி சொல்லுற பவளத்தாய் கேட்க, இரண்டு பேரும் மேல வந்து பாருங்க. ஏன்டா நல்லவனே மாட்டினியா மனதில் நினைத்தால்.

மேலே கூட்டிட்டு போய் கதவை திறந்து காண்பித்தாள், பார்த்தியா உன் தொம்மிய நம்ப மாட்டேன் சொன்னியே.

டேய் பூவரசு, என்ன அம்மா சொல்லிக்கொண்டே சோம்பல் முறித்து எழுந்து, கண்ணை திறந்தான், அய்யோ அக்கா, அம்மா மாட்டினோமா.

இங்க வந்து படுத்திருக்க ஆனந்தவல்லி கேட்க,

எல்லாத்துக்கு காரணம் நான் கட்டுன எருமையா, எப்படி சிரிக்குது பார், அய்யோ என் இமேஜே டேமேஜ் ஆயிடுமே அவர்களை பார்த்துக் சிரித்துக்கொண்டே மைன்ட் வாய்சில் நினைத்தான் .

அக்கா, நான் நைட் லேப்டாப்ல, கணக்கு பார்த்துட்டு இருந்தேன், பொம்மி தான் பாதி ராத்திரியில போன் போட்டு மாமா எனக்கு பயமாயிருக்கு நான் பேய் கணவு கண்டேன், நீ வா மாமான்னு அழுதாக்கா. .

அம்மா பூவா பொய் சொல்லுது.

நான் சொன்னேக்கா, கீழே பாட்டி, அம்மா இருக்காங்க அங்க போய் படுத்துக்க, எங்க கேட்டா நீ வந்தே ஆகுனும் அழறா. சின்ன வயசில பண்ணாலே அது மாதிரி. சரி நீ கீழே படித்துக்கோ நான் மேலே படுத்துக்கிறேன் சொன்னேக்கா. நைட் முழுக்க கணக்கு பார்த்து ஒரே தலைவலிக்கா காபி கிடைக்குமா.

இவள என்னடா பண்ணறது சின்ன பிள்ளை மாதிரியே நடந்துக்குறா,இதுல டாக்டர் வேற.

நீ என்னடா டவுசர் போட்டுட்டு இருக்க, அம்மா இது பொம்மி வாங்கி கொடுத்தது ரொம்ப காஸ்ட்லி, அதான் வெஸ்ட் செய்ய கூடாது போட்டுக்கிறேன்

அடப்பாவி, நிஜ சாமியாருடா நீ.

ஏன்டா எங்கிட்ட கேட்டுதானே ஓருவாட்டி சுந்தரி பார்க்க போனே.

ஹம், அப்ப உன் பொண்ணு இப்ப என் பொண்டாட்டி.

இதெல்லாம் கரெக்ட்டா பேசு,இந்தாடா காபி நீ குளிச்சிட்டு சாப்பிட வா, நாங்க வெளியே போறோம்.

எங்க

நம்ம சித்தி பேர பசங்க காது குத்தறாங்க, நகை எடுக்கனும் அப்படியே சுந்தரிக்கும் எடுக்கணும்.

அக்கா நான் கொடுத்த ஏடிஎம் கார்டு எடுத்துட்டு போ, சரிடா.

அப்படியே பூவரசு, சுந்தரிய ஹாஸ்பிட்டல விட்டுடு, நாங்க வெளியே போறோம்.

அக்கா எனக்கு வேல நிறைய இருக்கு இவள கூட்டிட்டு போறதுதான் வேலை வேற ஆள பாரு, ஊருல என்ன சொல்லுவாங்க ஆடி மாசம் ஊர சுத்துறாங்க.

டேய் இந்த ஒரு முறை மட்டும் அப்பறம் சுந்தரி பிரண்டு வீட்டு கிரகபிரவேசம் போறாலாம்.

அக்கா, அவ எங்கிட்ட சொல்லவே இல்ல. புருஷனை மதிக்கிறாளா பாரு.

பூவரசு அவளே காலையில தான் சொன்னா, எனக்கே நைட் தான் சொன்னான் மைன்டில் வாய்சில் பேசினாள் சுந்தரி.

சரி நாங்க கிளம்பறோம். சரி க்கா.

காரில பயணம் செய்தார்கள் ஆனந்தவல்லியும், பவளத்தாயும், பரதா பாதியிலே கார் ரிப்பேர் ஆயிடுச்சு வேற கார எடுத்துட்டு போறோம் பூவரசனுக்கு சொன்னியா.

பரதா இங்க பாரேன் எப்படி இந்த பொண்ணு , பையனும் வண்டிய ஒட்டிட்டு போறாங்க.

நல்லா பாருக்கா, அது யாரு தெரியும்.

அய்யோ அம்மா இங்க பாரேன்,பரதா வண்டிய மெதுவா ஓட்டு,வாயின் மேல் கையை வைத்து அம்மாடி.

பாத்தியா உன் தம்பி பூவரசனும், பொண்ணு சுந்தரியும் எப்படி போறாங்க.

ஐயோ என்னடா இப்படி கட்டிகிட்டு போறா, முத்தம் வேற கொடுக்கறா, கையை வேற விட்டுட்டு பைக்க ஓட்டறான்.

ஆள் இல்லாத ரோட்டில் கையை நீட்டி பூவா ஐ லவ் யு, பொம்மி ஐ லவ் யு என கத்தினார்கள்.

