ஏழு ஸ்வரங்களும் மௌனம் 04

Advertisement

swarangal

New member
Member
ராகவி குளித்து மாற்றுடை அணிந்து வெளியே வர, செழியன் எழுந்து அமர்ந்திருந்தான்...

தலைமுடியை துண்டால் சுத்திக்கொண்ட ராகவி அறையின் மூலையிலிருந்த துடப்பத்தை எடுத்து அறையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, இடுப்பில் வேஷ்டியை சுத்திக்கொண்டு எழுந்து பால்கனி போன்ற அமைப்பிலிருந்த இடத்திற்கு சென்றான் செழியன்..

அறையை சுத்தம் செய்து மெத்தைக்கு வேறு உடைமாற்றி விட்டவள் பின் முகம் கைக்கால் அழும்பிக்கொண்டு வந்து தலையை துவட்ட ஆரம்பிக்க, உள்ளே வந்தான் செழியன்..

'இப்போ என்ன பண்ணுறது!.. தலையை சீவிக்கிட்டு அப்படியே அமுக்கமா உக்காந்துக்களாமா? அஞ்சு மணிக்கு வெளிய வந்து வேலையை எடுத்துக்கட்டி பண்ணனும்னு அத்தை சொன்னுச்சி, என்ன வேலை பண்ணனும்னு சொல்லாம போய்டுச்சே? இந்நேரம் எல்லாரும் இங்க முழிச்சிருப்பாங்களா?' என தனக்குள் கேட்டுக்கொண்டாள் ராகவி..

பீரோவில் ஆடையை துழாவிக்கொண்டிருந்தான் செழியன்..

அவனைக்கண்ட ராகவி அவனின் பின்னால் வந்து நிற்க, அவளின் வரவை உணர்ந்த செழியன் கைக்கு அகப்பட்ட ஆடையை எடுத்துக்கொண்டு அவள் புறம் திரும்பாமல் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்..

ராகவிக்கு அவனின் செய்கை முகத்தில் அறைந்தது போன்று இருக்க, அன்னிச்சியாக இரவு நடந்ததும் நினைவு வந்தது..

'நைட்டும் ஒருவார்த்தை பேசாம அவருக்கு இணக்கமாக என்னை உபயோகபடுத்திக்கிட்டாரு!.. இப்ப என்னன்னா மூஞ்சியக்கூட பாக்காம விருட்டு விருட்டுன்னு நடந்துக்குறாரு.. என்னதான் நினைக்கிறாங்கன்னு ஒன்னும் புரிய மாட்டேங்கிது, நானே இந்த வாழ்க்கையை ஏத்துக்கிட்டு அதுக்கு தகுந்ததுப்போல வளைஞ்சிக்கொடுத்தாலும் எதிர்க்க இருக்கவங்க விருட்டுனு ஒவ்வொண்ணும் பண்ணினா? எப்படி என்னை நா தேத்திக்கிட்டு வாழ்க்கையை ஓட்டுறது?' என தனக்குள் கேட்டுக்கொண்டவள் அறையை விட்டு வெளியே வந்து கீழிறங்கினாள்..

மல்லிகா வாசலுக்கு சாணி இறைத்துக்கொண்டிருப்பது தெரிய, வெளியே வந்தாள் ராகவி..

"வாடியாத்தா வா!.. இதுத்தான் நீ வர நேரமாடி, அஞ்சு மணிக்கு எழுந்து வரணும்னு உன் அத்தைக்காரி சொல்லிக்கொடுக்கலயா?.. வந்தன்னைக்கே ஏச்சி வாங்காம இருக்க மாட்ட போல.. ஆமா? நெத்தியில எங்க குங்குமத்தை கானம்" என்று திண்ணையில் அமர்ந்திருந்த சின்னப்பொண்ணு அவளை நிற்க வைத்து கேள்விக்கணைகளை அடுக்கினார்..

