காவல் 1:
மழைகாலம்...அன்றும் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த மழைச்சாரல், மரம் செடிகளுக்கு புத்துணர்வையும், வேலைக்கு செல்லும் மக்களுக்கு சலிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. மழைகாலங்களில் சூரியனின் உதவியையும், வெயில் காலங்களில் மழைமகளின் உதவியையும் நாடுவது மனித இயல்புதானே.நிகழ்கால சூழ்நிலையை ரசிக்கும் மனநிலைக்கு மக்கள் மாறவில்லை என்பதே உண்மை. விதிவிலக்காய் சில மழைக் காதலிகளும், மழைக் காதலர்களும் உண்டு.நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம்.
கொடைக்கானல்...மலைகளின் இளவரசி.பல அதிசயங்களையும், பல ஆச்சர்யங்களையும், பல அற்புதங்களையும் தன்னுள்ளே அடக்கிய இளவரசி அவள்.இந்த இளவரசியைப் பற்றி தெரிந்து கொள்ள, மக்கள் பலரும் இவளைச் சுற்றிப் பார்க்க வந்த வண்ணமே இருப்பர் எப்படிப் பார்த்தாலும் சலிக்காத அழகு, எப்பொழுது பார்த்தாலும் மாறாத குளுமை,நம் ரணங்களையும் மறக்கச் செய்யும் பசுமை,வியப்பு மிகு விந்தை என இவளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அழகும் ஆபத்தும் ஒரு சேர இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்தும் பல பகுதிகள்.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 7000 அடி உயரே இருக்கும் மலை.
கொடைக்கானல் செல்லும் பாதி வழியில் அமைந்திருந்தது அந்த அழகிய பாலம். இதுநாள் வரை அது அழகிய பாலம் மட்டுமே. ஆனால் இனி.
பெய்து கொண்டிருந்த மழைச்சாரலையும் பொருட்படுத்தாது...அங்கே சில காக்கி உடைகள்.அவர்களுடன் சில மனித தலைகளும் தென்பட்டனர்.வரிசயாக நின்றிருந்த ஜீப்களும், இருசக்கர வாகனங்களும் அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்தன.
“என்ன சார்..? டியூட்டி முடிச்சு இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்ன்னு பார்த்தா..இப்ப இப்படி ஒரு கேஸ்..!” என்றார் ஒரு காவலர்.
“நாம நினைச்சது என்னைக்கு நடந்திருக்கு..? தலைவலியே இப்பதான் ஆரம்பிக்குது.காலையில சாப்பிட்டது.மதியமும் சாப்பிடலை.இன்னும் கொஞ்ச நேரம் போன...இருக்குற கடையையும் அடச்சிடுவான்..!” என்று சொன்ன மற்றொரு காவலர்...பசியின் தாக்கத்தால் அருகில் இருந்த கல்லில் அமர்ந்தார்.
வாக்கி டாக்கியில் விஷயம் தீயாய் பரவிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து உயர் அதிகாரிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.
“எஸ்பி வரார்..!” என்ற தகவல் வர, உட்கார்ந்திருந்த காவலர் வேகமாய் எழுந்து நின்றார். பசியும், களைப்பும் பறந்தோடியது.தொப்பியை வேகமாய் தலைக்குப் பொருத்திக் கொண்டவர் விறைப்பாய் நிற்க, மற்றொரு காவலரும் அவர் அடி பின்பற்றி அப்படியே நின்றார்.
ஜீப்பிலிருந்து வேகமாய் இறங்கினான் வருண் கிருஷ்ணா.நம் கதையின் நாயகன்.முப்பது வயது முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது.ஆண்களில் சற்று உயரம்.உடலை இறுக்கமாய் பிடித்திருந்த காக்கி யுனிபார்ம்...என்னைப் போலவே அவனும் இறுக்கம் என்பதை சொல்லாமல் சொல்லியது.ஒட்ட வெட்டப்பட்டிருந்த தலை முடி அவன் இறுக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருந்தது.இயற்கையான மாநிறமும்,பதவி கொடுத்த திமிரும் அவனை கொஞ்சம் அழகனாய் காட்டியிருந்தது.
