Good episode
Superஅருமையான பதிவு சரண்யா???.என்னது... வந்தவங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்கலையா,, வந்தவங்கள போதும் போதும்னு கதற விட்டுட்டு,தண்ணீ கொடுக்காதது ரொம்ப முக்கியம்???. வசந்தியிடம் பேசியதை வைத்து விஜய் தன்னை பத்தி தப்பா நினைச்சிடுவானோ என பவித்ராக்கு கலக்கம்???.அவளை வரவைக்க என்ன செய்வார்களோ என்ற பயமும் அலைக்கழிக்குது??
இத்தனை பிரச்சனை நடந்திருக்கு இப்ப போய் படிக்க சொல்றானே???.அடேய்..படிக்காம தூங்கிட்டான்னு இப்படியா பயமுறுத்துவ??.உங்க அம்மா வந்துட்டாங்கன்னு சொன்னதும் தூக்கத்துல அலறி அடிச்சு, போகலைன்னு சொல்றானா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா ????.
இந்த கல்யாணம் எப்படி நடக்குது பார்க்கறேன்னு ஆட்டம் ஆடிய அண்ணனிடம்,என் பொண்ணு நல்லா வாழனும்னு நெனைக்கலையா,எம்பொண்ணு வேற,உம்பொண்ணு வேறனு காமிச்சுட்ட தான,
துறுதுறுன்னு இருந்தவள,பார்த்து வளர்த்துவை அவள மாதிரி இவளும் ஊர் பேசறது போல செய்ய போறான்னு சொன்னவர்,உங்க பொண்ணுக்கு அதை சொல்லி ஏன் வளர்க்கலை என பழனி கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடியாய் இருந்தது????.
அம்மா,அப்பா சொன்னதை தானே அவ கேட்டா,இதில் அவ தப்பு என்னனு கேட்கறதும்,உங்க மக வாழ்க்கைய நெனச்சு ஜெகன் சொன்னதும் படிக்க அனுப்புனீங்க தானே என கேட்பதும்,வசந்தி இப்படி மாறியதுக்கு காரணமே நீங்க தான் என சொல்வதும்,இத்தனை வருசமா அண்ணன் சொல்றதை எல்லாம் கேட்டு தலையாட்டிட்டு அடிமையாக இருந்த பழனி, தன் மனஉளைச்சலை கொட்டியதுடன் எருமைய நாக்க புடுங்கறது போல நல்லா கேட்டார்????.
கல்யாணம் ஆகாட்டாலும் பரவால்லஅந்த நாயை கொண்டு வந்து மூலையில் போடுன்னு சொல்ல வாய் வந்திருக்குமா,என் பொண்ணு என்ன நாயான்னு கேட்பது கண்கலங்க வைக்குது????. பொண்ணை பாசமா வளர்க்க துப்பில்லாத நமக்கு இந்த தண்டனை தேவை தான்.அவர் பேச்சகேட்டு
மகளை படுத்திய உனக்கும் இது தேவை தன் என வசந்தியிடம் சொல்வது கலங்க வைக்குது???
அம்மாவை சொன்னதும் எங்க காலை உடைங்கன்னு சொல்லிட்டு சிங்ககுட்டி வந்திருச்சு???. இது பூர்வீக சொத்து இங்கே வரக்கூடாது,போகக்கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமையில்லை,
என சொல்லி ஜோதி கலக்கிட்டான்???.மொத்த உறவும் விட்டுச் சென்று யாருமின்றி தனித்து இருக்கும் அருமைக்கு இனியாவது உறவுகளின் அருமை புரியுமா????.
நன்றி சிஸ்????Super