"மறந்துட்டேன் அத்தை"..

"நல்ல வார்த்தை! மறந்துட்டாளாம் மறந்து, திங்க தூங்களாமா மறக்கரோம்.. எதைப்பண்ணினாலும் பொறுப்பெடுத்து பொறுமையா பண்ணனும்.. அந்த தையமிஷினை தையத்தக்கா தையத்தக்கான்னு நீ அடிக்கிற அவசரத்துக்கு பறக்கக்கூடாது.. போ, சாமியறையில விளக்கு பொறுத்திட்டு குங்குமத்தை எடுத்து வச்சுக்கோ" என்றார் சின்னப்பொண்ணு..

மல்லிகா கோலம் போட அமர, "அடியே மல்லி!.. நாளுப்பேர் போவ வரவ இருப்பாங்க கோலத்தை பெருசா இழுத்துவிடு" என்றார் சின்னப்பொண்ணு..

"சரிங்க அத்தை"..

"நீ இன்னும் போவலையா" என்று ராகவியிடம் சின்னப்பொண்ணு சிடுசிடுக்க, ஏதோ கேட்க வந்த ராகவி அவரின் சிடுசிடுப்பான பேச்சில் வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு நடந்தாள்..

"முகத்தை வெட்டுற வேலையெல்லாம் உன் அத்தைக்காரிக்கிட்ட வச்சுக்கோடி" என்று அதட்டலுடன் கூறிய சின்னப்பொண்ணுவின் வார்த்தைகளை காதுக்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டு சாமியறைக்குள் நுழைந்தாள் ராகவி..

ஏற்கனவே விளக்கு பொறுத்துவதற்கு ஏதுவாக மல்லிகாவின் தயவால் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி வைத்து தயாராக இருக்க, தீப்பெட்டிக்கொண்டு விளக்கேற்றிய ராகவி கூடுதலாக குங்குமத்தை எடுத்து நெற்றி வகுட்டில் வைத்துக்கொண்டு வெளியே வர, மல்லிகா உள்ளே வந்தாள்..

"செழியன் எழுந்துட்டானா ராகவி" என கேட்டவாரே கிச்சனுக்குள் நுழைந்தாள் மல்லிகா..

"எழுதுட்டாங்க அக்கா" எனக்கூறியவாரே அவளை தொடர்ந்து உள்ளே வந்த ராகவி.. "காலையில எழுந்ததும் நிதமும் விளக்கு ஏத்தனுமாக்கா" என்று கேட்டாள்..

"காலையிலங்காட்டியும் அத்தை பொருத்துன்னு சொல்லுவாங்க ராகவி.. நமக்கு ஒத்துவரலைன்னா சிரமம் பாக்காம அவங்க பொருத்திப்பிடுவாங்க, உனக்கும் இதைப்பழக்கப்படுத்தனும்னு தான் உன்னை பொறுத்த சொன்னது" என்றாள் மல்லிகா, அடுப்பில் வைத்திருந்த பாத்திரத்தில் பாலை ஊற்றியவாரு..

"ஓ!.. அதான் எல்லாத்தையும் ரெடியா வச்சிருந்திங்களா?"

"மாமியாரு தான் தயார் பண்ணி வைக்க சொன்னாங்க ராகவி.. சரி, நீயென்ன குடிப்ப டீயா காஃபியா" என மல்லிகா கேட்க..

"காலையிலங்காட்டியும் டீ, காஃபி குடிக்கிற பழக்கம் இல்லக்கா!.. இங்க எல்லாருக்கும் பழக்கம் போல" என ராகவி கேட்க..

"ஆமா ராகவி!.. மாமனார் மட்டும் ஆவாரம் பூ டீ குடிப்பாரு சக்கரை இருக்குறதால" என்றாள் மல்லிகா...