“வணக்கம் சார்..!”
“பாடியை யார் பர்ஸ்ட் பார்த்தது..?” என்றான் தோரணையாய்.கேள்வி அவர்களிடத்தில் இருந்தாலும் பார்வை முழுவதும் அங்கிருந்த பிணத்தின் மீதே இருந்தது.
“இவர் தான் சார் பார்த்துட்டு தகவல் சொன்னவர்.பஸ் கண்டெக்டர் சார்..!” என்றான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்.
“இங்க ஸ்டாப் எதுவும் இருக்குற மாதிரி தெரியலையே..? நீங்க எப்படி பார்த்திங்க..?” என்றான் வருண் யோசனையாய்.
“சார்..! பஸ் இங்க வரும் போது பிரேக் டவுன் ஆகிடுச்சு.பஸ்ல வந்தவங்களை எல்லாம் இன்னொரு பஸ்ல ஏத்திவிட்டுட்டு...நானும் டிரைவரும் இங்க வெயிட் பண்ணோம்.அப்போதான் ஏதோ கெட்ட வாடை அடிக்கிற மாதிரி இருந்தது. பாலத்துகிட்ட நகர்ந்து எட்டிப் பார்த்தப் தான் தெரிஞ்சது சார், இங்க ஒரு பொணம் கிடக்குன்னு..” என்றார் அந்த கண்டக்டர்.
“அந்த டிரைவர் எங்க..?” என்றான் வருண்.
“அவரும் இங்க தான் சார் இருக்கார். கொஞ்சம் வயசானவர்.இந்த ஸ்மெல் தாங்க முடியாம அங்க உட்கார்ந்திருக்கார் சார்..!” என்றான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்.
“ஆம்புலன்ஸ்க்கு சொல்லியாச்சா..?” என்றான்.
“சொல்லியாச்சு சார்..! ஆன் தி வே சார்...!” என்றான் கார்த்திக்.
அங்கு கிடந்த உடலை ஊன்றிப் பார்த்தான் வருண். முகம் முற்றிலும் சிதைந்திருந்தது.கைகள் அழுகிய நிலையில் இருந்தது.முப்பத்தைந்து வயது இருக்கலாம் அந்த ஆணிற்கு.கைகளில் இருந்த வாட்சும், காலில் இருந்த ஷூவும் அவன் வசதியை சொல்லியது.வருண் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஆம்புலன்ஸ் வந்து விட,
“பாடியை கேர்புல்லா டிஸ்போஸ் பண்ணுங்க. எந்த தடயமும் மிஸ் ஆகக் கூடாது.இது யாரு, பேரு என்ன? ஊரு என்ன? கொலையா? தற்கொலையா..? இப்படி எல்லா கோணத்துலையும் விசாரிக்கணும். இதே வயசுல யாரும் காணாமப் போயிருக்காங்களா..? அப்படி கம்ப்லெயின்ட் ஏதும் வந்திருக்கா..? இப்படி முழு விபரமும் எனக்கு வேணும்..!” என்றான் வருண்.
“ஓகே சார்..!” என்றான் கார்த்திக்.
வருண் சுற்றி இருந்த மனிதர்களையும், அங்கிருந்த சூழ்நிலையையும் பார்வையால் கிரகித்துக் கொண்டான்.அவனுடைய கணிப்புப் படி, அந்த இடத்தில் சந்தேகப்படும் படி யாரும் இல்லை.
“நாம இப்ப வீட்டுக்குப் போகலாமா..?” என்றார் அந்த காவலர்.
“எஸ்பி ரொம்ப கோவக்காரர், ஸ்ட்ரெயிட் பார்வேட் அப்படின்னு சொன்னாங்க..! ஆனா மனுஷைப் பார்த்தா அப்படித் தெரியலையே..?” என்றார் மற்றொரு காவலர்.
“அவரைப் பார்த்தா அப்படித் தெரியாது.ஆனா மனுஷன் பயங்கர ஸ்பீட்.கை ரொம்ப சுத்தம்.ஸ்போர்ட்ஸ் கோட்டால வேலை வாங்குனவரு.துப்பாக்கி சுடுறதுல தங்கப்பதக்கம் வாங்குனவரு..!” என்றார் அந்த காவலர்.
