அருமையான பதிவு சரண்யா???.கேடி ஓனர்,தில்லாலங்கடி ரொட்டிக்கடையா????.
குறிஞ்சியோட இடுப்பு செயினை அமர் இத்தனை வருசமா வச்சிருக்கானா???.
இந்த வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே கடைக்கு வர்றப்போவே அவளை பிடிச்சிருக்கு,சுபாட்ட, குறிஞ்சி திருமண வாழ்க்கையை பற்றி சொன்னதை கேட்டு அதில் எதுவும் தனக்கு பொருந்தாது என ஒதுங்கி இருக்கான்???.
பாவம் அமர், தான் விரும்பும் பெண் தன் கண் முன்னே இருந்தும் அவளுக்காக,அவளை பார்த்தும் பார்க்காததை போல சிடுமூஞ்சியா கடுகடுவென இருந்து,நிரஞ்சனாவோடு கல்யாணம் பண்ணவும் சம்மதிச்சிருக்கான்???.
மொட்டை மாடியில் தூங்க ஆசை என்று குறிஞ்சி சொன்னதற்காக அமர் முல்லை பந்தலில் திரை போட்ட இடத்தையே அறையாக்கி வைத்து அசத்திட்டான்???.
கணவன் தன்னை தேடுவானா என நினைத்த குறிஞ்சிக்கு,அமர் தன்னை இத்தனை வருடங்களாக காதலிப்பதும்,இருவரின் புகைப்படங்களை இணைத்து வந்ததை வைத்து திருமணம் செய்ததையும் தன் மேல் கொண்ட அளவில்லா காதலை கேட்ட குறிஞ்சியின் நிலையை என்னவென்று சொல்ல.....
அமரை பார்க்க வர அவசரத்துல தலைவலி,வயித்துவலின்னு பொய் சொல்லிட்டு வந்து இப்படி மாட்டிக்கிட்டியே???. அம்மா,அக்கா,தம்பி,மாமான்னு மொத்த குடும்பத்துக்கும் தெரிஞ்சு
வச்சு செய்றாங்க????.
புதுவீடு கட்டி முடிச்சது கேட்டு ஆட்டம் போட்டவ???, அமர் தனக்காக செஞ்ச அறைய பார்த்ததும்,வராம எங்கேன்னு சலிச்சுக்கறா????.