"மல்லிகா அவக்கிட்ட ஒப்படைச்சிட்டு நீ வா!.. வெய்ய வரதுக்குள்ள மிளகாயை எடுத்து பரப்பி வைக்கலாம்" என்று வெளியிருந்து குரல் கொடுத்து அழைத்தார் சின்னப்பொண்ணு..

"நீயி பாத்துக்கோ ராகவி.. எல்லாருக்கும் டீயே போடு, உன் புருஷன் மட்டும் அப்பப்ப அந்தந்த மனநிலைக்கு தகுந்தாப்புல டீ காப்பின்னு கேட்பாரு!.. நீ டீயே போட்டு எடுத்துட்டு போ, வேண்டாம்னு சொன்னா? பாலை எடுத்து வச்சிருக்கேன் வந்து காஃபி போட்டு கொடுத்துடுவ" என்றுவிட்டு வெளியே சென்றாள் மல்லிகா..

டீயை வடிக்கட்டி சர்க்கரை கலந்து தனித்தனி டம்ளரில் ஊற்றிய ராகவி அவற்றையெல்லாம் ஒரே தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வந்தவள், எதிர்க்க வந்த மல்லிகாவிடம் தட்டையை கொடுத்துவிட்டு கணவனுக்கானதை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்..

ஒருக்கையால் தலையை துவட்டியபடி மற்றொரு கையில் ஃபோனை வைத்து நோண்டிக்கொண்டிருந்தான் செழியன்..

"மாமா" என அழைத்தவாரே அவனின் முன்பு வந்து நின்றாள் ராகவி..

ஏனோ அவளின் உயிரோட்டமான மாமா என்ற வார்த்தை செழியனுக்கு காந்தியது..

என்ன என்பது போல புருவத்தை உயர்த்தி உடல் மொழியால் அவளை பார்த்தான்..

"டீ எடுத்துட்டு வந்தேன்" என்று டம்ளரை அவன் முன்பு நீட்டினாள் ராகவி..

வாங்கிக்கொண்ட செழியன் திரும்பி நடக்க, "மாமா என்னைக்கு ஸ்கூலுக்கு போவீங்க" என்ற ராகவியின் கேள்வியில் அசையாமல் நின்றான்..

"அது மாமா, அடுத்த வாரத்துல தச்சிக்கொடுக்கிறன்னு சொன்ன துணியெல்லாம் வெட்டாமக்கூட கடக்குது!.. அதான் நீங்க எப்போ வேலைக்கு கிளம்புவிங்கனு சொன்னீங்கனா? அதுக்கு தகுந்தாப்புல துணிக்கொடுத்தவங்கட்ட பேசி வைக்க சவுரியமா இருக்கும்" என்றாள் ராகவி..

காலண்டர் முன்னால் வந்து நின்ற செழியன் அவளை ஒருப்பார்வை பார்த்துவிட்டு பேனாவை எடுத்து பன்னிரண்டு தேதியில் கிறுக்க, ராகவி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்..

'ஏன் வாயை திறந்து இன்னும் எட்டு நாள் கழிச்சி போவன்னு சொல்ல மாட்டாங்களா?' என தனக்குள் நினைத்துக்கொண்டவளால் செழியனிடம் அதை வெளிப்படையாக கேட்க முடியவில்லை..

காரணம், அவன் குத்தும் பார்வையில் அவளுக்குத்தான் ஏதோ தவறு செய்தது போன்ற குற்ற உணர்வு வந்து தாக்கியதில் தம்கட்டி பேச முயன்றும் முடியவில்லை, வாய் சதிசெய்தது அவனிடம்..

அவள் கேட்ட கேள்விக்கு ஜடமாய் சைகையில் பதிலைக்கூறிவிட்டு டீயை குடிக்க ஆரம்பித்தான்..

வெங்கடாஜலம், பிரகாசத்திடம் திருமணம் முடிந்ததிற்க்கான வரவு செலவு கணக்குகளை கேட்டுக்கொண்டிருக்க, சின்னப்பொண்ணு வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தாலும் காதை என்னவோ பெரிய மகனின் வாயருகில் தான் வைத்திருந்தார்..