“கான்ஸ்டபில் அங்க என்னய்யா வெட்டிப் பேச்சு..!வாங்க முதல்ல..!” என்று இன்ஸ்பெக்டர் கார்த்திக் அழைக்க, அதோடு வருணின் பேச்சிருக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு சென்றனர் அந்த காவலர்கள் இருவரும்.
ஒரு சில மணி நேரத்தில் அந்த இடமே காலியாக, இருள் பரவத் தொடங்கியது.இன்ஸ்பெக்டர் கார்த்திக் எரிச்சலாகக் கூட வந்தது.தூரல் இன்னும் நின்றபாடில்லை. ஆனால் வருணோ அந்த இடத்தை விட்டு அகலவில்லை.
இறுகக் கட்டிய கைகளுடன், தீவிர சிந்தனையில் இருந்தான். புருவங்கள் நெரித்தபடி இருக்க, அந்த கொடைக்கானல் குளிரை அவன் உடல் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
“சார் கிளம்பலாமா..? ரொம்ப இருட்டாகுது சார். மழைவேற பெய்யுது.கீழ இறங்க கஷ்ட்டம் ஆகிடும் சார்..!” என்றான் கார்த்திக்.
“ம்ம்ம்..” என்றவன், வேகமாய் ஜீப்பில் ஏறி அமர, கார்த்திக் வண்டியை எடுத்தான்.
“டிரைவர் எங்க..?” என்றான் இறுகிய குரலில்.
“நான் தான் அனுப்பினேன் சார்..! ஒன்னும் பிரச்சனையில்லை சார். நான் நல்லா டிரைவ் பண்ணுவேன்..!” என்றபடி கார்த்திக் லாவகமாய் ஜீப்பை ஓட்ட,அதற்கு மேல் அவனிடம் பேச்சுக் கொடுக்காது, பார்வையை வெளியே செலுத்தினான் வருண்.
வருண் கிருஷ்ணா-சத்யமூர்த்தி,நித்யா தம்பதியின் தவப்புதல்வன்.இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைசிப் பையன்.அம்மா, அக்காக்களுக்கு உயிரானவன்.அவனின் தந்தை சத்யமூர்த்தி காவல்துறையில் டிஎஸ்பியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.அம்மா நித்யா ஒய்வு பெற்ற ஆசிரியை. கௌசல்யா,சாதனா என்ற இரண்டு அக்காக்கள்.இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.குடும்பத்தினர் அனைவரும் சென்னையில் இருக்க, இவன் மட்டும் இங்கே தனித்து. இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை கிளம்பிவிடுவான்.ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்தாகிவிட்டது. அதற்குள் இந்த கேஸ் அவனிடம் வந்து சிக்கிக் கொண்டது.
“சார் இப்போ எஸ்பியா இருக்கிங்களா...இல்லை ஆப் ட்யுட்டியா..?” என்றான் கார்த்திக்.
“பார்த்தா எப்படித் தெரியுது..?” என்றான் வருண்.
“எஸ்பியா இல்லாம வருணா இருந்தா எனக்கு சில விஷயங்கள் பேசணும்..!” என்றான் கார்த்திக்.
“துரோகிங்க கிட்ட எல்லாம் நான் பேசுறது இல்லை..!” என்றான் பட்டென்று.
“என்னோட தரப்பு நியாயம் உனக்கு புரியவே புரியாதா கிருஷ்ணா..” என்றான் கார்த்திக்.
“நியாயம் இருந்தா தானே புரியறதுக்கு..?” என்றான் வருண்.
“கடைசி வரைக்கும் எனக்கு பேச வாய்ப்பே இல்லாம போய்டுச்சு. சொன்னாலும் புரிஞ்சிக்கிற மனநிலையில் நீ இல்லை..” என்றான் வெம்போடிய குரலில்.
