என் கர்வமும்
போட்டு வைத்த
எல்லைக் கோடுகளும்
மொத்தமாக
வீழ்ந்ததடி பெண்ணே
உன் மௌனத்திலும்
நிதானத்திலும்..
முதலாமவனாய் கேட்கவேண்டிய
செய்தியை
இறுதியானவனாக
கேட்டதில்
அறுதியிட்டு உறுதி
கொண்டேன்
என்னை மாற்றிக் கொள்ள..
நீ உன் இயல்பில்
அப்படியே இருக்க
என் இயல்பு
தலை தெறித்தோடி
உன் முன்
உனக்கானவனாக
நின்றுவிட்டேன்
சித்தம் பித்தம்
கொண்டு..
மன்னிப்பை
யாசிக்க நினைத்தும்
யாசிக்கத் தெரியாமல்
நிற்கிறேன்
வா!
வாழ்ந்து காட்டி
நிரூபிக்கிறேன்
என்னை..
நீ அதை வேண்டாத
போதும்
எனக்கு அது
தேவையாக இருக்கிறது!