"பஸ் செலவு பத்தாயிரம் வந்துருக்குப்பா!"..

"அது எப்படியும் ஆகிடுமே பிரகா, அவனுக்கு மொத்தத்தையும் கொடுத்தாச்சில்ல மீதி பட்டுவாடா இருக்கா என்ன?" என்று வெங்கடாஜாலம் கேட்க..

"பத்தாயிரமும் கொடுத்தாச்சிப்பா" என்றான் பிரகாசம்..

"ஏன் நம்மளே தான் மொத்தத்தொகையும் தரணுமா?.. பாதிப்பணம் பொண்ணு வீட்டு பக்கம் தரது தானே முறை? ஜிங்குடின்னு ஏறி உக்காந்துக்குவாங்க பாதிப்பணம் தரனுமா என்னன்னு கேட்க மாட்டாங்களா? டேய் பிரகா உன் பெரியம்மா- வுக்கு ஃபோனை போட்டு அம்மா பஸ் செலவுல பாதிக்கேட்டுச்சின்னு கேளு" என்றார் சின்னப்பொண்ணு வெளியே இருந்தபடியே..

"சின்னா உள்ளவந்து பேசு!.. போறவரவங்க காதுல விழுவனுமா?" என்று வெங்கடாஜலம் கேட்க..

சின்னப்பொண்ணு உள்ளே வந்தார்.. மாமனாருக்கு ஆவாரம்பூ டீ கொண்டு வந்துக்கொடுத்தாள் மல்லிகா..

அதை வாங்கிக்கொண்ட வெங்கடாஜலம் "நீக்கேட்ட அத்தனையும் செஞ்சித்தானே புள்ளைய கட்டிக்கொடுத்தாங்க!.. எதாவது குறை வச்சாங்களா சின்னா.. ஏன் சட்டுனு வார்த்தையை விட்டு உறவை வெட்டிக்கிற மாறியே பேசுற" என்று கேட்க..

"நா பேசுறதெல்லாம் உங்களுக்கு ஒண்ணுக்கு ரெண்டா தானே பிரிச்சி பாக்கத்தோணும்.. அண்ணன் குடும்பத்தை, குடும்பத்துக்குள்ள இழுத்துட்டு வந்தாச்சில்ல, இனி நாக்கு எது பல்லெதுன்னு தெரியாத கணக்கா தான் வார்த்தை வந்து விழுவும்"..

"அம்மா காலையிலங்காட்டியும் ஏன் ஆரம்பிக்கிறிங்க" என பிரகாசம் கேட்க..

மாடியிலிருந்து இறங்கி வந்தாள் ராகவி..

மல்லிகா நமட்டு சிரிப்புடன் அவளை பார்த்தாள், அவள் வேறு புடவையில் வந்து நிற்பதைக்கண்டு.. ராகவிக்கும் சிறு வெக்கம் துளிர்விட்டது...

"இதோ வந்துட்டாள்ள தையக்காரி அவட்டயே சொல்லுங்க!.. இந்த மகாராணி என்ன வரம் வாங்கிட்டு வந்தான்னு தெரியலை பிறந்ததிலிருந்து கட்டிக்கிட்டு புருஷன் கையை பிடிக்கிற வரைக்கும் ராஜபோக வாழ்க்கைத்தான்.. படிச்ச வேலைக்கு போயி நாளு காசு பாக்க துப்பில்லாம ஒன்னுத்துக்கும் உதவாத தையமிஷனை போட்டு நாளு உதை விட்டு உதவாக்கரயா இருக்கவளை கவர்மென்ட் உத்தியோகம் பாக்குற பையனுக்கு கட்டிவச்சி நாராசமாக்குணிங்கல்ல?"