“லுக் மிஸ்டர். கார்த்திக்..! இந்த கேஸ் விஷயமா ஏதாவது சொல்லனும்ன்னா சொல்லுங்க. இல்லையா வாயை மூடிகிட்டு வண்டியை ஓட்டுங்க.எனக்கு இது வரைக்கும் கோபம் வரலை.அந்த ஒரே காரணத்துனால கோபமே வராதுன்னு நினைக்க வேண்டாம்..!” என்றான் பட்டுக் கத்தரித்தார் போல்.
அவனின் பேச்சில் தன்னையே நொந்து கொண்டான். அந்த இருள் சூழ்ந்த வேளை, கார்த்திக்கின் மனதிலும் இருளை மட்டுமே பரப்பியிருந்தது.
“இந்த பாடியோட போட்டோ போட்டு, அங்க அடையாளங்களைப் போட்டு நோட்டிஸ் அடிச்சு எல்லா ஸ்டேஷனுக்கும் குடுங்க.காணாமப் போனவங்க நேம் லிஸ்ட் செக் பண்ணுங்க.பக்கத்துல இருக்குற பெட்ரோல் பங்க்,டோல்கேட் இப்படி எல்லா இடத்துலையும் சிசிடிவி புட்டேஜ் கலெக்ட் பண்ணி, செக் பண்ணுங்க. ரெண்டு நாள்ல இந்த கேசை முடிக்கணும்..! இந்த கேஸைப் பத்தின எல்லா அப்டேட்டும் உடனுக்குடனே என் பார்வைக்கு வந்தாகணும்.எனி டைம் என்னை காண்டாக்ட் பண்ணுங்க, இந்த கேஸ் சம்பந்தமா மட்டும்..!” என்ற அந்த மட்டும் என்ற வார்த்தையை மீண்டும் அழுத்திய வருண், தாமுவை இறக்கி விட்டு, ஜீப்பை தானே ஓட்டிச் சென்றான்.
அவன் சென்ற பிறகும் கூட, அந்த சாலையையே வெறித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“நீ பழைய வருணா, வருண் கிருஷணனா என்கிட்டே பேசுவடா. அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை..!” என்று மனதிற்குள் தனக்குத் தானே உரைத்துக் கொண்டான் கார்த்திக்.
மழைகாலம்...அன்றும் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த மழைச்சாரல், மரம் செடிகளுக்கு புத்துணர்வையும், வேலைக்கு செல்லும் மக்களுக்கு சலிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. மழைகாலங்களில் சூரியனின் உதவியையும், வெயில் காலங்களில் மழைமகளின் உதவியையும் நாடுவது மனித இயல்புதானே.நிகழ்கால சூழ்நிலையை ரசிக்கும் மனநிலைக்கு மக்கள் மாறவில்லை என்பதே உண்மை. விதிவிலக்காய் சில மழைக் காதலிகளும், மழைக் காதலர்களும் உண்டு.நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம்.
கொடைக்கானல்...மலைகளின் இளவரசி.பல அதிசயங்களையும், பல ஆச்சர்யங்களையும், பல அற்புதங்களையும் தன்னுள்ளே அடக்கிய இளவரசி அவள்.இந்த இளவரசியைப் பற்றி தெரிந்து கொள்ள, மக்கள் பலரும் இவளைச் சுற்றிப் பார்க்க வந்த வண்ணமே இருப்பர் எப்படிப் பார்த்தாலும் சலிக்காத அழகு, எப்பொழுது பார்த்தாலும் மாறாத குளுமை,நம் ரணங்களையும் மறக்கச் செய்யும் பசுமை,வியப்பு மிகு விந்தை என இவளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அழகும் ஆபத்தும் ஒரு சேர இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்தும் பல பகுதிகள்.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 7000 அடி உயரே இருக்கும் மலை.
கொடைக்கானல் செல்லும் பாதி வழியில் அமைந்திருந்தது அந்த அழகிய பாலம். இதுநாள் வரை அது அழகிய பாலம் மட்டுமே. ஆனால் இனி.
பெய்து கொண்டிருந்த மழைச்சாரலையும் பொருட்படுத்தாது...அங்கே சில காக்கி உடைகள்.அவர்களுடன் சில மனித தலைகளும் தென்பட்டனர்.வரிசயாக நின்றிருந்த ஜீப்களும், இருசக்கர வாகனங்களும் அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்தன.
