சரண்யா ஹேமாவின்...
View attachment 5994
பூவிழி தீபமேற்றி...
சரண்யா ஹேமாவின் ஓர் புது உலகம்...
View attachment 6003
அன்பால் மட்டுமே சூழ்ந்த ஓர் இல்லம்...
அங்கேயும் காதல் உண்டு... அதுவும் கொஞ்சமல்ல... நிறைய... நிறை........ய
View attachment 5995
காதலின் மொத்த உருவமாக அவன்...
View attachment 5997
மௌனமொழி பேசுபவளாக அவள்...
சரண்யா ஹேமாவின் கதைகள் எல்லாமே ரொம்ப பிடித்தது தான்... ஆனாலும் இது எல்லாவற்றையும் மிஞ்சிய நாவல் எனக்கு...
View attachment 5996
புத்தகத்தை வாங்கி கட்டாயம் சேமிக்க வேண்டும் என்ற அளவுக்கு...
View attachment 5999
16 அத்தியாயத்திற்கு மேல் காத்திருந்து வாசிக்க முடியல...
கதையின் நிறைவுப் பகுதிக்குக் காத்திருந்து வாசித்த கதை...
ஆனாலும் கொஞ்சம் விரைவாக முடிந்த உணர்வு...
View attachment 6002
அவன் ஜனனமும் அவள்...
அவன் ஜீவனும் அவள்...
அவன் சுவாசமும் அவள்...
காதலிப்பவர்களுக்கு மட்டும் தான் வயிற்றுக்கும்... தொண்டைக்கும்... உருவமில்லா ஒன்று உருளுமா...?
கதையை வாசித்த நமக்குள்ளும் உருள வைக்கிறாங்க சரண்யா ஹேமா...
எவ்.......ளோ காதல்!!!!!!!!!!!! என்று வியக்க வைக்கும்...
ஆசை வைக்கும்....
ஏங்க வைக்கும்...
சிரிக்க வைக்கும்...
அழ வைக்கும்...
பெருமூச்சை விட வைத்த காதல்...
நம்ம Mrs.முரளி வினோகரன்... Mr.வித்திவ்யா காதல்...
என் கண்ணு நல்லாவே பட்ருக்கும்... இதுக்கும் சேர்த்து சுத்திச் போட சொல்லுங்க நம்ம ஆள...
வீட்டிற்கு ஒரு சபர்மதி வேண்டும் என்று ஏங்க வைக்கும் கதாபாத்திரம்...
வீட்டிற்கு ஒரு சபர்மதி இருந்தால் யாருமே மருத்துவமனை செல்ல வேண்டியதில்லை என்று நினைவுகளும் எழுந்தது...
சபர்மதி பேச்சுக்கள் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டியது...
ஒவ்வொரு கதாபாத்திரமும் அற்புதம்... கதையை வாசித்த பின்னும் அதிலிருந்து வெளிவர தோன்றவில்லை...
ICU க்கு வெளியில் நாங்களும் அழுது கொண்டு மூச்சடைத்து நின்றிருந்தோம்...
சரண்யா ஹேமாவின் வரிகளில் நிறையப் பிடித்தது...
அவனின் காதலைச் சொல்லும் வரிகளில் எல்லாம் பேரழகு தான்...
View attachment 6001
சில வரிகள் இங்கே...
எங்கும் ஒளிந்து கொள்ள முடியாதபடி அலை ஓசையை தாண்டி அவனின் உயிரோசை அவளை வாரி சுருட்டிக் கொண்டது காதலாய்...
View attachment 6000
காதல் காதலிக்கப்படுவது மட்டுமல்ல...
பூஜிக்கப்படுவது...
ஆராதிக்கப்படுவது...
ஆலாபனை செய்யப்படுவது...
View attachment 5998
ரொம்ப ரொம்ப அற்புதமான படைப்பு சரண்யா ஹேமா...
இன்னும் இன்னும் நிறைய கதைகள் எழுதி எங்களை மகிழ்விக்க வாழ்த்தி வணங்குகிறேன்...