"என்ன மாமா பிரச்சனை" என்று வெடுக்கென கோபத்துடன் வெங்கடாஜலத்திடம் கேட்டாள் ராகவி..

"சின்னா என்ன பேச்சி பேசுற?.. நம்ம வூட்டு மருமகளை நீயே இப்படி பேசினா சுத்தியிருக்குற ஆளுங்களுக்கு அவலாகிடாதா?" என்று கேட்ட வெங்கடாஜலம் மருமகளிடம் விசியத்தை கூறினார் சங்கடத்துடனே..

"ரெண்டு நாள் கொடுங்க மாமா நான் அந்தப்பணத்தை கொடுத்துடரேன்" என்றாள் ராகவி..

"ஐயாயிரம் பணத்தை எடுத்துக்கொடுக்க வக்கில்ல" என சின்னப்பொண்ணு சொல்லும்போதே "ஐயாயிரரூவாயிக்கு வக்கில்லாதவளை ஏன் வாசப்பிடியை மிதிக்க அனுமதிச்சிங்க? தையக்காரின்னா இழுக்கா? சிடுசிடுன்னு பேசுறீங்க?.. இங்க நா ஒன்னும் உங்க மவனை கட்டிக்கனுன்னு தவமா தவமிருக்கல?.. துப்பில்லாம, ஒண்ணுத்துக்கும் உதவாத வேலையை பாத்து நா பிழைக்கிறதுல உங்களுக்களுக்கென்ன மரியாதை குறைச்சலா போயிடுச்சி?.. பணம் பத்தாக்குறைன்னு உங்க வூட்டு வாசப்படியில நின்னு கையை நீட்டினன்னா? இல்லை! என் வூட்டுல திங்க எதுமில்லன்னு ஒருவாய் சோத்துக்கு இங்க வந்தன்னா?.. நீங்களாத்தான் என்னை பொண்ணுக்கேட்டிங்க?.. கண்டபடி பேசினிங்கன்னா நானும் பேசவேண்டி வரும்" என்று மூச்சிவாங்க கோவத்துடன் ராகவி பேசியதை கேட்டவாரே கீழிறங்கி வந்தான் செழியன்..

"பாத்துக்கோங்க நீங்க கூட்டி வந்த மகாலட்சுமி பேசுற லட்சணத்தை!.. இதுவே என் அண்ணா மகளாயிருந்தா? இப்படி நடுவூட்டுல நின்னுட்டு காலையிலங்காட்டியும் கத்துவாளா?.. அது படிச்சப்புள்ளை இவளும் தான் இருக்காளே?.. இவளை கூட்டியாரணுன்னு தானே என் அண்ணனுக்கும் எனக்கும் இடையில சண்டையை வளத்து விட்டிங்க?.. நாங்க மூஞ்சக்கொடுத்து பேசிக்க முடியாம தவிச்சி போயி கடக்க காரணம் இவத்தானே? பாத்துக்கோங்க இவ வரிசையை" என்றார் சின்னப்பொண்ணு..

"ஆரம்பிச்சது நீங்க தானே அத்தை!.. வார்த்தையை வெட்டி வெட்டி பேசுறதெல்லாம் பேசிட்டு இப்போ என்னன்னா என் தலையில தூக்கி போடுறீங்க?.. உங்க அண்ணா மகனில்ல யாரா இருந்தாலும் சூடா பேசினா சுயமரியாதையை இழந்து கண்ணுல தண்ணியை வச்சிக்கிட்டு நிக்க மாட்டாங்க?.. நானும் கேட்கவா? உங்க இடத்தில என் ஜகதா அத்தை இருந்திருந்தா இந்நேரம் என்னை இப்படி பேசுமான்னு?" என்று ராகவி கேட்க..

செழியன் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்..
 
அருமையான பதிவு 🤩 🤩
செழியனுக்கு என்ன பிரச்சினை 😦 😦 பிடிச்சு தானே கட்டிகிட்டான்...??!!
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top