“என்ன சார்..? டியூட்டி முடிச்சு இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்ன்னு பார்த்தா..இப்ப இப்படி ஒரு கேஸ்..!” என்றார் ஒரு காவலர்.
“நாம நினைச்சது என்னைக்கு நடந்திருக்கு..? தலைவலியே இப்பதான் ஆரம்பிக்குது.காலையில சாப்பிட்டது.மதியமும் சாப்பிடலை.இன்னும் கொஞ்ச நேரம் போன...இருக்குற கடையையும் அடச்சிடுவான்..!” என்று சொன்ன மற்றொரு காவலர்...பசியின் தாக்கத்தால் அருகில் இருந்த கல்லில் அமர்ந்தார்.
வாக்கி டாக்கியில் விஷயம் தீயாய் பரவிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து உயர் அதிகாரிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.
“எஸ்பி வரார்..!” என்ற தகவல் வர, உட்கார்ந்திருந்த காவலர் வேகமாய் எழுந்து நின்றார். பசியும், களைப்பும் பறந்தோடியது.தொப்பியை வேகமாய் தலைக்குப் பொருத்திக் கொண்டவர் விறைப்பாய் நிற்க, மற்றொரு காவலரும் அவர் அடி பின்பற்றி அப்படியே நின்றார்.
ஜீப்பிலிருந்து வேகமாய் இறங்கினான் வருண் கிருஷ்ணா.நம் கதையின் நாயகன்.முப்பது வயது முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது.ஆண்களில் சற்று உயரம்.உடலை இறுக்கமாய் பிடித்திருந்த காக்கி யுனிபார்ம்...என்னைப் போலவே அவனும் இறுக்கம் என்பதை சொல்லாமல் சொல்லியது.ஒட்ட வெட்டப்பட்டிருந்த தலை முடி அவன் இறுக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருந்தது.இயற்கையான மாநிறமும்,பதவி கொடுத்த திமிரும் அவனை கொஞ்சம் அழகனாய் காட்டியிருந்தது.
“வணக்கம் சார்..!”
“பாடியை யார் பர்ஸ்ட் பார்த்தது..?” என்றான் தோரணையாய்.கேள்வி அவர்களிடத்தில் இருந்தாலும் பார்வை முழுவதும் அங்கிருந்த பிணத்தின் மீதே இருந்தது.
“இவர் தான் சார் பார்த்துட்டு தகவல் சொன்னவர்.பஸ் கண்டெக்டர் சார்..!” என்றான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்.
“இங்க ஸ்டாப் எதுவும் இருக்குற மாதிரி தெரியலையே..? நீங்க எப்படி பார்த்திங்க..?” என்றான் வருண் யோசனையாய்.
“சார்..! பஸ் இங்க வரும் போது பிரேக் டவுன் ஆகிடுச்சு.பஸ்ல வந்தவங்களை எல்லாம் இன்னொரு பஸ்ல ஏத்திவிட்டுட்டு...நானும் டிரைவரும் இங்க வெயிட் பண்ணோம்.அப்போதான் ஏதோ கெட்ட வாடை அடிக்கிற மாதிரி இருந்தது. பாலத்துகிட்ட நகர்ந்து எட்டிப் பார்த்தப் தான் தெரிஞ்சது சார், இங்க ஒரு பொணம் கிடக்குன்னு..” என்றார் அந்த கண்டக்டர்.
“அந்த டிரைவர் எங்க..?” என்றான் வருண்.
“அவரும் இங்க தான் சார் இருக்கார். கொஞ்சம் வயசானவர்.இந்த ஸ்மெல் தாங்க முடியாம அங்க உட்கார்ந்திருக்கார் சார்..!” என்றான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்.
“ஆம்புலன்ஸ்க்கு சொல்லியாச்சா..?” என்றான்.
“சொல்லியாச்சு சார்..! ஆன் தி வே சார்...!” என்றான் கார்த்திக்.