அக்கா உன் தம்பி இதவிட ஓத்த வீல்ல ஓட்டுவான். அவன்கிட்ட நின்னு பேசவே யோசிப்பாங்க, புத்திசாலிக்கா உன் தம்பி, ஆனா அவன் உலகமே சுந்தரி தான் க்கா. கடவுள் இவனுக்காகவே உன் பொண்ண படைச்சிருப்பாருக்கா.

மெதுவா போடா, என்ன பண்ணறாங்க பார்க்கலாம் பவளத்தாய். அதுயென்ன ஓரே மாதிரி டிரஸ்,ஜீன்ஸ் வித் ஓயிட் ஷர்ட், கூலர்ஸ் போட்டிருந்தார்கள். அவ ஹாஸ்பிட்டலுக்கு போகல.

அக்கா உன் பொண்ணுக்கு மூனு நாள் லீவ், ஹனிமூனுக்கு ஏற்காடு போறாங்க ,அதான் சேம் மாடல் டிரஸ்.

என்னடா சொல்லற, அங்க உன் தம்பி இடம் வாங்கிருக்கான், அதையும் பார்க்க போறோம், உங்கள விட்டுட்டு நானும் போவேன். சேலத்திலிருந்து கார் புக் பண்ணிருக்கோமே.

ஏன்டா நின்னுட்டாங்க,

பரதா போன் அடிக்க வண்டியை ஓரமா நிறுத்திட்டு, அக்கா பூவரசு தான், சொல்லு மாப்பிள்ள, மாமா 2 மணிக்கு கார எடுத்திட்டு நம்ம சேலம் ஆபிஸ்க்கு வந்திடு, சரி மாப்பிள சொல்லி போனை வைத்தான்.

சுந்தரி ராயல் மேல் சாய்ந்து நின்று பூவரசன் பேசுவதே பார்த்தாள்,என்னடி மாமாவ வச்சக் கண்ணு எடுக்காம பார்க்கிற, அழகன்டா நீ,

அக்கா ,அத்தை கண்ணை மூடு உன் தம்பி என்ன பண்ணுவான் தெரியும் பரதன் கூற இருவரும் கண்ணை மூடினார்கள். ஏய் ராயலு அந்த பக்கம் திரும்பு பொம்மி ராயலை பார்த்து சொல்ல

ம்ம் ,பூவசரசன் அவளை அனைத்து லிப் டூ லிப் அடிக்க, ,

க்கும்,என் தலை எழுந்து உங்க ரோமன்ஸ்ஸ பார்க்கிறாதா இருக்கு ராயலின் மைன்ட் வாய்ஸ்.

ஸ்டார் ஹோட்டலில் நுழைந்தார்கள் பூவசரனும், பொம்மியும். அக்கா பணம் வச்சிருக்கியா நம்மலும் போய் சாப்பிடலாம். இருக்குடா போலாம். ஓவ்வொரு டெபிளில் தடுப்பு போட்டு இருந்தார்கள். அக்கா அவங்க பக்கத்து டெபிளில் உட்காரலாம்.

மாமா மட்டன் பிரியாணி சொல்லு, உன் அக்கா சமைச்சத சாப்பிட்டு நாக்கே செத்து போச்சு.

அப்ப நீ சமைக்கிறது தான.

நான் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டு உன் வேற பார்க்கனும் மாமா. அப்பறம் உங்க அம்மா கேட்கறாங்க கண்ணத்தில் என்ன காயமா இருக்கு, எல்லா நீ கடிச்சுதான். டவுட்டாவே பார்க்கிறாங்க.

அவங்களுக்கு வேல வேறயில்ல தான,நாம்ம சீக்கீரமா பிள்ளைய பெத்துக் கொடுக்கனும் மாமா சும்மாவே இருக்காங்க பொழுது போகாம என்னையே வாட்ச் பண்ணிட்டு,

உன்னைய போய் பச்ச மண்ணு சொல்லுது அக்கா.

போ மாமா, எப்ப பண்ணைவீட்டுக்கு கூட்டிட்டு போவ,

பொம்மி நீ அக்காகிட்ட சண்டைய போட்டு புருஷன் வீட்டுக்கு போறேன் வந்திடு .

இந்த ஆடி மாசம் யாரு கண்டுபிடிச்சது மாமா.

ஆனாலும் வீட்டுக்கு தெரியாம நாம பண்ணறது கிக்கா இருக்குடி.சரி சாப்பிடு முதல்ல, அப்பறம் பேசலாம். பொம்மிக்கு புரை ஏற ,தலையை தட்டிவிட்டு இந்தா தண்ணீ குடி , பெரிய பொண்ணாயிட்டு சாப்பிட தெரிதா அக்கா சொல்லுறது சரிதான்.

ம்ம் ,உன் அக்காளும், ஆத்தாளும் தான் என்னைய தீட்டியிருப்பாங்க. அதான் புரை ஏறிடிச்சு. பரதா சிரிக்க,

எப்படி பேசறா பாருடா அவள என்று எழுந்திருக்க, அக்கா உட்காரு இன்னும் கேளு.

டேய் சாமியாரே ஒரு வாட்டி அம்மாகிட்ட சொல்லவா ஏற்காடு போறோம்ன்னு. ஏய் லூஸாடி நீ, என் ப்ளானே கெட்டு போயிடும். போயிட்டு வந்து மூனு மாசம் கழிச்சு சொல்லிவிடலாம் ஓகே.

இவங்க எப்பவும் இப்படியே சேர்ந்தே இருக்குனும் ஆனந்தவல்லி நினைக்க , அதற்கு ஆயுள் ரொம்ப குறைவு என்றது விதி.
 
Top