மிகவும் அருமையான கதை சரண்யா???.வாசு வெளியே அனைவரும் கண்டாலே நடுங்கும் அளவு டெரர் போலிஸாக இருப்பவன் ,வீட்டில் மாயக்கண்ணனின் குறும்புடன் வீட்டில் உள்ளவர்களை அலறவிடுவதும் அருமை???.
பூர்வாவை பார்த்தவுடன் பிடித்துவிட,அவளை தேடி திருமணம் செய்வதும் யக்காவை பேசியே தன் குறும்பால் காதலை உணர்த்துவதும் அழகு???.பூங்கோதை மாப்பிள்ளை எந்த நேரத்தில் என்ன செய்வான் எனதெரியாமல் வாசுவை பார்த்தாலே ஓடி கண்ணாமூச்சி ஆடுகிறார்???.
அன்புக்கரசி பெயரைப் போலவே அன்புக்கு அரசிதான்.மகன்,மருமகள் என்று அனைவரிடம் இவர் காட்டும் பாசம் அருமை.அடாவடிக்கணவனிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அன்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.நெஞ்சபுடிச்சு,விமலா தண்ணி கொண்டான்னு சொல்லியே கணவனை கட்டுப்படுத்துகிறார்.மிகவும் ரசித்தது அன்பின் பேச்சும்,நல்ல குணமும்????.
முத்துவேல் பணத்தை பெரிதாக நினைக்கிறார்,அடாவடியானவர் என நினைக்க,பாசத்தை காட்டத் தெரியாதவர் என தெரியுது.தேன்மிட்டாய் கொண்டுவந்து அன்புக்கு கொடுத்துவிட்டு வாசுவிடம் இவர் படும்பாடு கலகலப்பு.அன்புக்கு இவர் அடிமை???.
மருது ஆரம்பத்தில் தந்தையின் சொல்படி மனைவியிடம் முரட்டுதனமாக நடந்து கொள்வதும்,
அன்பு,தம்பியினால் மனம்மாறி விமலாவுடன் நல்லபடியாக நடந்து கொள்வதும் அருமை???.
நிறைவுப்பகுதி அருமை???.அருமையான குடும்ப நாவல், இனிமையான முடிவு????.
உங்கள் மூன்று கதைகளும் ஒவ்வொரு விதமாக அருமையாக இருந்தது.
வெற்றிபெற வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா???????.