அங்கு கிடந்த உடலை ஊன்றிப் பார்த்தான் வருண். முகம் முற்றிலும் சிதைந்திருந்தது.கைகள் அழுகிய நிலையில் இருந்தது.முப்பத்தைந்து வயது இருக்கலாம் அந்த ஆணிற்கு.கைகளில் இருந்த வாட்சும், காலில் இருந்த ஷூவும் அவன் வசதியை சொல்லியது.வருண் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஆம்புலன்ஸ் வந்து விட,
“பாடியை கேர்புல்லா டிஸ்போஸ் பண்ணுங்க. எந்த தடயமும் மிஸ் ஆகக் கூடாது.இது யாரு, பேரு என்ன? ஊரு என்ன? கொலையா? தற்கொலையா..? இப்படி எல்லா கோணத்துலையும் விசாரிக்கணும். இதே வயசுல யாரும் காணாமப் போயிருக்காங்களா..? அப்படி கம்ப்லெயின்ட் ஏதும் வந்திருக்கா..? இப்படி முழு விபரமும் எனக்கு வேணும்..!” என்றான் வருண்.
“ஓகே சார்..!” என்றான் கார்த்திக்.
வருண் சுற்றி இருந்த மனிதர்களையும், அங்கிருந்த சூழ்நிலையையும் பார்வையால் கிரகித்துக் கொண்டான்.அவனுடைய கணிப்புப் படி, அந்த இடத்தில் சந்தேகப்படும் படி யாரும் இல்லை.
“நாம இப்ப வீட்டுக்குப் போகலாமா..?” என்றார் அந்த காவலர்.
“எஸ்பி ரொம்ப கோவக்காரர், ஸ்ட்ரெயிட் பார்வேட் அப்படின்னு சொன்னாங்க..! ஆனா மனுஷைப் பார்த்தா அப்படித் தெரியலையே..?” என்றார் மற்றொரு காவலர்.
“அவரைப் பார்த்தா அப்படித் தெரியாது.ஆனா மனுஷன் பயங்கர ஸ்பீட்.கை ரொம்ப சுத்தம்.ஸ்போர்ட்ஸ் கோட்டால வேலை வாங்குனவரு.துப்பாக்கி சுடுறதுல தங்கப்பதக்கம் வாங்குனவரு..!” என்றார் அந்த காவலர்.
“கான்ஸ்டபில் அங்க என்னய்யா வெட்டிப் பேச்சு..!வாங்க முதல்ல..!” என்று இன்ஸ்பெக்டர் கார்த்திக் அழைக்க, அதோடு வருணின் பேச்சிருக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு சென்றனர் அந்த காவலர்கள் இருவரும்.
ஒரு சில மணி நேரத்தில் அந்த இடமே காலியாக, இருள் பரவத் தொடங்கியது.இன்ஸ்பெக்டர் கார்த்திக் எரிச்சலாகக் கூட வந்தது.தூரல் இன்னும் நின்றபாடில்லை. ஆனால் வருணோ அந்த இடத்தை விட்டு அகலவில்லை.
இறுகக் கட்டிய கைகளுடன், தீவிர சிந்தனையில் இருந்தான். புருவங்கள் நெரித்தபடி இருக்க, அந்த கொடைக்கானல் குளிரை அவன் உடல் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
“சார் கிளம்பலாமா..? ரொம்ப இருட்டாகுது சார். மழைவேற பெய்யுது.கீழ இறங்க கஷ்ட்டம் ஆகிடும் சார்..!” என்றான் கார்த்திக்.
“ம்ம்ம்..” என்றவன், வேகமாய் ஜீப்பில் ஏறி அமர, கார்த்திக் வண்டியை எடுத்தான்.
“டிரைவர் எங்க..?” என்றான் இறுகிய குரலில்.
“நான் தான் அனுப்பினேன் சார்..! ஒன்னும் பிரச்சனையில்லை சார். நான் நல்லா டிரைவ் பண்ணுவேன்..!” என்றபடி கார்த்திக் லாவகமாய் ஜீப்பை ஓட்ட,அதற்கு மேல் அவனிடம் பேச்சுக் கொடுக்காது, பார்வையை வெளியே செலுத்தினான் வருண்.
