Chance illa pa semma joviyala pesuringa..???ஹாய் ப்ரெண்ட்ஸ்,
வந்துட்டேன் வந்துட்டேன். வர வச்சுட்டீங்க. எல்லாருமா சேர்ந்து இழுத்துட்டீங்க.
கண்மணி நானுன் நிஜமல்லவா சத்தியமா கண்ணு வேர்த்து போயிடுச்சு. அவ்வளவோ அவ்வளோ கொண்டாடிட்டீங்க. ஒவ்வொரு கமெண்ட்ஸும் படிச்சு என்னை பூஸ்ட் பண்ணிக்கிட்டேன்.
நன்றின்ற ஒரு வார்த்தை போதுமா? கண்டிப்பா பத்தாது. தேங்க் யூ சோ மச் ப்ரெண்ட்ஸ்
எல்லாருக்கும் தனி தனி ரிப்ளே பண்ண முடியலை. கரெக்ஷன் வேலை, பையனுக்கு ஆன்லைன் கிளாஸ் டெஸ்ட்னு ஒட்டிட்டு இருக்கேன். இன்னைக்கு ஆர்ட்டினை பறக்கவிட்டுடறேன்.
இப்ப விஷயத்துக்கு வரேன்.
என்னை கையை வச்சுட்டு சும்மா இருக்க விடமாட்டேன்றீங்களே. என்ன செய்வேன்? அதனால புது கதையோட ரு குட்டி இன்ட்ரோ குடுக்கலாமேன்னு வந்தேன்.
கதையை பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு? எனக்கு தோணின மாதிரி எழுதுவேன்.
கவிதை பேசும் வானம்
அக்னிசெல்வன் – இனியகீர்த்தனா
இவங்க தான் நாயகன் நாயகி. அழுத்தமான நாயகன், இலகுவான நாயகி.
இந்த வானம் கவிதை பேசுமா? கவிதையும் வானம்பாடுமா??????
அக்னிசெல்வன் – எளிமை, இதற்கு எனக்கு அவசியமில்லை. பெயருக்கேற்றார் போல அக்னியே. அழுத்தமோ அழுத்தம். எதிலும் விட்டுகொடுக்கும் பழக்கம் இல்லாதவன்.
இனியகீர்த்தனா – எளிமையே இனிமை. இதுதான் இவளின் குணம். இருப்பதை கொண்டு நிறைவான வாழ்வு.
இவ்வளவு தான் இவங்களோட குண இயல்பு. வாழ்க்கை முறை சட்டென மாற்றம் பிறக்கும் நேரம் தோன்றும் தடுமாற்றம், அதை ஏற்பதற்குள் ஏற்படும் முரண்பாடுகள். ஏற்றபின் தோன்றுமா வேறுபாடுகள்?
கதை கண்டிப்பா திங்கள் கிழமையில் இருந்து தான். ஆனா டெய்லி இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள். நோ ஞாயிற்றுகிழமை. நோ லீவ். பட் அப்டேட் மட்டும் ஒருநாள் விட்டு ஒருநாள்.
திங்கள்கிழமை திரும்ப எல்லாரும் மீட் பண்ணுவோம்.
கடைசில என்னை வரவச்சுட்டீங்களே அன்பூக்களே
அதனால என்ன சொல்றேன்னா கம்பு சுத்தாம உங்களுக்காக உடனே வந்த எனக்கு ஆர்ட்டின் விட்டு கேர் பண்ணி வாவ்னு வாயை பிளக்கனும்.