வருண் கிருஷ்ணா-சத்யமூர்த்தி,நித்யா தம்பதியின் தவப்புதல்வன்.இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைசிப் பையன்.அம்மா, அக்காக்களுக்கு உயிரானவன்.அவனின் தந்தை சத்யமூர்த்தி காவல்துறையில் டிஎஸ்பியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.அம்மா நித்யா ஒய்வு பெற்ற ஆசிரியை. கௌசல்யா,சாதனா என்ற இரண்டு அக்காக்கள்.இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.குடும்பத்தினர் அனைவரும் சென்னையில் இருக்க, இவன் மட்டும் இங்கே தனித்து. இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை கிளம்பிவிடுவான்.ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்தாகிவிட்டது. அதற்குள் இந்த கேஸ் அவனிடம் வந்து சிக்கிக் கொண்டது.
“சார் இப்போ எஸ்பியா இருக்கிங்களா...இல்லை ஆப் ட்யுட்டியா..?” என்றான் கார்த்திக்.
“பார்த்தா எப்படித் தெரியுது..?” என்றான் வருண்.
“எஸ்பியா இல்லாம வருணா இருந்தா எனக்கு சில விஷயங்கள் பேசணும்..!” என்றான் கார்த்திக்.
“துரோகிங்க கிட்ட எல்லாம் நான் பேசுறது இல்லை..!” என்றான் பட்டென்று.
“என்னோட தரப்பு நியாயம் உனக்கு புரியவே புரியாதா கிருஷ்ணா..” என்றான் கார்த்திக்.
“நியாயம் இருந்தா தானே புரியறதுக்கு..?” என்றான் வருண்.
“கடைசி வரைக்கும் எனக்கு பேச வாய்ப்பே இல்லாம போய்டுச்சு. சொன்னாலும் புரிஞ்சிக்கிற மனநிலையில் நீ இல்லை..” என்றான் வெம்போடிய குரலில்.
“லுக் மிஸ்டர். கார்த்திக்..! இந்த கேஸ் விஷயமா ஏதாவது சொல்லனும்ன்னா சொல்லுங்க. இல்லையா வாயை மூடிகிட்டு வண்டியை ஓட்டுங்க.எனக்கு இது வரைக்கும் கோபம் வரலை.அந்த ஒரே காரணத்துனால கோபமே வராதுன்னு நினைக்க வேண்டாம்..!” என்றான் பட்டுக் கத்தரித்தார் போல்.
அவனின் பேச்சில் தன்னையே நொந்து கொண்டான். அந்த இருள் சூழ்ந்த வேளை, கார்த்திக்கின் மனதிலும் இருளை மட்டுமே பரப்பியிருந்தது.
“இந்த பாடியோட போட்டோ போட்டு, அங்க அடையாளங்களைப் போட்டு நோட்டிஸ் அடிச்சு எல்லா ஸ்டேஷனுக்கும் குடுங்க.காணாமப் போனவங்க நேம் லிஸ்ட் செக் பண்ணுங்க.பக்கத்துல இருக்குற பெட்ரோல் பங்க்,டோல்கேட் இப்படி எல்லா இடத்துலையும் சிசிடிவி புட்டேஜ் கலெக்ட் பண்ணி, செக் பண்ணுங்க. ரெண்டு நாள்ல இந்த கேசை முடிக்கணும்..! இந்த கேஸைப் பத்தின எல்லா அப்டேட்டும் உடனுக்குடனே என் பார்வைக்கு வந்தாகணும்.எனி டைம் என்னை காண்டாக்ட் பண்ணுங்க, இந்த கேஸ் சம்பந்தமா மட்டும்..!” என்ற அந்த மட்டும் என்ற வார்த்தையை மீண்டும் அழுத்திய வருண், தாமுவை இறக்கி விட்டு, ஜீப்பை தானே ஓட்டிச் சென்றான்.
அவன் சென்ற பிறகும் கூட, அந்த சாலையையே வெறித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“நீ பழைய வருணா, வருண் கிருஷணனா என்கிட்டே பேசுவடா. அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை..!” என்று மனதிற்குள் தனக்குத் தானே உரைத்துக் கொண்டான் கார்த்திக்.